Jump to content

மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு

பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின்  மரணத்துக்குப் பின்னர்  மன்னராக பதவியேற்றுள்ள 3ஆம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களைச் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கிலோ மீற்றர்  தொலைவில் உள்ள  லுட்டன் நகரத்துக்கு நேற்று முன்தினம் சென்ற(06) அவர், அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்து  மன்னரை நோக்கி முட்டையொன்று வீசப்பட்டது.

image_88410aad0d.jpg

 இதனையடுத்து  உடனடியாக மன்னரை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் மீது முட்டை வீசப்படுவது இது முதற் தடவை அல்ல.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மன்னர் சார்லஸ்  மற்றும்அவரது மனைவி ராணி கமிலா யார்க் நகரத்துக்கு சென்றபோது  அவர்கள் மீது 23 வயதான  இளைஞர் ஒருவர் முட்டை வீசியிருந்தார் என்பது, பின்னர்  அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மன்னர்-சார்லஸ்-மீது-மீண்டும்-முட்டை-வீச்சு/50-308636

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனியே முட்டையாக எறியாமல் கொஞ்ச வெங்காயம் பச்சை மிளகாயையும் அரிந்து எறிந்திருந்தால் மன்னர் பெருமான் ஆம்லெட் ஆவது போட்டிருப்பார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

தனியே முட்டையாக எறியாமல் கொஞ்ச வெங்காயம் பச்சை மிளகாயையும் அரிந்து எறிந்திருந்தால் மன்னர் பெருமான் ஆம்லெட் ஆவது போட்டிருப்பார்.

 

செய்தி கனமானது

இவர் தங்களுக்கு  தலைமைதாங்கும் அரசராக  இருக்க  தகுதியற்றவர்

உண்மையும் அது  தானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

தனியே முட்டையாக எறியாமல் கொஞ்ச வெங்காயம் பச்சை மிளகாயையும் அரிந்து எறிந்திருந்தால் மன்னர் பெருமான் ஆம்லெட் ஆவது போட்டிருப்பார்.

இங்கிலாந்துக்காரருக்கு…. குறி பார்த்து எறியத் தெரியாதா? 😂
இரண்டாவது தடவையும். முட்டை பக்கத்திலை தான் விழுந்து உடைஞ்சிருக்கு. 🤣

நான்… பார்த்து, ரசித்த… முட்டை அடி என்றால்…
ஜெயலலிதா ஆட்சியில்… மதுரையில் வைத்து, சுப்பிரமணிய சாமிக்கு அடித்த முட்டைதான்.
அடித்த அடியில்…. தலை, வேட்டி எல்லாம் மஞ்சளாக்கி வழிந்து ஓடியிருந்தது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாராணியார் ஒரு விபத்து.

இவர்களில் 1,2ம் எலிசபெத்தை தவிர மிகுதி எல்லாரும் தகுதியற்றோரே. ஆனால் நாட்டின் அடிமைபுத்தி இப்போதைக்கு மாறாது.

@விசுகு

Edited by goshan_che
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இங்கிலாந்துக்காரருக்கு…. குறி பார்த்து எறியத் தெரியாதா? 😂
இரண்டாவது தடவையும். முட்டை பக்கத்திலை தான் விழுந்து உடைஞ்சிருக்கு. 🤣

நான்… பார்த்து, ரசித்த… முட்டை அடி என்றால்…
ஜெயலலிதா ஆட்சியில்… மதுரையில் வைத்து, சுப்பிரமணிய சாமிக்கு அடித்த முட்டைதான்.
அடித்த அடியில்…. தலை, வேட்டி எல்லாம் மஞ்சளாக்கி வழிந்து ஓடியிருந்தது. 😁

நாங்கள் ஒரு ஒன்லைன் எக் தொரோயிங் கோர்ஸ் ஆரம்பிப்பமா?

நல்ல காசு பார்க்கலாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நாங்கள் ஒரு ஒன்லைன் எக் தொரோயிங் கோர்ஸ் ஆரம்பிப்பமா?

நல்ல காசு பார்க்கலாம்🤣

அதோடை…. ரொமாட்டோ தொரோயிங் கோர்சும் ஆரம்பித்தால் இன்னும் நல்லது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

அதோடை…. ரொமாட்டோ தொரோயிங் கோர்சும் ஆரம்பித்தால் இன்னும் நல்லது. 😂

எக் அண்ட் டொமேட்டொ தொரோயிங் கம்பையிண்ட் கோர்ஸ்.

இந்த கோசில் சேர்ந்தால் ஒரு கிலோ முட்டைகோசு இனாம்!

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄   ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர் அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.  
    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
    • கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?   2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?   Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST   NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
    • முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா இப்ப‌ நில‌மை வேறு மாதிரி ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮......................... 2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.