Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இதன்போதே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1328078

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

ஊழல் முதலைகளிடமிருந்து  காப்பாற்றி மக்களை  சென்றடையணும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நல்லவிடயம்

ஊழல் முதலைகளிடமிருந்து  காப்பாற்றி மக்களை  சென்றடையணும்

1991 இன் பின் திமுக அரசு மட்டுமே இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவி செய்த ஒரு கட்சியாகும், குறிப்பாக மறைந்த முதல்வர் கருணாநிதி.

குழந்தைகளுக்கு மேற்படிப்பு வசதி, அகதி முகாம்களில் குறைவான கெடுபிடி என திமுக வின் ஆட்சிகாலத்தில் மட்டும் அங்குள்ள ஏழை இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆட்சி எப்போதும் உறுதுணையாக இருந்தது.

வசதி படைத்த இலங்கை தமிழர்களின் நிலைவேறு, அங்கு கூலி வேலை செய்து வாழும் இலங்கை தமிழர்கள் முகாமில் இருந்தபடியே வெளியில் சென்று தமது வேலைகளை மற்ற அரசுகளின் காலங்களில் செய்யமுடியாது.

பலருக்கு இந்த நிலை தெரியாத நிலை உள்ளது, அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆட்சியே பொற்காலமாக இருக்கும்.

2 minutes ago, vasee said:

 

குழந்தைகளுக்கு மேற்படிப்பு வசதி,

ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்த உடனடியாக நிறுத்திய வசதி இதுவாகும். பின்னர் திமுக ஆட்சி மீண்டும் இதனை கொண்டு வந்தது .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்த உடனடியாக நிறுத்திய வசதி இதுவாகும். பின்னர் திமுக ஆட்சி மீண்டும் இதனை கொண்டு வந்தது .

அவ்வாறு தான் கேள்விப்பட்டுள்ளேன்.

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவுவதால் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எந்தவித இலாபமும் இல்லை, ஏனென்றால் பெரும்பாலும் அவர்களால் அந்த கட்சிக்கு வாக்கு போட முடியாது அந்த நிலையில் எதற்கு கட்சிகள் இலங்கை தமிழர்களுக்கு உதவவேண்டும். 

ஆனாலும் திமுக எப்போதும் அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவும் கட்சியாகவே இருந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்கள்  நன்றி தகவல்களுக்கு  அப்ப திமுக ஆட்சியில் சிறப்பு முகாம்கள் என்று ஈழத்தமிழரை அடைத்து வைக்கும் இடங்கள் மூடபட்டு விட்டனவா? அது பற்றி சீமான் கூட கதைப்பது இல்லை அப்படி அந்த முகாம்கள் மூடபட்டு இருந்தால் மிக நல்லதே .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

திமுக அரசு மட்டுமே இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவி செய்த ஒரு கட்சியாகும், குறிப்பாக மறைந்த முதல்வர் கருணாநிதி.

குழந்தைகளுக்கு மேற்படிப்பு வசதி, அகதி முகாம்களில் குறைவான கெடுபிடி என திமுக வின் ஆட்சிகாலத்தில் மட்டும் அங்குள்ள ஏழை இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆட்சி எப்போதும் உறுதுணையாக இருந்தது.

வசதி படைத்த இலங்கை தமிழர்களின் நிலைவேறு, அங்கு கூலி வேலை செய்து வாழும் இலங்கை தமிழர்கள் முகாமில் இருந்தபடியே வெளியில் சென்று தமது வேலைகளை மற்ற அரசுகளின் காலங்களில் செய்யமுடியாது.

பலருக்கு இந்த நிலை தெரியாத நிலை உள்ளது, அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆட்சியே பொற்காலமாக இருக்கும்.

நீங்கள் சொன்ன விடயங்கள் அங்கே படித்தவர்கள் மூலம் நானும் அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

நல்ல விடயம்கள்  நன்றி தகவல்களுக்கு  அப்ப திமுக ஆட்சியில் சிறப்பு முகாம்கள் என்று ஈழத்தமிழரை அடைத்து வைக்கும் இடங்கள் மூடபட்டு விட்டனவா? அது பற்றி சீமான் கூட கதைப்பது இல்லை அப்படி அந்த முகாம்கள் மூடபட்டு இருந்தால் மிக நல்லதே .

 

 

அவை ( சிறப்பு முகாம்கள்)அப்படியே தான் உள்ளன. கெடுபிடிகளும் அப்படியே தான் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2023 at 12:34, kalyani said:

அவை ( சிறப்பு முகாம்கள்)அப்படியே தான் உள்ளன. கெடுபிடிகளும் அப்படியே தான் உள்ளன.

சிறப்பு முகாம்கள் மட்டுமல்ல சாதாரண அகதி முகாம்களில் கூட  சில நாள்களில் கெடுபிடி இருக்கும் (முன்னரிந்திய சுதந்திர தினம் போன்ற நாள்களில் நள்ளிரவில் புகுந்து திடீர் விசாரணைகள் செய்வார்கள் என கேள்விப்பட்டுள்ளேன் தற்போது எப்படி என தெரியாது).

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுக்கு 1591 வீடுகள் கையளிப்பு

Stalin.jpg

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகள் நாளை (17) கையளிக்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 79.70 கோடி இந்திய ரூபா மதிப்பில் 1591 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வேலூரை அண்மித்துள்ள மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார்.

மேலும், காணொளி வாயிலாக 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்போருக்கான வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் மாத்திரம் 11 கோடி இந்திய ரூபா மதிப்பில் 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூரில் தொடங்கி வைத்தார்.

142.16 கோடி இந்திய ரூபா மதிப்பில் 3,510 வீடுகளைக் கட்டும் நடவடிக்கை இதன்போது ஆரம்பிக்கப்பட்டது.

நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரயில் மூலம் இன்று இரவு வேலூர் செல்வதுடன், நாளை இரவு ரயில் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://thinakkural.lk/article/273405

  • கருத்துக்கள உறவுகள்

13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

18 SEP, 2023 | 11:02 AM
image
 

தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக முதல் கட்டமாக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். வேலூர் முகாமில் கட்டி முடிக்கப்பட்ட 220 குடியிருப்புகளை பயனாளிகள் வசம் ஒப்படைத்தார்.

தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 104 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த 7,469 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ.176.02 கோடி மதிப்பில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் 2021 நவ.2-ல் வேலூர் அருகே மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர்முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கான 1,591குடியிருப்புகள் திறப்பு விழாவேலூர் அருகேயுள்ள மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று 12 மாவட்டங்களில் கட்டியுள்ள குடியிருப்புகளை காணொலி வாயிலாகவும் வேலூர் முகாமில் நேரடியாகவும் திறந்து வைத்து பயனாளிகள் வசம் வீடுகளை ஒப்படைத்தார்.

 

பயனாளிகளுக்கு வீட்டு உபயோக பொருட்களையும் இனிப்புகளையும் வழங்கினார். பின்னர், புதிய குடியிருப்புகள் குறித்து இலங்கை தமிழர்களுடன் காணொலி வழியாக கலந்துரையாடினார்.

தொடர்ந்து, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள் குறித்த புகைப்பட தொகுப்பையும் முதல்வர் பார்வையிட்டார். வேலூர் மேல்மொணவூர் முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்டார்.

விழாவில், துரைமுருகன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்ட அமைச்சர்கள், எஸ்.ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிர்ஆனந்த் உள்ளிட்ட எம்.பி.க்கள், ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

தாத்தாவுக்கு முத்தம் கொடு

images__39_.jpg

வேலூர் மேல்மொணவூர் முகாமில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்து பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளிடம் நலம் விசாரித்தார். அப்போது, ஒரு வீட்டில் இருந்த பெண் குழந்தையிடம் உன் பெயர் என்ன என்று முதல்வர் கேட்டதும் ‘நிகிதா’ என்று கூறிய சிறுமியிடம், என்ன படிக்கிறாய் என்று கேட்டார். பர்ஸ்ட் ஸ்டாண்டடு என்று கூறிய சிறுமியிடம் தாத்தாவுக்கு ஒரு முத்தம் கொடு என்று கேட்டு 2 கன்னங்களிலும் முத்தம் பெற்றுக்கொண்டார். பின்னர், விழா முடிந்ததும் புறப்பட்டபோது அங்கு காத்திருந்த இலங்கை தமிழர்களிடம் கைகளை குலுக்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

https://www.virakesari.lk/article/164819

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.