Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்ட விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்- அமைச்சர் பந்துல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்ட விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்- அமைச்சர் பந்துல

28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்ட விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்- அமைச்சர் பந்துல

புதிய களனி பாலத்தில், பொருத்தப்பட்டிருந்த 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ச்சியாக கருத்து வெளியிட்ட அவர், தெமட்டகொட மற்றும் ரத்மலானை புகையிரத நிலையங்கள், ரயில் பாலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் திருட்டுச் சம்பங்கள் தொடர்ச்சியாக அறங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. இதனை புகையிர நிலையங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ பொலிஸாருக்கோ மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்பதால், விசேட அதிரடிப் படையினரின் உதவியையும் பெற்றுக் கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளன.

புகையிர கடவைகளில் காணப்படும், சிறிய இரும்பு கூட திருடப்படுகிறது. இதனால், புகையிரதங்கள் விபத்துக்குள்ளாகும் ஆபத்தும் காணப்படுகிறது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த விசேட செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், களனி பாலம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கணக்கெடுப்பு சரியானதா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாது.

எங்கிருந்து இந்த புள்ளிவிபரங்களை எடுத்தார் என்பது எனக்குத் தெரியாது.

எமது அமைச்சு இதுதொடர்பாக கூறவில்லை. இந்த நிலையில், பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை வைத்தே இவர் இந்த புள்ளிவிபரங்களை தயாரித்துள்ளார்.

எவ்வாறாயினும், களனி பால விவகாரம் தொடர்பாக விசாரணைகள் தற்போது இடம்பெற்றுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை பாதுகாக்க விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நாம் தீர்மானித்துள்ளோம்.

இதுதொடர்பான சரியான புள்ளிவிபரங்களை நான் விரைவிலேயே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கிறேன். என்றார்.

https://athavannews.com/2023/1340082

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

வடக்கில், இராணுவத்தை குவிக்க... 
தெற்கில்,  பாலங்களில் உள்ள... விலை உயர்ந் பொருட்களை திருடுகிறார்கள்.
ஒவ்வொரு செயலுக்கும்... எதிர்வினை உண்டு.

5 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text

வடக்கில், இராணுவத்தை குவிக்க... 
தெற்கில்,  பாலங்களில் உள்ள... விலை உயர்ந் பொருட்களை திருடுகிறார்கள்.
ஒவ்வொரு செயலுக்கும்... எதிர்வினை உண்டு.

நான் நினைக்கின்றேன் இவ் கருத்துப்படத்தின் அர்த்தம் என்னவெனில், வடக்கில் / யாழ்ப்பாணத்தில் சாதாரண ஒரு பாலத்தை நான்குக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காவல் காக்கின்றனர், ஆனால் தெற்கில் முக்கியமான பாலமான களனிப் பாலத்தை காவல் செய்வதற்கு ஒருத்தரும் இல்லை (இப் பாலம் பாதுகாப்பு உயர் வலயத்துக்குள் வந்துள்ளது என நினைக்கின்றேன்). 

  • கருத்துக்கள உறவுகள்

களனி கல்யாணி நுழைவாயில் மேம்பாலத்தில் 28 கோடி ரூபா பெறுமதியான ஆணிகள் மாயம் : உண்மையில் ஆணி பொருத்தப்பட்டதா? - பந்துலவிடம் தயாசிறி கேள்வி

Published By: VISHNU

18 JUL, 2023 | 02:29 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

களனி கல்யாணி நுழைவாயில் பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த 28 கோடி ரூபா பெறுமதியான ஆணிகளை போதைப்பொருள் பாவனையாளர்கள் அகற்றியிருந்தார்களாயின் அவர்கள் ஒரு நாளைக்கு 1300 ஆணிகளை கழற்றி இருக்க வேண்டும்.

உண்மையில் 28 கோடி ரூபா பெறுமதியான ஆணி பொருத்தப்பட்டதா? உண்மையை மக்களுக்கு பகிரங்கப்படுத்துங்கள் என  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வலியுறுத்தினார்.

யார் குறிப்பிட்டது, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சு இவ்விடயம் தொடர்பில் அறிக்கை வெளியிடவில்லை.

பத்திரிகைகளே செய்தி வெளியிட்டுள்ளன என்று குறிப்பிட்ட அமைச்சர் பந்துல குணவர்தன இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பேன் என்றார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர களனி 'கல்யாணி நுழைவாயில்'மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆணிகளை போதைப்பொருள் பாவனையாளர்கள்  போதைப்பொருளுக்காக அகற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 28 கோடி பெறுமதியான ஆணிகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கல்யாணி நுழைவாயில் என்ற இந்த பாலம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. 28 கோடி பெறுமதியான ஆணிகளை போதைப்பொருள் பாவனையாளர்கள் திருடியதாக அண்மையில் செய்தி வெளியாகியது. பாலம் திறந்து வைக்கப்பட்டு 591 நாட்களுக்குள் இவ்வாறு ஆணிகள் திருடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட ஆணிகள் பெறுமதி 28 கோடி ரூபா என்று மதிப்பிட்டப்பட்டுள்ளது. அவ்வாறாயின் 77,92 42 கிலோகிராம் இரும்பு இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது. அவ்வாறாயின் 779240 ஆணிகளை போதைப்பொருள் பாவனையாளர்கள் அகற்றி இருக்க வேண்டும்.

779240 ஆணிகளை அகற்ற வேண்டுமாயின் ஒரு நாளைக்கு 100 ஆணிகளையேனும் கழற்ற வேண்டும். அதற்கு 21 வருடங்கள் செல்லும்.

பாலம் திறந்து வைக்கப்பட்டு 591 நாட்களுக்குள் 28 கோடி பெறுமதியான ஆணிகளை அகற்ற வேண்டுமாயின் ஒருநாளைக்கு 1300 ஆணிகளையேனும் அகற்ற வேண்டும்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் காலை 06 மணிமுதல் மாலை 06 மணிவரையான காலப்பகுதிக்குள் குறைந்தப்பட்சம் 10ஆணிகளையே அகற்ற முடியும்.

களனி பாலத்தில் இருந்து ஆணி அகற்றப்பட்டதாக குறிப்பிட்ட  விடயத்தின் உண்மை தன்மை என்ன, களனி பாலத்தில் ஆணி பொருத்தப்பட்டதா, இல்லை பொருத்தப்பட்ட ஆணிகளை உண்மையில்  போதைப்பொருள் பாவனையாளர்கள் அகற்றினார்கள். உண்மையை நாட்டுக்கு குறிப்பிடுங்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன சட்டத்தரணியான தயாசிறி ஜயசேகர இலக்கம், தொகையுடன் குறிப்பிட்ட விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

களனி பாலம், 28 கோடி ஆணி விவகாரம் யார் குறிப்பிட்டது.நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.பத்திரிகையில் வெளியான செய்தியை கொண்டு இவர்(தயாசிறி) உரையாற்றுகிறார்.

புகையிரத பாதைகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

பொலிஸார், விசேட பாதுகாப்பு படை ஆகியோரின் ஒத்துழைப்புடன் புகையிரத பாதைகளில் உள்ள இரும்புகளை பாதுகாத்து வருகிறோம்.

புகையிரத பாதைகளில் உள்ள சிறு இரும்புகளை கூட ஒரு சிலர் விட்டு வைப்பதில்லை. இரும்புகளை சேகரித்து அதை விற்பனை செய்கிறார்கள். இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நான் களனி பாலம் ஆணி அகற்றல் சம்பவம் தொடர்பில் வினவினேன்.

ஆனால் நெடுஞ்சாலைகள் அமைச்சர் புகையிரத தண்டவாளம் குறித்து பேசுகிறார். எனக்கு அது அவசியமில்லை. 28 கோடி பெறுமதியான ஆணிகள் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, அல்லது உண்மையில் ஆணி பொருத்தப்பட்டதா என்றார்.

இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அறிக்கை கிடைத்ததும் அதை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/160300

  • கருத்துக்கள உறவுகள்

பந்துல வீட்டில் ஏன் ஆணியை தேடவில்லை?🙂

  • கருத்துக்கள உறவுகள்

புதிய களனி பாலத்தில் நட்டுகள், போல்ட்கள் திருடப்படவில்லை: பந்துல

புதிய களனி பாலத்தில் இருந்து மில்லியன் கணக்கான ரூபா பெறுமதியான நட்டுகள் மற்றும் போல்ட்கள் அகற்றப்பட்டு திருடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, விசேட கருவிகள் தேவைப்படுவதால் இந்த நட்டுகள் மற்றும் போல்ட்களை அவ்வளவு இலகுவாக அகற்ற முடியாது என்றார்.

பாலத்தில் இருந்து நட்டுகள் மற்றும் போல்ட்கள் அகற்றப்படவில்லை எனவும் அவற்றை அகற்றுவதற்கு தேவையான விசேட கருவிகள் சம்பந்தப்பட்ட பொறியியல் நிறுவனங்களிடம் மாத்திரமே இருப்பதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கேள்விக்கு பதிலளித்த அவர், வடிகால் அமைப்பின் சில GI குழாய்கள் PVC குழாய்கள், பாலத்துடன் இணைக்கப்பட்ட தொடர்பாடல் அறையின் குளிரூட்டும் அமைப்பின் சில பகுதிகள் மற்றும் பாலத்தில் பொருத்தப்பட்ட வண்ண பல்புகள் மட்டுமே திருடப்பட்டுள்ளன.

பாலத்தில் இருந்து திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 5.9 மில்லியன் ரூபாவாகும்.

இதே வேளை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் 294.4 மில்லியன் ரூபா பெறுமதியான பித்தளை கம்பி, GI குழாய்கள் மற்றும் விளக்கு கம்பங்கள் போன்ற பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

செப்டம்பர் 2021 மற்றும் ஜூலை 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட மின் நெருக்கடி மற்றும் கொவிட்-19 முடக்கத்தின் போது கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் மின்சார கேபிள் அமைப்பின் பித்தளை கம்பிகள் திருடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/264041

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ கம்பி கள்ளனாத்தான் இருக்கும் இருக்கும் அவனுக்குத்தான் தெரியும் இரும்பின் பெறுமதி ஊரில பழைய இரும்பு வாங்குறவன் எப்படி பணக்காரன் ஆகிறான் என்பது இப்பதான் தெரியுது 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் கஜானாவையே ஆட்டைய போடறவனுக களனி பாலத்தில ஆணியபுடுங்குறது யுஜுப்பி வேலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.