Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை - டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை - டக்ளஸ்

By Vishnu

06 Nov, 2022 | 01:02 PM
image

பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 05 ஆம் திகதி சனிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டு , மூன்று வருடங்கள் கடந்தும் அது இயங்கு நிலையில் இல்லாதமை குறித்து கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பலாலி விமான நிலையம் இயங்குவதற்கு தயாரான நிலையிலையே உள்ளது. ஆனாலும் அங்கு விமானங்கள் வர தயாராக இல்லாத நிலைமையே காணப்படுகிறது.

இந்திய விமானங்கள் அங்கு தரையிறங்க தயார் இல்லை. அதனாலயே விமான நிலையம் இயங்காத நிலையில் காணப்படுகிறது என்றார்,

அதன் போது, பலாலி விமான நிலையத்தில் இருந்த தொழிநுட்ப உபகரணங்கள் உள்ளிட்டவை தெற்கில் உள்ள விமான நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன என கேட்ட போது,

அது முற்றிலும் தவறான தகவல். நான் பொய் சொல்ல வேண்டிய தேவை இல்லை. பலாலி விமான நிலையத்தில் இருந்து எதுவும் எங்கும் கொண்டு செல்லப்படவில்லை.

இந்திய விமான நிறுவனங்கள் தமது விமானங்களை பலாலியில் தரை இறக்க தயார் எனில் ஒரு இரவில் பலாலி விமான நிலையத்தை இயங்க வைக்க என்னால் முடியும் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/139255

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, கிருபன் said:

இந்திய விமான நிறுவனங்கள் தமது விமானங்களை பலாலியில் தரை இறக்க தயார் எனில் ஒரு இரவில் பலாலி விமான நிலையத்தை இயங்க வைக்க என்னால் முடியும் என்றார்.

என்ன இவர் ஒரு இரவு எண்டதிலையே குறியாய் நிக்கிறார்? 😁

12 minutes ago, கிருபன் said:

பலாலி விமான நிலையம் இயங்குவதற்கு தயாரான நிலையிலையே உள்ளது. ஆனாலும் அங்கு விமானங்கள் வர தயாராக இல்லாத நிலைமையே காணப்படுகிறது.

இந்திய விமானங்கள் அங்கு தரையிறங்க தயார் இல்லை. அதனாலயே விமான நிலையம் இயங்காத நிலையில் காணப்படுகிறது என்றார்,

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

1) விமான எரிபொருள் இல்லாமல்... கொழும்பு விமான நிலையத்திற்கு வந்த விமானங்களே, 
இந்தியாவிற்குப் போய் எரி  பொருள் நிரப்பிக் கொண்டு வந்துள்ளது.

2) மழை பெய்தால்.... விமான ஓடு  பாதையில் வெள்ளம் தேங்கி நிற்கின்றது.

3) "டியூட்டி ஃபிரீ"  கடைகள் இல்லாமை.

இவை வெளிப்படையாக தெரிந்த காரணங்கள்.
உள்ளுக்கு... சிங்களம் எவ்வளவு கெடு பிடிகள்,  கமிஷன்களை எதிர் பார்க்கின்றதோ தெரியாது.

சுற்றுலா பயணிகளை கொண்டு வரும் விமான நிறுவனங்களும், 
பயணிகளும் இவற்றில் அதிக அக்கறை எடுப்பார்கள்.

யாழ்/கொழும்பு... ரயில், சாலை போக்குவரத்தே தினமும் விபத்தும், 
உயிரிழப்பும் நடந்து கொண்டு இருக்கும் போது...
பெரும் பணம் செலவழித்து விமானத்தில்  வருபர்கள்  அச்சம் கொள்வது இயல்பானதே.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொன்னதில் எதனை செய்து காட்டி இருக்கிறார். வாயால் நல்லா வடை சுடுவார்.

ஏலவே தமிழகத்தில் இருந்து பலாலிக்கு விமானம் இயக்கிய விமான சேவை நிறுவனம்.. சேவையை தொடர முன்வந்த போதும்.. சரியான ஏற்பாடுகளை இலங்கை தரப்பு செய்தி கொடுக்காத நிலையில்.. அது தனது நிலைப்பாட்டில் இருந்து மாறிக் கொண்டது.

இதற்கு மகிந்த - கோத்தா தரப்பின் தமிழர் பிரதேச பலாலி விமான நிலைய வெறுப்பே காரணமாக இருந்தது. அதனை இந்த குத்தியர் ஏற்றுக் கொள்ளமாட்டார்.. காரணம்.. எஜமான விசுவாசம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

என்ன இவர் ஒரு இரவு எண்டதிலையே குறியாய் நிக்கிறார்? 

அவரது தொழில் யாவும் இரவோடு சம்பந்தப்பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

முன்பொரு தடவை யாழில் வேறொரு இடத்தில் தரையிறங்கி மானபங்கப் பட்டதும் ஒரு காரணமா இருக்குமோ.

கம் ஒன் பாய்ஸ், இப்பவெல்லாம் வடக்கு தனியவா அல்லது கிழக்கோட சேர்ந்தா உங்கட ஒரு மாநிலமா வாறதெண்டு சிலபேருடைய எண்ணப்பாடுகள் போய்க்கொண்டிருக்கு.

டேக் இட் ஸ்போர்ட்டிவ்.....

பிளீஸ் கம் அண்ட் லாண்ட் ஒன் அஸ் ......

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ஹிந்திக் கல்லூரி வாத்திமாரிட்ட கேட்டா , சிலவேளை டவுட்டை கிளியர் பண்ணி விடுவினம் 😀

  • கருத்துக்கள உறவுகள்

மீன்பிடி அமைச்சர் எதற்கு போக்குவரத்து அமைச்சரின் வேலையை பாக்கணும்.
தனக்கு சம்பந்தமில்லாத விசயங்களில் தலையை ஓட்டி காசு பாக்கிறது இவருக்கு வாடிக்கையா போயிட்டுது.

இல்லை தெரியாமல் தான் கேக்கிறன் யாழில் இருப்பது சர்வதேச விமான நிலையமா அல்லது இந்தியனின் தனிப்பட்ட விமான நிலையமா?. சர்வதேச விமான நிலையம் என்றால் இந்தியனின் விமானம் மட்டும் தான் அங்கே தரையிறங்கணும்  என்று எப்படி இவர் எதிபார்க்கலாம்?. இந்தியா விமானம் விடேல்ல என்றால் நாமதான் மற்ற நாடுகளை வரும்படி அழைப்பு விடணும்.

இந்த குத்தியருக்கு கோழி மூளை, இது புரியாது. உங்கடை சப்பை மூக்கு நண்பர்களை அழையுங்கள் உடனே வருவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

மீன்பிடி அமைச்சர் எதற்கு போக்குவரத்து அமைச்சரின் வேலையை பாக்கணும்.
தனக்கு சம்பந்தமில்லாத விசயங்களில் தலையை ஓட்டி காசு பாக்கிறது இவருக்கு வாடிக்கையா போயிட்டுது.

சிங்களம் பெயருக்கு  ஒரு அமைச்சுப்பதவியை கொடுத்து, தமிழரை அழிக்க இவரை வைச்சிருக்கு. உண்மையில் இவர்  எந்த  அமைச்சுப்பதவிக்கும் பொருத்தமானவர் கிடையாது. அதனால சுற்றிஅடிச்சு  கருத்து தெரிவிச்சுக்கொண்டு திரியிறார். அவர் கடற்தொழில் அமைச்சர் என்றால்  அதன்  பிரச்சனைகளை  ஆராயவும், அவற்றை  தீர்க்கும் வழிமுறைகளை கண்டறியவுமே நேரங்காணாது, இது வம்பளப்பதும், மற்றவர்களை வசை பாடுவதும், தன்னைப் புகழ்வதுமாய் காலத்தை கடத்திக்கொண்டு அலையிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.