Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்கு அழுகிய தக்காளிப்பழம் வீசி போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்கு அழுகிய தக்காளிப்பழம் வீசி போராட்டம்

By T. SARANYA

10 DEC, 2022 | 03:01 PM
image

வவுனியாவில் தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கொட்டகை அமைத்து 2120 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட கொட்டகை முன்பாக இன்று (10) முன்னெடுக்கப்பட்ட  போராட்டத்தின் போதே தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் 'அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமக்கு நீதி வேண்டும் எனவும், நீதி மறுக்கப்பட்ட நாட்டில் மனிதவுரிமைகள் தினம் எதற்கு' எனவும் கோசம் எழுப்பியதுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு இன்றி அரசாங்கத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லக் கூடாது எனவும், இது அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சி எனவும் தெரிவித்தனர்.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன்,த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், வினோதரராதலிங்கம், கோவிந்தம் கருணாகரன், ஈபிஆர்எல் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரது உருவம் பொறிக்கப்பட்ட பதாதைக்கு அழுகிய தக்காளிப் பழத்தால் வீசி, மத்தியஸ்தம் இன்றி அரசாங்கத்துடன் தனித்து பேச்சுவார்த்தைக்கு செல்லாதீர்கள், இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றாதீர்கள் எனக் கூறி தக்காளிப் பழங்களை வீசித்  தாக்கினர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதுடன், இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

https://www.virakesari.lk/article/142735

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி ஒன்றை.... காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லி உள்ளார்கள். 👍 🥰

முட்டையால் அடித்திருக்காலம்தான்.... 
இப்ப முட்டை விற்கிற விலையில் செய்யவில்லைப் போலுள்ளது.
இது...  @goshan_che யின் "எக் அண்ட் டொமேட்டொ தொரோயிங் கம்பையிண்ட் கோர்ஸ்"´ல் 
பயிற்சி பெற்ற ஆட்கள் போலுள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நல்ல செய்தி ஒன்றை.... காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லி உள்ளார்கள். 👍 🥰

முட்டையால் அடித்திருக்காலம்தான்.... 
இப்ப முட்டை விற்கிற விலையில் செய்யவில்லைப் போலுள்ளது.
இது...  @goshan_che யின் "எக் அண்ட் டொமேட்டொ தொரோயிங் கம்பையிண்ட் கோர்ஸ்"´ல் 
பயிற்சி பெற்ற ஆட்கள் போலுள்ளது. 🤣

இது எமது பட்ட, பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் பட்டம் பெற்ற முதலாவது தொகுதி மாணவர்கள்.

அந்த சாறி கட்டிய அன்ரி batch topper 🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செயற்பாடுகளை முன்னரே  செய்திருக்க வேண்டும். 

சாணியடிக்கலாம்

கல்லால் அடிக்கலாம் 

பழைய செருப்பால் எறியலாம்

காறி உமிழலாம்

இவர்களின் படங்களை மசசல கூட வாசலில் ஒட்டலாம்

பழைய விளக்குமாறு, தும்புத்தடி, ஈர்க்குக்கட்டு பாவிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன்,த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், வினோதரராதலிங்கம், கோவிந்தம் கருணாகரன், ஈபிஆர்எல் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரது உருவம் பொறிக்கப்பட்ட பதாதைக்கு அழுகிய தக்காளிப் பழத்தால் வீசி, மத்தியஸ்தம் இன்றி அரசாங்கத்துடன் தனித்து பேச்சுவார்த்தைக்கு செல்லாதீர்கள், இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றாதீர்கள் எனக் கூறி தக்காளிப் பழங்களை வீசித்  தாக்கினர்.

இருவரின் பெயரை காணலையே?

18 minutes ago, Kapithan said:

இப்படியான செயற்பாடுகளை முன்னரே  செய்திருக்க வேண்டும். 

சாணியடிக்கலாம்

கல்லால் அடிக்கலாம் 

பழைய செருப்பால் எறியலாம்

காறி உமிழலாம்

இவர்களின் படங்களை மசசல கூட வாசலில் ஒட்டலாம்

பழைய விளக்குமாறு, தும்புத்தடி, ஈர்க்குக்கட்டு பாவிக்கலாம்

உங்களுக்கொரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இருவரின் பெயரை காணலையே?

தக்காளி வாங்கி கொடுத்தவர்கள் மீது எறிவது விதிகளுக்கு முரணானது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

தக்காளி வாங்கி கொடுத்தவர்கள் மீது எறிவது விதிகளுக்கு முரணானது.

 

😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

தக்காளி வாங்கி கொடுத்தவர்கள் மீது எறிவது விதிகளுக்கு முரணானது.

புலனாய்வு அதிகாரி சொன்னா சரியா தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

புலனாய்வு அதிகாரி சொன்னா சரியா தான் இருக்கும்.

🤣 உங்கள் கீப்போர்ட்டில் புலனாய்வு என்ற பதம் எழுத்து பிழை இன்றி தட்டுப்படுவதையிட்டு யாம் மிகுந்த மன அமைதி அடைகிறோம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

இருவரின் பெயரை காணலையே?

நீங்கள்… டக்ளஸ், பிள்ளையானின் பெயரைத்தானே சொல்கிறீர்கள். 😂
அதற்குரிய காரணத்தை… கோசான், கீழே குறிப்பிட்டுள்ளார்.  🤣

16 minutes ago, goshan_che said:

தக்காளி வாங்கி கொடுத்தவர்கள் மீது எறிவது விதிகளுக்கு முரணானது.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே போடில் இரெண்டு பேரின் சென்னை-யாழ் திட்டம் இழுத்து மூடப்பட்டது

2 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்… டக்ளஸ், பிள்ளையானின் பெயரைத்தானே சொல்கிறீர்கள். 😂
அதற்குரிய காரணத்தை… கோசான், கீழே குறிப்பிட்டுள்ளார்.  🤣

 

 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kapithan said:

இவர்களின் படங்களை மசசல கூட வாசலில் ஒட்டலாம்

பார்த்தா பயத்தில கக்கா போகவேணும். இவையட படங்களை பார்த்தால்,  சிரிச்சு, சிரிச்சு... கீழ வேலை ஆகாதே....

ஆகவே objection your honour 😬

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

பார்த்தா பயத்தில கக்கா போகவேணும். இவையட படங்களை பார்த்தால்,  சிரிச்சு, சிரிச்சு... கீழ வேலை ஆகாதே....

ஆகவே objection your honour 😬

வாசலில் ஒட்டிய படத்தை எப்படி உள்ளே இருந்து பார்த்து சிரிப்பார்கள்?

கதவை சாத்தாமலா…..சை…🤣

ஆப்ஜெக்சன் ஓவர் ரூல்ட்🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

வாசலில் ஒட்டிய படத்தை எப்படி உள்ளே இருந்து பார்த்து சிரிப்பார்கள்?

கதவை சாத்தாமலா…..சை…🤣

ஆப்ஜெக்சன் ஓவர் ரூல்ட்🤣

உள்ள இருந்து நிணைச்சு சிரிக்கிறது தானே....😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

உள்ள இருந்து நிணைச்சு சிரிக்கிறது தானே....😁

அப்ப சரி. 

ஒவர் ரூள்ட், ஒவர் ரூல்ட்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.