Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் உயிர் மாய்ப்பு - யாழில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் உயிர் மாய்ப்பு - யாழில் சம்பவம்

Published By: T. SARANYA

20 MAR, 2023 | 03:27 PM
image

மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு கொடுத்து ஏமாந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை வழங்கி , யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி வீடு கட்டுமாறு கூறியுள்ளார். 

மகனின் பணத்தினை பெற்றவர் காணி வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் , எதிர்பார்த்த காணி கிடைக்காமையால் , காணி வாங்குவதனை பிற்போட்டுள்ளார். 

அந்நேரம் அவருக்கு அறிமுகமான பெண்ணொருவர் தனது தேவைக்கு என முதியவரிடம் இருந்து பணத்தினை பெற்றுள்ளார். முதியவரும் நம்பிக்கை அடிப்படையில், மகனுக்கு தெரியாமல் பணத்தினை வழங்கியுள்ளார். 

பணத்தினை பெற்றுக்கொண்ட பெண் , பணத்தினை திருப்பி கொடுக்காதமையால் , முதியவர் ஏமாந்த நிலையில் , மகனும் காணியை வாங்குமாறு வற்புறுத்தி வந்த நிலையில் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான முதியவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். 

https://www.virakesari.lk/article/150978

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு தமிழ் சனத்துக்கு தற்கொலை பண்ணுவது அல்வா சாப்பிடுவது போல் போய் விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
  • இலங்கையில் ஒவ்வொரு நாலு மணித்தியாலத்துக்கும் ஒரு தற்கொலை சாவு இடம் பெறுகின்றது!!
  • 2022 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 2,833 ஆண்களும் 574 பெண்களும் தற்கொலை செய்துள்ளார்கள். 
  • சொற்ப நொடிகளில் எடுக்கப்படும் அந்த முடிவுகளினாலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன.
  • அதிலும் குறிப்பாக 18 விதமான இறப்புக்கள் கொடிய கிருமி நாசினிகளை அருந்துவதன் மூலம் ஏற்படுகின்றது.
  • பொருளாதார சிக்கல்கள்; காதல் தோல்விகள்;  மதுவுக்கு அடிமையாதல்; குடும்ப தகராறுகள்; இப்படி பல காரணங்களால் தற்கொலைகள் செய்யப்படுகின்றன. 
  • இந்த தற்கொலை முயற்சிகள் ஒன்றுக்கு 15 என்ற விகிதாசாரத்தில் இருக்கின்றது. (1:15)

இது பற்றிய பாரிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

வடகிழக்கு தமிழ் சனத்துக்கு தற்கொலை பண்ணுவது அல்வா சாப்பிடுவது போல் போய் விட்டது .

பிரச்சனையை எதிர்கொள்ள, கையாளத்தெரியாமை, தைரியமின்மை.  உறவுகளுக்கு தெரியாத கொடுக்கல் வாங்கல், தனிமை, அடுக்கிக்கொண்டே போகலாம். நம்பிக்கையில் கொடுத்திருக்கிறார் ஆதாரமில்லை, உதவுவதற்கு யாருமில்லை. அவர்களது மனநிலை, ஆற்றுப்படுத்த யாருக்கும் நேரமின்மை ஒரு நொடியில் எடுக்கும் முடிவு இப்படியான மரணங்கள் ஏற்பட காரணிகளாய் அமைந்து விடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு நாமே ஒரு வட்டத்தை வரைந்து அதற்குள் வாழ்வதினால் ஏற்படும் விளைவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.