Jump to content

புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?


  

78 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

வணக்கம்!

வருடந்தோறும் பல சஞ்சிகைகள், ஸ்தாபனங்கள், அமைப்புக்கள் உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் இவை இவை என்று தரப்படுத்தல் செய்து அறிவித்து வருகின்றன.

ஒரு சின்ன ஆதங்கம். அதாவது தமிழர்கள், குறிப்பாக எம்மைப்போன்ற ஈழத் தமிழர்கள் புலத்தில் வாழ்வதற்கு சிறந்த நாடு எதுவாக இருக்கும் என்று எனக்குள் ஒரு கேள்வி.

இப்படியான ஆராய்ச்சியில் யாராவது ஈடுபட்டு இருந்தால் அல்லது அதுபற்றிய தகவல்கள் ஏதாவது உங்களிடம் இருந்தால் இங்கு இணைக்கவும். மேலும்,

புலத்தில் நீங்கள் சிறந்ததாக கருதும் நாட்டை ஏன் தமிழருக்கு அந்த நாடு சிறந்தது என்ற காரணத்துடன் விளக்கினால் பலருக்கு அது பயன் உள்ளதாக இருக்கும்.

சிலருக்கு சிறீ லங்கா நாட்டில் இருந்து எங்காவது ஒரு வெளிநாட்டுக்கு ஏனென்சி மூலம் அல்லது சட்டரீதியான முறையில் தப்பி ஓடி உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலை.

சிலருக்கு பல நாடுகளிற்கு குடிபெயரக்கூடிய வசதிகள் உள்ளன. இவர்கள் இஞ்ச போவமா, அங்க போவமா என்று குழம்பிக்கொண்டு இருப்பார்கள். இதில் தாயகத்தில் இருந்து மேற்படிப்புக்கு இடம்பெயரும் மாணவர்களும் அடக்கம்.

நீங்கள் வாழும் நாடுகள் ஏன் சிறந்தவை அல்லது கூடாதவை என்றும் காரணங்களுடன் கூறினால் மற்றவர்களுக்கு இந்த தகவல்கள் உபயோகப்படக்கூடும்.

நீங்கள் ஏதாவது நாட்டிற்கு குடிபெயர்ந்து செல்ல விரும்பினால், ஏன் அங்கு செல்ல விரும்புகின்றீர்கள் என்றும் மற்றும் தற்போது வாழும் நாட்டில் ஏன் உங்களுக்கு இருக்க பிடிக்கவில்லை என்றும் கூறினால் நன்றாக இருக்கும்.

விருப்பமானவர்கள் கருத்துக்கணிப்பிலும் உங்கள் தெரிவை இடவும். கருத்துக்கணிப்பில் பங்குபற்றுபவர்கள் நீங்கள் ஏன் குறிப்பிட்ட ஒரு அந்த நாட்டை தேர்வு செய்தீர்கள் என்ற காரணத்தை கூறவும்.

கருத்தாடலில் உங்கள் ஆதரவுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply

நல்லதொரு கருத்துப்பகிர்வின் ஆரம்பம் கலைஞன் அவர்களே!

இங்கே புலம் பெயர்ந்து செல்லும் எம்மவர்கள் என்று பார்க்கும் போது, ஆகப் பிரதானமான காரணமாக பார்க்கக் கூடியது உயிர் பிழைக்க தப்பியோடுவதே(பணம் சம்பாதிக்க என்ற ஒரு தேவை இருந்தாலும், அதற்குள்ளும் உயிர் பிழைத்துக்கொண்டு, நாட்டிற்கும், வீட்டிற்கும் சம்பாதித்தல் என்று தான் கொள்ள வேண்டும்)

இனப்பிரச்சினை தீவிரமாக முந்திய காலங்களில், வேறு வேறான காரணங்களை மட்டும் கொண்டு வெளிநாடு சென்றிருந்தாலும், தற்போது அக்காரணங்களுள் பிரதானமான இக்காரணத்தையும் உள்ளடக்கித்தான் என்பதை மறுக்க முடியாது.

அந்த வகையில் கல்வி எனும் போது சில நாடுகளும், பொருளாதாரம் என்னும் பொழுது சில நாடுகளும், அசைலம் கிடைக்கிறது இலகு எனும் போது சில நாடுகளும், ஏஜென்சி மூலம் போய்ச் சேர்வதற்கு இலகுவாண வழி உண்டு எனும் அனுமானத்தின் கீழ் சில நாடுகளையும், பொருமளவிலான சொந்த பந்தங்களைக் கொண்டிருப்பதால் ஊர் மணம் அதிகமாக இருக்கும் எனும் காரணத்தினால் சில நாடுகளையும் வகைப்படுத்தலாம்.

ஆனால் இவ் வாக்கெடுப்பில் நான் இந்தியாவை தெரிவு செய்திருக்கிறேன். காரணம்.

நாம் பெருமளவு அளப்பரிய தியாகங்களை ஆகுதியாக்கி போரிட்டு வருவது தமிழீழம் என்ற ஓர் இலட்சியத்திற்காகவே.

அதாவது எமது தமிழ் பாரம்பரியங்கள், கலாச்சாரங்களை கட்டிக்காத்தவண்ணம் யாருக்கும் அடிமையாகாமல், யாரலும் அடக்கி, ஒருக்கப்படாமல் சுதந்திரமாய், சுயமாய் வாழவேண்டும் என்பதற்காகவே.

இதிலே எனது அறிவுக்கு எட்டியவரை, புலம்பெயர்ந்த தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும், தற்போதய சந்ததி தேச விடுதலைக்கான பங்களிப்பை பல வழிகளில் செய்ய உதவியாக இருந்த போதிலும்,

ஓரிரு சந்ததிகளிற்கு பின்பு என்று பார்க்கும் பொழுது, தமிழர் கலாச்சாரத்தோடு மீளவும் விடிந்து விட்ட எமது ஈழத்திற்கு கிடைக்கக் கூடிய சந்ததியை பெருமளவில் தமிழ்நாடே திருப்பித் தரக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். (இதில் இந்தியாவில் அகதிமுகாம் வாழ்க்கையை குறிப்பிடவில்லை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களில் எமது நாட்டு சூழல் சரியாகும் வரை, கல்வி வசதிகளோடு கூடிய பிழைப்பு நடாத்துபவர்களையே குறிப்பிடுகிறேன்.)

முதலாவது, இரண்டாவது ஈழத்தமிழ் சந்ததியர் வாழும் மேற்கத்திய நாடுகளில் இது அவ்வளவாக உணரப்படா விட்டாலும்,

மூன்றாவது, நான்காவது இந்திய தமிழ் சந்ததியினரைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர், மலேசியா, பீஜி தீவுகள் மற்றும் தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் இதன் தாக்கத்தை தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது.

தொடர்ந்தும் எனது கருத்துக்களை மற்றைய யாழ்க்கள உறவுகளின் கருத்துக்களைத் தொடர்ந்து முன்வைக்கின்றேன்.

அதுசரி இன்னும் கலைஞன் அவர்களே வாக்களித்து கருத்துப்பதியவில்லையே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்து வாழ சிறந்த இடம் அவுஸ்ரெலியா தான்,அவுஸ்ரெலியா தான்.அவுஸ்ரெலியா தான்,

நாங்கள் சிறிலங்கா நாட்டில் சந்தொசமாகவும் எந்த மனித உரிமை மீறல்கள் அடக்குமுறைகள் எதுவும் இல்லாமல் சந்தொசமாக வாழ்ந்து கொண்டு தான் இருந்தனாங்கள்.கலைஞன் கூறிய நாடுகளின் அரசாங்கங்களிற்கு எமது சேவை தேவைபட்டதால் தான் எங்களை வரும்படி அழைத்ததால் நாங்கள் இங்கு வாழ்கிறோம் சேவை செய்கிறோம் எமது சேவை மேற்கூறிய நாடுகளிற்கு நிச்சயம் தேவை இல்லாவிடில் இந்த நாடுகள் இயங்க முடியாது குறிப்பாக புத்தன்,ஜம்முபேபி,சுண்டல் ஆகியோரின் உன்னதமான சேவையை அவுஸ்ரெலியா எதிர் பார்த்து கொண்டிருகிறது, :P நாங்கள் சிறிலங்காவிற்கு போக நினைத்தாலும் அவுஸ்ரெலிய அரசாங்கம் விடாது காலில் விழாத குறையாக கெஞ்சுவார்கள்.ஆகவே தான் சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா என்ற தென்னிந்திய தெய்வீக கானத்தை காலையும்,மாலையும் வானொலியில் ஒலிபரப்பி கொண்டிருக்கிறோம். :)

சில காரணங்கள்

1)கோயில் இல்லாத இடத்தில் குடி இருக்க வேண்டாம் என்று எமது மூதாதையர் கூறிய கூற்றிற்கு ஏற்ப எம்மால் விரும்பிய (இஸ்ட தெய்வம்) கோயில் கட்டி பூசை செய்ய கூடிய ஒரே இடம் அவுஸ்ரெலியா தான்,உடனடியாக கோஒயில் கட்ட வசதி இல்லை எனின் கிழமைக்கு நூறு டொலர் கொடுத்து பாடசாலை மண்டபத்தை எடுத்து அங்கு தற்காலிக கோயிலை அமைத்து அதாவது தெய்வீக சிலையை ஜயரின் வீட்டில் வைத்து ஒவ்வொரு கிழமையும் அந்த சிலையை மண்டபதிற்கு கொண்டு வந்து,பூசை செய்து எமது பக்தியை இறைவனுக்கு இலகௌவாக தெர்விக்க கூடிய இடம் அவுஸ்ரெலியா தான்.இதன் மூலம் கிடைக்கும் வருமாணத்தை வைத்து பிரமாண்டமான கோயில் கட்டி நாங்கள் எமது இஸ்ட தெய்வதிற்கு பூசை செய்ய கூடிய ஒரே இடம் அவுஸ்ரெலியா தான்.அரோகரா..அரோகரா.

மேற்கூறிய கஷ்டங்கள் இந்துமத தமிழர்களிற்கு தான் இருகிறது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தமிழர்களிற்கு இந்த கஷ்டங்கள் இல்லை,சில தேவாலயங்கள் வெள்ளை இனத்தவர்களாள் கவனிபாரற்று விடபடிருக்கும் அதை இவர்கள்(கிறிஸ்தவ தமிழர்கள்) போய் துப்பரவு செய்து சில தேய்விக பாடல்களை பாடி கர்த்தரின் ஆசியை பெற்று இன்புற்றிருக்க ஒரே இடம் அவுஸ்ரெலியா தான்..ஆலேலோயா...ஆலேலோயா.

இஸ்லாம் மதத்தை சார்ந்த தமிழ பேசுபவர்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை காரணம் ஏனைய இஸ்லாமிய உலக சகோதர்கள் அவர்களிற்கு பள்ளிவாசல் கட்டி வைத்திருகிறார்கள் இவர்கள் போய் தொழுகை செய்ய வேண்டியது தான் இவர்களின் கடமை.அதையும் செய்யாவிடில் இவர்கள் அல்லாவின் (அரபி மொழியில் ஆண்டவனின் பெயர்) குற்றதிற்கு ஆளாவார்கள்.

2)சமூக் விரோத செயல்கள் களவு,வீதி ஒழுங்குகளை மீறல்,இன்சுரன்ஸ் எடுக்க காரை எரித்தல்,ஒரே வீட்டில் சந்தோசமாக இருந்து கொண்டு அரசமானியங்கள் பெறுவதிற்காக மட்டும் விவாகரத்து பெறல்,போன்ற செயல்களிற்கு சிறந்த இடம் அவுஸ்ரெலியா தான்.இவை எல்லாம் மாட்டுபட்டால் அரசாங்கத்திடம் ரேசிசம் அல்லது மனித உரிமை மீறல் என்று சொல்லி தப்ப கூடிய இடம் அவுஸ்ரெலியா தான்.

3)குடும்ப உறவுகளை விரைவில் அழைக்க கூடிய ஒரே இடம் அவுஸ்ரெலியா தான்.

முதலாவது, இரண்டாவது ஈழத்தமிழ் சந்ததியர் வாழும் மேற்கத்திய நாடுகளில் இது அவ்வளவாக உணரப்படா விட்டாலும்,

மூன்றாவது, நான்காவது இந்திய தமிழ் சந்ததியினரைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர், மலேசியா, பீஜி தீவுகள் மற்றும் தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் இதன் தாக்கத்தை தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது.

தமிழினி கூறிய நாடுகளிள் மலேசியா,சிங்கபூர்,பிஜீ,தென்ன

Link to comment
Share on other sites

ஆர்வத்துடன் பலர் இந்த கருத்துக்கணிப்பில் பங்குபற்றுவது மகிழ்ச்ச்சியை தருகின்றது.

இங்கு நான் எனது தெரிவாக கனடா நாட்டை தெரிவு செய்து உள்ளேன். ஆனால், எனது தனிப்பட்ட வாழ்க்கைத் தெரிவு சுவிஸ்லாந்து ஆகும். நான் இதை முன்பும் யாழில் ஒரு இடத்தில் குறிப்பிட்டு உள்ளேன்.

கனடா நாடு ஏன் சிறந்தது?

கனடிய நாடு அளவில் மிகப்பெரிய ஒரு நாடு ஆகும். இங்கு வருடந்தோறும் பல லட்சம் மக்கள் குடிபெயருகின்றனர். பல்லின கலாச்சாரத்திற்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதோடு, எல்லோரும் சமமாக வைத்து மதிக்கப்படுகின்றனர். இனத்துவேசம் போன்றவை ஒப்பீட்டளவில் குறைவு. மேலும், ஆங்கிலம் பிரதான ஒரு மொழியாக இருப்பது எம்மவர்கள் சர்வதேசமொழியின் பயன்பாட்டை உச்ச அளவில் பெற உதவுகின்றது. ஆங்கிலம் என்றால் உலகில் எங்கும் பேசி அலுவல் பார்க்கலாம். ஆனால், வேற்று மொழிகளாக இருந்தால் உதாரணமாக டானிஸ், டொச் போன்றவை.. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். குட்டி போட்டு எனது இனத்தை பெருக்குவதற்கு கனடா ஒரு சிறந்தநாடு. நாலு பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் கூட சமாளிக்கலாம். மற்றது மருத்துவ வசதிகள் அந்தமாதிரி உள்ளது. கல்வி வசதிகள் அந்தமாதிரி உள்ளது. அனைவரும் விரும்பிய துறையில் படித்து விரும்பிய நிலையை வாழ்க்கையில் அடைவதற்கு வசதிகள் உள்ளன. பக்கத்தில் அமெரிக்கா இருப்பதாலும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்றவற்றில் நம்மவர்கள் அதிக புலமைத்துவம் பெறக்கூடியதாக உள்ளது.

ஆனால் கனடாவில் எனக்கு பிடிக்காத விசயங்கள்:

ஏராளம் குடிவரவாளர்கள் இருப்பதால் வேலை எடுப்பது கடினமாக உள்ளது. மேலும், சம்பளமும் ஒப்பீட்டளவில் குறைவு. மற்றது வெதர் - காலநிலையை பார்த்தால் சூடு என்றால் அந்த மாதிரி சூடு. வேர்த்து ஒழுகித் தள்ளும். ஏசி இல்லாமல் இருக்கமுடியாது. இதுபோல் குளிர் என்றால் குளிரோ குளிர்! நடுங்கோ நடுங்கும். ஹீட்டர் இல்லாமல் இருக்கமுடியாது.

தனிப்பட்ட எனது தேர்வாக சுவிஸ்லாந்து நாட்டை நான் விரும்புவதற்கான காரணம்:

ஜெனீவா... அனைவரும் கேள்விப்பட்ட பெயர். உலகில் உள்ள பல சர்வதேச அமைப்புக்களின் மையநிலையம். மனித உரிமைகளிற்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடு. சிறுவயதில் இருந்து சுவிஸ் நாட்டை நான் விரும்பி வந்துள்ளேன். பள்ளியில் சமூகக்கல்வி பாடத்தில் அடிக்கடி படிப்பித்து வந்துள்ளார்கள். மற்றது பிரபல விஞ்ஞானி அயின்ஸ்டைன் பிறந்த இடம். இப்படி பல தனிப்பட்ட காரணங்கள். ஆனால், இந்த நாடு ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த ஓர் நாடா என்று அங்கு உள்ளவர்கள் தான் பதில் கூறவேண்டும். நான் இன்னும் சுவிசுக்கு ஒருமுறையும் போகவில்லை. இனித்தான் போகவேண்டும்.

இந்தியா:

தமிழீனி கூறியபடி இந்தியா ஓர் சிறந்த தெரிவாக எனக்கு தெரியவில்லை. அங்கு எப்படி நம்மவர்கள் வசதியாக வாழ்வது? தமிழ்நாட்டு தமிழனே வேலை வெட்டியின்றி, சினிமாவும் அதுவும் இதுவும், ஆர்ப்பாட்டம், அடிபாடு என்று பிணக்குப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தநிலையில் இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர் எவ்வாறு முன்னேறுவது? எப்படி வாழ்வது? கனடாவில் என்றால் பணபலம் உண்டு. இதன்மூலம் தமிழீழத்திற்கு எதிர்காலத்தில் குடிபெயரும்போது பலவிடயங்களை சாதிக்க முடியும். ஆனால், இந்தியாவில் இருந்துவிட்டு பிச்சைக்காரனாக தமிழீழத்திற்கு மீண்டும் குடிபெயரும்போது எதை செய்யமுடியும்? கனடாவில் உள்ள பலர் தமிழீழம் கிடைத்ததும் அங்கு வந்து முதலீடு செய்து, அங்கு தங்கி வாழ்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

அவுஸ்திரேலியா:

மற்றது புத்து மாமா கூறுவதுபோல் அவுஸ்திரேலியாவும் சிறந்த ஒரு நாடு ஆகும். முக்கியமாக காலநிலை - வெதர் நல்லது என்று கேள்விப்பட்டேன். கனடாவில் உள்ள வசதிகள் அவுஸ்திரேலியாவிலும் உள்ளது என்று நினைக்கின்றேன். எனினும், அவுஸ்திரேலியாவில் கனடாவை விட இனத்துவேசம் இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

நன்றி!

Link to comment
Share on other sites

மேலே புத்தன் மற்றும் கலைஞன் கூறிய கருத்துக்களுடன் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை, தங்கள் கருத்துக்களை ஆமோதிக்கின்றேன்.

அதே நேரம் இந்த புலம் பெயர் தமிழர்களின் தெரிவு விடயத்தை நான் இரு பிரிவுகளாக நோக்குகின்றேன்.

ஒன்று புலம்பெயர்பவரின் குடும்பம், சுற்றம் சூழ்ந்த தனிப்பட்ட நலன்.

இரண்டு விடியப்போகும் எம் தேசத்தின் எதிர்கால நலன்.

முதலாவது பிரிவின் படி நோக்கும் போது தங்கள் விளக்கங்கள் சரியாகத்தான் இருக்கின்றன.

இரண்டாவது பிரிவின் படி நோக்கும் போது: நாங்கள் எல்லோரும் அதாவது இந்தத் தலைமுறையில் பலர்(நிச்சயமாக அனேகர் இல்லை) நாட்டிற்கு திரும்பி நாட்டை வளப்படுத்தும் எண்ணத்தை தற்போது கொண்டிருக்கலாம். ஆனால் உங்களின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என்று வரும் போது அவர்கள் மீது தங்களின் தாக்கமும் கட்டுப்பாடும் குறிப்பிட்ட வயது வரையே செல்லுபடியாகும்.

உங்கேயே பிறந்து, உங்கேயே படித்து, உங்கேயே வளரும் தலைமுறையின் மனோநிலை(பெரும்பான்மையோரின

Link to comment
Share on other sites

சிரி லன்கா, இந்தியா........... தவிர்ந்த ஏனயநாடுகள். :angry:

Link to comment
Share on other sites

என்ன தமிழினி இப்பிடிச் சொல்லுறீங்கள்? பிள்ளைகள் வராவிட்டாலும் கிழடுகளாவது சீவன் நிம்மதியாக தாம் பிறந்த இடத்தில் போகட்டும் என்று வரக்கூடும்.

இந்தியாவில் போய் கஸ்டப்பட்டுக் கொண்டு இருப்பதை விட, ஈழத்திலேயே ஷெல் விழுந்து சாவது மேல் என்று நினைக்கின்றேன்.

இந்தியாவில் ஈழத்தவர்கள் படும் அல்லல்கள் உங்களுக்கு தெரியாதா?

பேரறிவாளன் என்பவர் தான் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு தூக்கு கயிறு கிடைத்தது என்று இங்கு கூறுகின்றார். வாசித்து பாருங்கள். இதன் பின்னரும் இந்தியாவை ஒரு தம்பி நினைத்துப் பார்பானா?

http://perarivalan.blogspot.com/

இந்தியாவில் அடிமைகளாக, ஆடு, மாடுகளாக வாழ்வதை விட ஈழத்தில் இருப்பதே மேல்!

Link to comment
Share on other sites

ஒண்டு மட்டும் நூறு சதவீதம் உறுதி....... ஈழம் பிரிந்ததும் முதலாவது முக்கிய நிகழ்வு கிழக்கு இந்தியாவில் இருந்து அகதிகளின் வருகைதான்.

:lol::lol: :wacko: :lol: :angry: -_-

Link to comment
Share on other sites

வெளிநாட்டு தமிழர்கள் வருவார்களோ இல்லையோ.... காணி விலை அநியாயத்துக்கு எகிறும். கடைகளை பற்றி சொல்லத்தேவையில்லை. எற்றுமதி இறக்குமதி பெரும்புள்ளிகள் அதிகமாக தோன்றுவர்கள்.. கிரிகெட்டை விட உதைபந்தாட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இப்படி நிறைய.................................................................

........................................................................ :lol:

Link to comment
Share on other sites

இணையநண்பன் வழங்கிய தகவலுக்கு நன்றி! 2004 இல் இதே விசயத்தை பற்றி யாழில் கருத்தாடல் செய்து உள்ளார்கள். அதில் மதன் பல தகவல்களை வழங்கியுள்ளார்.

கருத்துக்கணிப்பில் நெதர்லாந்துக்கு ஆறு ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. நெதர்லாந்து புலத்தில் வாழும் தமிழர் குடியிருக்க ஏன் சிறந்த ஓர் நாடு என்று கருத்துக்கணிப்பில் நெதர்லாந்தை தெரிவு செய்தவர்கள் விளக்கம் தருவீர்களா? நெதர்லாந்தில் அப்படி என்ன விசேடம் இருக்கின்றது?

நன்றி!

Link to comment
Share on other sites

மக்கள், 37 பேர் இதுவரையில் கருத்துக்கணிப்பில பங்குபற்றி இருக்கிறீங்கள், ஆனா நான்கு பேர்தான் பதில் கருத்து எழுதி இருக்கிறீங்கள். கருத்துக்கணிப்பில் பங்குபற்றுபவர்கள் உங்கள் உள்ளக் கிடக்கைகளையும் இங்கு பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும். நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2)சமூக் விரோத செயல்கள் களவு,வீதி ஒழுங்குகளை மீறல்,இன்சுரன்ஸ் எடுக்க காரை எரித்தல்,ஒரே வீட்டில் சந்தோசமாக இருந்து கொண்டு அரசமானியங்கள் பெறுவதிற்காக மட்டும் விவாகரத்து பெறல்,போன்ற செயல்களிற்கு சிறந்த இடம் அவுஸ்ரெலியா தான்.இவை எல்லாம் மாட்டுபட்டால் அரசாங்கத்திடம் ரேசிசம் அல்லது மனித உரிமை மீறல் என்று சொல்லி தப்ப கூடிய இடம் அவுஸ்ரெலியா தான்.

கிறிமினல் செய்யிறவைக்கு ஏத்த நாடு அவுஸ்ரேலியாதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜேர்மனியை தெரிவு செய்துள்ளேன்.ஏனெனில் நான் பிறந்தமண்ணுக்கு அடுத்தபடியாக இந்த மண்ணை நேசிக்கின்றேன்.அவரவற்கு தாங்கள் இருக்கும் பூமி என்றும் சொர்க்கமே!அதிலும் பல புலம்பெயர் ஈழத்தவர்களுக்கு ஜேர்மனி ஓர் நுழைவாயிலாக இருந்துள்ளது.இதனை யாராலும் மறுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்தவங்களை அடிக்கிறதுக்கும் ஏத்த நாடு இதாகத்தானிருக்கும்

Link to comment
Share on other sites

புலம் பெயர்ந்தவங்களை அடிக்கிறதுக்கும் ஏத்த நாடு இதாகத்தானிருக்கும்

நல்ல வசமா வாங்கியிருக்குறீங்கள் போல? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தெரிவு ஆபிரிக்கா.

அதுதான் நம்மாக்களுக்கு சரியான இடம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தெரிவு ஆபிரிக்கா.

அதுதான் நம்மாக்களுக்கு சரியான இடம். :o

ஏனுங்க நெடுக்கு சார் நம்ம கறுப்ஸ் அம்மணிக்கா பதில் சொன்னீங்க? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க நெடுக்கு சார் நம்ம கறுப்ஸ் அம்மணிக்கா பதில் சொன்னீங்க? :)

கறுப்பி அக்கா மட்டும் தான் நம்மோட தோஸ்து. அவா கூடையும் சண்டைக்கு முடிச்சுப் போடுற பிளான் போல. :huh:

அதில்ல.. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருத்தருக்கும் தமிழீழம் போக விருப்பமில்லை. ஈழத்தமிழர்களுக்கு சும்மா அடைமொழிக்குத்தான் ஈழம். மற்றும் படி.. அங்க இருக்கிறதுக்கே மனசில்ல. மாப்பிள்ளை எண்ட கலைஞன் எண்டவருக்கு தாய் மடியே நினைவில்ல. அதுதான் இந்த நன்றி கெட்ட ஜென்மங்களை ஆபிரிக்காவில கொண்டு போய் போட்டு சகாரா பாலவனத்தில கருவாடாக்க வேணும் என்றிட்டுப் போட்டன். :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய தெரிவு சீனா.

பாம்புக் கறி மலிவா வேண்டிச் சாப்பிடலாம்.

ஐயா! குறுக்காலை போவாரே எங்கடை ஊரிலையும் சாரைப்பாம்புக்கும், கோடாலிப்பாம்புக்கும் ஒரு பஞ்சமும் இல்லைப்பாருங்கோ.றோட்டாலை போகேக்கை உங்கடை பேருக்கேத்தமாதிரி அதுகளும் குறுக்காலை அடிக்கடி போகும்.அப்ப ஒண்டடை புடிச்சு நல்ல உப்பு தூள் போட்டு சாத்த வேண்டியது தானே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய தெரிவும் கனடாதான். கலைஞன் சொன்ன அதே காரணங்கள். மத்தபடி நாடு கிடைச்ச உடன தாயகத்துக்கு போய் வாழுவேன் எண்டு சொல்லி என்னை நானே ஏமாத்த விருப்பம் இல்லை. கனடாவில் நான் அறிந்த எவரும் (ஓரிரு வயோதிபர்களைத் தவிர) நாட்டுக்கு போய் வாழுவதாக இல்லை. எல்லாரும் றிற்ரையமன்ற் வரை பிளான் போட்டுதான் வாழ்க்கையை நகர்துகின்றனர்.

-சபேஸ்-

Link to comment
Share on other sites

கனடா தான் சிறந்ததாக இருக்கும் .

இல்லை கறுப்பி அக்கா அவுஸ்ரெலியா தான் சிறந்த நாடாக இருக்கும் என் பார்வையில் உங்கள் பார்வையை ஆளுகாள் வித்தியாசபடும் அவுஸ்ரெலியாவை பற்றி எழுதிய ஆக்கத்தை எழுதி முடித்து விட்டு போடுகிறேன் அதன் பின் சொல்லுங்கோ,சற்று பொறுங்கோ எழுது முடித்து விட்டு வருகிறேன் அக்கா........... :D

Link to comment
Share on other sites

வணக்கம் ஜெனரல்!!

அட நாம தான் மறுபடி வந்துட்டோமல :P ........என் இனிய யாழ்கள்மெம்பர்சே வணக்கம்.......ஜெனரல் அவர்களே ஈழதமிழர்கள் வாழ்வதிற்கு சிறந்த நாடா...........எந்த நாட்டிலை இருந்தாலும் அந்த நாட்டிற்கு ஏற்ற மாதிரி மாறி அவர்களுடன் ஒத்து போய் சந்தோசமாக இருந்தா எந்த நாடும் நல்லது தான் என்பது இன்றைய நற்சிந்தனை :P ஆனாலும் அதற்காக இந்தியா போன்ற ஏசியா நாட்டை நான் இதற்குள்ள இன்கூலூட் பண்ணவில்லை......உதாரணதிற்கு சேர்.பொன் டங்கு அண்ணாவை பாருங்கோ அவரின் அறிவிற்கும்,அழகிற்கும் அவர் எங்கையோ இருக்க வேண்டியவர் ஆனால் சோமாலியாவில எவ்வளவு சந்தொசமாக வாழ்கிறார் இதில இருந்து விளங்கி இருக்க வேண்டும் :lol: .........

சரி இப்ப விசயதிற்கு வாறேன் புலம் பெயர்ந்து வாழ சிறந்த நாடாக ஒட்டொமொத்த யாழ்கள மெம்பர்ஸ் சார்பாக நான் தெரிவு செய்வது கிரேட் அவுஸ்ரெலியா............ஒசி..ஒசி..ஓசி....

...ஓய்.......ஓய்...ஓய்.......... :D .

1)அவுஸ்ரெலியா சார்பாக நான் முதலில் குறிபிடவிரும்பும் விடயம் காலநிலை இலங்கையை ஒத்த காலநிலையை இங்கே காணலாம்........வின்டர் சீசனில கொஞ்சம் குளிர் மற்றும்படி மிகவும் நல்லதோர் காலநிலையாக அவுஸ்ரெலியா நாட்டை குறிபிடலாம்...........வெயில் சில நாட்களிள் அதிகமாக சென்றாலும் அது பெரிய பாதிப்பாக இல்லை என்றே குறிபிடலாம்......

2)கல்வி முறை ஆங்கிலத்தில் பாடங்கள் கற்பிக்கபடுகிறது,ஆங்கிலம் உலக மொழி ஏனைய மொழிகளிள் படித்து விட்டு வேற நாடுகளிற்கு தற்செயலாக வேலை போன்றவற்றிற்கு சென்று கஷ்டபடாமல் ஆங்கில மொழி மூலம் இலகுவா கல்வியை கற்று கொள்ள முடியும்.......அத்துடன் கல்வி தரமும் ஏனைய நாடுகளுடன் ஓத்து காணபடுவதுடன் இங்கே படிப்பவர்களிற்கும்............பல்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.