Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஆகா… 🍩 வடை போச்சே… கோசான்சே…. 😂

அண்ணை வடிவா பாருங்கோ போனது டோநட்🤣

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு எழுத்து நடை உங்களுக்குக் கை வந்துள்ளது...!

ஒரு வேளை தமிழ்க்கடை வடையாக இருக்குமோ?

அல்லது காகம் கொஞ்சம் இரக்கப் பட்ட சீவனாக இருக்கலாம்...!

தொடர்ந்தும் எழுதுங்கள்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புங்கையூரன் said:

நல்ல ஒரு எழுத்து நடை உங்களுக்குக் கை வந்துள்ளது...!

ஒரு வேளை தமிழ்க்கடை வடையாக இருக்குமோ?

அல்லது காகம் கொஞ்சம் இரக்கப் பட்ட சீவனாக இருக்கலாம்...!

தொடர்ந்தும் எழுதுங்கள்....!

நன்றி அண்ணா, வாழ்த்துக்கும் வருகைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா இந்தாள் 

ஒரு வடை ஒரு காகம் ஒரு நரி

இந்த மூன்றையும் வைத்தே மூன்று பக்கத்தை ஓட்டிடும் போல இருக்கே.

 

9 hours ago, goshan_che said:

இதெல்லாம் தொழில் நேக்கு தெரியுமா.

அங்கால ஒருத்தர் ஒரே ஒரு அப்பாவி ஜேர்மன் பையனை வைத்து பக்கம் பக்கமா இழுக்கிறார் - நான் அதுக்கு பரவாயில்லை 🤣.

 

9 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப இது @தமிழ் சிறிக்கு தெரிந்தால் என்னையா சும்மா இருக்கிற என்னை கோத்துவிடுறாய் என்று உங்களுடன் சண்டைக்கு வர போகிறார்.

 

8 hours ago, goshan_che said:

அவர் ஜேர்மன் பெட்டையை பேட்டி எடுக்க முடியாத சோகத்தில் இதை கவனிபாரோ தெரியாது🤣

என்ன அங்கை சத்தம்.? 😂 🤣

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

சீண்டல்களால் மயக்கியெடுக்கும் தந்திரங்களுக்கு விழக் கூடாது... நல்ல கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்

இதை யாரும் பாக்காத பட்ச்சத்தில் அதாவது சாட்ச்சி இல்லா விட்டால் கன்டிப்பாய் நரி தான் காகத்தை ஏமாத்தித்தான் வடையை பெற்றதாக சொல்லியிருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2023 at 14:50, நன்னிச் சோழன் said:

சீண்டல்களால் மயக்கியெடுக்கும் தந்திரங்களுக்கு விழக் கூடாது... நல்ல கருத்து!

அதே. நன்றி நன்னி.

On 19/2/2023 at 08:25, சுவைப்பிரியன் said:

இதை யாரும் பாக்காத பட்ச்சத்தில் அதாவது சாட்ச்சி இல்லா விட்டால் கன்டிப்பாய் நரி தான் காகத்தை ஏமாத்தித்தான் வடையை பெற்றதாக சொல்லியிருக்கும்.

🤣. பார்த்திருக்கவே புரட்டும் நரி. யாரும் பார்க்கவில்லை என்றால் தான் பாவபட்டு காக்கைக்கு வடையை விட்டு கொடுத்தேன், காக்கா வேண்டாம் என்றது என்றும் நரி சொல்லக்கூடும்.

நன்றி சுவை அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 07:49, goshan_che said:

காக்கா நரிக் கதை

I ain’t playin

 

பொறுப்பு துறப்பு

கதைமாந்தர்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பன அல்ல. 

கதை சொல்லி, தானே தன் வாழ்க்கையில் நரியாகவும், காக்காவாகவும் இருந்துள்ளார், இருக்கிறார், இருப்பார் என்பதை ஏற்று கொள்கிறார்.

——————-//////————//////———————

நரிக்கு மனம் பக்…பக்… என்று அடித்துக்கொண்டது.

இன்னும் ஒரு அரை வினாடி மட்டும்தான்….

பாடுகிறேன் பேர்வழி என்று இந்த அண்டங்காக்காய் மட்டும் வாயை திறக்கட்டும்…

வடையை ஒரே லபக்கில் முழுங்கி விட வேண்டியதுதான்.

இந்த ஒரு வடைக்காக எத்தனை பாடு? 

எத்தனை பிரயத்தனம்? 

எத்தனை அவமானம்?

காகத்தின் இந்த கர்ணகடூர ஓசையை கூட இசை என்று பொய்யாக புகழும் படி ஆயிற்றே….

அதுவெல்லாம் கூட பரவாயில்லை, 

என் சுயத்தை மறைத்து, நல்லவன் போல அல்லவா நடிக்கும் படி ஆயிற்று ? 

எத்தனை பெரிய ஒறுப்பு அது?

பாட வாய் எடுத்தது போல் இருந்த காகத்தின் வாயில் நரியின் ஒட்டு மொத்த கவனமும் குவிந்திருந்தது.

ஆனால் காகமோ பாடுவதாகக் காணோம். 

கால்களில் வடையை பற்றி கொண்டு, தலையை ஸ்லோமோசனில் இடமும், வலமுமாக திருப்பியது. 

இடையிடையே கண்களை திறந்து மூடிக்கொண்டது.

பிறகு தலையை கீழே குனிந்து வடையை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தது. 

நரிக்கு இருப்பு கொள்ளவில்லை. 

வடை எல்லாம் பெரிய மேட்டரே இல்லை. சொல்லப்போனால் நரிக்கு வடை மேல் அதிக இஸ்டம் கூட இல்லை. 

இந்த காகத்தோடு வீணடித்த நேரத்தை, ஒரு ஆட்டு மந்தையில் செலவழித்திருந்தால் ஒரு கறி விருந்தேசாப்பிட்டு இருக்கலாம்.

ஆனால் அதுவல்ல முக்கியம். 

இது ஒரு விளையாட்டு, காகத்தின் வடையை கவர வேண்டும். அவ்வளவுதான். 

இந்த காகத்தை ஏமாற்றி விட்டேன் என என் சக நரிகளுக்கு நிரூபிக்க வேண்டும். 

அனைவர் முன்னிலையிலும் காகத்தை கேலிக்குள்ளாக்க வேண்டும். 

முக்கியமாக காகத்துக்கு ஒன்றும் தெரியாது என்று நிறுவ வேண்டும். 

அப்போதான் காகம் சொல்வது எதையும் இனி இந்த காடு நம்பாது.

நரி சொல்லே மந்திரம் என இந்த காடு கட்டுப்படவேண்டும். 

அதற்கு என்ன தியாகமும் செய்யலாம். 

காகம் இப்போ பாடத்தயாராவது போல தெரிகிறது. ஆனால் வடையோ இன்னமும் காகத்தின்கால்களில்டையேதான் சிக்கிகொண்டுள்ளது.

என்னது ஒரு அற்ப காகம் நம்மை விட குறுக்குப்புத்தி உடையதாக இருக்குமோ?

நரிக்கு சந்தேம் சற்றே எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது.

காகம் மெதுவாக குனிந்து வடையை வாயில் கவ்வி….

தொப் …

என்று நரியின் முகத்தில் விட்டெறிந்தது….

காகம் பாட மட்டும் இல்லை, நரியோடு பேசக்கூட செய்யவில்லை. 

பறந்தே போயிற்று.

 

நேற்று இன்னோர் சுய ஆக்க பகுதியில் பூமிக்கு வெளியில் இன்னோர் கோளில் நின்று பூமியை தரிசிக்கும் ஓர் சிந்தனை பகிரப்பட்டது. அப்படியான கற்பனை சுவாரசியத்தை ஏற்படுத்தியது, சிந்தனையை தூண்டியது. அவ்வாறே உங்கள் சுய ஆக்கத்தில் காலங் காலமாக கூறப்படும் இந்த காகம்-வடை-நரி கதையில் நரி, காகம் ஆகியவற்றின் உளப்பாடு பற்றி கற்பனை செய்வது சிந்தனையை தூண்டுகின்றது. மிருகங்களின் மொழி, பறவைகளின் மொழி வேறுபட்டாலும் அடிப்படையில் நாம் உட்பட தக்கன பிழைத்தல் பற்றிய கொள்கையின் கீழ் அனைவரும் கட்டுப்படுகின்றோம். வாழ்வாதார போட்டி!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கோசான் நையாண்டி செம.....

உண்மையைச் சொல்லட்டா இந்தக் காகம் , வடை, நரி எல்லாம் பசுமையாக நாளாந்த ஞாபகங்களைத் தூண்டுகின்றன. யாழின் செம்பாலையில் நடனம் புரியும் சொல்லாப் பொருளை உணர்த்துமாப்போல் இருக்கிறது. எழுதுவதற்கு அப்பால் வாசிப்பு நிறைய கிரகிக்கும் ஆற்றலை வளர்க்கிறது. ஐயா கோசான் மனதில் பட்டதை எழுதினேன். சரி சரி நான் நடையைக்கட்டுறன். கொஞ்சம் அசந்தாலும் எந்த நரியாவது வந்து என்னை காக்கா ஆக்கிப்போடும்.😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வல்வை சகாறா said:

கோசான் நையாண்டி செம.....

உண்மையைச் சொல்லட்டா இந்தக் காகம் , வடை, நரி எல்லாம் பசுமையாக நாளாந்த ஞாபகங்களைத் தூண்டுகின்றன. யாழின் செம்பாலையில் நடனம் புரியும் சொல்லாப் பொருளை உணர்த்துமாப்போல் இருக்கிறது. எழுதுவதற்கு அப்பால் வாசிப்பு நிறைய கிரகிக்கும் ஆற்றலை வளர்க்கிறது. ஐயா கோசான் மனதில் பட்டதை எழுதினேன். சரி சரி நான் நடையைக்கட்டுறன். கொஞ்சம் அசந்தாலும் எந்த நரியாவது வந்து என்னை காக்கா ஆக்கிப்போடும்.😆

🤣 அந்த நியாபங்களை வைத்து எழுதினால், அவை தூண்டப்படுவது இயல்புதானே அக்கா🤣

 

On 12/3/2023 at 14:44, நியாயத்தை கதைப்போம் said:

 

நேற்று இன்னோர் சுய ஆக்க பகுதியில் பூமிக்கு வெளியில் இன்னோர் கோளில் நின்று பூமியை தரிசிக்கும் ஓர் சிந்தனை பகிரப்பட்டது. அப்படியான கற்பனை சுவாரசியத்தை ஏற்படுத்தியது, சிந்தனையை தூண்டியது. அவ்வாறே உங்கள் சுய ஆக்கத்தில் காலங் காலமாக கூறப்படும் இந்த காகம்-வடை-நரி கதையில் நரி, காகம் ஆகியவற்றின் உளப்பாடு பற்றி கற்பனை செய்வது சிந்தனையை தூண்டுகின்றது. மிருகங்களின் மொழி, பறவைகளின் மொழி வேறுபட்டாலும் அடிப்படையில் நாம் உட்பட தக்கன பிழைத்தல் பற்றிய கொள்கையின் கீழ் அனைவரும் கட்டுப்படுகின்றோம். வாழ்வாதார போட்டி!

நன்றி நியாத்தை கதைப்போம். ஓம் எதை, எதையோ  செய்து, எப்படியோ இழுத்து பிடித்து வாழும் ஓர்மம் மட்டுமே உயிரிகள் அனைத்துக்குமான பொது விதி.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.