Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"விரும்பினால் தமிழர்கள் முதலீடு செய்யட்டும்:ஆனால் அதிகாரங்களை தரமுடியாது"-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

30 வருட கால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை மீது உண்மையான பற்று காணப்படுமாயின் கூட்டமைப்பினர் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை தாராளமாக பெற்றுக்கொடுக்க முடியும்.

புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/investing-in-diaspora-organizations-1675259510

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இலங்கை மீது உண்மையான பற்று காணப்படுமாயின் கூட்டமைப்பினர் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை தாராளமாக பெற்றுக்கொடுக்க முடியும்.

இந்த நாட்டின் குடிமக்களோடு அதிகாரங்களை பகிரமுடியாது, ஏதோ அந்நியர் உரிமை கேட்பதுபோல் திமிர்பேச்சு, இதில் எப்படி பற்று வரும்? நம் நாட்டில் நாங்கள் வியர்வை சிந்தி உழைத்ததையே பிடுங்கிய கூட்டம், மீண்டும் தமிழனிடம் உதவி கேட்டு நிக்கினம். இவர்களுக்கு கடன் கொடுப்பவர்கள் யோசிக்க வேண்டும்! உரிமையை பகிர்ந்து சுதந்திரமாக வாழ அனுமதிக்காத நாடு உருப்படுமா? கொடுக்கும் கடன் திரும்பி வருமா என்று. சொந்த நாட்டில் அந்த மக்களை வாழ விட விருப்பமில்லை நாளைக்கு கடன் கொடுத்த நாடு இவர்களை அடக்கும்போது புரியும் வலி அப்போ  திரும்பி வந்து எதையும் மாற்ற முடியாது. எல்லாம் நன்மைக்கே! இன்னும் கத்துங்கோ, உலக நாணய நிதியத்துக்கும் உங்கள் குரல் கேட்க வாழ்த்துக்கள்! 

1 hour ago, பெருமாள் said:

புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில என்ன நடக்குதுதென்று தெரியாமல் இருக்கிறார். இவர்களை கத்த விட்டு சாதிக்கலாம் என்று ராஜபக்ச ரணில் கனவு காணலாம். எங்கோ போய் இறுகும்போது புரியும் தப்புக்கணக்கு போட்டோமென்று.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இனவாத கருத்துக்களை தெரிவிக்கிறார்.
தமிழர்கள் சிங்களவர்கள் பற்றி பேசும் போது உங்கள் இனவாத கருத்தால் தான் நாட்டில் இப்படி போர் வந்து மக்கள் அழிந்தார்கள் என்கிறார்கள்.

சிங்கள இனவாதம் இப்படியே சொல்லிக்கொண்டிருக்கும். அதற்காக விரும்புபவர்கள் முதலீடு செய்வ்வதைப் பிழை என்று கூற முடியாது. 

புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்குள்ளவர்களுக்குப் பணம் அனுப்புவதால் அங்குள்ளவர்கள் முன்னேற்றமடையவில்லை. அனுப்புவோரின் எண்ணிக்கையும் விரைவில் குறையும். முதலீடுகளே நீண்ட காலத்திற்குப் பயன் தரும். எம் மக்களுக்குப் பயந்தரும்படியாகவும் முதலீட்டாளர்களுக்கு நட்டமேற்படாத வகையிலும் விரும்பியவர்கள் முதலீடு செய்யலாம் அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தொடர்ந்து இனவாத கருத்துக்களை தெரிவிக்கிறார்.
தமிழர்கள் சிங்களவர்கள் பற்றி பேசும் போது உங்கள் இனவாத கருத்தால் தான் நாட்டில் இப்படி போர் வந்து மக்கள் அழிந்தார்கள் என் கிறார்கள்.

இவர் கொழும்பு மாவட்த்தில் அதிக வாக்குகளை பெற்று வென்றதுடன், ரணிலை தோற்கடித்து இருந்தார். தனது வெற்றியின் காரணம் இனவாதம் என்று கருதுவதால்,

அதையே தொடர்ந்து பேசி, அடுத்த ஜனாதிபதி தேர்தலை நோக்கத்தில் வைத்து இயங்குகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

இவர் கொழும்பு மாவட்த்தில் அதிக வாக்குகளை பெற்று வென்றதுடன், ரணிலை தோற்கடித்து இருந்தார். தனது வெற்றியின் காரணம் இனவாதம் என்று கருதுவதால்,

அதையே தொடர்ந்து பேசி, அடுத்த ஜனாதிபதி தேர்தலை நோக்கத்தில் வைத்து இயங்குகிறார்.

வீரவன்சவும் இவரது பாணியை தொடர்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை! அதிக இனவாதம் கக்கியவர்களை தங்கள் தலைவனாக சிங்களம் தெரிந்து கொண்டது, இதனால் சிலர் வலிந்து இனவாதத்தை கையிலெடுத்து அரசியல் கதிரையை தக்கவைத்துக்கொண்டார்கள். ஆனால் இனி வருங்காலத்தில் அது பயனளிக்கக்கூடிய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இனிமேல் தமிழரை அடித்து, கடத்தி கப்பம் பெற முடியாது, கடன் வாங்கவும் இயலாது, இயற்கை அழிவுகள் இப்போ எல்லா நாடுகளிலும் பரந்து ஏற்படுவதால் அதுவும் இனிமேல் கேள்விக்கிடமே. எனது விருப்பம், இனவாதம் பேசுவோரை மக்கள் அடித்துக்கலைக்க வேண்டும். இனி மக்களாலேயே அதை மாற்றியமைக்க  முடியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.