Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சப்பறம் பாக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சப்பறம் பாக்கலாம்

ஒரு பேப்பரிற்காக

கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோவில் தேரிற்கு சென்றிருந்த வேளை ஊர் நண்பனுடன் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா ஞாபகங்களை நினைத்து பேசிய பொழுதுதான் வாழ் நாளில் எப்படி எங்கள் சில நகைச்சுவை அனுபவங்களை மறக்க முடியாதோ அது போலவே எங்களால் ஏதோ ஒரு சில காரணங்களிற்காக சில நகைச்சுவையான அல்லது வேடிக்கையான மனிதர்களையும் வாழ் நாளில் மறக்க முடியாது. அப்படியான ஒரு உறுவுக்காரர் எங்கள் ஊரில் இருந்தார்.கதைக்காக அவரிற்கு ராசா பெயர் வைக்கிறேன். ராசா நன்றாக படித்து புகையிரத ஓட்டுனராக வேலையும் செய்தார்.

ஆனால் அவருக்கு தண்ணியிலை கண்டம். நான் சொல்லுறது கடல் தண்ணி ஆத்து தண்ணியில்லை இது அடிக்கிற தண்ணி. இவர் காங்கேசன் துறைக்கு கொழும்பில் இருந்து வரும் இரவு புகையிரதத்தை ஓட்டி வந்தால் மறுநாள் மாலை காங்கேசன் துறையில் இருந்து இவர்தான் கொழும்பிற்கு ஓட்டிசெல்ல வேண்டும் ஆனால் இவர் பகல் முழுதும் மப்படித்து விட்டு எங்காவது படுத்து நித்திரையாகி விடுவார். மாலையானதும் புகையிரதத்தை எடுக்க ஆளை காணவில்லையென்று றெயில்வே திணைக்கள ஜுப்பில் அதன் ஊழியர்களும் ஒரு பொலிஸ்காரரும் இவரை தேடி ஊருக்கு வருவார்கள்.

பிறகு நாங்களும் சேந்து அவர் கோயிலடியிலையா அல்லது கள்ளு கொட்டில்களில் படுத்திருக்கிறாரா என்று தேடிப்பிடித்து ஜுப்பில் ஏற்றி அனுப்பி விடுவோம். ஆனாலும் மறுபடியும் அதே கதைதான். கார் பஸ் என்றால் அவசரத்திற்கு யாராவது ஓடலாம் ஆனால் றெயின் ஓட யாரை பிடிக்கிறது என்கிற கவலையில் றெயில்வே திணைக்களமும் இவரை வேலையில் இருந்து நீக்காமல் பொறுமைகாத்தது. ஆனாலும் அது நீடிக்கவில்லை காரணம் ஒரு முறை இவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பயணிஒருவருடன் ஏதோ தகராறாம். அந்த பயணி கோண்டாவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர் என்பதை தெரிந்து கொண்ட ராசா கோண்டாவில் நிலையத்தில் புகையிரதத்தை நிறுத்தாமல் கொஞ்ச தூரம் கொண்டு போய் இணுவில் தோட்டவெளிப்பக்கமாக நிறுத்தியிருக்கிறார்.

பயணிகள் எல்லாம் திட்டியபடி இறங்கி போய் பின்னர் பெட்டிசங்களும் இவருக்கு எதிராக போய் விழ பிறகென்ன வேலை காலி. அதுக்கு பிறகு அவரும் எங்களுடன் கோயிலடி மடத்து உறுப்பினராகி தனது புகையிரம் ஓட்டிய அனுபவங்களை பிறிஸ்ரல் சிகரற் பிடித்த வாயால் பீடி புகையை இழுத்து விட்டபடி சொல்லிக்கொண்டிருப்பார்.அப

ஆஹா ராசாண்ணை இப்படிப்பட்டவரா? நல்லா இருக்கு சாத்ரி தாத்த ஔங்க அனுபவக்கதை. சிரிக்க வைச்சிட்டீங்க. ஆமா அப்புறம் ராசாண்ணை ஊருக்கு வரல்லையோ?

சாத்திரி அங்கிள் கதை மிகவும் நன்றாகவும் நகைசுவையாகவும் இருந்தது...........ராசா அண்ணா சூப்பர் ஆள் பணபையை குளத்தில வீசுறார் அதை நீங்க எல்லாம் போய் தேடி இருக்கிறீங்க நல்லா தான் இருக்கு....... :lol::lol::D :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதிய யமுனா வெண்ணி நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முந்தி கரிக்கோச்சியிலைதான் பள்ளிக்கூடம் போறனான் அது சரியா 7.40 வரவேண்டியது சில நேரத்திலை 8 மணிக்குத்தான் வரும்.அப்புடி லேட்டா வந்தாலும் பிளாட்பாரத்துக்கு அங்காலை போய்த்தான் நிக்கும் :lol: இதுக்கும் சாத்திரியாரின்ரை ராசா அண்ணைதான் றைவரோ தெரியாது :lol: ஏனெண்டால் இந்த கரிக்கோச்சி பளையிலை இருந்துதான் வெளிக்கிட்டு வாறது பளையிலை உடன் கள்ளுக்கு பஞ்சமில்லை பாருங்கோ ;)

  • கருத்துக்கள உறவுகள்

நான் முந்தி கரிக்கோச்சியிலைதான் பள்ளிக்கூடம் போறனான் அது சரியா 7.40 வரவேண்டியது சில நேரத்திலை 8 மணிக்குத்தான் வரும்.அப்புடி லேட்டா வந்தாலும் பிளாட்பாரத்துக்கு அங்காலை போய்த்தான் நிக்கும் :) இதுக்கும் சாத்திரியாரின்ரை ராசா அண்ணைதான் றைவரோ தெரியாது :lol: ஏனெண்டால் இந்த கரிக்கோச்சி பளையிலை இருந்துதான் வெளிக்கிட்டு வாறது பளையிலை உடன் கள்ளுக்கு பஞ்சமில்லை பாருங்கோ ;)

இங்கபாருங்கப்பு காமெடியை... கி.முக்கு முதல் ரெயின் கண்டுபிடிச்சிட்டாங்களா?? பாடசாலைக்கு போறவராம் அதுவும் கரிக்கோச்சியில போறவராம்... யாருக்கப்பு காது குத்துறியள் ஆ?? :angry: :angry: உதை ஜம்மு பேப் நம்பினாலும் நான் நம்பமாட்டளே ஏனெண்டா நான் ஸ்ரோங்கா திங்க் பன்னுவன் ஆமா... B) :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கபாருங்கப்பு காமெடியை... கி.முக்கு முதல் ரெயின் கண்டுபிடிச்சிட்டாங்களா?? பாடசாலைக்கு போறவராம் அதுவும் கரிக்கோச்சியில போறவராம்... யாருக்கப்பு காது குத்துறியள் ஆ?? :angry: :angry: உதை ஜம்மு பேப் நம்பினாலும் நான் நம்பமாட்டளே ஏனெண்டா நான் ஸ்ரோங்கா திங்க் பன்னுவன் ஆமா... B) :angry:

தம்பி ராசா பெரியாக்களைப்பாத்து மாரித்தவக்கை மாதிரியெல்லாம் கத்தக்கூடாதப்பா :lol::) :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ தெரியல சாத்திரி இந்தமுறை உங்க கதை அவ்வளவா பிடிக்கல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

B) என்ன கப்பியக்கா அடுத்த கதையைஉங்களுக்கு பிடிச்சதா எழுதறன் ;)

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ தெரியல சாத்திரி இந்தமுறை உங்க கதை அவ்வளவா பிடிக்கல.

எனக்கும் தான் சாத்திரி... ராசா அண்ணரை விபரிச்சதை கொஞ்சம் குறைச்சு, சப்பறத்தை கொஞ்சம் கூட விபரிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் எண்டு நினைக்கிறேன். கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

-சபேஸ்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்கள் கருத்தும் சரிதான் ஆனால் நான்நகைச்சுவையாக அமையவேண்டும் என்று அந்த நபரின் சம்பவத்தை மட்டுமே நினைத்து கதையாக்கியதால்அவரைப்பற்றிய

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உந்த இராச அண்ணைக்கு குடும்பம் குட்டிகள் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்! கதை நல்லாயிருக்கு.

டன்! கு.சா அவர்கள் கூறியது உண்மையாகவே இருக்கும். ஒருமுறை நான் அம்மாவுடன் இனுவிலடியில் புகையிலைத் தோட்டத்தினூடாக ஒரு புகையிரதம் போவதைப் பார்த்தேன். நான் அதற்குமுன் ஒருபோதும் அதில் ஏறியதில்லை. உடனே நான் அம்மா என்னை ரயிலில கூட்டிக்கொண்டு போ எனக் கத்திக் கொண்டு தண்டவாளத்தில படுத்திட்டன். மனுசியும் எவ்வளவோ கெஞ்சிப்பாத்து பின் திட்டித்தீர்த்து பிறகு பக்கத்தில் கிடந்த பொயிலைக்கட்டையால சாத்தியும் பாத்துது. நான் விடவில்லை. பின் அதால போறவாறவையெல்லாம் அம்மாவுக்கு டோஸ்விட அவ ஒருமாதிரி சமாதானமாகி என்னை அந்தத் தண்டவாளக் கரையால இனுவில் ஸ்டேசனுக்கு நடந்து போய் அங்கிருந்து ரயிலில ஏறி தெல்லிப்பளையில இறங்கினனாங்கள். அப்போது அந்த ரயிலில பள்ளிக்கூட பிள்ளைகள் எல்லாம் வந்தவர்கள். கு.சா வந்தவரோ என்னவோ எனக்குத் தெரியாது! இப்படியாக எனது முதலாவது புகைவண்டிப் பயணம் கோலாகலமாக சாம, பேத, தான, தண்டத்துடன் ஆரம்பமாகியது!!! :rolleyes::huh:

சின்ன மேளக்கச்சேரி அனுபவமும் உண்டு. பிறகு வாறன். :huh::wub:

கிகிகிகிகி பயங்கர கெட்டிகாரன் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.