Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க எதிர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க எதிர்ப்பு!

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க எதிர்ப்பு!

கோண்டாவிலில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் யாழ் மாநகர முதல்வரின் முயற்சியை நேற்றைய யாழ் மாநகர சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டாக நிராகரித்து.

யாழ் மாநகரசபைக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலப்பரப்பு கோண்டாவில் பகுதியில் உள்ளது. குறித்த நிலமானது தற்போது எத்தகைய பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படாத நிலையில் உள்ளது.
குறித்த ஆதனத்தில் யாழ் மாநகரசபை எல்லைக்குள் உள்ள பொதுமக்களிற்கு நீர் விநியோகம் செய்கின்ற கிணறுகள் அமைந்துள்ளன.

எதிர்வரும் காலங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிற்கு நீர் விநியோகப் பணி ஆரம்பிக்கப்பட இருப்பதைக் கருத்திற் கொண்டு குறித்த நீர் விநியோகத்திற்கு எவ்விதபங்கமேற்படாதவாறு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்றினை குறித்த ஆதனத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக சபையின் அனுமதியினை மாநகர முதல்வர் கோரியிருந்தார்.

குறித்த அனுமதியினை வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன கூட்டாக இணைந்து மறுத்துவிட்டன.வடக்கு மாகாணத்தில் சர்வதேச தர துடுப்பாட்ட மைதானமொன்று அமைய வேண்டும் என்பது பலரினதும் ஆதங்கமாகும். யாழ் மாவட்டத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் வருமாயின் யாழ் மாநகரத்தின் வருமானம் பன்மடங்கு அதிகரிப்பதோடு யாழ் குடாநாட்டினது சுற்றுலாத் துறையும் அதனுடன் இணைந்து பன்மடங்கு வளர்ச்சியடையும்.

அதனடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் யாழ் மாவட்டத்தின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் என்பதோடு மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தின் துடுப்பாட்ட தரத்தையும் மேம்படுத்த உதவும். அதன் மூலம் யாழ் மாவட்டத்தில் இருந்து சர்வதேச துடுப்பாட்ட வீரர்களை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்டத்திற்கு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் கொண்டு வருவதற்கு யாழ் மாநகர முதல்வர் எடுத்த முயற்சியினை மற்றைய கட்சிகள் தவிடுபொடியாக்கியமை பல துடுப்பாட்ட ரசிகர்களுக்கும் பொதுமக்களிற்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1305738

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படாதவாறு திட்டமிடவேண்டும். பயிற்சி, சர்வதேச, உள்நாட்டு போட்டிகள் இடம்பெறக் கூடியவாறும் திட்டமிடலை செய்யவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

எதிர்காலத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படாதவாறு திட்டமிடவேண்டும். பயிற்சி, சர்வதேச, உள்நாட்டு போட்டிகள் இடம்பெறக் கூடியவாறும் திட்டமிடலை செய்யவேண்டும்.

பலாலி சர்வதேச விமான நிலையம் மாதிரி...
யாழ்.  சர்வதேச கிரிக்கெட் மைதானம் இருக்ககே கூடாது என்று 
சொல்கிறீர்கள் போலுள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் திறந்த நீச்சல் தடாகத்துக்கு என்ன நடந்தது?

பெரிய எடுவையோடு வருவது கடைசியில் எல்லாம் புஸ்வாணம் ஆகி விடுவது தான் காலம் காலமாக நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மணிக்கு சரயா பயப்பிடுகினம் என்பது மட்டும் விளங்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

டக்ளஸ் திறந்த நீச்சல் தடாகத்துக்கு என்ன நடந்தது?

Mosquito GIFs - Get the best gif on GIFER

அந்த  நீச்சல் குளத்தில்... இப்போ நுளம்பு வளர்க்கிறார்களாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இத்திட்டத்தை நெடுந்தீவுக்கு அனுப்பினால் ஈபிடிபி ஆதரவு வழங்கலாம்.

இந்தத் திட்டத்திற்கு தீவகம் பயன்படுத்தப்படுவது நல்லது. ஏனெனில்.. அங்கு ஒரு சர்வதேச மைதானம் அமைவது ஈபிடிபியால் பிந்தங்கிய பிரதேசமாகவே பேணப்படும்.. வறிய நிலையில் வைக்கப்பட்டிருக்கும் தீவகம் வாழ் மக்களுக்கு ஏதேனும் விமோசனம்.. சர்வதேசக் கவனம் திரும்ப வாய்ப்புப் பிறக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

மணிக்கு சரயா பயப்பிடுகினம் என்பது மட்டும் விளங்குது.

யார்  பயப்படுகினம்? ஏன் ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

இத்திட்டத்தை நெடுந்தீவுக்கு அனுப்பினால் ஈபிடிபி ஆதரவு வழங்கலாம்.

இந்தத் திட்டத்திற்கு தீவகம் பயன்படுத்தப்படுவது நல்லது. ஏனெனில்.. அங்கு ஒரு சர்வதேச மைதானம் அமைவது ஈபிடிபியால் பிந்தங்கிய பிரதேசமாகவே பேணப்படும்.. வறிய நிலையில் வைக்கப்பட்டிருக்கும் தீவகம் வாழ் மக்களுக்கு ஏதேனும் விமோசனம்.. சர்வதேசக் கவனம் திரும்ப வாய்ப்புப் பிறக்கலாம்.

ஓம்...... தீவகத்தை, நெடுந்தீவு என்று நினைக்கிறன், முன்பொருக்கா சிங்கப்பூராக மாற்றப்போறேன் என்று ஒரு அறிக்கை விட்டவர் இந்த தாடியர். ஆனால் அவர்களை தடுத்து வைத்து தனது கொள்ளை அரசியலை வளர்த்ததுதான் மிச்சம், அவர்களின் நிலை என்றும் ஒரே மாதிரியே.. மாற்றமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.