Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இளைஞரை கொடூரமாக தாக்கிய யாழ். பொலிஸார் ; சம்பவ இடத்தில் நின்றவர்களுக்கும் மிரட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

16 JUN, 2023 | 12:29 PM
image
 

யாழ். நகரப் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் - ஆஸ்பத்திரி வீதி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் கடமையில் இருந்த யாழ்ப்பாண பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞனை மறித்துள்ளனர். இவ்வாறு மறித்த பொலிஸார் அந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் திறப்பினை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் சோதனை சாவடிக்குள் இழுத்துச் செல்ல முற்பட்டனர்.

இதன்போது, குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் அனைத்தும் தன்னிடம் உள்ளது என்றும், அதனை காண்பிப்பதற்கு முன்னர் திறப்பினை தருமாறும் கோரினார்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த பொலிஸார் இளைஞனை வலிந்து சோதனை சாவடிக்குள் இழுத்துச் செல்ல முற்பட்டதுடன் அவரை கைது செய்யவும் முயன்றனர். இதனால் பொலிஸாருக்கும் இளைஞருக்கும் இடையே முரண்பாடு தோன்றிய நிலையில் பொலிஸார் இளைஞனை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் இடம்பெற்றுள்ள நிலையில், இளைஞரின் தலை மீதும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு கூடிய பொதுமக்கள் இளைஞரை மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். எனினும் பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதேநேரம் அந்த இளைஞனை தாக்கியதை அங்கிருந்தவர்கள் தங்களது கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்தனர். இதன்போது அவர்களையும் கைது செய்யப்பேவதாக மிரட்டிய பொலிஸார், பின்னர் அவர்களது கைப்பேசியை பறித்து காணொளியை அழித்த பின்னர் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

https://www.virakesari.lk/article/157836

  • கருத்துக்கள உறவுகள்

அழித்த காணொளியை மீட்டெடுக்கலாம் என கருதுகிறேன், அதனை ஆதாரமாக வைத்தும் கண்கண்ட சாட்சிகளினூடாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அழித்த காணொளியை மீட்டெடுக்கலாம் என கருதுகிறேன், அதனை ஆதாரமாக வைத்தும் கண்கண்ட சாட்சிகளினூடாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என கருதுகிறேன்.

யார், யார்மேல்  நடவடிக்கை எடுப்பது? கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்துக்கு என்ன நடந்தது? இப்போ ஒரு கலவரம் நாட்டில் ஏற்படவேண்டுமெனத் துடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

அழித்த காணொளியை மீட்டெடுக்கலாம் என கருதுகிறேன், அதனை ஆதாரமாக வைத்தும் கண்கண்ட சாட்சிகளினூடாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என கருதுகிறேன்.

இது ஒரு வலைப்பின்னல்.

பூனைக்கு மணி கட்டுவது யார்?

வழக்கு போடுவது யார்?அந்த குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்குவது யார்?

வாள்வெட்டுக் குழுக்களை வைத்து உண்டுஇல்லை என்று பண்ண மாட்டார்களா?

இதெல்லாம் தேவையா?

இது தான் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

அழித்த காணொளியை மீட்டெடுக்கலாம் என கருதுகிறேன், அதனை ஆதாரமாக வைத்தும் கண்கண்ட சாட்சிகளினூடாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என கருதுகிறேன்.

 

10 hours ago, satan said:

யார், யார்மேல்  நடவடிக்கை எடுப்பது? கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்துக்கு என்ன நடந்தது? இப்போ ஒரு கலவரம் நாட்டில் ஏற்படவேண்டுமெனத் துடிக்கிறார்கள்.

 

8 hours ago, ஈழப்பிரியன் said:

இது ஒரு வலைப்பின்னல்.

பூனைக்கு மணி கட்டுவது யார்?

வழக்கு போடுவது யார்?அந்த குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்குவது யார்?

வாள்வெட்டுக் குழுக்களை வைத்து உண்டுஇல்லை என்று பண்ண மாட்டார்களா?

இதெல்லாம் தேவையா?

இது தான் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சனை.

தமிழர் தாயகத்தை தொடர்ந்தும் பதட்ட நிலைக்குள் வைத்திருப்பதனை சிங்களம் மட்டுமல்ல, ஏனைய தரப்புகளும் விரும்புவதாகவே நோக்கவேண்டியுள்ளது. தொடர்ந்தும் அச்சுறுத்துவது, புதிய பிரச்சினைகளை உருவாக்குவது, போதைப்பாவனையை ஊக்குவிப்பது, வாள்வெட்டுக்குழுக்களை வைத்து வன்முறையை ஏற்படுத்துவது ஒருபுறமும் நிலஆக்கிரமிப்பு, புத்தரை நடுதல், ஆலயங்களை ஆக்கிரமித்தல் என மறுபுறமும் தமிழர் அமைதியற்றவர்கள் என்ற தோற்றப்பாட்டைத் தொடர்ந்து பேணுவதூடாகச் சிங்களம் தனது தேவைகளை அடைகின்றது. சட்டத்தின் ஆட்சி தமிழர் பகுதிகளில் இல்லையென்றாகிவிட்டதால் அடாவடிகள் தொடரவே செய்யும்.   ஏனென்றால் தமிழரிடம் ஆயுதபலமும் இல்லை. அரசியற் பலமும் இல்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு மக்கள் பிரச்சினைகள் குறித்த கரிசனையும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

யார், யார்மேல்  நடவடிக்கை எடுப்பது? கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்துக்கு என்ன நடந்தது? இப்போ ஒரு கலவரம் நாட்டில் ஏற்படவேண்டுமெனத் துடிக்கிறார்கள்.

 

10 hours ago, ஈழப்பிரியன் said:

இது ஒரு வலைப்பின்னல்.

பூனைக்கு மணி கட்டுவது யார்?

வழக்கு போடுவது யார்?அந்த குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்குவது யார்?

வாள்வெட்டுக் குழுக்களை வைத்து உண்டுஇல்லை என்று பண்ண மாட்டார்களா?

இதெல்லாம் தேவையா?

இது தான் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சனை.

 

1 hour ago, nochchi said:

 

 

தமிழர் தாயகத்தை தொடர்ந்தும் பதட்ட நிலைக்குள் வைத்திருப்பதனை சிங்களம் மட்டுமல்ல, ஏனைய தரப்புகளும் விரும்புவதாகவே நோக்கவேண்டியுள்ளது. தொடர்ந்தும் அச்சுறுத்துவது, புதிய பிரச்சினைகளை உருவாக்குவது, போதைப்பாவனையை ஊக்குவிப்பது, வாள்வெட்டுக்குழுக்களை வைத்து வன்முறையை ஏற்படுத்துவது ஒருபுறமும் நிலஆக்கிரமிப்பு, புத்தரை நடுதல், ஆலயங்களை ஆக்கிரமித்தல் என மறுபுறமும் தமிழர் அமைதியற்றவர்கள் என்ற தோற்றப்பாட்டைத் தொடர்ந்து பேணுவதூடாகச் சிங்களம் தனது தேவைகளை அடைகின்றது. சட்டத்தின் ஆட்சி தமிழர் பகுதிகளில் இல்லையென்றாகிவிட்டதால் அடாவடிகள் தொடரவே செய்யும்.   ஏனென்றால் தமிழரிடம் ஆயுதபலமும் இல்லை. அரசியற் பலமும் இல்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு மக்கள் பிரச்சினைகள் குறித்த கரிசனையும் இல்லை. 

உங்கள் கருத்திற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் எனது அவதானிப்பு, பலரிடம் கேட்ட விபரங்களின் அடிப்படையில், எனது அபிப்பிராயம், (தமிழரோ, சிங்களவரோ இனரீதீயாகப் பாராமல்.... ) போலீஸ் சேவைக்கான பெரும் தேவை உள்ளது. கோவில் அய்யரின் மகன் போதை ஊசி தனக்கு தானே செலுத்தி மரணமடைந்தார். மோட்டார்சைக்கிளில் ரேஸ் ஓடி டிப்பர் லாரியில் மோதி ஒரு மோட்டார் சைக்கிள் காரர் அவ்விடத்திலே பலி.

கெல்மெற் போட்டு வருவது. பெட்டையளைக் கண்டால் கழட்டி, ஓட்டம் காட்டுவது, ஆபாச வர்ணனை செய்வது என்று ஒரு கூட்டம்.

மோட்டார் சைக்கிள் காரர்கள் டபாரெண்டு வாளை உருவும் வாள்வெட்டுக் கோஸ்டியாய் இருக்கலாம் என சக வீதிப்பயணாளிகள் பயத்தை அவர்கள் சாதகமாக்கி வெருட்டுகிறார்கள். 'விலாசம் தெரியுமே' கதை தான்.

இவர்களே களவு, சண்டித்தனம், பெண்களை அவமதித்தல் போன்ற பல விடயங்களுக்கு பொறுப்பு.

ஆகவே இதனை இன ரீதியாகப் பார்க்க முடியவில்லை.

வேகமாக ஓடிச் சிக்கியிருக்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

தமிழர் தாயகத்தை தொடர்ந்தும் பதட்ட நிலைக்குள் வைத்திருப்பதனை சிங்களம் மட்டுமல்ல, ஏனைய தரப்புகளும் விரும்புவதாகவே நோக்கவேண்டியுள்ளது. தொடர்ந்தும் அச்சுறுத்துவது, புதிய பிரச்சினைகளை உருவாக்குவது, போதைப்பாவனையை ஊக்குவிப்பது, வாள்வெட்டுக்குழுக்களை வைத்து வன்முறையை ஏற்படுத்துவது

இத்தனையும் சிங்களம், தான் செய்யும் அராஜகங்களை மறைப்பதற்க்கும் எதிர்ப்பில்லாமல் கொண்டு செல்வதற்கும் இளம் சமுதாயத்தை சமுதாயத்தின்மேல் நடக்கும் உரிமை மீறல்களின் மேல் அக்கறை இல்லாமல் திசை திருப்பி வைத்திருப்பதற்குமே. நீண்டகாலமாக தமிழ்த்தலைமைகளின் ஒத்துழைப்போடு ஏமாற்றி சாதித்தவைகளை இளையோரின் ஆயுதப்போராட்டம் தடுத்தது அல்லது தாமதப்படுத்தியதோடு வெளியுலகுக்கு வெளிப்படுத்தியது. இதனால் கற்றுக்கொண்ட சிங்களம் அதை அடக்கியதோடு எதிர்வரும் காலங்களில் இந்தப்பிரச்சனை தலைதூக்காமல் இருப்பதற்கு திட்டமிட்டு செயற்படுகிறது. "தலைவன் மயங்கினால் சகலதும் மயங்கும்." என்பது பழமொழி, அது தமிழர் விடயத்தில் நூறு வீதம் உண்மை.  இதற்கு இளையோருக்கு சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அது யாரின் பொறுப்பு, யார் செய்வது? வெறும் வாக்குக்காக மக்களை பயன்படுத்தும் தலைமைகளால் முடியுமா? இப்போது நமது சமுதாயம் சுயநலமாக, எதிர்கால, சமுதாய நலனற்றதாக போனபோக்கில் சிந்திக்கவும் வாழவும் அதை நிஞாயப்படுத்தவும் கற்றுக்கொண்டுள்ளது. காரணம், வழிகாட்ட, அவர்களுக்காக அர்ப்பணிக்க யாருமில்லை அவர்களுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.