Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித்துத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு நிரந்தரப் பிரிவாக அமையாது : பாராளுமன்ற உறுப்பினர் - த.கலையரசன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனித்துத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு நிரந்தரப் பிரிவாக அமையாது : பாராளுமன்ற உறுப்பினர் - த.கலையரசன்!

kugenJanuary 22, 2023
 
WhatsApp%20Image%202023-01-21%20at%2012.07.06.jpeg

(சுமன்)

நாங்கள் தனித்து இந்தத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு ஒரு நிரந்தரப் பிரிவை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக அமையாது. நாங்கள் கூட்டாக இருந்து எதிர்காலத்திலும் எமது மக்களின் பிரச்சனைகளைக் கையாளுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
 

இன்றைய தினம் அம்பாறை கச்சேரியில் தமிழரசுக் கட்சி சார்பில் வேட்புமனு கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை இன்று கையளித்துள்ளோம். அம்பாறை மாவட்டதில் கல்முனை மாநகரசபை தவிர்த்து மற்றைய அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், நாவிதன்வெளி, சம்மாந்துறை போன்ற ஆறு தமிழ் பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை இன்று கையளித்துள்ளோம்.

ஜனநாயகம் பொருந்திய எமது தமிழரசுக் கட்சியிலே இம்முறை மக்களால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். எனவே மக்கள் நிச்சயமாக எமது கட்சிக்கு உறுதியான ஆணையைத் தருவார்கள் என்று நம்புகின்றோம்.

மாகாணசபை மற்றும் இந்த உள்ளூராட்சி மன்றங்களிலேயே எமது அரசியல் அதிகாரம் அத்தியாவசியமானதாக இருக்கின்றது. அந்த அடிப்படையில் நாங்கள் பலமாக இருந்து செயற்பட்டு எமது மக்களையும், எங்கள் மக்களின் வாக்குகளையும் எமது அரசியற் பிரதிநிதித்துவத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முகம்கொடுக்கும் விதமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகியன ஒன்றாகக் கேட்கும் போது வட்டாரம், விகிதாசாரம் என்ற ரீதியில் இத்தேர்தல் முறை இருப்பதால் எமக்கு அதிக பின்னடைவு இருக்கின்றது. அந்த அடிப்படையிலேதான் நாங்கள் தனித்துக் கேட்கின்றோம்.

நாங்கள் தனித்து இந்தத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு ஒரு நிரந்தரப் பிரிவை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக அமையாது. நாங்கள் கூட்டாக இருந்து எதிர்காலத்திலும் எமது மக்களின் பிரச்சனைகளைக் கையாளுவோம்.

எமது மக்களுக்கு இந்த நாட்டில் பிரச்சனைகள் இருக்கின்றது. அந்த அடிப்படையில் ஒற்றுமையாகவே நாங்கள் செயற்படுவோம்.

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் எந்தவொரு அரசியற் கட்சியும் அதிக ஆசனங்களைப் பெற்றாலும் கூட ஆட்சி அதிகாரங்களைப் பெற முடியாது. அந்த அடிப்படையில் தான் இம்முறை இவ்வாறானதொரு அரசியல் அணுகுமுறையை நாங்கள் கையாண்டிருக்கின்றோம். அந்த அணுகுமுறையை ஒரு பிரிவாகக் கருதாமல் நாங்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையாகவே செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

 

 

http://www.battinews.com/2023/01/blog-post_960.html

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் எந்தவொரு அரசியற் கட்சியும் அதிக ஆசனங்களைப் பெற்றாலும் கூட ஆட்சி அதிகாரங்களைப் பெற முடியாது. அந்த அடிப்படையில் தான் இம்முறை இவ்வாறானதொரு அரசியல் அணுகுமுறையை நாங்கள் கையாண்டிருக்கின்றோம். அந்த அணுகுமுறையை ஒரு பிரிவாகக் கருதாமல் நாங்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையாகவே செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

 

இதற்கான ஒப்பந்தம் ரெலோ, புளட்டுடன் இடப்பட்டதா அல்லது கப்சாவா?

கிளிநொச்சியில்  தமிழரசுக்கட்சிக்குளேயே ஒரு சுயேச்சை பிரிவு. அதுவும் ஒப்பந்தமா??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இதற்கான ஒப்பந்தம் ரெலோ, புளட்டுடன் இடப்பட்டதா அல்லது கப்சாவா?

கிளிநொச்சியில்  தமிழரசுக்கட்சிக்குளேயே ஒரு சுயேச்சை பிரிவு. அதுவும் ஒப்பந்தமா??

ரெலோ, புளட்டை…. வேண்டுமென்றே இறுதி நேரத்தில், முதுகில் பிடித்து தள்ளாத குறையாக…
கப்ஸா, அல்வா… எல்லாம் கொடுத்து வெளியே அனுப்பி இருக்கிறார்கள்.
கிளிநொச்சி… விடயம், தமிழரசு கட்சி தமக்குள் பேசி… பிரிந்து இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கிளிநொச்சி… விடயம், தமிழரசு கட்சி தமக்குள் பேசி… பிரிந்து இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன்.

அப்படியானால் பிரச்சார வேளைகளில் ஒருவரை ஒருவர் தாக்காமல் சேறடிக்காமல் குற்றஞ்சாட்டாமல் கண்ணியமாக நடப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறே பங்காளிக்கட்சிகளையும் கலந்து பேசி, வழிகாட்டி, சுமுகமாக செய்திருக்கலாம். ஏன் இரகசியமாக இறுதி வரை காத்திருந்து, எந்தவித விளக்கம், முன் ஆயத்தம் இல்லாமல், தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடும் நீங்கள் தனித்து போட்டியிடுங்கள், தேர்தலுக்குப்பின் சந்திப்போம் என்று மொட்டையாய் கூறி, கட்சிச் சின்னத்தை பாவிக்கப்படாது என்று கட்டளை இட்டு, மக்களை குழப்பி, பங்காளிகளை அவமானப்படுத்தி, இது சாதாரணமான செயலென கருதுகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு பிரிந்து கேட்டால் அம்பாறையில் ஒரு தமிழ் எம்பியும் 🐚🐚🐚

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

அப்படியானால் பிரச்சார வேளைகளில் ஒருவரை ஒருவர் தாக்காமல் சேறடிக்காமல் குற்றஞ்சாட்டாமல் கண்ணியமாக நடப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

கிளிநொச்சியில்  பிரிந்த ஒரு பகுதியினர்… சுமந்திரன் கோஷ்டியினர் என தெரிகிறது.
மற்றவர்கள்… சிறிதரனது கோஷ்டியாக இருக்கலாம் என்பது எனது ஊகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, தமிழ் சிறி said:

கிளிநொச்சியில்  பிரிந்த ஒரு பகுதியினர்… சுமந்திரன் கோஷ்டியினர் என தெரிகிறது.
மற்றவர்கள்… சிறிதரனது கோஷ்டியாக இருக்கலாம் என்பது எனது ஊகம்.

சிங்கள இனவாத அரசியல்வாதிகள் வடகிழக்கிலை ஒண்டுமே செய்யத்தேவையில்லை. எல்லாம் தானகவே அவர்களுக்கு சார்பாக நல்லபடியாக நடந்தேறும்.

முன்னொரு காலத்திலே சிறிலங்காவில் தமிழ் பேசும் இனமொன்று இருந்தது என ஒரு வரலாறு  வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

சிங்கள இனவாத அரசியல்வாதிகள் வடகிழக்கிலை ஒண்டுமே செய்யத்தேவையில்லை. எல்லாம் தானகவே அவர்களுக்கு சார்பாக நல்லபடியாக நடந்தேறும்.

முன்னொரு காலத்திலே சிறிலங்காவில் தமிழ் பேசும் இனமொன்று இருந்தது என ஒரு வரலாறு  வரும்.

உண்மைதான்…. படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்,
நிர்க்கதியாக நிற்கும் தன் இனத்தைப் பற்றியும், இதனால் ஏற்படும்
எதிர்கால பாதகங்களைப் பற்றியும் சித்திக்காமல்,
அப்பட்டமான, சுயநல… கதிரை அரசியல் செய்வதைப் பார்க்க… கோபம் வருகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான்…. படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்,
நிர்க்கதியாக நிற்கும் தன் இனத்தைப் பற்றியும், இதனால் ஏற்படும்
எதிர்கால பாதகங்களைப் பற்றியும் சித்திக்காமல்,
அப்பட்டமான, சுயநல… கதிரை அரசியல் செய்வதைப் பார்க்க… கோபம் வருகின்றது.

  அத்தனையும் சுயநலம். இப்போ கலந்தும்  விட்டினம், எல்லா இனமும் ஒன்றுதானே அவர்களுக்கு. யார் அழிந்தாலென்ன நிர்க்கதியாக நின்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

கிளிநொச்சியில்  பிரிந்த ஒரு பகுதியினர்… சுமந்திரன் கோஷ்டியினர் என தெரிகிறது.
மற்றவர்கள்… சிறிதரனது கோஷ்டியாக இருக்கலாம் என்பது எனது ஊகம்.

தமிழரசுக்கட்சியில் இளையவர்கள் இடம் கேட்க மறுக்கப்பட சுயேட்சையாக இறங்குகிறார்கள் சின்னமாக மாட்டு வண்டில் 🤗

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழரசுக்கட்சியில் இளையவர்கள் இடம் கேட்க மறுக்கப்பட சுயேட்சையாக இறங்குகிறார்கள் சின்னமாக மாட்டு வண்டில் 🤗

எல்லா சபைகளிலுமா?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழரசுக்கட்சியில் இளையவர்கள் இடம் கேட்க மறுக்கப்பட சுயேட்சையாக இறங்குகிறார்கள் சின்னமாக மாட்டு வண்டில் 🤗

போற போக்கிலை, சின்னங்களுக்கு தட்டுப்பாடு வரப் போகுது போலை கிடக்கு. 😂
பிரச்சார கூட்டங்களில்… கல்லெறி, செருப்பு வீச்சு, முட்டை அடி… போன்றவை இன்னும் நடக்க தொடங்கவில்லையா.  🤣
இதுகள்… இல்லாமல், தேர்தல் களை கட்டாதே…. 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

கூட்டமைப்பு பிரிந்து கேட்டால் அம்பாறையில் ஒரு தமிழ் எம்பியும் 🐚🐚🐚

இந்த பிரிவு உள்ளூராட்சிக்கு மட்டும் தான்!
பாராளுமன்ற தேர்தலுக்கு ஒன்னாகிடுவோம்! அல்லது பேச்சாளரை கலைக்கினமோ தெரில.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

எல்லா சபைகளிலுமா?

கிளிநொச்சியில் மாத்திரம் மற்ற இடங்களில் தமிழரசுக்கட்சி விசுவாசிகளாக இருந்தவர்கள் பிற கட்சிகளில் 

உயர்தர பரீட்சை நடக்கிறது இப்ப கரண்ட கட்டாகி இப்ப தான் வந்தது 8.30 -9.30

25 minutes ago, தமிழ் சிறி said:

போற போக்கிலை, சின்னங்களுக்கு தட்டுப்பாடு வரப் போகுது போலை கிடக்கு. 😂
பிரச்சார கூட்டங்களில்… கல்லெறி, செருப்பு வீச்சு, முட்டை அடி… போன்றவை இன்னும் நடக்க தொடங்கவில்லையா.  🤣
இதுகள்… இல்லாமல், தேர்தல் களை கட்டாதே…. 😁

இதுகள் இலங்கையில் இல்லை இருந்ததாலும் கழுவி ஊத்தூவார்கள் ஆளையாள் நாம வேடிக்கை மட்டும் பார்க்கலாம் பார்க்கலாம் இவர்களின்ற பருப்பு என்கிட்ட வேகாது 

நாங்க எங்க பகுதியில் படகிற்கு ஆதரவாக சில நேரம் சில மாற்றம் ஏற்றுக்கொள்ள முடியா விட்டாலும் ஏற்று கால நேரம் சிலதை திணித்து விடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இந்த பிரிவு உள்ளூராட்சிக்கு மட்டும் தான்!
பாராளுமன்ற தேர்தலுக்கு ஒன்னாகிடுவோம்! அல்லது பேச்சாளரை கலைக்கினமோ தெரில.

🤣 தனக்கு தனக்கு எண்டால் சுளகு படக்கு படக்கு எண்டு அடிக்குமாம்🤣

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கிளிநொச்சியில் மாத்திரம் மற்ற இடங்களில் தமிழரசுக்கட்சி விசுவாசிகளாக இருந்தவர்கள் பிற கட்சிகளில் 

உயர்தர பரீட்சை நடக்கிறது இப்ப கரண்ட கட்டாகி இப்ப தான் வந்தது 8.30 -9.30

நன்றி. 

முந்தி ஓகஸ்டில் எல்லா உ.த பரீட்ச்சை? சா.தா டிசம்பரில்.

இதுவும் மாறீட்டா?

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பிரச்சார கூட்டங்களில்… கல்லெறி, செருப்பு வீச்சு, முட்டை அடி… போன்றவை இன்னும் நடக்க தொடங்கவில்லையா.  🤣
இதுகள்… இல்லாமல், தேர்தல் களை கட்டாதே

நீங்கள் யாழ் களத்தை சூடேற்றுகிறீர்கள்.  மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட, தெரிந்தெடுக்கப்படப்போகிற தலைவர்களை பொதுவெளியில் மரியாதையாக விளிக்க, நடத்த  பழகிக்கொள்ளுங்கள். பாடம்  எடுக்க வருவார்கள் பெரியவர்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

போற போக்கிலை, சின்னங்களுக்கு தட்டுப்பாடு வரப் போகுது போலை கிடக்கு. 😂
பிரச்சார கூட்டங்களில்… கல்லெறி, செருப்பு வீச்சு, முட்டை அடி… போன்றவை இன்னும் நடக்க தொடங்கவில்லையா.  🤣
இதுகள்… இல்லாமல், தேர்தல் களை கட்டாதே…. 😁

இதற்கு நீங்கள் களத்தில் நிற்க வேண்டும்...நீங்கள் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் இப்படியான செயல்கள அறவே இல்லை 🤣😛

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

🤣 தனக்கு தனக்கு எண்டால் சுளகு படக்கு படக்கு எண்டு அடிக்குமாம்🤣

நன்றி. 

முந்தி ஓகஸ்டில் எல்லா உ.த பரீட்ச்சை? சா.தா டிசம்பரில்.

இதுவும் மாறீட்டா?

 

கொரோனாவால் பாடசாலைகள் மூடப்பட்டதால் எல்லாம் பிந்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

கொரோனாவால் பாடசாலைகள் மூடப்பட்டதால் எல்லாம் பிந்துகிறது.

ஓ… இன்னும் இந்த தாக்கத்தில் இருந்து மீளவில்லை😳

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.