Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண பெண்களின் நிலைமை-பொலிஸார் வெளியிட்ட தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண பெண்களின் நிலைமை-பொலிஸார் வெளியிட்ட தகவல்

11-6.jpg

வடக்கு மாகாணத்தை சேர்ந்த யுவதிகள் மற்றும் பெண்கள் கொழும்புக்கு வந்து தவறான தொழிலில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது என பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் பல சந்தர்ப்பதங்களில் இந்த விடயம் தொடர்பான நிலைமை தெரியவந்தாகவும் பணியகம் கூறியுள்ளது. கடந்த வாரம் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர், கொழும்பு கோட்டை, மருதானை பிரதேசங்களிலும் மகரகமை பிரதேசத்திலும் 19 பெண்களை கைது செய்தனர்.

இவர்களிடம் விசாரணைகளை நடத்தியதில் இவர்களில் 11 பேர் மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த பெண்கள் ஆடைத்தொழிற்சாலைகளில் சேவையாற்றுவதற்காக கொழும்புக்கு வந்துள்ளனர். அதில் கிடைக்கும் வருமானம் போதவில்லை என்ற காரணத்தினால், இவர்கள் மேற்படி தவறான தொழிலில் ஈடுபட்டு வந்தாக அந்த பெண்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

 

https://akkinikkunchu.com/?p=234823

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒருத்தரும் கருத்து எழுத காணோம்...சிங்கள காவற்துறை பொய் சொல்லினம் என்று சொல்லப் போறார்களோ 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல் இவர்கள் தமிழர்கள் அல்ல.. தீவிர வலதுசாரி தமிழ்தேசியவாதிகளின் சார்பில் இவர்களை தள்ளி வைக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

11 பேர் இதில் ஈடுபடுவதால் தமிழ் சமூகம் முழுவதையும் காறித் துப்ப வேண்டும் என சிலர் எதிர் பார்க்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2023 at 18:39, MEERA said:

11 பேர் இதில் ஈடுபடுவதால் தமிழ் சமூகம் முழுவதையும் காறித் துப்ப வேண்டும் என சிலர் எதிர் பார்க்கின்றனர்

இன்றைக்கு 11 பேர்  நாளைக்கு 11 ஆயிரமாய் பெருகி நிக்கும் போது தான் நிலைமை தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார கஸ்டத்தில் இத்தகையை தொழிலை தேர்வு செய்துள்ளார்கள். இதற்கு ஒரு சமூகம் என்ன செய்ய முடியும்?
பொலிஸ் அரைவாசி உண்மையை சொல்லியுள்ளார். வடக்கு கிழக்கில் உலாவும் சிங்கள விபச்சாரிகள் பற்றி  எதுவுமே கூறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இன்றைக்கு 11 பேர்  நாளைக்கு 11 ஆயிரமாய் பெருகி நிக்கும் போது தான் நிலைமை தெரியும் 

மிகவும் கீழ்த்தரமான கருத்து.

உங்களுக்கு பொருளாதார கஸ்டம் ஏற்பட்டால் இதை செய்வீர்களா? ( விருப்பு குறி இட்டவர் உட்பட)

 

@ரதிஇவர்கள் ஏன் இதனை தேர்வு செய்தார்கள் ?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

இன்றைக்கு 11 பேர்  நாளைக்கு 11 ஆயிரமாய் பெருகி நிக்கும் போது தான் நிலைமை தெரியும் 

இதனை நிறுத்த என்ன செய்யலாம் என்கிறீர்கள்? ஆலோசனைகள் ஏதாவது?

வட பகுதியில் பாலியல் தொழிலாளிகள் 60,70,80 களிலும் இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

மிகவும் கீழ்த்தரமான கருத்து.

உங்களுக்கு பொருளாதார கஸ்டம் ஏற்பட்டால் இதை செய்வீர்களா? ( விருப்பு குறி இட்டவர் உட்பட)

 

@ரதிஇவர்கள் ஏன் இதனை தேர்வு செய்தார்கள் ?

 

நான் ஒன்றை தெரிவு செய்வேன் என்பதற்காய் மற்றவர்களும் அதை தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை.
ஏன் இதை தெரிவு செய்தார்கள் என்டால் உண்மையிலேயே வறுமை காரணமாயிக்கலாம் அல்லது இலகுவில் பணம் ஈட்ட இலகுவான வழியாய் இருக்கலாம் 

6 hours ago, குமாரசாமி said:

இதனை நிறுத்த என்ன செய்யலாம் என்கிறீர்கள்? ஆலோசனைகள் ஏதாவது?

வட பகுதியில் பாலியல் தொழிலாளிகள் 60,70,80 களிலும் இருந்தார்கள்.

அங்குள்ள பெண்கள் இப்படியான தொழிலுக்கு வராமல் இருக்க சுய தொழில் அமைத்து கொடுக்கலாம் ...ஆனால் அவர்கள் எடுத்தவுடனேயே அதில் அதிக லாபம் /பணம் கிடைக்காது. 
உண்மையிலேயே வறுமை காரணமாய் இத் தொழிலில் ஈடுபட்டால் திருந்த வாய்ப்பு உள்ளது .ஆனால் வேறு காரணங்கள் இருந்தால் ? 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

நான் ஒன்றை தெரிவு செய்வேன் என்பதற்காய் மற்றவர்களும் அதை தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை.
ஏன் இதை தெரிவு செய்தார்கள் என்டால் உண்மையிலேயே வறுமை காரணமாயிக்கலாம் அல்லது இலகுவில் பணம் ஈட்ட இலகுவான வழியாய் இருக்கலாம் 

அதே போல் 11 பேர் தெரிவு செய்ததற்காக 11 ஆயிரம் பேர் தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை.

மேலும் சிறீலங்காவில் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் ஒருத்தரும் இல்லை என இங்கு பதிவிட்டதும் தாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.