Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிமூலத்தில்

அந்தணண் பக்தி

வேலி இட்டான்

ஆலயத்தில்

அயலவர்கள் சாதி

வேலியிட்டனர்

அலுவலகத்தில்

அதிகாரிகள் அதிகார

வேலியிட்டனர்

பாடசாலையில்

ஆசிர்யர்கள் கல்வியால்

வேலியிட்டனர்

காதலர்கள்

அன்பால்

வேலியிட்டனர்

கணவன்,மனைவி

தாம்பத்திய

வேலியிட்டனர்

பேரினதவாதம்

பயங்கராவாத

வேலியிட்டது

விடுதலை போராளிகள்

விடுதலை

வேலியிட்டனர்

தம் உயிர் தியாகத்தால்!

  • Replies 55
  • Views 4.9k
  • Created
  • Last Reply

புத்து மாமா கனகாலதிற்கு பிறகு கவிதை நல்லா இருக்கு.................எப்படி உங்களாள இப்படி எல்லாம் முடியுது மாமா........... :P ;)

பேபிக்கு மம்மி

முத்தத்தால்

வேலியிட்டா

காதலி

காதல் முத்தால்

வேலியிட்டா........... :lol: :P

நானும் இரண்டு வரிகள் எழுதி இருகிறேன் எப்படி இருக்கு மாமு............ :P

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் தன் புது கவிதையால்

யாழுக்கு

புது வேலியிட்டுள்ளார்.

  • 2 weeks later...

நீண்ட நாட்களின் பின் புத்தன் எண்ண வரிகள் படித்ததில் திருப்தி

விடுதலை போராளிகள்

விடுதலை

வேலியிட்டனர்

வேலியை பிய்த்தெறிதல்

என்பது தானே விடுதலை?

வேலியிடல் விடுதலையா? :rolleyes:

வேலியை பிய்த்தெறிதல்

என்பது தானே விடுதலை?

வேலியிடல் விடுதலையா? :rolleyes:

வேலி பிய்த்து எறிந்தால் பிரிக்கப்பட்ட இரண்டும் ஒன்றாகி விடுமே B)

பேரினதவாதம்

பயங்கராவாத

வேலியிட்டது

பயங்கரவாத வேலியை பிய்த்தெறிதலைச் சொன்னேன்! :rolleyes:

புத்து மாமா வேலி கவிதை நல்லா இருக்கு...

கணவன்,மனைவி

தாம்பத்திய

வேலியிட்டனர்

என்று சொல்லி தப்பீட்டீங்கள்.. இதை

கணவன்,மனைவிக்கு

தாலி என்ற

வேலியிட்டான்

இப்படி மாத்தி எழுதி இருந்தால் பலருக்கு கோவம் வந்திருக்கும். :P

புத்தன் உங்கள் கவிதை தவறான அர்த்த்தை கொடுக்கிறது!

புத்து மாமா வேலி கவிதை நல்லா இருக்கு...

கணவன்,மனைவி

தாம்பத்திய

வேலியிட்டனர்

என்று சொல்லி தப்பீட்டீங்கள்.. இதை

கணவன்,மனைவிக்கு

தாலி என்ற

வேலியிட்டான்

இப்படி மாத்தி எழுதி இருந்தால் பலருக்கு கோவம் வந்திருக்கும். :P

:rolleyes::):):lol::lol: ஒரு வாதமாக போயிருக்கும் ல ;)

:rolleyes::):):lol::lol: ஒரு வாதமாக போயிருக்கும் ல ;)

இப்ப மட்டும் என்ன, காலம் பிந்தி விட்டதா இதோ:

கணவன்,மனைவிக்கு

தாலி என்ற

வேலியிட்டான்

கலைஞன்...

நீங்கள் எப்படி அப்படி சொல்லலாம்? மனைவி விரும்பித்தானே தாலியை ஏற்றுக்கொள்கிறாள்? கணவன் கட்டாயப்படுத்தியா தாலி கட்டுகிறான்? தாலி கட்டுதல் தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய தனித்துவ அடையாளம். தாலியில்லை என்றால் இன்று பெண்களின் நிலை என்னவென்று எண்ணிப் பார்த்தீர்களா? பெண்களின் சுயகட்டுப்பாட்டுக்கான ஒரு அடையாளமாகத்தான் தாலியை எமது முன்னோர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். வேலி தாண்டிக் கூட மேய முடியும். ஆனால், தாலி தாண்டி மேய முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.ஐரோப்பியர்கள் மோதிரம் மாற்றுகிறார்கள். ஆபிரிக்கர்கள் வேறு அடையாளங்களைக் கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. அதையேன் இழக்கப் பார்க்கிறீர்கள்? பெண்களை தமிழர்கள் புனிதமாகவும், உயர்வாகவும் மதிப்பதன் உன்னத அடையாளம் தான் தாலி. (அதற்காக புனிதம் என்றால் என்னவென்று கேட்கக்கூடாது). தாலி கட்டுவதில் எவ்வளவு பெரிய அர்த்தம் பொதிந்துள்ளது தெரியுமா? அது ஒரு தனி நிகழ்வல்லை. அதில் வாழ்க்கையின் மாபெரும் தத்துவமே உள்ளடங்கியிருக்கிறது. இதொன்றும் தெரியாமல் சர்வசாதாரணமாக தாலியை வேலி என்று சொல்லி தமிழரின் பகுத்தறிவைக் கொச்சைப்படுத்திவிட்டீர்கள

புத்தன் தெரிந்தோ தெரியாமலோ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கவிதை எழுதியிருக்கிறார்.

ஆதிமூலத்தில் பார்ப்பான் பக்தியின் பெயரால் வேலியிட்டான்.

பக்தியின் பெயரால் மக்களை வேலி போட்டு அடைத்து வைப்பதை, அடிமைப் படுத்துவதை சொல்கிறீர்கள்.

கோயிலில் அயலவர்கள் சாதி வேலியிட்டனர்

கோயிலை சூழவாழும் உயர்சாதி மக்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் வாழும் மக்களை சாதியின் பெயரினால் அடக்குவதையும், கோயிலுக்கு வரவிடாது தடுப்பதையும் சொல்கிறீர்கள்.

அலுவலகத்தில் அதிகாரிகள் வேலையாட்களை அடக்குவதை சொல்லி, பாடசாலையில் ஆசிரியார்கள் மாணவர்களை கல்வியின் பெயரால் அடக்குவதை சொல்லி

பேரினவாதம் பயங்கரவாதத்தின் பெயரால் அடக்குவதைச் சொல்லி

அப்படியே

போராளிகள் உயிர்தியாகம் செய்து விடுதலையின் பெயரால் வேலி போடுகின்றனர் என்று முடிக்கிறீர்கள்.

விடுதலை என்று சொல்லி வன்னியில் வாழும் மக்களை விடுதலைப் புலிகள் அடக்கி வைத்திருக்கிறார்கள் என்று ஒட்டுக் குழுக்கள் சொல்கின்ற குற்றச்சாட்டை புத்தனும் சொல்லியிருக்கிறார்.

புத்தன்! ஏன் இந்த மாற்றம்?

Edited by சபேசன்

எனக்கொரு சின்ன சந்தேகமுங்கோ

தாலி தமிழினத்தில் இந்துமதத்தினரின் திருமண அடையாளம் என்கிறீங்களே. அந்த தாலி & கொடி கட்டாயம் பவுணில் தான் செய்தணியணுமா? மஞ்சள் கயிறு பூணுதல் தப்பா? கொஞ்சம் சொல்லுங்களன்

அதெப்படி வெண்ணிலா இந்து மதத்தையும் தமிழ் இனத்தையும் பிரித்து பார்ப்பீர்கள். இந்து மதமும் தமிழ் இனமும் ஒன்றுடன் ஒன்று கலந்தது. இந்து என்றால் தமிழ், தமிழ் என்றால் இந்து. இந்து மதம் தான் தமிழரின் மதம். மற்றையதெல்லாம் இடையில் வந்து புகுந்த மதங்கள். தமிழர் மேல் ஆதிக்கம் செலுத்திய மதங்கள்.எனவே இனிமேல் இப்படி இந்து மதம், தமிழினம் என்று பிரிக்காதீர்கள். வேதனையாக இருக்கிறது. :angry:

வசதி இருக்கிறவர்கள் தங்கத்தில் செய்கிறார்கள், இல்லாதவர்கள் மஞ்சள் கயிறில் செய்கிறார்கள். ஏழ்மையும், வசதியும் அவரவர் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்தின் படி அமைவது. எனவே இந்த யென்மத்தில நீங்கள் நிறைய புண்ணியம் செய்தீர்கள் என்றால் அடுத்த பிறப்பில் தங்கத் தாலி கட்டிக்கொள்ளலாம். :rolleyes:

புத்தன் தெரிந்தோ தெரியாமலோ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கவிதை எழுதியிருக்கிறார்.

ஆதிமூலத்தில் பார்ப்பான் பக்தியின் பெயரால் வேலியிட்டான்.

பக்தியின் பெயரால் மக்களை வேலி போட்டு அடைத்து வைப்பதை, அடிமைப் படுத்துவதை சொல்கிறீர்கள்.

கோயிலில் அயலவர்கள் சாதி வேலியிட்டனர்

கோயிலை சூழவாழும் உயர்சாதி மக்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் வாழும் மக்களை சாதியின் பெயரினால் அடக்குவதையும், கோயிலுக்கு வரவிடாது தடுப்பதையும் சொல்கிறீர்கள்.

அலுவலகத்தில் அதிகாரிகள் வேலையாட்களை அடக்குவதை சொல்லி, பாடசாலையில் ஆசிரியார்கள் மாணவர்களை கல்வியின் பெயரால் அடக்குவதை சொல்லி

பேரினவாதம் பயங்கரவாதத்தின் பெயரால் அடக்குவதைச் சொல்லி

அப்படியே

போராளிகள் உயிர்தியாகம் செய்து விடுதலையின் பெயரால் வேலி போடுகின்றனர் என்று முடிக்கிறீர்கள்.

விடுதலை என்று சொல்லி வன்னியில் வாழும் மக்களை விடுதலைப் புலிகள் அடக்கி வைத்திருக்கிறார்கள் என்று ஒட்டுக் குழுக்கள் சொல்கின்ற குற்றச்சாட்டை புத்தனும் சொல்லியிருக்கிறார்.

புத்தன்! ஏன் இந்த மாற்றம்?

சபேசன், நீங்கள் புத்தனின் கவிதைக்கு தவறான கற்பிதத்தை செய்து அவர் சொல்லாத அல்லது சொல்ல நினைக்காத விடயத்தை சொல்லியிருக்கிறீர்கள். புத்தன் தனது கவிதையின் இறுதி வரியாக "தம் உயிர்த் தியாகத்தால்" என்கிற வரியை சேர்த்திருக்கிறார். அது தவிர பேரினவாதம் எம் மக்கள் மீது பாயாமல் விடுதலை என்னும் வேலியை (அரணை) இட்டு காத்து நிற்கிறார்கள் என்பதைத் தான் அவர் சொல்ல முனைந்திருக்கிறார். சிலவேளைகளில் அந்த வரிகளில் ஒரு மயக்கநிலை தோன்றலாம்.

Edited by இளைஞன்

இல்லல இளைஞன் எனக்கு முற்காலம் எல்லாம் தெரியாததால் நான் இன்றைய காலத்தை நினைத்து அபப்டி எழுதிட்டேன். தமிழர்களுள்ளும் பல மதத்தினர் இருப்பதை தான் நான் பார்த்திருக்கிறேன். இன்றுதான் உங்கள் கருத்து மூலம் அறியக்கூடியதாக இருந்தது தமிழ் எனில் இந்து இந்து எனில் தமிழ். இனிமேல் அப்படி பிரிச்சு பேசமாட்டேன் மன்னிக்கவும்

ஓ ஏழையர் தான் மஞ்சள் கயிற்றில் தாலி பூணுவார்களா? ஏன் பணக்காரர் மஞ்சள் கயிற்றில் தாலி பூணுதல் தப்போ?அ ல்லது கெளரவக்குறைவாக கருதப்படுமா? ;)

Edited by வெண்ணிலா

இல்லல இளைஞன் எனக்கு முற்காலம் எல்லாம் தெரியாததால் நான் இன்றைய காலத்தை நினைத்து அபப்டி எழுதிட்டேன். தமிழர்களுள்ளும் பல மதத்தினர் இருப்பதை தான் நான் பார்த்திருக்கிறேன். இன்றுதான் உங்கள் கருத்து மூலம் அறியக்கூடியதாக இருந்தது தமிழ் எனில் இந்து இந்து எனில் தமிழ். இனிமேல் அப்படி பிரிச்சு பேசமாட்டேன் மன்னிக்கவும்

ஓ ஏழையர் தான் மஞ்சள் கயிற்றில் தாலி பூணுவார்களா? ஏன் பணக்காரர் மஞ்சள் கயிற்றில் தாலி பூணுதல் தப்போ?அ ல்லது கெளரவக்குறைவாக கருதப்படுமா? ;)

இப்படியெல்லாம் கேள்வி கேட்பது, நீங்கள் இந்துமதத்தை இழிவு செய்வது போன்றது. இந்து மதத்தை இழிவு செய்தல் என்பது தமிழரை இழிவு செய்வது போன்றது. அவா அவாக்கு என்ன விதிக்கப்பட்டதோ அதைத் தான் அவா செய்ய வேண்டும். இருப்பவர்கள் அனுபவிக்கிறார்கள். அதில் என்ன கெளரவம், தப்பு, சரி எல்லாம். இப்ப, உங்கள் வீட்டில் ஒரு கடிதம் எழுதவேண்டுமென்றால் எதில் எழுதுவீர்கள்? பேப்பரிலா? கணினியிலா? எது உங்களுக்கு வசதியா இருக்கிறதோ அதை செய்கிறீர்கள். இதில் என்ன தப்பு? இதில் என்ன கெளரவம்? :rolleyes:

இதில் என்ன இருக்கு இந்து மதத்தை இழிவு படுத்த?

இல்லை இளைஞனே

எனக்கு தெரிந்த ஒரு திருமணத்தில் ஆண் பெண் இரு வீட்டாரும் பணக்காரர். பொண்ணுக்கு மஞ்சள் கயிற்றில் தாலி செய்தணியவே விருப்பம். ஏனெனில் தற்காலத்தில் நகை அணிவது சிரமம். அதாவது களவு போயிடும் என்பதாலும் தாலி பெரிய சைஸ் என்பதாலும்.

ஆகவே அவள் கணவனுக்கு சொன்னாள் தனக்கு தாலியை மஞ்சள் கயிற்றில் அணியும்படி. ஆனால் அவனோ அது தனக்கு கெளரவக்குறைச்சல் என சொல்லியதால் அப்பெண் கெஞ்சினாள் சரி ஒரு 7 பவுணிலாவது செய்யுங்க என. ஆனால் அவனோ 25 பவுணில் தாலி அணிவித்தான். ஆனால் என்ன தற்போது அவள் தாலியே போடுவதில்லை. கோயிலுக்கு போவதென்றால் கூட தாலி அணிவதில்லை,

ஆனால் தாலி என்பது கணவனுக்கு சமம் என சொல்லி கணவனே கண் கண்ட தெய்வம் என பொண்ணுக தாலியையே வணாங்குவது காணக்கூடியதாக இருக்க்கும் சந்தர்ப்பத்தில் இபப்டி பெரிய அளவுகளில் தாலி செய்து அணியாமல் வீட்டில் வைத்திருப்பது நியாயமா?

அதை விட மஞ்சள் கயிறு நல்லதென சொல்ல வருகின்றேன். நீங்கள் என்ன நினைக்கிறீங்க?

மஞ்சள் கயிறோ, தங்கக் கயிறோ தாலி பெண்ணுக்கு முக்கியம். தமிழரின் அடையாளத்தை அடுத்து வர இருக்கும் பல சந்ததிகளுக்கும் எடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பு தாலிக்கு இருக்கிறது. தங்கத்தில் பாரமாக தாலி போடுவது ஏன் என்று தெரியுமா? முன்னர் பெண்கள் தலை குனிந்து நடந்தார்கள். ஆனால் இப்போது பெண்கள் தமிழரின் கலாச்சாரத்தை புறக்கணித்து, சுயகட்டுப்பாடுகளை இழந்து, மேற்கத்தைய மோகத்தில் தலையை நிமிர்ந்து நடக்கிறார்கள். இது தமிழ்ப் பண்பாட்டுக்கு இழுக்கல்லவா? அதனால் தான் பாரமான தாலி கட்டி, அந்தப் பாரத்தால் பெண்களை தாமாகவே தலையை குனியும்படி செய்கிறார்கள். இப்போது விளங்குகிறதா. இந்துக்களின் ஒவ்வொரு சடங்குக்கும், சம்பிரதாயத்துக்கும், செயலுக்கும் பின்னால் எப்போதும் ஒரு விஞ்ஞான விளக்கம் இருக்கிறது என்பதை நீங்கள் எப்பொழுதுதான் புரிந்துகொள்ளப் போகிறீர்களோ தெரியாது. :rolleyes:

ஓ உங்கள் கருத்துக்களை நான் உள்வாங்குகின்றேன். ஆனால் பாருங்க இளைஞா பெண்கள் தலை குனிந்து சென்றது அந்தக்காலம். ஆனால் தற்போதும் அப்படி செல்லலாம் என நினைக்கிறீங்களாஅ?

பெண்கள் தமக்கு தாமே பாதுகாப்பு என்று வாழும் நிலை ஏற்பட்டுள்ள இக்காலத்தில் தலை குனிந்து செல்வது நியாயமா?

;)

இப்படியெல்லாம் சுயமாக பெண்கள் சிந்திக்கக்கூடாது. இந்துமதக் கலாச்சாரத்துக்கு இது ஆகாது. பெண்கள் என்றால் ஆண்களுக்கு அடங்கி அடக்கமாக வாழவேண்டும். அப்போது தான் பெண்கள் பாதுகாப்பாகவும், சந்தோசமாகவும் வாழமுடியும். கடவுள் ஆணையும் பெண்ணையும் ஏன் படைத்தார்? ஆணும் பெண்ணும் சமம் என்றால் பிறகெதற்கு கடவுகள் ஆண் பெண் என்ற இரண்டு வகையினரைப் படைத்தார்? தனியே ஆண்களை மட்டுமே படைத்திருக்கலாமே? பெண்ணைக் கடவுள் படைத்தது ஆணுக்கு துணையாக, சேவகம் செய்வதற்குத் தான். அடக்கம் தான் பெண்களுக்கு அழகு. பொறுமைதான் பெண்களுக்கு சிறப்பு. பெண்கள் எப்படி தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியும்? பெண்கள் சுயமாக இயங்கக் கூடாது. பிறந்து வளரும் வரையிலும் தந்தை என்கிற ஆணின் பாதுகாப்புத் தேவை. பின்னர் சிறிது காலம் அண்ணன் தம்பி என்கிற ஆண்களின் பாதுகாப்புத் தேவை. திருமணத்தின் பின் கணவன் என்கிற ஆணின் பாதுகாப்புத் தேவை. வயது முதிர்ந்ததும் மகன் என்கிற ஆணின் துணை தேவை. இப்படி எந்த ஆணின் துணையும் பாதுகாப்பும் இல்லாமல் பெண்களால் எப்படி வாழமுடியும். :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தனின் வரிகள் அருமை அதை படித்தவர் கருத்துகள் தான் அலம்பல்..! வாழ்த்துக்கள் புத்தன். தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

என்ன நிதர்சன் இப்படி சொல்லிட்டீங்கள்? எவ்வளவு சிரமப்பட்டு நானும் மற்றவர்களும் பிய்த்து பிடுங்கி மேய்ந்து மென்று ஆய்வு செய்து கருத்துக்களை எழுதுகிறோம். நீங்கள் ஒரு சொல்லில் அலம்பல் என்றுவிட்டீர்கள் :rolleyes:

நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையே. இப்ப என்ன சொல்ல வாறியள் தாலியை பாரமாக கழுத்தில் அணிந்து குனிந்து நடப்பதுதான் பெண்ணுக்கு அழகு என சொல்ல வாறியளா? ;) ஆணுக்குள் அடக்கம் பெண் என்பதை விட ஆணுக்கு அடங்குவது பெண் என நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் ஆணுக்கு சேவகம் செய்யவே பெண்னைப் படைத்தான் இறைவன் என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்கின்றேன்.ஆனால் நடைமுறை வாழ்க்கையில் சேவகம் செய்யும் பெண்ணை ஆண் எபப்டி எல்லாம் கொடுமைப்படுத்துறான் என்று அறிவீர்களா? :rolleyes: எல்லா குடும்பங்களிலும் இல்லை என்பதை குறிப்பிடுகின்றேன்.

சரி நிர்வாகத்திடம் சொல்லி நம்ம அலம்பலை(நிதர்சனின் மொழி) வேற்று பகுதிக்குள் அதாவது குளக்கட்டானால் ஆரம்பித்த தாலி என்ற தலைப்பின் கீழ் நகர்த்துவமா? ஏன்ன்னா எனக்கு தாலியைப் பற்றி நிறைய விசயங்கள் தேவைப்படுகின்றது. ஆவன செய்யுங்கோ இளைஞா

Edited by வெண்ணிலா

புத்தனின் வரிகள் அருமை அதை படித்தவர் கருத்துகள் தான் அலம்பல்..! வாழ்த்துக்கள் புத்தன். தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

ஆயிரம் அர்த்தங்கள் உங்கள் ஒருவரியில்............... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.