Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமஷ்டியை உச்சரிக்கத் தமிழரசுக் கட்சிக்கே உரித்துண்டு ! – சுமந்திரன் விளாசல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டியை உச்சரிக்கத் தமிழரசுக் கட்சிக்கே உரித்துண்டு ! – சுமந்திரன் விளாசல்

IMG-20230205-115037.jpg

சமஷ்டி என்ற வார்த்தையை உச்சரிப்பதற்குத் தமிழரசுக் கட்சியைத் தவிர வேறு எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ‘இருள் சூழ்ந்த சுதந்திரம்’ எனப் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று (04) நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் சமஷ்டியைப் பழித்துப் பேசியவர்கள் இன்று அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தாங்கள்தான் சமஷ்டிக்கு உண்மையானவர்கள்; அதற்காகவே போராடினோம் என்று கூறுகின்றார்கள். ஆனால், சமஷ்டி என்பது தமிழரசுக் கட்சியின் கோஷம். அதுவே எமது அரசியல் சித்தாந்தம். எனவே, சமஷ்டி என்ற வார்தையை உச்சரிப்பதற்கு எம்மைத் தவிர வேறு எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.”

இன்று தமிழரசுக் கட்சி தனித்து நிற்பதையும் பலர் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு விபரம் தெரியாது. அத்துடன் விபரம் தெரியாமல் பல ஊடகங்களும் எம்மை விமர்சிக்கின்றன” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/184717/

டிஸ்கி

அதெல்லாம் சரி.. அந்த குல்லா.. 

jawahar_lal_nehru_843f597724.jpg

அசல் நேரு மாமா போலவே இருக்கீங்க..😊

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கையின் சுதந்திர தினத்தை பகிஸ்கரிப்பதே இன்றைய ஒன்றுகூடலின் நோக்கம். அதற்கும் இவரது இந்த பேச்சுக்கும் என்ன சம்பந்தம்? எப்போதும் தவறான இடத்தில பொருத்தமற்றதை பேசி மாட்டுப்படுவதும் அதை சமாளிக்க வேறொன்றை சொல்லி அசடு வழிவதும் இவரது பிழைப்பாய்ப்போச்சு. த. தே. கூட்டணியை கலைத்து தமிழரசுக்கட்சிக்கே வேட்டு வைக்கிறார். இவருக்கு இவரது நாக்குதான் சகுனப்பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

சனக்கூட்டம், பத்திரிகையாளர் கூட்டம், ஒலிவாங்கி கிடைத்தால் போதும், சந்தர்ப்பம், தான் யார், என்ன பேசுறேன் எண்டதையே மறந்து ஆள் குஷியாகிவிடுவார். பிறகு தான் பேசாததை பத்திரிகையாளர் எழுதிவிட்டனர் என்று பாய்வார். ஆனால் அவர்கள் எழுதியது தவறு என  சட்ட நடவடிக்கை எடுக்க தயங்குவார். கடைசியில் அவர் சொன்னதும் அவர்கள் எழுதியதும் ஒன்று என நிரூபணமாகும். இதெல்லாம் ஒரு ராஜதந்திரி!

  • கருத்துக்கள உறவுகள்

இதைச் சொல்வதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கு/ தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் புறக்கணித்த சுதந்திர தினத்தை  3வருடங்களுக்கு முன்னர் சம்பந்தரோடு சேரர்துக் கொண்டாடியவரல்லவா இவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு சந்தர்ப்பவாதி. இப்போதும் போயிருப்பார், ஒன்று தேர்தல் நெருங்குகிறது, அடுத்தது தமிழர் ஒன்று சேர்ந்து கரிநாள் என்று பகிஸ்கரிக்கும்போது தான் மட்டும் கொண்டாடினால் தான் யார் என்பது மக்களுக்கு புரிந்து... அது ஒன்றும் பிரச்சனையில்லை, சர்வதேசம் தன்னை அடையாளம் கண்டு இரகசிய பேச்சுவார்த்தைக்கு ஆபத்தாகிவிடும் என்று நினைத்தாரோ? ஆனாலும் பாருங்கோ! "இருள் சூழ்ந்த சுதந்திரம்." என்று பிரகடனப்படுத்தி விட்டு, யாரைத்தாக்குகிறார் என்று. இவரது அரைகுறை அறிவு. சிங்களத்தை கோவிக்க பயமா அல்லது அதன்மீதுள்ள பாசமா?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

IMG-20230205-115037.jpg

jawahar_lal_nehru_843f597724.jpg

அசல் நேரு மாமா போலவே இருக்கீங்க..😊

தோழர் நீங்க லேட் தோழர் நேற்றே சுமந்திரன் மாமா என திண்ணையில் பெயர்சூட்டி விட்டோம்🤣.

சாணக்கியனை 1ம் படத்தில் பார்க்க எல்லை காந்தி,  என அழைக்கப்பட்ட அப்துல் கபார் கான் போல இருக்கல்லவா?😜

அவர் பிரிடிஸ் இந்தியாவின் எல்லையில் இருந்து வந்தார், இவர் வடக்கு-கிழக்கின் எல்லையில் இருந்து வருகிறார்🤣

large.FD86CEF6-C189-4489-8D21-D03540D3185D.webp.468209f9d0804ee1b893473923189a96.webp

 

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வா தான் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தார்.. தமிழரசுக் கட்சி சார்ப்பாக. அதே தந்தை செல்வா தான் தமிழீழக் கோரிக்கையையும் முன்மொழிந்தார். சமஸ்டி தந்தை செல்வா காலத்திலேயே சிங்களத்தால் நிராகரிப்பட்டு விட்டது. இவர் என்ன மண்ணாங்கட்டிக்கு இப்ப சமஸ்டி பேசி காலத்தை வீணடிக்கிறார். இருப்பது ஒன்று தான்.. சிங்களத்திடம் 13 ஐ கூட வாங்க முடியாது. ஆகவே... ஐநா மத்தியஸ்தோடு சர்வதேச கண்காணிப்பில்.. தனிநாட்டுக்கான தேர்தலை அதாவது சுயநிர்ணய உரிமைக்கான தேர்தலை.. கிழக்கு திமோர்...கொசாவோ.. தென் சூடானில் நடத்திய போல் நடத்தக் கோருவதை எது தடுக்கிறது.. தந்தை செல்வாவின் கட்சியின்.. விறாந்தையில் பின் கதவால் புகுந்து கால்நீட்டிப் படுத்திருக்கும் இவருக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.