Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் : தெளிவுபடுத்தினார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

09 JUN, 2023 | 08:03 PM
image
 

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். 

ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு பொலிஸ் அதிகாரிகள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரட்சி  முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2022.05.09 மே காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது தமது கடமைகளை செயற்படுத்த தவறிய 69 பொலிஸ் பிரிவுகளில் சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸ் திணைக்களம் ஊடாக விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 38 பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

காலி முகத்திடல் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறையால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமாதிபர் திணைக்களம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

இதன்போது எழுந்து மேலதிக கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார பிரபுக்கள் பாதுகாப்புக்காக 44 ஆயிரம் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களே அந்த பிரபுக்கள் என அண்மையில் செய்தி வெளியாகியுள்ளன. இவ்வாறான செய்திகளால் தான் மக்கள் அரசியல்வாதிகளை வெறுக்கிறார்கள். ஆகவே இந்த செய்தியின் உண்மை தன்மை என்னவென்று வினவினார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாக்கு அமைச்சர் டிரான் அலஸ் 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அடிப்படையற்றதாகும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு பொலிஸ் அதிகாரிகள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு சேவை வழங்கப்படுகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/157349

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 200 பேர் ஒருவருக்கு?

எப்படி  உருப்படும் இந்த நாடு??

அவனவன் பிரதம மந்திரியே  தனிய  சைக்கிளில் போய் வாறான்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

கிட்டத்தட்ட 200 பேர் ஒருவருக்கு?

எப்படி  உருப்படும் இந்த நாடு??

அவனவன் பிரதம மந்திரியே  தனிய  சைக்கிளில் போய் வாறான்?

இல்லை அண்ணை.

11 hours ago, ஏராளன் said:

ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு பொலிஸ் அதிகாரிகள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

 

Edited by ஏராளன்
குறைத்துள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாருக்கு காவலுக்கு நின்றவர்கள் அவரை கைது செய்யும் போது கைகட்டி நின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அதுவும் 8 ஆம் திகதி பொலிஜ் நிலையத்திற்கு வருமாறு கடிதம் அனுப்பி விட்டு 7 ஆம்திகதி காலை அதுவும் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக அவர் பேசப் போகிறார் என அறிந்து கைது செய்து கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு கொண்டு போய்  பிணையில் விடுதலை செய்திருக்கிறார்கள. பிச்சையெடுக்கும் அரசாங்கம் இதற்கான  போக்குவரத்து எரிபொருள்.ஈ>பாதுகாப்பு என எவ்வளவு காசை வீணாக்கியிருக்கிறார்கள். பாராளுமன்ற அமர்வுகள் முடிந்ததும்  அவரே தனர்து சொந்தச் செலவில் பொலிஜ் நிலையத்திற்கு வந்து விளக்கமளித்திருப்பார். அவர் எங்கேயும் ஓடி ஒழியப் போவதில்லை.ஓடினால் அவரின் கோடிக்கணக்கான சொத்துக்களை அரசாங்கம் முடக்கி விடும் .அத்துடன் அவர் எந்தப்பாரதூரமான குற்றத்தையும் செய்யவில்லை. குற்றத்தைச் செய்தவர்களே அவர் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

கிட்டத்தட்ட 200 பேர் ஒருவருக்கு?

எப்படி  உருப்படும் இந்த நாடு??

அவனவன் பிரதம மந்திரியே  தனிய  சைக்கிளில் போய் வாறான்?

உழைத்து சாப்பிடுபவர்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். சுதந்திரம் பெற்ற நாட்களிலிருந்து  அதை சாட்டி இதை சாட்டி உலகத்திடமிருந்து மானியங்களியும்  உதவிகளையும் பெற்று வாழும் இனத்திற்கு யதார்த்த வாழ்க்கை என்றால் என்னவென்று எப்படித்தெரியும்?

சிறிலங்கா பிரிட்டிஷ் கொலனி  இதைத்தவிர சிங்களனனுக்கு வேறேதுமில்லை.:face_with_tears_of_joy:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

கஜேந்திரகுமாருக்கு காவலுக்கு நின்றவர்கள் அவரை கைது செய்யும் போது கைகட்டி நின்றார்களா?

த.தே.முன்னணி இரண்டு பா.உ களும் பொலிஸ் பாதுகாப்பை கோரவில்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

இல்லை அண்ணை.

 

மூன்று வருடங்களுக்கு முன்பே   சுமத்திரனை சுத்தி  பத்து பன்னிரெண்டு   பொலிஸார் போனதை பார்த்தேன்    ...🤣.   சுமத்திரனுக்கு.....இரண்டு மடங்கு பாதுகாப்பா. ??

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

மூன்று வருடங்களுக்கு முன்பே   சுமத்திரனை சுத்தி  பத்து பன்னிரெண்டு   பொலிஸார் போனதை பார்த்தேன்    ...🤣.   சுமத்திரனுக்கு.....இரண்டு மடங்கு பாதுகாப்பா. ??

ஓம் அண்ணை… அவர் மீதான கொலை முயற்சியின் பின்னர் அவருக்கு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.