Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முடிவுகளை கொள்கை சார்ந்து எடுப்பதா ? நபர் சார்ந்து எடுப்பதா ? சிறிதரனிடம் சர்வேஸ்வரன் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முடிவுகளை கொள்கை சார்ந்து எடுப்பதா ? நபர் சார்ந்து எடுப்பதா ? சிறிதரனிடம் சர்வேஸ்வரன் கேள்வி

By DIGITAL DESK 2

04 NOV, 2022 | 03:07 PM
image

 

(எம்.நியூட்டன்)

முடிவுகளை கொள்கை சார்ந்து எடுப்பதா? நபர் சார்ந்து எடுப்பதா ? என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கலாநிதி சர்வேஸ்வரன் கேள்வி ஏழுப்பிநுள்ளார்.

அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான செவ்வி ஒன்றில் சுமந்திரன் யாருடனும் கலந்தாலோசிக்காமல் தானாகவே முடிவுகளைஎடுப்பதாகவும் இனிவரும் காலங்களில் சுமந்திரனின் முடிவை ஏற்கமாட்டோம் என்றும் அவரது முடிவுகளுக்கு எதிராகவே செயற்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் முன்னர் அவ்வாறே செயற்பட்டதாகவும் கூறியிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில்   ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணைச்செயலாளரும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வியமைச்சருமான கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர் மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது சுமந்திரனுக்கு ஆதரவளிப்பதால் நான் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்று சொன்ன சிறீதரன் இன்று இந்த முடிவிற்கு வந்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்துக்கு அனுப்பிய நிதி எவ்வகையிலும் திருப்பி அனுப்பப்படவில்லை  ஆதாரத்துடன் விளக்குகின்றார் சர்வேஸ்வரன்.

சிறீதரனின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணைச்செயலாளர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்  தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்த செவ்வியில்  அரசியல் யாப்பின் 22ஆவது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு வாக்களித்தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த சிறீதரன் முடிவுகளை கலந்து பேசாமல் சுமந்திரன் தானே எடுத்துவிட்டு அவற்றை எம்மீது திணிக்க முயல்கிறார் என்று கூறியிருந்தார். இதனால் எதிர்காலத்தில் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராகச் செயற்படப்போவதாக எம்மில் பெரும்பாலோர் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். 

இதனைக் கூறும்போது முன்னர் கூட்டமைப்பின் பேச்சாளராகச் செயற்பட்ட சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவ்வாறே நடந்துகொண்டார் என்றும் ஆனால் அவை பாரதூரமானவையல்ல என்றும் சுமந்திரனின் செயற்பாடுகள் அவரைவிட மோசமானவை என்ற பொருள்படவும் தெரிவித்திருந்தார். 

இது ஒரு மாணவனை நீங்கள் பரீட்சையில் ஏன் தேர்ச்சி பெறவில்லை என்று பெற்றோர் கேட்டதற்கு அந்த மாணவன் பக்கத்து வீட்டுப் பையனும் தேர்ச்சிபெறவில்லை என்று சொன்னதைப்போல் உள்ளது. இது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது.

எமது கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகவே செயற்பட்டிருந்தார். ஆனால் சுமந்திரன் இன்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளராகவும் கூட்டமைப்பின் பேச்சாளராகவும் தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டு செயற்பட்டுவருகின்றார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரந்துபட்ட கொள்கை சட்டகத்திற்குள்ளேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது உத்தியோக பூர்வ பேச்சாளர் கடமைகளை ஆற்றிவந்தார். கலந்துபேசி முடிவெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவர் தன்னிச்சையாக என்றும் தனது கருத்துகளை கூட்டமைப்பின் கருத்தாக வெளியிட்டது கிடையாது. 

மாறாக, உத்தியோகபூர்வ பேச்சாளராகவும் அங்கத்துவக் கட்சியின் தலைவராகவும் இருக்கக்கூடிய சுரேஷ் பிரேமச்சந்திரனுடனோ ஏனைய அங்கத்துவக் கட்சிகளுடனோ கலந்து பேசாமல், சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் தாமே முடிவுகளை எடுத்து அதனை கூட்டமைப்பின் முடிவாக ஊடகங்களுக்கு அறிவித்த சம்பவங்கள் ஏராளம். 

சிவஞானம் சிறீதரன் – தேசம்

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் என்ற வகையிலும் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் அவர்களது செயற்பாடுகள் எமது தலைவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். 

அங்கத்துவக் கட்சிகளுக்கு உடன்பாடில்லாத முடிவுகளை எடுத்துவிட்டு அவற்றை அங்கத்துவக் கட்சிகளின்மீது திணிக்கின்ற நடைமுறைகளுக்கு எதிராக ஈபிஆர்எல்எவ் மட்டுமே ஓங்கிக் குரல்கொடுத்து வந்தது. 

அங்கத்துவக் கட்சியின் தலைவர் என்ற வகையில், சம்பந்தன், சுமந்திரன் போன்றோரின் இத்தகைய செயற்பாடுகளை கூட்டமைப்பிற்குள் விமர்சித்தபோதிலும் அதில் தீர்வு கிட்டாமையால், வெளியில் வந்து அவர்களது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் எமது கட்சிக்கு ஏற்பட்டது.

உண்மைகள் இவ்வாறிருக்க, சிறீதரன் போக்கடிப் போக்கில் பொய்யாகவும் பிழையாகவும் பொறுப்பின்றிப் பேசியிருக்கிறார். சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பேச்சாளராக இருப்பதன் மூலம், தனது முடிவுகளை கட்சியின் முடிவுகளாகவும் கூட்டமைப்பின் முடிவுகளாகவும் தான்தோன்றித் தனமாக வெளியிட்டு வருகின்றார் என்று கூட்டமைப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றமை கண்கூடு. இன்று  சுமந்திரன் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே கலந்துபேசி முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்ற கருத்தை சிறீதரன் பொதுவெளியில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒருபுறம் உட்கட்சிப் பிரச்சினையை பொதுவெளிக்குக் கொண்டுவருவதன் ஊடாக கட்சி என்றால் என்ன? கட்சிக்கட்டுப்பாடு என்றால் என்ன என்று தெரியாத தனது முதிர்ச்சியின்மையையும் மறுபுறம் சுமந்திரன் எடுக்கின்ற முடிவுகள் அனைத்தையும் எதிர்ப்போம் என்று தெரிவித்திருப்பதன் மூலம் கொள்கை அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்வதை விடுத்து, நபர்கள்சார்ந்து முடிவெடுத்திருப்பதானது  சிறீதரனின் அடிப்படை அரசியல் அறிவைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.

நாற்பத்தாறு ஆண்டுகாலமாக தன்னை முழுநேரமாக தமிழ்த் தேசிய இனத்தின் விடிவிற்காக அர்ப்பணித்துச் செயற்பட்டுவரும் ஒருவரைக் குறித்து அவராலேயே அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒருவர் அதிலும் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவர் சேறுபூச முற்படுவதானது படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்னும் முதுமொழிக்கு ஒப்பானது என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/139117

  • கருத்துக்கள உறவுகள்

உட் கட்சியில் பிரச்சனை பூதாகாரம் ஆகும் போது பிரச்சனை  வெளியில்  வந்துள்ளது. கட்சி  கட்டுக்கோப்பை இழக்கும் போது  சிறிதரன் மக்களிடம் தெரிவித்து உருக்கலாம். 

சம்பந்தர் சிவனே என்று படுத்திருக்க சுமந்திரன்  
தான்தோன்றிதனமாக நடந்திருக்கலாம். சிறிதரன் பொறுமையின் எல்லையை கடந்து இருக்கலாம்.

உண்மையில் கலாந்தி சர்வேஸ்வரன் தமிழ் மக்கள் மீது அக்கறையில் கூறுகிறாரா அல்லது கூட்டமைப்பை மலினப்படுத்த வேண்டும் என கூறுகிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

உட் கட்சியில் பிரச்சனை பூதாகாரம் ஆகும் போது பிரச்சனை  வெளியில்  வந்துள்ளது. கட்சி  கட்டுக்கோப்பை இழக்கும் போது  சிறிதரன் மக்களிடம் தெரிவித்து உருக்கலாம். 

சம்பந்தர் சிவனே என்று படுத்திருக்க சுமந்திரன்  
தான்தோன்றிதனமாக நடந்திருக்கலாம். சிறிதரன் பொறுமையின் எல்லையை கடந்து இருக்கலாம்.

உண்மையில் கலாந்தி சர்வேஸ்வரன் தமிழ் மக்கள் மீது அக்கறையில் கூறுகிறாரா அல்லது கூட்டமைப்பை மலினப்படுத்த வேண்டும் என கூறுகிறாரா?

இங்கு ஒருவருகொருவர் சளைத்தவர்கள் அல்ல, பெயர்கள்தான் வித்தியாசம் செயற்பாடுகள் எல்லாம் ஒரே மாதிரித்தான் இருக்கும், சரியானவர்களிற்கு இங்கு இடம் இல்லை, என்ன அனைவரும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்வீசுகிறார்கள் அவ்வளவுதான்.

பாவம் மக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரனுக்கு இது தேவையா?தேர்தல் நேரத்தில் சுமத்திரனை  பாலா அண்ணைக்கு நிகராக  புகழந்து பேசிவிட்டு இப்போது  மாற்றிப் பேசுவது எதற்காக என்பது தமிழ்மக்களுக்கு நன்றாகத் தெரியும்.தேர்தலில்; சுமத்திரனுக்கு ஆதரவளித்தால்  தமிழரசுக்கட்சியில் மாவையைத் தோற்கடித்து  தமிழரசுக்கட்'சியின் தலைவர் பதவியைத் சிறிதரனுக்கு கிடைப்பதற்க தான் ஆதரவு வழங்குவதாக வெளியில் சொல்லப்படாத ஒரு ஒப்பந்தம் இரந்தத. ஆனால்ல் தெர்தலில் வென்ற பிறகு மாவையைக் கட்சிக்குள் அசைக்க முடியவில்லை கட்சி உறப்பினர்கள் மட்டதில் சுமத்திரனையும் சிறிதரனையும் விட மாவையின செல்வாக்கு ஓங்கியிருப்பதால் சுமத்திரன் சிறிதரனைக்கழட்டி விட்டு சாணக்கியனை  த  நெருக்கமாக்கிக் கொண்டது சிறிதரனுக்குப் பிடி க்கவில்லை. அதுதான் இப்பொழுது சிறிதரன் இப்பொழது மாற்றிப் பேசுகிறார். சிறிதரன் கழுவுற மீனில நழுவுற மீன்.கட்சிக்குள்ளும் தமிழ்மக்கள் மத்தியிலும் சுமத்திரன் செல்வாக்கு இழந்துள்ள நிலையில் அவரை எதிர்ப்பது போல்  பேசி  மீண்டும் மாவை ஆதரவாளர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறார். மாவைக்கு வயது ஆகிவிட்ட படியால்  மாவைக்குப்  பின் அவரின் இடத்தைப் பிடிக்கப் பிளான் போடுகிறார். அடுத்த விடயம் சுரேஷ் கூட்டமைப்பின் பேச்சாளாராக பெயரளவில் இருந்தாரே ஒழிய அவரையோ ஏனைய கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்களையோ சம்பந்தர் கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகளைச் சம்பந்தனும் தமிழரசுக்கட்சியும் செய்தது . அதற்கு மாவையும் உடந்தை. 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் செயற்படுகள் எங்கள் இனத்தின் அடிப்படை ஒழுக்கமின்மையை கோடிட்டுக் காட்டுகின்றன. 

சுரேஸ் செய்தவர் ஆனால் பாரதூரமானவையல்ல. சுமந்திரன் செய்கிறார் ஆனால் பாரதூரமானவை. 

இவர்களிருவரது நடவடிக்கைகளும் அடிப்படை நிறுவன ஒழுங்குக்கு நேரெதிரானவை. 

இந்தப் பல்லைக்குத்தி மணக்கக் கொடுக்கும் செயற்பாடு என்பது இவற்றைவிட மோசமான  நடவடிக்கையாகும். ஏனென்றால் எந்த ஒரு நிறுவனமும் தனக்குள் எழும் முரண்பாடுகளை தன்னகத்தே தீர்த்துக்கொள்ள வேண்டும்  என்பதுதான் அடிப்படை ஒழுக்கம்.

இவற்றைக் கடைப்பிடிக்கத் தவறும் எவரும் மக்களுக்குச் சேவை செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்கலாம்? 

1) சாணக்கியனது promotion என்பது சிறிதரனுக்குக் கசக்கிறது.  

2) சம்பந்தரது இறுதி நாட்கள் எண்ணப்படும்போது இயல்பாகவே எழு தலைமைக்கான போட்டி இவர்களது நிறங்களை வெளிக்காட்டுகிறது.

3) TNA  இந்தியா கட்டுப்படுத்துவதா அல்லது US கட்டுப்படுத்துவதா எனும் போட்டி 

4) அடிபடும் எல்லோருக்கும் தலைமை தாங்குவதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்பது 

இவர்களை தனிப்பட்ட ரீதியில் தெரிந்தவர்களுக்குத் தெரியும்  இவர்கள் எல்லோருமே தங்கள் சுயநலத்திற்காக கூக்குரலிடுகிறார்கள் என்பது. 

இவர்களின் பேரம் பேசலும், பணக் கையாடலும் TNA யை அறிந்தவர்களுக்கு நன்கு பரீட்சயமானது. 

இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாக பல்லைக் குத்தி மணக்கக் கொடுப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை நம்பி,  சளைக்காமல் இன்னும்  இவர்களுக்கு  குத்திக்கொண்டிருக்கும் மக்கள்தான் பாவம், ஏமாளிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மறதிக் குணமே.. இந்த அரசியல்வாதிகளின் பலம்.
என்ன செய்வது… இவர்களுக்கு மாற்றாக எதுவும் இல்லாத போது, 
மீண்டும் இவர்களே வருகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

தமிழர்களின் மறதிக் குணமே..

அது அல்ல சிறியர்! மக்களுக்கு வேறு கதியில்லை, தமிழ்தேசியம் என்கிற உணர்வை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள், அதற்குள் வேறு யாரையும் நுழைந்து மாற்றமேற்படுத்தவும் விடுகிறார்களில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.