Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது

yothi-300x180.jpg13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத் தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

“13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் தற்போது இடம் பெற்று வருகிறது . 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது ஓர் அரசியல் தீர்வு அல்ல.

தற்போதுள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் தம்மால் இயலாத நிலையிலேயே 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நிலைக்கு வந்துள்ளார்கள்.

ஆனால் 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவும் இலங்கையும் எடுத்துக்கொண்ட தீர்வே தவிர அது தமிழ் மக்களுக்கான தீர்வு அல்ல.

எனவே 13ஆம் திருத்தச் சட்டம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது” – எனவும் யோதிலிங்கம் தெரிவித்தார்.

இதனிடையே 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வாகாதென தெரிவித்து இந்திய பிரதமருக்கு தானும் கடிதம் எழுதவுள்ளதாக யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது – குறியீடு (kuriyeedu.com)

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமருக்கு 3 கடிதம் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

எழுதிக்கொண்டே  இருக்கிறார்கள்,  யாருக்கும் பதில் வந்ததாக தெரியவில்லை. தபால் தொடர்பில்  ஏதும்  (போய்ச்சேர்வதில்) பிரச்சனையாக இருக்குமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, satan said:

எழுதிக்கொண்டே  இருக்கிறார்கள்,  யாருக்கும் பதில் வந்ததாக தெரியவில்லை. தபால் தொடர்பில்  ஏதும்  (போய்ச்சேர்வதில்) பிரச்சனையாக இருக்குமோ?

1 hour ago, nunavilan said:

இந்திய பிரதமருக்கு 3 கடிதம் போகுது.

பேனா;பென்சில் வாளை விட வலிமையானது. சிலேற் உட்பட..... :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

இந்திய பிரதமருக்கு 3 கடிதம் போகுது.

கருணாநிதி காலத்தில் இந்திய பிரதமருக்கு அவர் கடிதம் எழுதுவதாக அடிக்கடி வாசிப்பதுண்டு. அது தமிழ் நாட்டு பிரசினையாக இருக்கும், சிலவேளைகளில் ஈழ தமிழர் பிரச்சினையாக இருக்கும். ஏதும் பதிலோ, நடவடிக்கையோ என்றால் பூச்சியம்தான்.

இப்போது இலங்கை அரசியல்வாதிகளும் எழுதுகிறார்கள், எழுத்தாளர்களும் எழுதுகிறார்கள். நிச்சயமாக பதில் பூச்சியம்தான். இந்தியா என்ன எதிர்பார்க்குதோ, எதை நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கிறார்களோ அது நடக்கும்போது தமிழர் பிரச்சினை பற்றி அலடட வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவுக்கு எதிராக எதாவது வரும்போதுதான் தமிழர்களை பற்றி இந்தியா யோசிக்கும். எனவே ஈழ தமிழர்கள் சீனாவைப்பற்றி கருத்தில் கொணடால்தான் எதாவது நடக்குமோ தெரியவில்லை.


இங்கு 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவே தடமடித்துக்கொண்டு திரியிது. அதுக்குள்ளே யோதிலிங்கம் இப்படி எழுதுவதில், அல்லது அரசியல் வாதிகள் சமஷடி பற்றி எழுதுவதில் ஏதாவது பிரயோசனம் இப்போது இருக்குமா என்பது கேள்விக்குறியே? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

இந்தியாவுக்கு எதிராக எதாவது வரும்போதுதான் தமிழர்களை பற்றி இந்தியா யோசிக்கும். எனவே ஈழ தமிழர்கள் சீனாவைப்பற்றி கருத்தில் கொணடால்தான் எதாவது நடக்குமோ தெரியவில்லை.

 

நானும் இதை பற்றி பல இடங்களில் சொல்லி இருந்தேன்.

ஒரு தமிழ் அரசியல் கட்சி இந்திய தூதுவரை சந்திக்க அனுமதி கேட்டால் அதற்க்கு மாதக் கணக்கில் தவம் கிடக்க வேண்டிக் கிடைக்கிறது. அது தான் இந்தியா எமக்கு கொடுக்கும் மரியாதை.

இந்தியாவின் எதிரியோடு ஒரு  உறவை வளர்த்தால்தான் இந்தியாவை ஒரு வழிக்குக் கொண்டு வர முடியும்.

முன்னர் சீன கம்யூனிஸ்ட் கட்சி சார் சண்முகதாசன் ஆரம்பித்த கட்சி போல் மீண்டும் ஒரு கட்சி தொடங்கப்பட்டாலே தமிழரின் விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி நகரும்.

 

 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுக்கு பிரதமர் மோடி அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் - உயர்ஸ்தானிகரிடம் தமிழரசுக்கட்சி வலியுறுத்தல்

(நா.தனுஜா)

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழர் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டிய விடயங்கள் குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன.

அதன்படி, ஜனாதிபதியிடம் சமஷ்டி முறையிலான தீர்வையே இந்தியா வலியுறுத்தவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தவேண்டுமென ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியாகக் கடிதங்களைக் கையளித்துள்ளன.

ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையெழுத்திடாத நிலையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது. 

இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும், இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகரும், உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியும் பங்கேற்றிருந்தனர்.

அதன்படி, புதுடில்லியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பின்போது, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறு பிரதமர் மோடி அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்று இரா.சம்பந்தன் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இவ்வாண்டுடன் 36 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையிலும், அதிலுள்ள பல்வேறு முக்கிய விடயங்கள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள், அதில் அதிகாரப்பகிர்வு மிகமுக்கியமான விடயம் என்றும், அதனை வழங்குமாறு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இதனை உடனடியாக பிரதமர் மோடிக்குத் தெரியப்படுத்துவதாகக் குறிப்பிட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர் மீண்டும் சந்தித்து இதுபற்றிப் பேசலாம் எனத் தெரிவித்துள்ளார். 

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுக்கு பிரதமர் மோடி அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் - உயர்ஸ்தானிகரிடம் தமிழரசுக்கட்சி வலியுறுத்தல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

இந்திய பிரதமருக்கு 3 கடிதம் போகுது.

 

18 hours ago, satan said:

எழுதிக்கொண்டே  இருக்கிறார்கள்,  யாருக்கும் பதில் வந்ததாக தெரியவில்லை. தபால் தொடர்பில்  ஏதும்  (போய்ச்சேர்வதில்) பிரச்சனையாக இருக்குமோ?

 

17 hours ago, குமாரசாமி said:

பேனா;பென்சில் வாளை விட வலிமையானது. சிலேற் உட்பட..... :rolling_on_the_floor_laughing:

 

15 hours ago, Cruso said:

கருணாநிதி காலத்தில் இந்திய பிரதமருக்கு அவர் கடிதம் எழுதுவதாக அடிக்கடி வாசிப்பதுண்டு. அது தமிழ் நாட்டு பிரசினையாக இருக்கும், சிலவேளைகளில் ஈழ தமிழர் பிரச்சினையாக இருக்கும். ஏதும் பதிலோ, நடவடிக்கையோ என்றால் பூச்சியம்தான்.

இப்போது இலங்கை அரசியல்வாதிகளும் எழுதுகிறார்கள், எழுத்தாளர்களும் எழுதுகிறார்கள். நிச்சயமாக பதில் பூச்சியம்தான். இந்தியா என்ன எதிர்பார்க்குதோ, எதை நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கிறார்களோ அது நடக்கும்போது தமிழர் பிரச்சினை பற்றி அலடட வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவுக்கு எதிராக எதாவது வரும்போதுதான் தமிழர்களை பற்றி இந்தியா யோசிக்கும். எனவே ஈழ தமிழர்கள் சீனாவைப்பற்றி கருத்தில் கொணடால்தான் எதாவது நடக்குமோ தெரியவில்லை.


இங்கு 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவே தடமடித்துக்கொண்டு திரியிது. அதுக்குள்ளே யோதிலிங்கம் இப்படி எழுதுவதில், அல்லது அரசியல் வாதிகள் சமஷடி பற்றி எழுதுவதில் ஏதாவது பிரயோசனம் இப்போது இருக்குமா என்பது கேள்விக்குறியே? 

 

10 hours ago, பகிடி said:

நானும் இதை பற்றி பல இடங்களில் சொல்லி இருந்தேன்.

ஒரு தமிழ் அரசியல் கட்சி இந்திய தூதுவரை சந்திக்க அனுமதி கேட்டால் அதற்க்கு மாதக் கணக்கில் தவம் கிடக்க வேண்டிக் கிடைக்கிறது. அது தான் இந்தியா எமக்கு கொடுக்கும் மரியாதை.

இந்தியாவின் எதிரியோடு ஒரு  உறவை வளர்த்தால்தான் இந்தியாவை ஒரு வழிக்குக் கொண்டு வர முடியும்.

முன்னர் சீன கம்யூனிஸ்ட் கட்சி சார் சண்முகதாசன் ஆரம்பித்த கட்சி போல் மீண்டும் ஒரு கட்சி தொடங்கப்பட்டாலே தமிழரின் விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி நகரும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம் தயார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம் தயார்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் நாளைய தினம் குறித்த கடிதமானது இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் கூடி நான்கு கட்சிகளின் தலைவர்கள் குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் , புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும், ஐனநாயக போராளிகள் கட்சி சார்பில் வேந்தனும் கையொப்பமிட்டனர்.

ரெலோவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடமும், தமிழ் தேசிய கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தாவும் கையொப்பமிட்ட பின்னர் குறித்த கடிதம் நாளைய தினம் இலங்கைக்கான இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்தக் கடிதத்தில் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் வடக்கு – கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியாக இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே கடிதத்தை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1338908

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

 

 

 

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம் தயார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம் தயார்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் நாளைய தினம் குறித்த கடிதமானது இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் கூடி நான்கு கட்சிகளின் தலைவர்கள் குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் , புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும், ஐனநாயக போராளிகள் கட்சி சார்பில் வேந்தனும் கையொப்பமிட்டனர்.

ரெலோவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடமும், தமிழ் தேசிய கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தாவும் கையொப்பமிட்ட பின்னர் குறித்த கடிதம் நாளைய தினம் இலங்கைக்கான இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்தக் கடிதத்தில் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் வடக்கு – கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியாக இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே கடிதத்தை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1338908

பார்க்க அழகா இருக்குது. கடடயில போற காலத்தில எழுத்து கூட்டி வாசிக்கிற மாதிரி இருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Cruso said:

பார்க்க அழகா இருக்குது. கடடயில போற காலத்தில எழுத்து கூட்டி வாசிக்கிற மாதிரி இருக்குது. 

அந்த விரல் வைத்திருக்கின்ற பாங்கு… அழகோ அழகு.
ஓராள் வாசித்து சொல்ல, மற்றவர் எழுத… அருமையோ அருமை.
இந்த கொம்புயூட்டர் யுகத்திலை, நம்ம ஆட்கள் செய்யுற தமாசு சொல்லி வேலையில்லை. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம் தயார்!

பள்ளிக்கூட சோதனைக்கு போய் விடை தெரியாமல் இருந்து  முழுசுற மாதிரிக் கிடக்கு....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம் தயார்!

பள்ளிக்கூட சோதனைக்கு போய் விடை தெரியாமல் இருந்து  முழுசுற மாதிரிக் கிடக்கு....:cool:

எல்லாம்  நம்ம அனுபவம்! அதையேதான் நானும் நினைத்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.