Jump to content

கையறுநிலை - சுப. சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                கையறுநிலை

                                                                 (Helplessness)

                                                                                                                                 - சுப. சோமசுந்தரம்

         ஏதோ ஒரு சூழ்நிலையில் செய்வதறியாது திகைக்கும் கையறுநிலை நாம் அனைவரும் அவ்வப்போது எதிர்கொள்வதே. சூழ்நிலைகளைப் பொறுத்து கையறுநிலையைப் பல்வேறு வகைப்படுத்தலாம். சிலவற்றிற்குத் தீர்வும் பலவற்றிற்குத் தீர்வு இல்லாமலும் போகலாம்.
         இன்றைக்கு இந்திய சமூகத்தில் அரங்கேறும் மதவாதம், தனியார்மயம், பொருளாதாரச் சீர்குலைவு ஆகிய தீமைகளைப் பார்த்து நம்முள் ஏற்படும் அதிர்வு சமூக அவலம் சார்ந்த கையறுநிலை. கையறுநிலையின் வெளிப்பாடு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி. உலகில் பசிப்பிணி கண்டு வாளாவிருக்க மாட்டாமல்
"தனியொருவனுக்கு உணவில்லை எனில்
சகத்தினை அழித்திடுவோம்" என்ற பாரதியின் கையறுநிலையை அறச்சீற்றமாய்க்  காண்கிறோம். இதே அறச்சீற்றம் மனிதனுக்குத் தன் இறைவன் மீதே ஏற்படுவதும் உண்டு. சொல்லொணாத்  துயரத்திற்கு ஆளாகும்போது, "அட ஆண்டவனே ! உனக்குக்  கண் இருக்கா ? நீ நாசமாப் போக !" என்று உரிமையோடு அவனிடம் வெகுண்டு எழுவது நாட்டார் வழக்காற்றியலில் உண்டு. இஃது கையறுநிலையின் நிந்தனை அல்லது சாப வெளிப்பாடு.

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்"
     (குறள் 1062; அதிகாரம் : இரவச்சம்)

என்பதும் ஈதன்றி வேறென்ன ?
[குறளின் பொருள் : மற்றவரிடம் கேட்டுப் பெற்றே (இரந்தும்) ஒருவன் உயிர் வாழும் நிலை ஏற்படுமானால், இவ்வுலகைப் படைத்தவன் (உலகு இயற்றியான்) எங்கும் அலைந்து திரிந்து (பரந்து) கெடுவானாக ! ]
          வறியோர்க்குக் கொடுக்கப்படும் பொருள் கண்டு பொறாமை கொள்கிறவனைக் காணச் சகிக்காத வள்ளுவனின் கையறுநிலை கொண்ட மனம்

"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்"
       (குறள் 166; அதிகாரம்: அழுக்காறாமை)

எனச் சபிக்கிறது. அவ்வாறு அழுக்காறு கொண்டவன் தான் கெடுவது மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தோரும் உடுப்பதற்கும் உண்பதற்கும் இன்றிக் கெடக் காரணமாய் அமைவான் என்பது கையறுநிலையின் மற்றுமொரு சாப வெளிப்பாடு.
          கையறுநிலையின் வெளிப்பாடு தீமை கண்டு
வாளாவிருத்தல் மட்டுமல்ல. சில இடங்களில் சினத் தீ வெகுண்டெழுந்து அழிவினையும் ஏற்படுத்த வல்லது போலும். தன் கணவனை ஆராயாது கொன்ற மன்னன் மீது மட்டுமல்லாமல் அதனைத் தட்டிக் கேட்காத நகரத்தார் மீதும் அத்தீ கொழுந்து விட்டு எரிவதை இளங்கோவடிகள்,

"பட்டாங்கு யானுமோர்  பத்தினியே யாமாகில்
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்" என்றும்

"யானமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யான்" என்றும்

கண்ணகி வாயிலாகச் சித்தரிக்கின்றார். அன்பும் அமைதியும் வடிவான கண்ணகியின் கையறுநிலை சாது மிரண்ட காவியமானது.
        அழுக்காறு (பொறாமை) உடையவன் கெடுவதும் அஃதில்லாதவன் நல்வாழ்வு பெறுவதும்தானே இயற்கை அறமாக இருக்க முடியும் ? அதற்குப் புறம்பாகவும் உலகில் நிகழ்வதைக் கண்ணுற்ற வள்ளுவன் எந்த வகையில் அதனை நியாயப்படுத்துவான் ? கையறுநிலைக்குத் தள்ளப்பட்ட வள்ளுவன்,

"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்"
    (குறள் 169; அதிகாரம்: அழுக்காறாமை)

என்று அமைதியாய் முடித்து விட்டான் போலும். அதாவது இயற்கை நீதிக்குப் புறம்பாக நிகழ்வது (மக்களால்) நினைக்கப்படும் என்கிறான். எவ்வாறு ? பொறாமை உடையவன் மேன்மை பெறுவது (அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம்), "போயும் போயும் இவனுக்கு வந்த வாழ்வைப் பார் !" என்று மக்களால் நினைக்கப்படும்; அஃதில்லாத செம்மையானவன் தாழ்வது (செவ்வியான் கேடு), "ஐயோ ! இவனுக்கா இந்த  இழிநிலை ?" என்று நினைக்கப்படும்.
இவ்வாறே கையறுநிலையின் அமைதி வெளிப்பாடாக

" அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே"
         (புறநானூறு பாடல் 112)

என்று தந்தையை இழந்த பாரி மகளிரின் சோகம் அரங்கேறக் காணலாம்.
          நிறைவேறாத காதல், பிரிவாற்றாமைக் காதல் என மனிதனைக் கையறுநிலையில் கொண்டு நிறுத்தும் நிகழ்வுகள் அக இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். இஃது பெரும்பாலும் புலம்பலாகவே காணக் கிடைப்பது. மேற்கோளுக்கு ஒன்றிரண்டு இடங்களைச் சுட்டுவது இங்கு பொருந்தி அமையும். தலைவனின் மனம் அவன் வசமே இருக்கையில், தன் மனம் மட்டும் தன் வசமின்றி அவன் வசமே சென்ற தலைவியின் புலம்பல்

"அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது"
       (குறள் 1291; அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல்)

என வெளிப்படக் காணலாம்.
           தலைவனும் தலைவியும் களவொழுக்கம் மேற்கொண்டு மகிழ்ந்திருந்தபின் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வாராத நிலையில், "அப்போது அங்கு யாரும் இல்லை; அவனே கள்வன்; அவனும் ஏமாற்றி விட்டால் நான் என் செய்வேன் ?" என்ற தலைவியின் கையறுநிலை

"யாரும் இல்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ"
      (குறுந்தொகை பாடல் 25 ன் பகுதி)

என்று மற்றுமொரு புலம்பல்.
        கண்ணகியை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக ஊரைவிட்டு மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு மாதவி விடுக்கும் மடலில், "மூத்தோர்க்கு (குறிப்பாக பெற்றோர்க்கு) ஆற்ற வேண்டிய பணியினை (குரவர் பணி) மறந்தது மட்டுமல்லாமல், குலமகளோடு (கண்ணகியோடு) இரவோடு இரவாக ஊரை விட்டுத்  தாங்கள் செல்லும் அளவு (இரவிடைக் கழிதற்கு) நான் செய்த பிழை அறியேன் (என் பிழைப்பு அறியாது). நிலை கொள்ளாது தவிக்கும் என் மனதின் (கையறு நெஞ்சம்) வாட்டத்தினைத் தாங்கள் போக்க வேண்டும் (கடியல் வேண்டும்) எனும் பொருள்பட

"குரவர் பணி அன்றியும், குலப்பிறப்பாட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்"

என்று வரைந்தாள். இதில் தன் கையறு நெஞ்சத்தைத் தெளிவாக வெளிப்படுத்தினாள் மாதவி.
            காதலில் கையறு நிலை பெண்மைக்கு மட்டுமே உரியது என்று எழுதாச் சட்டம் உள்ளதா என்ன ? தனது நிறைவேறாக் காதலை ஊரார் முன் வெளிப்படுத்தி அவர்கள் துணைக் கொண்டு நிறைவேற்ற முற்படும் தலைவன் மடல் ஏறுதல் அகப்பாடல்களில் ஓர் அங்கம். அந்நிலையில் ஊராரிடம் புலம்பும் அவனது உள்ளத்தின் வெளிப்பாடே மடலேறுதல் அன்றி வேறென்ன !

"காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி"
      (குறள் 1131; அதிகாரம்: நாணுத் துறவுரைத்தல்)
[பொருள்: காதலில் உழன்று வருந்துகிறவர்களுக்கு மடலேறுதல் அன்றி வலிமையான  துணை (ஏமம்) வேறு இல்லை].

          மானிட சமூகத்தின் பிரதிபலிப்புதானே இலக்கியமாய் அமைய முடியும் ! எனவே சமூகத்தில் வெவ்வேறு சூழலில் மனிதன் எதிர்கொள்ளும் கையறுநிலையின் வெளிப்பாட்டை அச்சூழலும் மனிதனின் உளவியலுமே தீர்மானிக்கவல்லது. மேலே சுட்டிய இலக்கியக் காட்சிகளில் நிந்தனையாக, சினத்தீயாக, அமைதியாக, புலம்பலாக அவ்வெளிப்பாடு அமைவதைக் காண்கிறோம். வேறு எவ்வகைகளில் எல்லாம் அமையும் என்று தீர்மானிக்க நாம் உளவியலாளர்களா என்ன ? 

  • Like 6
Link to comment
Share on other sites

17 hours ago, சுப.சோமசுந்தரம் said:

மானிட சமூகத்தின் பிரதிபலிப்புதானே இலக்கியமாய் அமைய முடியும் ! எனவே சமூகத்தில் வெவ்வேறு சூழலில் மனிதன் எதிர்கொள்ளும் கையறுநிலையின் வெளிப்பாட்டை அச்சூழலும் மனிதனின் உளவியலுமே தீர்மானிக்கவல்லது.

நல்லதொரு அவதானிப்பு ஐயா. 👍

 

Link to comment
Share on other sites

17 hours ago, சுப.சோமசுந்தரம் said:

மேலே சுட்டிய இலக்கியக் காட்சிகளில் நிந்தனையாக, சினத்தீயாக, அமைதியாக, புலம்பலாக அவ்வெளிப்பாடு அமைவதைக் காண்கிறோம். வேறு எவ்வகைகளில் எல்லாம் அமையும் என்று தீர்மானிக்க நாம் உளவியலாளர்களா என்ன ? 

இவற்றுடன் போராட்டமாகவும் வெளிப்படலாம். அண்மையில் இலங்கை உதாரணத்தைக் கொள்ளலாம்.

தவிரவும், இந்தக் கையறு நிலையை நகைச்சுவையாக மாற்றியோரும் உளர் என்பதை நீங்கள் அறிவீர்கள் ஐயா. பல நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கைப் பின்னணியைப் பார்த்தால் புரியும். 😊

கையறு நிலையில் வரும் அறச் சீற்றத்தை ஆக்கபூர்வமானதாக மாற்றி அறப் போராட்டமாக, அந்நிலையிலுள்ள பலரை இணைத்து அவர்கள் போல் இருக்கும் பலருக்கு நல வாழ்வு தரும் தொண்டு நிறுவனங்களை அமைப்பதாக என்று ஆரோக்கியமான பாதைகளை உருவாக்குவோரும் உளர்.

சிந்தனையைத் தூண்டிய அருமையான கட்டுரைக்கு நன்றி ஐயா. 🙏

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, மல்லிகை வாசம் said:

இவற்றுடன் போராட்டமாகவும் வெளிப்படலாம். அண்மையில் இலங்கை உதாரணத்தைக் கொள்ளலாம்

முற்றிலும் உண்மை. ஆயுதப் போராட்டங்கள், சில வன்முறைகள், உண்ணாநிலை போன்ற அறப்போராட்டங்கள் இவை கையறுநிலைக்குத் தள்ளப்பட்டதால் முகிழ்க்கலாம்.

      மேலும் ஒரு வெளிப்பாடு எனக்குத் தோன்றுகிறது. அஃது கையறு நிலையில் தனது இறைவனிடமோ இறைவனைப் போல் தான் மதிக்கிற மனிதரிடமோ தஞ்சம் அடைவது. அரசவையில் துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலுரிய முனைய, பாஞ்சாலி கையறு நிலையில்  'கோவிந்தா, கோவிந்தா !' என்று இறைவனைச் சரணடைவது இதற்கான சிறந்த மேற்கோள்.

"ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம் புனல் சோர,
                 அளகம் சோர,
வேறான துகில் தகைந்த கை சோர, மெய் சோர, வேறு
                 ஓர் சொல்லும்
கூறாமல், 'கோவிந்தா! கோவிந்தா!' என்று அரற்றி,
                 குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற, உடல் புளகித்து, உள்ளம் எலாம் உருகினாளே !"
----பாஞ்சாலி சபதம் பாடல் 246.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு ஆக்கத்திற்கு... நன்றி, சுப.சோமசுந்தரம் ஐயா.

  • Thanks 1
Link to comment
Share on other sites

57 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

மேலும் ஒரு வெளிப்பாடு எனக்குத் தோன்றுகிறது. அஃது கையறு நிலையில் தனது இறைவனிடமோ இறைவனைப் போல் தான் மதிக்கிற மனிதரிடமோ தஞ்சம் அடைவது. அரசவையில் துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலுரிய முனைய, பாஞ்சாலி கையறு நிலையில்  'கோவிந்தா, கோவிந்தா !' என்று இறைவனைச் சரணடைவது

அருமையான வெளிப்பாடும் நல்ல உதாரணமும் ஐயா. இப்படிப் பல உதாரணங்கள் புராண, இதிகாசங்களில் உண்டல்லவா! மணிவாசகர் 'யாரொடு நோவேன்! யார்க்கெடுத்து உரைப்பேன்!' என இறைவனிடம் சரணாகதி அடைந்தது போன்று இன்னும் பல நாயன்மார்கள் கதையையும் இதில் உள்ளடக்கலாம். இந்த சரணாகதி, தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளாக வெளிப்பட்டு இன்றும் பல அடியார்களுக்குப் பயன்படுவது அற்புதம்!

 

  • Like 1
Link to comment
Share on other sites

அள்ள அள்ளக் குறையாத நீரூற்றாய் சிந்தனைகளைத் தூண்டிவிட்டது உங்கள் கட்டுரை ஐயா! 😊

இன்னும் ஒன்று, சிறு வயதில் படித்த ஞாபகம்; மிகச் சுருக்கமாக என் நினைவில் இருப்பதை எழுதுகிறேன்: 

இது நடந்தது அமெரிக்காவோ / ஐரோப்பாவோ தெரியவில்லை. வறுமையில் வாடிய ஒரு இளைஞன் ஒரு முறை ஏதோ ஒரு பணத் தேவை காரணமாகப் பலவாறு யோசித்துக் குழப்பத்தில் இருந்தார். அப்போது கையில் கிடைத்த ஒரு சிறு உலோகக் கம்பியை அங்கலாய்த்தபடியே எவ்வித நோக்கமும் இல்லாமல் வளைத்தபடி இருக்கும்போது சட்டென அவர் மனதில் தோன்றியதே நம்மில் பலர் இன்னமும் பாவிக்கும் safety pin (சட்டை ஊசி). அதை அந்த இளைஞன் கண்டுபிடிப்பாகப் பதிவு செய்து அதன் மூலம் பொருளீட்டினான் என்று படித்த ஞாபகம். அவர் பெயர் தெரியவில்லை. எனவே கையறு நிலை மனித குலத்துக்கு வேண்டிய சில பல பொருட்களையும் கண்டுபிடிக்க வைத்துள்ளது எனக் கூறலோமோ! 😊

 

கையறு நிலையிலும் நமக்கென்று பல வழிவகைகள் ஒளிந்திருக்கும். அவற்றை அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனிடம் சரணாகதி அடைந்தோ, அல்லது நம் புத்தியைப் பயன்படுத்தியோ தேடிக் கண்டுபிடிக்கலாம் போலும்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுப.சோமசுந்தரம் said:

கையறுநிலை

நல்லதொரு பதிவு...

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கையறுநிலை நிலையை இலக்கியங்களிலிருந்து அழகாகத் தொகுத்துள்ளீர்கள்.

கையறு நிலை என்பதை நாமே உருவாக்கிக் கொள்வது என்று நினைக்கிறேன். அது ஒவ்வொருவரினது மன உறுதியின் எல்லையாக இருக்கும். ஒரே பிரச்சனையை எதிர்கொள்ளும்போது தன்னம்பிக்கை குறைவான ஒருவருக்கு இந்த நிலை விரைவில் ஏற்படலாம். மன உறுதி உள்ள ஒருவர் இந்த நிலையைத் தவிர்க்கக் கூட முயல்வார். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.