Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்ய படையினரின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட உக்ரைன் பகுதியில் பாரிய மனித புதைகுழி-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

ஏன் இந்த இரட்டை மனப்பான்மை? உக்ரேன் விமானிகள் இலங்கை விமானப்படையில்  பணிபுரிந்தார்கள் என்பதற்காகத்தானே? இதற்கான விளக்கம் பலதடவைகள் கொடுத்தாயிற்று. உக்ரேனை விடவும் ரஸ்ஸியா இன்றுவரை எமக்கெதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளையும் பட்டியல் போட்டாயிற்று.  

உக்ரேன் விமானிகள் இலங்கை விமானப்படையில்  பணிபுரிந்தார்கள் என்பது அவர்கள் சாட்டுக்கு சொல்கிறார்கள் என்பது தெளிவாகவே விளங்குகின்றது😄

8 hours ago, வாலி said:

நான் ஜனநாயகத்துக்கு எதிரான மேற்குலகில் எனக்கு கிடைக்கும் வசதிவாய்ப்புக்களுக்காக் குடியேறிவிட்டு, கண்ணாடிக்குள் இருந்து கல்லெறிவது போல கல்லெறிவேன்.


என்ன நடைபெறுகிறது என்பதை நன்றாக சொன்னீர்கள்.

  • Replies 73
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இந்த பெரிய உலககுக்கு தலைவர் வேண்டாமா?.     ஆமாம் நிச்சயம் வேண்டும்   இல்லையா? யார் பொருத்தமானவர்.     அல்லது எந்த நாடு சிறந்தது 1 = ரஷ்யா   2 =சீனா   3 =  வடகொரியா 4 = ஈரான்.   5 = துருக்கி    

6= இந்தியா    7 = இலங்கை      🤣😂 அமெரிக்காவையும். அதன் கூட்டணியையும் குறிப்பிடவில்லை ஏனெனில்  அவர்கள் வாழ மட்டுமே தகுதியான நாடுகள்   தலைவர் பதவிக்கு உதாவாதவர்கள் 🤣

வாழ மட்டுமே தகுதியான சிறந்த நாடுகளில் குடியேறி அதன் ஜனநாயக சுதந்திரங்கள், வசதிகளை ,வாய்ப்புக்களை அனுபவித்தபடி வாழ்கின்ற இலங்கை தமிழர்களின் விருப்பம் என்ன என்பதை பார்த்தால் ரஷ்யா ஐரோப்பிய வரையாவது விஸ்தரிக்கபட வேண்டும்,  விஸ்தரிக்கபட்ட  ரஷ்யா தான் உலகை ஆளவேண்டும் என்பது. அவர்கள் குடியேறியதில் உள்ள போலி தனமே அவர்களின் விருப்பம் எவ்வளவு அபாயகரமானது என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வாழ மட்டுமே தகுதியான சிறந்த நாடுகளில் குடியேறி அதன் ஜனநாயக சுதந்திரங்கள், வசதிகளை ,வாய்ப்புக்களை அனுபவித்தபடி வாழ்கின்ற இலங்கை தமிழர்களின் விருப்பம் என்ன என்பதை பார்த்தால் ரஷ்யா ஐரோப்பிய வரையாவது விஸ்தரிக்கபட வேண்டும்,  விஸ்தரிக்கபட்ட  ரஷ்யா தான் உலகை ஆளவேண்டும் என்பது. அவர்கள் குடியேறியதில் உள்ள போலி தனமே அவர்களின் விருப்பம் எவ்வளவு அபாயகரமானது என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

கம்மியூனிசமும், சோஷலிசமும் கோலோச்சும் நாடுகளில் நான் வாழப்போவதில்லை. நாம் என்னதான் புட்டினின் சோசலிசத்தையும் சீனாவின் கம்மியூனிசத்தையும் போற்றிப் புகழ்ந்தாலும், அந்த நாடுகளில் நான் ஒருபோதும் சென்று வாழல்போவதில்லை. ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாததுபோலத்தான் நாம் போற்றிப்புகழும் புட்டினின் சோசலிசமும், சீனக் கம்மியூனிசமும்.

ஆனால், மறுபக்கத்தில் அமெரிக்க, கனேடிய, ஜேர்மனிய ஜனநாயகத்தை நாம் வெறுக்கிறோம். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது. ஆனால் அங்கிருக்கும் ஜனநாயக உரிமைகளும், வசதி வாய்ப்புக்களும், உல்லாச வாழ்வும் எமக்கு நிச்சயம் வேண்டும். 

மேற்கின் உல்லாசங்களை அனுபவித்துக்கொண்டு, பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு புட்டினின் புகழ் பாடிக்கொண்டு காலத்தைக் கழிப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரஞ்சித் said:

கம்மியூனிசமும், சோஷலிசமும் கோலோச்சும் நாடுகளில் நான் வாழப்போவதில்லை. நாம் என்னதான் புட்டினின் சோசலிசத்தையும் சீனாவின் கம்மியூனிசத்தையும் போற்றிப் புகழ்ந்தாலும், அந்த நாடுகளில் நான் ஒருபோதும் சென்று வாழல்போவதில்லை. ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாததுபோலத்தான் நாம் போற்றிப்புகழும் புட்டினின் சோசலிசமும், சீனக் கம்மியூனிசமும்.

ஆனால், மறுபக்கத்தில் அமெரிக்க, கனேடிய, ஜேர்மனிய ஜனநாயகத்தை நாம் வெறுக்கிறோம். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது. ஆனால் அங்கிருக்கும் ஜனநாயக உரிமைகளும், வசதி வாய்ப்புக்களும், உல்லாச வாழ்வும் எமக்கு நிச்சயம் வேண்டும். 

மேற்கின் உல்லாசங்களை அனுபவித்துக்கொண்டு, பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு புட்டினின் புகழ் பாடிக்கொண்டு காலத்தைக் கழிப்போம். 

முழுமையாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலக நாடுகளிலும் உக்ரேன் விடயமாக அரசுகள் நடந்து கொள்ளும் முறைக்கு பல எதிர்ப்புகள் உள்ளன. முக்கியமாக உக்ரேனுக்கான ஆயுத விநியோகத்தை எதிர்க்கின்றார்கள். பேச்சுவார்த்தையால் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்கமுடியும் அல்லது தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார்கள். பல அரசியல்வாதிகள் ரஷ்யாவுக்கான பொருளாதார தடைகள் தேவையற்றது என்கிறார்கள். பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட போவது பொது மக்கள் மட்டுமே. அரசியல்வாதிகள் அல்லவே. 


மேற்குலக நாடுகள் அதிகமாக அக்கறை கொள்ளும் விடயம்  மனிதாபிமானம் மனிதநேயம். ஆனால் அவர்களின் கருத்திற்கு எதிர்கருத்து வைத்தால் உடனே பொருளாதார தடை என்பர். அங்கு  மனித நேயம் வேலை செய்யாது என நினைக்கின்றேன்.தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஹங்கேரிக்கு செல்ல வேண்டிய பணத்தை ஏதோ ஒரு சாட்டு சொல்லி குறைக்க இருக்கின்றார்கள். ஆனால் உண்மையான காரணம்  ஹங்கேரி ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதுதான்.

கம்யூனிசத்தையும் சோசலிசத்தையும் வெறுப்பவர்களே! 

உங்கள் வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் அந்த ஒவ்வொரு பொருட்களும் எங்கே தயாரிக்கப்படுகின்றன என பாருங்கள். அல்லது அந்த பொருட்கள் தயாரிக்கப்படுவதற்கான மூலப்பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என ஆராய்ந்து பாருங்கள்.


குளிரூட்டிகள்,மதுபான தயாரிப்புகள்,கார் உபகரண பொருட்கள், மனிதர்களுக்கு அத்தியாவசியமான  மருந்துப்பொருட்கள்,தொலைபேசிகள்,தொலைக்காட்சிகள் எல்லாவற்றுக்குமான மூலப்பொருட்கள் சோடலிச கம்யூனிச நாடுகளிருந்தே வருகின்றது. உலகெங்கும் மருந்து தட்டுப்பாடு வரப்போகின்றது. மேற்குலகால் மூடி மறைக்கப்படும் விடயங்கள் இந்த  குளிர்காலத்தில் வெளியே வரும்.

சும்மா சிங்கள பொருட்களை புறக்கணிப்போம் என்பது போல் அல்ல இது.
இது கொஞ்சம் விபரீதமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
54 minutes ago, ரஞ்சித் said:

மேற்கின் உல்லாசங்களை அனுபவித்துக்கொண்டு, பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு புட்டினின் புகழ் பாடிக்கொண்டு காலத்தைக் கழிப்போம். 

எப்படியான உல்லாசம் என சொல்வீர்களா?

12 தொடக்கம் 15 மணித்தியாலங்கள் வரை முறிஞ்சு வேலை செய்ய வேண்டி உள்ளது.கரண்ட் காசு கீற்றர்காசு விலையேற்றம் உச்சத்தை தொடுது. இரண்டு வருசத்துக்கு முதல் ஒரு லீட்டர் 99 சென்ற் விற்ற டீசல் 2,40 விற்குது.சமையல் எண்ணை 6மடங்கு விலையேற்றம்.மரக்கறி,இறைச்சி எல்லாம் 10 மடங்கு விலை ஏற்றம்.இதெல்லாம்  உங்களுக்கு உல்லாசமா?

மேற்குலகு தனிய நின்று எதையும் சாதிக்க முடியாது என்பதற்கு  தற்போதைய பொருளாதார நெருக்கடி நல்லதொரு சான்று.

 மேற்குலகின் வண்டவாளத்தை தோலுரித்து காட்டிய புட்டினுக்கு வாழ்த்துக்கள் வாழ்க புட்டின்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

எப்படியான உல்லாசம் என சொல்வீர்களா?

12 தொடக்கம் 15 மணித்தியாலங்கள் வரை முறிஞ்சு வேலை செய்ய வேண்டி உள்ளது.கரண்ட் காசு கீற்றர்காசு விலையேற்றம் உச்சத்தை தொடுது. இரண்டு வருசத்துக்கு முதல் ஒரு லீட்டர் 99 சென்ற் விற்ற டீசல் 2,40 விற்குது.சமையல் எண்ணை 6மடங்கு விலையேற்றம்.மரக்கறி,இறைச்சி எல்லாம் 10 மடங்கு விலை ஏற்றம்.இதெல்லாம்  உங்களுக்கு உல்லாசமா?

மேற்குலகு தனிய நின்று எதையும் சாதிக்க முடியாது என்பதற்கு  தற்போதைய பொருளாதார நெருக்கடி நல்லதொரு சான்று.

 மேற்குலகின் வண்டவாளத்தை தோலுரித்து காட்டிய புட்டினுக்கு வாழ்த்துக்கள் வாழ்க புட்டின்.

அதெல்லாம் இருக்கட்டும், எப்போது ரஸ்ஸியாவுக்கு குடிபெயரப் போகிறீர்கள் என்பதையும் ஒருமுறை சொல்லிவிட்டு தொடர்ந்து பேசுங்கள். 

7 hours ago, குமாரசாமி said:

2 தொடக்கம் 15 மணித்தியாலங்கள் வரை முறிஞ்சு வேலை செய்ய வேண்டி உள்ளது.கரண்ட் காசு கீற்றர்காசு விலையேற்றம் உச்சத்தை தொடுது. இரண்டு வருசத்துக்கு முதல் ஒரு லீட்டர் 99 சென்ற் விற்ற டீசல் 2,40 விற்குது.சமையல் எண்ணை 6மடங்கு விலையேற்றம்.மரக்கறி,இறைச்சி எல்லாம் 10 மடங்கு விலை ஏற்றம்.இதெல்லாம்  உங்களுக்கு உல்லாசமா?

இவ்வளவு கஷ்ட்டங்களுக்கு மத்தியிலும் ஏன் இன்னும் அங்கே இருக்கிறீர்கள்? பூமியின் சொர்க்கமான ரஸ்ஸியாவுக்கோ அல்லது சிறிய சொர்க்கபுரிகளான சீனா, வடகொரியாவுக்கோ போய் உல்லாசமாக வாழலாமே? எப்போது போகப் போகிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

அதெல்லாம் இருக்கட்டும், எப்போது ரஸ்ஸியாவுக்கு குடிபெயரப் போகிறீர்கள் என்பதையும் ஒருமுறை சொல்லிவிட்டு தொடர்ந்து பேசுங்கள். 

இவ்வளவு கஷ்ட்டங்களுக்கு மத்தியிலும் ஏன் இன்னும் அங்கே இருக்கிறீர்கள்? பூமியின் சொர்க்கமான ரஸ்ஸியாவுக்கோ அல்லது சிறிய சொர்க்கபுரிகளான சீனா, வடகொரியாவுக்கோ போய் உல்லாசமாக வாழலாமே? எப்போது போகப் போகிறீர்கள்? 

குமாரசாமி ஐயா அவர்களின்... சேவை, ஜேர்மனி நாட்டுக்கு தேவை என்பதால்...
அவரை.. ரஷ்யா நாட்டுக்கோ... அல்லது வேறு ஏதாவது ஒரு நாட்டுக்கோ...  
செல்ல அனுமதிக்க முடியாது என்பதை,  உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம். 😎

அவர் ஜேர்மனியில் வசித்தபடி  தொடர்ந்தும்... ரஷ்யா நாட்டுக்கும், 
மேன்மை தங்கிய அதி உத்தமராகிய புட்டின் அவர்களுக்கும்..
தனது ஆதரவை வழங்குவதில்.. எமக்கு ஆட்சேபனை இல்லை. 🙂

Flag of the Chancellor of Germany.svg  Olaf Scholz In March 2022.jpg  Flag of the Chancellor of Germany.svg

Chancellor of Germany. 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

கம்மியூனிசமும், சோஷலிசமும் கோலோச்சும் நாடுகளில் நான் வாழப்போவதில்லை. நாம் என்னதான் புட்டினின் சோசலிசத்தையும் சீனாவின் கம்மியூனிசத்தையும் போற்றிப் புகழ்ந்தாலும்

கம்யூனிஸம், சோஷலிசம் என்று சொல்லிக்கொண்டு முதலாளித்துவ பொருளாதாரத்தினூடாக சர்வாதிகாரமாக நாட்டை ஆள்பவர்கள் ரஷ்யாவின் சர்வாதிகாரி பூட்டினும், சீனாவின் சர்வாதிகாரத் தலைவர் ஷிச்சின்பிங்கும்.

கம்யூனிசம் என்பதே இந்நாடுகளில் இல்லை! ரஷ்யாவும், சீனாவும் இந்தப் பூமியானது அமெரிக்காவின் முழுமையான ஆதிக்கத்திற்குள் ஒற்றைத் துருவமாக (unipolar) இருப்பதை விரும்பாமல் தமது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயல்கின்றன.

 

கம்யூனிசம் என்பது காரல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் இருவராலும் முன்வைக்கப்பட்ட தத்துவமாகும். மனிதனை மனிதன் சுரண்டாமல் உலக செல்வம் அனைத்தையும் அனைத்து மக்களுக்கும் பொதுவான உடைமையாக்கி அனைவரும் இன்புற்று வாழும் சமூகமாகக் கம்யூனிச சமூகம் அமையும் என்று குறிப்பிடுகிறார்கள். அத்தகைய சமூக அமைப்பை நிறுவுவதற்குத் தேவையான அரசியல் பொருளாதார கொள்கையையும் முன்வைத்தார்கள். கம்யூனிசம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் இருவரும் எழுதிய பல்லாயிரம் பக்க நூல்களை வாசிப்பதே சாலச் சிறந்தது.

சுருக்கமாகத் தொகுத்தோம் என்றால் ; நிலவும் முதலாளித்துவ சமூக அமைப்பின் அச்சமத்துவமான தன்மைக்கு அதன் சுரண்டல் தன்மையே காரணம். உழைக்கும் பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டி இலாபம் என்ற பெயரில் ஒரு சில பெரு முதலாளிகள் செல்வத்தைக் குவித்து வைத்துள்ளதால் பெரும்பான்மை மக்கள் வறுமையிலும், சுகாதாரமில்லாமலும்,அடிப்படை வாழ்க்கைக்கான தேவைகள் இன்றியும் வாழ்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் உழைப்புச் சுரண்டலும் அதனால் உண்டாகும் இலாபம் ஓரிடத்தில் குவிவதும்தான் காரணம். இதை மாற்றியமைக்க முதலாளித்துவ சமூகத்தையும் அதன் சர்வாதிகார அரசியல் வடிவத்தையும் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவி ஒட்டு மொத்த செல்வத்தையும் ஒட்டுமொத்த மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதன் மூலம் முதல் கட்டமாக சோசலிச சமூகத்தை அமைத்து அதன் வளர்ச்சிப் போக்கில் கம்யூனிச சமூகத்தை அடைவதே இறுதி இலக்காகும்.

-
மேலேயுள்ள பந்திகளை வாசித்தால் ரஷ்யாவும், சீனாவும் இந்தக் கருத்துக்கு கிட்டவும் இல்லை என்று புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

 

மேலேயுள்ள பந்திகளை வாசித்தால் ரஷ்யாவும், சீனாவும் இந்தக் கருத்துக்கு கிட்டவும் இல்லை என்று புரியும்.

நன்றி கிருபன்

நான் இங்கே ரசியாவையோ சீனாவையோ ஒரு போதும் ஆதரிக்கமாட்டேன் என்று எழுதி வருவதற்கு இந்த சித்தாந்தத்தை வைத்து உலகை ஏமாற்றும் இவர்களின் நரித்தனத்தை சிறு வயதிலேயே உணர்ந்ததாலேயே. 

உண்மையில் இந்த சித்தாந்தத்தின் படி புட்டினின் வாழ்வுமுறையும் குடிமக்களின் வாழ்வுமுறையும் ஒரே அளவில் இருந்தாகணும். 

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரஞ்சித் said:

அதெல்லாம் இருக்கட்டும், எப்போது ரஸ்ஸியாவுக்கு குடிபெயரப் போகிறீர்கள் என்பதையும் ஒருமுறை சொல்லிவிட்டு தொடர்ந்து பேசுங்கள். 

2 hours ago, ரஞ்சித் said:

இவ்வளவு கஷ்ட்டங்களுக்கு மத்தியிலும் ஏன் இன்னும் அங்கே இருக்கிறீர்கள்? பூமியின் சொர்க்கமான ரஸ்ஸியாவுக்கோ அல்லது சிறிய சொர்க்கபுரிகளான சீனா, வடகொரியாவுக்கோ போய் உல்லாசமாக வாழலாமே? எப்போது போகப் போகிறீர்கள்? 

ஐயாவிற்கு கருத்து பஞ்சம் வந்துவிட்டது போல் தெரிகின்றது.

ஒருவர் தனது கொள்கை அல்லது நாடு சார்பாக கருத்துக்களை வைக்கும் போது அந்தந்த நாடுகளில் இருந்துதான் கருத்துக்களை வைக்க வேண்டும் என்பதில் களவிதிகள் அல்லது சாஸ்திர சம்பிராதயங்கள் ஏதாவது உள்ளதா?அப்படி பார்த்தால் தாங்களும் தாங்கள் சார்ந்தோரும் ஈழம்/சிறிலங்கா சம்பந்தமான கருத்துக்களை  அந்த நாட்டிலிருந்து அல்லவா எழுதிக்கொண்டிருக்க வேண்டும்

எனக்கு உக்ரேன் விவகாரத்தில் மேற்குலகின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. சரியாகவும் படவில்லை.அவ்வளவுதான்.

35 minutes ago, விசுகு said:

நான் இங்கே ரசியாவையோ சீனாவையோ ஒரு போதும் ஆதரிக்கமாட்டேன் என்று எழுதி வருவதற்கு இந்த சித்தாந்தத்தை வைத்து உலகை ஏமாற்றும் இவர்களின் நரித்தனத்தை சிறு வயதிலேயே உணர்ந்ததாலேயே. 

உண்மையில் இந்த சித்தாந்தத்தின் படி புட்டினின் வாழ்வுமுறையும் குடிமக்களின் வாழ்வுமுறையும் ஒரே அளவில் இருந்தாகணும். 

விசுகர்! இப்போது கம்யூனிசம் அல்ல பிரச்சனை. உக்ரேன் சண்டைதான் பிரச்சனை. அது ஏன் யாரால்  எதற்காக உருவாக்கப்பட்டது என சொல்லுங்கள். ரஷ்யா உடைந்த பின் அந்த நாடு தன்னை கம்யூனிசமாக காட்டிக்கொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரஞ்சித் said:

1) கம்மியூனிசமும், சோஷலிசமும் கோலோச்சும் நாடுகளில் நான் வாழப்போவதில்லை. நாம் என்னதான் புட்டினின் சோசலிசத்தையும் சீனாவின் கம்மியூனிசத்தையும் போற்றிப் புகழ்ந்தாலும், அந்த நாடுகளில் நான் ஒருபோதும் சென்று வாழல்போவதில்லை. ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாததுபோலத்தான் நாம் போற்றிப்புகழும் புட்டினின் சோசலிசமும், சீனக் கம்மியூனிசமும்.

2) ஆனால், மறுபக்கத்தில் அமெரிக்க, கனேடிய, ஜேர்மனிய ஜனநாயகத்தை நாம் வெறுக்கிறோம். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது. ஆனால் அங்கிருக்கும் ஜனநாயக உரிமைகளும், வசதி வாய்ப்புக்களும், உல்லாச வாழ்வும் எமக்கு நிச்சயம் வேண்டும். 

3) மேற்கின் உல்லாசங்களை அனுபவித்துக்கொண்டு, பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு புட்டினின் புகழ் பாடிக்கொண்டு காலத்தைக் கழிப்போம். 

1) ஏனென்றால் அங்கு Dollar ம் Pounds ம் புழக்கத்தில் இல்லை. அந்த நிலை இனிமேல் மாறக்கூடும். 

2) முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்காதீர்கள். இவர்களின் சனநாயகத்தின் மீதுள்ள பற்றின் காரணமாகவா உங்கே ஓடி வந்தீர்கள் ? Dollar  Value காரணமாகத்தானே இங்கே ஓடி வந்தீர்கள். நான் கூறுவது பிழையென்றால் ஐரோப்பிய யூனியனும் வட அமெரிக்காவும் கூறியதை ஏற்காமல் ஏன் போர் செய்தீர்களாம் ? 

3) ***** 

போராட்டத்திற்கு சேர்த்த காசை ஆட்டையை போட்டவர்கள் மட்டும்தான் உல்லாசமாக இருக்கிறார்கள். மற்றயவர்கள் எல்லோரும் டபிள் அடித்தபடியேதான் இருக்கிறார்கள். 

 

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது. கள உறுப்பினர்கள் மீதான அவதூறுகளைத் தவிர்க்கவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

Flag of the Chancellor of Germany.svg  Olaf Scholz In March 2022.jpg  Flag of the Chancellor of Germany.svg

Chancellor of Germany. 🙂

ஜேர்மனிக்குள்  இவர் சார்ந்த கட்சிகள் தவிர்த்து ஏனைய கட்சிகள் உக்ரேனுக்கான ஆதரவையும் ஆயுத விநியோகத்தையும் எதிர்க்கின்றனர்.பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என வாதிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கம்யூனிஸம், சோஷலிசம் என்று சொல்லிக்கொண்டு முதலாளித்துவ பொருளாதாரத்தினூடாக சர்வாதிகாரமாக நாட்டை ஆள்பவர்கள் ரஷ்யாவின் சர்வாதிகாரி பூட்டினும், சீனாவின் சர்வாதிகாரத் தலைவர் ஷிச்சின்பிங்கும்.

கம்யூனிசம் என்பதே இந்நாடுகளில் இல்லை! ரஷ்யாவும், சீனாவும் இந்தப் பூமியானது அமெரிக்காவின் முழுமையான ஆதிக்கத்திற்குள் ஒற்றைத் துருவமாக (unipolar) இருப்பதை விரும்பாமல் தமது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயல்கின்றன..

கிருபனுக்குத் தூக்கக் கலக்கம் இன்னமும் முடியவில்லை. 

🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Kapithan said:

போராட்டத்திற்கு சேர்த்த காசை ஆட்டையை போட்டவர்கள் மட்டும்தான் உல்லாசமாக இருக்கிறார்கள். மற்றயவர்கள் எல்லோரும் டபிள் அடித்தபடியேதான் இருக்கிறார்கள். 

இந்த விடயத்தை மரியாதை நிமிர்த்தம் இங்கே  சொல்ல கூடாது என நினைத்தேன். இனி அதையும் போட்டு உடைக்க வேண்டும் போல் இருக்கின்றது. 
நியாயம் சமமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! இப்போது கம்யூனிசம் அல்ல பிரச்சனை. உக்ரேன் சண்டைதான் பிரச்சனை. அது ஏன் யாரால்  எதற்காக உருவாக்கப்பட்டது என சொல்லுங்கள். ரஷ்யா உடைந்த பின் அந்த நாடு தன்னை கம்யூனிசமாக காட்டிக்கொள்வதில்லை.

 

உக்ரைன் சண்டைக்கு காரணம் உலக மாற்றங்களுக்கு ஏற்ப அந்தந்த நாடுகளின் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறவிடாது தடுக்கும் ஐனநாயக பண்புகள் அற்ற செயல்களே. அடக்குமுறைகளை செய்து எவ்வளவு காலத்துக்கு மக்களையும் நாடுகளையும் கட்டிப்போட முடியும்??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி ஐயா அவர்களின்... சேவை, ஜேர்மனி நாட்டுக்கு தேவை என்பதால்...
அவரை.. ரஷ்யா நாட்டுக்கோ... அல்லது வேறு ஏதாவது ஒரு நாட்டுக்கோ...  
செல்ல அனுமதிக்க முடியாது என்பதை,  உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம். 😎

அவர் ஜேர்மனியில் வசித்தபடி  தொடர்ந்தும்... ரஷ்யா நாட்டுக்கும், 
மேன்மை தங்கிய அதி உத்தமராகிய புட்டின் அவர்களுக்கும்..
தனது ஆதரவை வழங்குவதில்.. எமக்கு ஆட்சேபனை இல்லை. 🙂

Flag of the Chancellor of Germany.svg  Olaf Scholz In March 2022.jpg  Flag of the Chancellor of Germany.svg

Chancellor of Germany. 🙂

ஒரு நாட்டில் வாழ்ந்தபடி அந்த நாட்டின் அனைத்து விடயங்களையும் ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை

அப்படி பார்த்தால் இலவசமாக மருத்துவமனையில் பிறந்து இலவசமாக கல்வி பயின்ற சிறீலங்காவுக்கு தான் நான் நன்றியுடையானாக இருக்கணும்

ஆனால் யாரை ஆதரிக்கத் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் அதுதான் முக்கியம் 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

உக்ரைன் சண்டைக்கு காரணம் உலக மாற்றங்களுக்கு ஏற்ப அந்தந்த நாடுகளின் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறவிடாது தடுக்கும் ஐனநாயக பண்புகள் அற்ற செயல்களே. அடக்குமுறைகளை செய்து எவ்வளவு காலத்துக்கு மக்களையும் நாடுகளையும் கட்டிப்போட முடியும்??

நீங்கள் கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடாது விசுகர். 

😀

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

ஒரு நாட்டில் வாழ்ந்தபடி அந்த நாட்டின் அனைத்து விடயங்களையும் ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை

அப்படி பார்த்தால் இலவசமாக மருத்துவமனையில் பிறந்து இலவசமாக கல்வி பயின்ற சிறீலங்காவுக்கு தான் நான் நன்றி உடையான் இருக்கணும்

ஆனால் யாரை ஆதரிக்கத் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் அதுதான் முக்கியம் 

 

சரியைச் சரி என்றும், பிழையைப் பிழை என்றும் கூறுவதற்கு நெஞ்சுரம் வேண்டும்.

பலர் தாங்கள் அசேலம் அடித்த நாடி என்ன செய்தாலும் அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் எனப் பயப்படுகிறார்கள். அடிமை மனநிலை. 

குறைந்த செலவில் டாக்குத்தருக்குப் படிக்க கியூபாவுக்கும் ரஸ்யாவுக்கும் போவினம். பிறகு, டொலரிலும் பவுண்சிலும் உழைப்பதற்காக வட அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் போவினம்.  

தங்கள் அலுவல் முடிஞ்சவுடன சனநாயகம், சர்வாதீகார்ம் என பீற்றத் தொடங்குவினம். எங்கள் ஆட்களைவிட இந்தியன் எவ்வளவோ மேல். 

 

1 hour ago, விசுகு said:

 

உக்ரைன் சண்டைக்கு காரணம் உலக மாற்றங்களுக்கு ஏற்ப அந்தந்த நாடுகளின் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறவிடாது தடுக்கும் ஐனநாயக பண்புகள் அற்ற செயல்களே. அடக்குமுறைகளை செய்து எவ்வளவு காலத்துக்கு மக்களையும் நாடுகளையும் கட்டிப்போட முடியும்??

விசுகர், நீங்கள் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

 

விசுகர், நீங்கள் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது. 

நீங்கள் நெற்றிக்கண்ணை திறந்தால் உலக ஒழுங்கு மாறும் என்று நினைக்கிறீர்கள் போலும்

வாழ்த்துக்கள் பெரிய கனவு நனவாக.😋

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

நீங்கள் நெற்றிக்கண்ணை திறந்தால் உலக ஒழுங்கு மாறும் என்று நினைக்கிறீர்கள் போலும்

வாழ்த்துக்கள் பெரிய கனவு நனவாக.😋

அமெரிக்கா வைப்பது மட்டுமே உலக ஒழுங்கு அல்ல.

ஐநா ஒன்று இருப்பதை வசதிக்குத் தகுந்தபடி மறந்துவிடுகிறீர்கள். 

அதுகிடக்கட்டும், நைஜீரியாவில் இருந்து பிரெஞ்சுப் படைகளை வெளியேறும்படி நைஜீரியா கேட்டுள்ளதே அதை எப்போது செய்வதாக உத்தேசம்? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அமெரிக்கா வைப்பது மட்டுமே உலக ஒழுங்கு அல்ல.

ஐநா ஒன்று இருப்பதை வசதிக்குத் தகுந்தபடி மறந்துவிடுகிறீர்கள். 

அதுகிடக்கட்டும், நைஜீரியாவில் இருந்து பிரெஞ்சுப் படைகளை வெளியேறும்படி நைஜீரியா கேட்டுள்ளதே அதை எப்போது செய்வதாக உத்தேசம்? 

 

ஆட்டுக்க மாட்டை.??? அடிக்கடி  அவிட்டு  விடுகிறீர்கள்?

நீங்கள் நெற்றிக்கண்ணை திறந்தால் உலக ஒழுங்கு மாறும் என்று நானும் நம்பலாமா?😂

அப்படியானால் பிரெஞ்சுப்படைகள் விலகட்டும்

 

அப்புறம்  ஐநா  அழுதிடுவன் சொல்லிப்போட்டன்😭

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

கம்யூனிசம் என்பதே இந்நாடுகளில் இல்லை! ரஷ்யாவும், சீனாவும் இந்தப் பூமியானது அமெரிக்காவின் முழுமையான ஆதிக்கத்திற்குள் ஒற்றைத் துருவமாக (unipolar) இருப்பதை விரும்பாமல் தமது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயல்கின்றன.

 

அதே! கீரை கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்று தெரியாமலா சொன்னார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

 

உக்ரைன் சண்டைக்கு காரணம் உலக மாற்றங்களுக்கு ஏற்ப அந்தந்த நாடுகளின் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறவிடாது தடுக்கும் ஐனநாயக பண்புகள் அற்ற செயல்களே. அடக்குமுறைகளை செய்து எவ்வளவு காலத்துக்கு மக்களையும் நாடுகளையும் கட்டிப்போட முடியும்??

இது  மக்கள் விருப்பமா அல்லது  ஒரு சில அரசுகளின் விருப்பமா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kapithan said:

குறைந்த செலவில் டாக்குத்தருக்குப் படிக்க கியூபாவுக்கும் ரஸ்யாவுக்கும் போவினம். பிறகு, டொலரிலும் பவுண்சிலும் உழைப்பதற்காக வட அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் போவினம்.  

சொன்ன கருத்து அவ்வளவும் பொருள்.👍🏼

குறைந்த செலவில் படிக்க,குறைந்த செலவில் வீட்டு வாடகை,குறைந்த செலவில் உணவுகள் என்பதற்கு கம்யூனிச நாடுகளை நாடிச்செல்வர். பட்டங்கள் பதக்கங்கள் எடுத்த பின் சேவை மனப்பான்மையுடன் வியாபார மேற்குலகு செல்வர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.