Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாவம்சத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

எங்களுக்கு அட்வைஸ் பண்ண, பந்தி, பந்தியாக எழுத மட்டும்தான் தெரியும் 🤣.

👅இல்லாட்டில் 🐕‍🦺 கொண்டு போய்டும்🤣

உண்மையை ஒத்துக்கொண்டதிற்கு நன்றி....:rolling_on_the_floor_laughing:

  • Replies 58
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விண்ணப்பம் தயாரிப்பது மனு கொடுப்பது அதை இராஜதந்திர ரீதியில் எழுதுவது எல்லாம் வீண்வேலை

இங்கு அதிகாரிகளிலிருந்து சாமானியன் வரைக்கும் புரிந்துகொள்வது இந்தக்காலத்தில் மீம்ஸ் வடிவிலான சிறிய குறிப்பை மட்டுமே.

இந்த நவீன உலகத்தில் சிங்கமும் ஒரு மனிதப் பெண் உருவவும் சேர்ந்து புணர்ந்து சிங்கள் ஐனம் உருவாகியது என மகாவம்சம் கூறுகிறதே இதைவைத்தா நீ உனஸ்கோ அங்கீகாரம் வழங்கினாய் என ஒற்றை வசனத்தில் எமது கடிதத்தைக் கவனிக்கத்தக்க அதிகாரியிடம் சேர்ப்பித்தால் மேற்படியார் கொஞ்சமாவது சிந்திப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உண்மையை ஒத்துக்கொண்டதிற்கு நன்றி....:rolling_on_the_floor_laughing:

ஒரே ஒரு வித்தியாசம்தான்.

நான் உண்மையை ஒத்து கொள்கிறேன். மிச்சம் பேர் ஒத்து கொள்வதில்லை🥸

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

உலகில் பல கோடி தமிழர் இருந்தும்….
இப்படியான சந்தர்ப்பங்களில், ஒத்த கருத்தில்… தமிழரின் ஆட்சேபனையை தெரிவிக்க
ஓரு அமைப்பு இல்லாதது…. வெட்கக் கேடானதும், வேதனையான விடயமும் ஆகும்.

இந்த பல கோடி தமிழர்களும்.  இலங்கை தமிழர்களா.??. இல்லையே?? கூட்டி. கூட்டி  பார்த்தாலும் 50  இலட்சத்தை தாண்டாது...  அதாவது 1/2. கோடி தான்  உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் கிட்டத்தட்ட 10 கோடி வரலாம் ஆனால்  இலங்கை தமிழர்கள் விடயத்தில்  இந்த 1/2கோடி   தமிழர்கள் மட்டும் செயல்பட முடியும்   எனவே உலகில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்று   இலங்கை தமிழர்கள் சொல்வது  எங்களை நாங்களே’ சோம்பேறிகள் ஆக்கும் செயல்     அல்லது இப்படி சொல்லி கொண்டு   செயல்படமால்.  இருந்து விட வாய்ப்புகள் அதிகம்   🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

இந்த பல கோடி தமிழர்களும்.  இலங்கை தமிழர்களா.??. இல்லையே?? கூட்டி. கூட்டி  பார்த்தாலும் 50  இலட்சத்தை தாண்டாது...  அதாவது 1/2. கோடி தான்  உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் கிட்டத்தட்ட 10 கோடி வரலாம் ஆனால்  இலங்கை தமிழர்கள் விடயத்தில்  இந்த 1/2கோடி   தமிழர்கள் மட்டும் செயல்பட முடியும்   எனவே உலகில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்று   இலங்கை தமிழர்கள் சொல்வது  எங்களை நாங்களே’ சோம்பேறிகள் ஆக்கும் செயல்     அல்லது இப்படி சொல்லி கொண்டு   செயல்படமால்.  இருந்து விட வாய்ப்புகள் அதிகம்   🤣

தமிழனுக்கு…. பொங்கல் எப்ப, வருசப் பிறப்பு எப்ப என்று…
திராவிடம் வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கின்ற நிலையில்…
உலக அளவில்…. சுயநலம் இல்லாத, அரசியல் சார்பாற்ற
அமைப்பு வேண்டும் என்று தான் குறிப்பிட்டுள்ளேன்.

அந்த அமைப்பு…. 1970/80 களில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடத்திய தமிழறிஞர்களை
போன்ற அறிவு சார்ந்தவர்கள் இருந்தால் இன்னும் சிறப்பு.

அந்த அமைப்பின் முடிவிற்கு… தமிழின் நன்மை கருதி,
தமிழக, ஈழ, சிங்கப்பூர், மலேசிய மற்றும் புலம் பெயர் தேச…
அரசியல்வாதிகள், அமைப்பினர் கட்டுப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.
அதற்காக அவர்களை சார்ந்தவர்களை உள்வாங்கி, அவர்களின் ஆலோசனையையும் பெற்று பொதுவான ஒற்றை முடிவிற்கு வர வேண்டும்.
எம் இனத்தில் அதற்கான சந்தர்ப்பம் குறைவு என்றாலும், ஒரு நப்பாசை உண்டு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

1000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் வரலாறே என்னவென்று தெரியாத தமிழர் பொன்னியின் செல்வன் புனைகதை மூலம்தான் கொஞ்சமாவது தெரிந்துகின்றனர்.

உண்மையில் தமிழின் காப்பியங்கள் எல்லாம் சைவ/இந்து அல்லாத சமணர் காலத்தில் வந்தன. அதே போல பெளத்தர்களும் தங்கள் வரலாற்றை தொடர்ந்தும் புனைந்தும் புனையாமலும் எழுதிவருகின்றனர். அந்த வகையில் மகாவம்சத்தை தொடர்ச்சியாக எழுதும் சிங்களவர்களை மெச்சத்தான் வேண்டும்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்+
11 hours ago, goshan_che said:

ஓம். 

ஆனால் யாரும் மஹாவம்சத்தை உனெஸ்கோ ஏற்று கொண்டது ஆகவே அது வரலாறு என தூக்கி கொண்டு வந்தால் கீழ் கண்டதை சொல்லவும்.

அதே லிஸ்டில் கியூபா கொடுத்த சினிமா போஸ்டர்களின் தொகுப்பும் உள்ளது. ஆகவே இது நினைவுகளின் தொகுப்பே அன்றி வரலாறு இல்லை.

 

அருமையான தகவல் கோசன்... மிக்க நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நன்னிச் சோழன் said:

அருமையான தகவல் கோசன்... மிக்க நன்றி

நன்றி நன்னி. 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2023 at 22:44, கிருபன் said:

1000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் வரலாறே என்னவென்று தெரியாத தமிழர் பொன்னியின் செல்வன் புனைகதை மூலம்தான் கொஞ்சமாவது தெரிந்துகின்றனர்.

உண்மையில் தமிழின் காப்பியங்கள் எல்லாம் சைவ/இந்து அல்லாத சமணர் காலத்தில் வந்தன. அதே போல பெளத்தர்களும் தங்கள் வரலாற்றை தொடர்ந்தும் புனைந்தும் புனையாமலும் எழுதிவருகின்றனர். அந்த வகையில் மகாவம்சத்தை தொடர்ச்சியாக எழுதும் சிங்களவர்களை மெச்சத்தான் வேண்டும்.


இல்லை. தமிழரிடம் இருக்கிறது. நான் சொல்வதை சாதிக் கதையாக எடுக்க வேண்டாம், அறிந்த வரலாற்றையே சொல்கிறேன்.

அனால், சாதியால் மறைக்கப்பட்டு இருக்கிறது  என்று நினைக்கிறன்.  வேறு ஏதும் மறைக்கப்பட்டு இருக்கிறதோ தெரியாது.

நான் சொல்வதின் காரணம், சில blogs மூலமாகவே இதை அறிந்தேன். அதில் இதை  செயற்கய்யாக உருவாக்கி இருப்பதாக, சாதிக்காக என்று சொல்கிறர்கள். 

தமிழர்கள் எவ்வளுவு மோட்டு தனம். (அரசு ஒன்று விஞ்சான பூர்வ அடிப்படியில் ஆராய்ந்து வெளியிட்டதை)

(மகவாசத்துக்கு) ஏறத்தாழ 3-4 நூற்றாண்டுக்கு முதலியேயே தமிழரால் எழுதப்பட்ட மூவேந்தர்  வம்சம் பற்றிய செப்பு பட்டயம். 

இது எழுதப்பட்டது 2 அல்லது 3ம் நூற்றாண்டு. செப்பு பட்டயம்.

இந்த பட்டயத்தின்  நூல் வடிவ இணைப்பு.


https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQdlZpy&tag=சோழன்+பூர்வ+பட்டையம்#book1/


https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZt2kMyy.TVA_BOK_0007112/page/n29/mode/2up

அல்லது கூகிளில் சோழன் பூர்வ பட்டயம் என்று தேடிப்பாருங்கள்.  

'சோழன் பூர்வ பட்டயம்' - செப்பு ஏடுகளில் எழுதப்பட்டு இருக்கிறது. இதிலே சாதிகள் வகுக்குக்கப்பட்டு இருக்கிறது.

இதன் படி, இப்பொது உயர் சாதி என்று தம்மை தாமே அழைப்பவர்கள்  , அப்போது அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை, அரசன் அந்த சாதியில் இருந்தாலும், சில இடங்களில் அவர்களுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

நான் அரித வரையில், அந்த நேரத்தில் அரசன் ஆகியவுடன் அவருக்கு சாதி இல்லை, அவரின் வம்சமே மிக கூடிய சாதி

இது பரவலாக தெரிந்தால், இப்போதைய சாதி narrative ஐ தலைகீழாக்கி விடும். 

இதுவே காரணம் என்று நினைக்கிறன், இப்படியானது ஒன்று தமிழரிடத்தில்  இருக்கிறது என்பதை தமிழராலேயே மறைக்கப்பட்டு இருப்பதற்கு.

இலங்கை, பாண்டிய அரசுக்கு கீழ்  (செப்பு பட்டயம் எழுதிய காலத்தில் அல்லது அதை அண்டிய காலம் ) வருவதாகவே இதன்படி கொள்ளப்பட வேண்டி இருக்கிறது   

அதே போல, பல யுகங்களுக்கு முதல்  இராவணனின் இராச்சியத்தின் வடக்கு எல்லையாக திருச்சிராப்பள்ளி இருந்தது என்கிறது.

அதே  போல துப்பாக்கி, பீரங்கி என்றும் குறிக்கப்பட்டு இருக்கிறது (இவைகள் 2, 3ம்  நூற்றாண்டில் வந்து விட்டதா  என்ற கேள்வியும் இருக்கிறது).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.