Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிற்கு அதிகாரத்தை கொடுக்க நினைப்பவர்கள் தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் இரத்த ஆறு ஓடியிருக்காது – செல்வம் ஆதங்கம்

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்!

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது.

தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் ஒழிப்பு தொடர்பில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாணய நிதியம் விசேட நிபந்தனை முன்வைத்துள்ளது.

ஆட்சியாளர்கள் ஊழலை முதன்மையாக நிலை நிறுத்தி செயற்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது.

ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் தான் நாட்டின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1328343

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி 13 ஐ நிறைவேற்றச் சொல்லி இந்தியாவுக்கு எழுதின கடிதம் என்னாச்சு?பதில் வந்ததா?சுதந்திரத்தினத்திற்கிடையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று சொன்ன ரணிலுடன் நடத்திய பேச்சுவார்ததை என்னாச்சு. பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளாதவர்கள் தீர்வுக்கு விரோதமானவர்கள் என்று அரசியல் கட்சிகளும் பத்தி எழுத்தாளர்களும் எழுதினார்களே என்னாச்சு?கொங்சக் காலமாக சுமத்திரனின் அறிக்கைகள் ஒன்றையும் காணவில்லை. அவரும் சம்பந்தர் போல தூக்கத்திற்குப் போய் விட்டாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இதை பற்றி எல்லாம் சிலாகித்து ஒரு ஆறுமாதம் ஓடி இருக்கும்.

இதுவரை எதுவும் செய்யாமல் விட்டு விட்டு இப்போ, முதல் கட்ட பணமும் கொடுத்த பின், அதுவும் இலங்கை பாராளுமன்றில் இப்படி பேசுவதுக்கு பெயர்தான் ஏமாற்று அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

சரவதேச நாணய நிதியம் இப்படி நேரடியான நிபந்தனைகளை விதிக்காது,  அது பொருளாதார ரீதியான நிபந்தனைகளை மட்டுமே நேரடியாக விதிக்கும் என்ற புரிதல் கூட இல்லாத அப்பாவி அரசியலையே தமிழ் அரசியல் கடந்த 70 வருடங்களாக கொண்டுள்ளது. செல்வம் அடைக்கலநாதன் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் அரசியலுமே இவ்வாறானது தான்.

Smart politic க்கும் தமிழருக்கும் எப்போதுமே பல லட்சக்கணக்கான ஒளியாண்டு தூரம் உள்ளது. அந்த தூரத்தை பேணியபடியே தமிழ் அரசியல்  கடந்த 70 ஆண்டு காலமாக தொடர்ந்து பயணிக்கிறது. 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி பேசிப்பேசியே சாக வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சரவதேச நாணய நிதியம் இப்படி நேரடியான நிபந்தனைகளை விதிக்காது,  அது பொருளாதார ரீதியான நிபந்தனைகளை மட்டுமே நேரடியாக விதிக்கும் என்ற புரிதல் கூட இல்லாத அப்பாவி அரசியலையே தமிழ் அரசியல் கடந்த 70 வருடங்களாக கொண்டுள்ளது. செல்வம் அடைக்கலநாதன் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் அரசியலுமே இவ்வாறானது தான்.

Smart politic க்கும் தமிழருக்கும் எப்போதுமே பல லட்சக்கணக்கான ஒளியாண்டு தூரம் உள்ளது. அந்த தூரத்தை பேணியபடியே தமிழ் அரசியல்  கடந்த 70 ஆண்டு காலமாக தொடர்ந்து பயணிக்கிறது. 

 

இதையேதான் Gary ஆனந்தசங்கரியும் சொல்கிறார். அப்ப அவரும் 70 ஆண்டுகால stupid politics செய்கிறாரா?

எல்லாமுமே எப்படி பொதி செய்யப்படுகிறது என்பதில்தான் உள்ளது. How it’s being presented.

ஒரு நாட்டின் அரசியலையும், பொருளாதாரத்தையும் கோடு கீறி பிரிக்க முடியாது.

உதாரணமாக:

படைகளை வடக்கு கிழக்கில் இருந்து விலக்கி கொள்ளுங்கள் - அரசியல் நிபந்தனை.

அதீத செலவீனத்தை குறைக்கும் முகமாக இராணுவ பட்ஜெட்டை 40% குறைத்து, மாவட்டத்துக்கு ஒன்று என்ற வகையில் மூன்று படைகளின் பிரசன்னத்தையும் மட்டுப்படுத்தி - செலவீனத்தை குறையுங்கள்- பொருளாதார நிபந்தனை.

விளைவு ஒன்றுதான்.

இதை IMF கேட்டொருக்கலாம் (small print இல் கேட்ககூடும்) - ஆனால் இப்படி எந்த நகர்வையும் எந்த ஈழ தமிழ் எம்பியும் முன்னெடுக்கவில்லை.

Gary இன்னும் சில புலம்பெயர் அமைப்புகள் மட்டுமே கோரின.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இதையேதான் Gary ஆனந்தசங்கரியும் சொல்கிறார். அப்ப அவரும் 70 ஆண்டுகால stupid politics செய்கிறாரா?

எல்லாமுமே எப்படி பொதி செய்யப்படுகிறது என்பதில்தான் உள்ளது. How it’s being presented.

ஒரு நாட்டின் அரசியலையும், பொருளாதாரத்தையும் கோடு கீறி பிரிக்க முடியாது.

உதாரணமாக:

படைகளை வடக்கு கிழக்கில் இருந்து விலக்கி கொள்ளுங்கள் - அரசியல் நிபந்தனை.

அதீத செலவீனத்தை குறைக்கும் முகமாக இராணுவ பட்ஜெட்டை 40% குறைத்து, மாவட்டத்துக்கு ஒன்று என்ற வகையில் மூன்று படைகளின் பிரசன்னத்தையும் மட்டுப்படுத்தி - செலவீனத்தை குறையுங்கள்- பொருளாதார நிபந்தனை.

விளைவு ஒன்றுதான்.

இதை IMF கேட்டொருக்கலாம் (small print இல் கேட்ககூடும்) - ஆனால் இப்படி எந்த நகர்வையும் எந்த ஈழ தமிழ் எம்பியும் முன்னெடுக்கவில்லை.

Gary இன்னும் சில புலம்பெயர் அமைப்புகள் மட்டுமே கோரின.

நான் தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. 

2009 இன் பின்னர் புலம் பெயர் அரசியல் அமைப்புக்கள் அரசியலை முன்னெடுக்க  பாரிய அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தால் நீங்கள் கூறியபடியான மறைமுக அழுத்தத்தினை IMF  மேற்கொள்ள எம்மால் Lobby செய்திருக்க முடிந்திருக்கும்.  புலம் பெயர் மக்களின் பொருளாதார பலமும் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கும்.

ஆனால்,  புலம் பெயர் அரசியல் நடத்தியவர்கள்  ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து இருந்த வளங்களையும் பங்கு பிரித்துக் கொண்டு  உதிரிகளாகி நானா, நீயா என்று சில்லறைத்தனமான  அரசியல் செய்து தமிழ் மக்களாலேயே ஏளனமாக பார்ககப்படும் நிலையில் இருக்கும் நிலையில்  சர்வதேச நாணய நிதியத்திடம்  கோரிக்கைகளை வைப்பது எடுபடாது. தாயகத்திலும் அதே நிலைதான். இரு பகுதியும் ஒரே அரசியலையே செய்தார்கள், செய்கிறார்கள். அதுவே தமிழர் மரபு போலும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

நான் தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. 

2009 இன் பின்னர் புலம் பெயர் அரசியல் அமைப்புக்கள் அரசியலை முன்னெடுக்க  பாரிய அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தால் நீங்கள் கூறியபடியான மறைமுக அழுத்தத்தினை IMF  மேற்கொள்ள எம்மால் Lobby செய்திருக்க முடிந்திருக்கும்.  புலம் பெயர் மக்களின் பொருளாதார பலமும் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கும்.

ஆனால்,  புலம் பெயர் அரசியல் நடத்தியவர்கள்  ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து இருந்த வளங்களையும் பங்கு பிரித்துக் கொண்டு  உதிரிகளாகி நானா, நீயா என்று சில்லறைத்தனமான  அரசியல் செய்து தமிழ் மக்களாலேயே ஏளனமாக பார்ககப்படும் நிலையில் இருக்கும் நிலையில்  சர்வதேச நாணய நிதியத்திடம்  கோரிக்கைகளை வைப்பது எடுபடாது. தாயகத்திலும் அதே நிலைதான். இரு பகுதியும் ஒரே அரசியலையே செய்தார்கள், செய்கிறார்கள். அதுவே தமிழர் மரபு போலும். 

முரண்பட எதுவமில்லை.

6 minutes ago, island said:

அதுவே தமிழர் மரபு போலும். 

யாழை பார்த்தாலே தெரியவில்லையா? வெறும் கருத்து களத்திலேயே இப்படி என்றால்? பெயர், புகழ், அதிகாரம், பணம் கிடைக்கும் பொதுவெளியில் ?

#ஒரு சோறு பதம்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, island said:

நான் தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. 

2009 இன் பின்னர் புலம் பெயர் அரசியல் அமைப்புக்கள் அரசியலை முன்னெடுக்க  பாரிய அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தால் நீங்கள் கூறியபடியான மறைமுக அழுத்தத்தினை IMF  மேற்கொள்ள எம்மால் Lobby செய்திருக்க முடிந்திருக்கும்.  புலம் பெயர் மக்களின் பொருளாதார பலமும் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கும்.

ஆனால்,  புலம் பெயர் அரசியல் நடத்தியவர்கள்  ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து இருந்த வளங்களையும் பங்கு பிரித்துக் கொண்டு  உதிரிகளாகி நானா, நீயா என்று சில்லறைத்தனமான  அரசியல் செய்து தமிழ் மக்களாலேயே ஏளனமாக பார்ககப்படும் நிலையில் இருக்கும் நிலையில்  சர்வதேச நாணய நிதியத்திடம்  கோரிக்கைகளை வைப்பது எடுபடாது. தாயகத்திலும் அதே நிலைதான். இரு பகுதியும் ஒரே அரசியலையே செய்தார்கள், செய்கிறார்கள். அதுவே தமிழர் மரபு போலும். 

உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை

ஆனால் இதிலும் எதிரி தான் வென்றான் 

எவ்வளவு மன்றாடி கெஞ்சி நின்றபோதும் எதிரி எம்மின துரோகிகளின் துணையுடன் பலமாக நின்று பலவீனப் படுத்தினான். ஆனால் இன்னமும் காலம் தாழ்த்தி விடவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை

ஆனால் இதிலும் எதிரி தான் வென்றான் 

எவ்வளவு மன்றாடி கெஞ்சி நின்றபோதும் எதிரி எம்மின துரோகிகளின் துணையுடன் பலமாக நின்று பலவீனப் படுத்தினான். ஆனால் இன்னமும் காலம் தாழ்த்தி விடவில்லை. 

உண்மை…..

அவன் ஒரு நாடாக நின்று பேசும் போது…..

அங்கே இருக்கும் எம் எம்பிக்கள் வாய்பேசா மடந்தைகளாக இருக்கும் போது…

இன்னும் கொஞ்சபேர் அவனுக்கே வேலை செய்யும் போது….

புலம்பெயர் சக்தி, அப்படி ஒன்று இருக்கிறதா? என கேட்கும் அளவில் இருக்கும் போது….

ஒரு ஐந்து மொட்டைகள் சொல்லியது அம்பலம் ஏறவில்லை என்பதே…

உண்மை.

9 minutes ago, விசுகு said:

ஆனால் இன்னமும் காலம் தாழ்த்தி விடவில்லை. 

இதுவும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

உண்மை…..

அவன் ஒரு நாடாக நின்று பேசும் போது…..

அங்கே இருக்கும் எம் எம்பிக்கள் வாய்பேசா மடந்தைகளாக இருக்கும் போது…

இன்னும் கொஞ்சபேர் அவனுக்கே வேலை செய்யும் போது….

புலம்பெயர் சக்தி, அப்படி ஒன்று இருக்கிறதா? என கேட்கும் அளவில் இருக்கும் போது….

ஒரு ஐந்து மொட்டைகள் சொல்லியது அம்பலம் ஏறவில்லை என்பதே…

உண்மை.

இதுவும் உண்மை.

 

நன்றி  ஐயா

இந்த  உண்மையை  முதலில்  நாம்  தரிசிக்கணும்

அதை விடுத்து

ஆளையாள்  குற்றம்  சாட்டுவதோ

அல்லது முயலாதிருப்பதோ

ஒரு வகையில்  எதிரிக்கு துணைபோகுலே.

அவன்  ஏத்தி விட்டு விட்டு சும்மா  இருந்து தான்  செய:யவேண்டியவை  அனைத்தையும்  நாம் செய்வதை வேடிக்கை  பார்க்கின்றான்

உண்மையில்  இந்த  பொருளாதார நெருக்கடி நேரத்தில்

நாம்  புலத்தில்  பலமானதொரு அணியாக  இருந்திருப்போமாயின்

மிகவம்  இலகுவாக வேரோடு சாய்த்திருக்கலாம்

தலைவர் அதைத்தான் சொல்லி  நம்பி  சென்றார்

ஆனால்  சந்தர்ப்பம்  எம்மிடம்  வந்தபோதும்?????

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்!

இவ்வளவு நாளா ஆளைஆள் காலை வாரினதைத் தவிர சேர்ந்து செய்த வேலைகள் தான் என்ன?

சம்பந்தரும் சுமந்திரனும் எல்லா நாட்டு தூதரக அதிகாரிகளுடனும் அடிக்கடி பேச்சுவார்த்தை நடாத்தினார்களே என்ன தான் பேசினார்கள் என்றாவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இதையேதான் Gary ஆனந்தசங்கரியும் சொல்கிறார். அப்ப அவரும் 70 ஆண்டுகால stupid politics செய்கிறாரா?

கொடை வழங்கும் நாடுகளில் கனடா இல்லையா?

இருக்கு என்றால் அவர்களால் ஏன் இப்படி ஒரு கோரிக்கையை வைக்க முடியவில்லை.

கரி சங்கரி போன்றவர்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கொடை வழங்கும் நாடுகளில் கனடா இல்லையா?

இருக்கு என்றால் அவர்களால் ஏன் இப்படி ஒரு கோரிக்கையை வைக்க முடியவில்லை.

கரி சங்கரி போன்றவர்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?

பொறுப்பு துறப்பு : நான் Gary யின் வால்பிடி அல்ல. பத்திரிகை செய்தி தவிர எனக்கு அவரிடம் பரிச்சயமும் இல்லை.

————

ஆனால் ஒரு வருடத்துக்கு முதலே ஐ எம் எவ் வை இராணுவ அளவை குறைக்கும் படி கோரும் படி, கரி கோரிக்கை வைத்தார். தொடர்ந்தும் அழுத்தினார் என அறிகிறேன்.

https://www.newscutter.lk/sri-lanka-news/canadian-parliamentarian-writes-to-imf-on-sri-lanka-bailout-21032022-28074/

கனடாவில் இன்னொரு அமைப்பும் அறிக்கை விட்டது, ஐ எம் எவ்வை தொடர்பும் கொண்டது.

மிச்சம் யாரும் எதுவும் செய்ததாக தெரியவில்லை.

இப்போ குதிரைகள் ஓடிய பின் லாயத்தை பூட்டுவதாக நடிக்கிறார்கள்.

இது தனி மனிதர்களால் சாதிக்க கூடியவிடயம் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பொறுப்பு துறப்பு : நான் Gary யின் வால்பிடி அல்ல. பத்திரிகை செய்தி தவிர எனக்கு அவரிடம் பரிச்சயமும் இல்லை.

————

ஆனால் ஒரு வருடத்துக்கு முதலே ஐ எம் எவ் வை இராணுவ அளவை குறைக்கும் படி கோரும் படி, கரி கோரிக்கை வைத்தார். தொடர்ந்தும் அழுத்தினார் என அறிகிறேன்.

https://www.newscutter.lk/sri-lanka-news/canadian-parliamentarian-writes-to-imf-on-sri-lanka-bailout-21032022-28074/

கனடாவில் இன்னொரு அமைப்பும் அறிக்கை விட்டது, ஐ எம் எவ்வை தொடர்பும் கொண்டது.

மிச்சம் யாரும் எதுவும் செய்ததாக தெரியவில்லை.

இப்போ குதிரைகள் ஓடிய பின் லாயத்தை பூட்டுவதாக நடிக்கிறார்கள்.

கனடாவும் இலங்கைக்கு பணம் கொடுக்குதா?

  • கருத்துக்கள உறவுகள்

பல தனிமனிர்கள், சமூகத்தின் பிரதிநிதிகள் என வலம் வருவோர், அமைப்புகள் கூடி செய்ய வேண்டியது.

 

1 minute ago, ஈழப்பிரியன் said:

கனடாவும் இலங்கைக்கு பணம் கொடுக்குதா?

ஐ எம் எவ் என்பது ஒரு கூட்டுறவு சங்கம் போல. எல்லா உறுப்பு நாடுகளும் அவரவர் பொருளாதாரத்தின் வலுவுக்கு ஏற்ப பணத்தை ஐ எம் எவ் விடம் கொடுக்கும்.  சிக்கல் வந்தால் இதில் இருந்து எடுத்து அந்த நாட்டுக்கு கொடுக்கப்படும்.

கனடா ஒரு ஜி7 நாடு - எனவே அதன் பங்களிப்பு கணிசமானது.

நேரடியாகவும் இலங்கைக்கு கனடா bilateral aid கொடுக்கிறது என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2023 at 07:48, புலவர் said:

கொங்சக் காலமாக சுமத்திரனின் அறிக்கைகள் ஒன்றையும் காணவில்லை. அவரும் சம்பந்தர் போல தூக்கத்திற்குப் போய் விட்டாரோ?

புலவர்... இப்ப தான், கொஞ்சம் நிம்மதியாயிருக்கிறம். அதை கெடுத்துப் போடாதீங்க. 😂
வேலியிலை போற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விடாதீங்க. 🤣

"சிலர் வாயை திறந்தால்... வெள்ளி குடுக்கலாம்.
சிலர் வாயை மூடியிருந்தால்...
பவுண்  கொடுக்கலாம்."   🤣

சுமந்திரன், பவுணுக்கு பெறுமதியான... இரண்டாவது ரகம். 😁

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.