Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள், யுக்ரேன் போரில் ரஷ்யா கோட்டை விட்டது என்ன?

யுக்ரேன் போரில் ரஷ்யா கோட்டை விட்டது என்ன?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ரஷ்ய தளபதிகளால் ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர்.

21 டிசம்பர் 2023, 07:09 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேன் போரில் ரஷ்ய தளபதிகளின் தவறான போர் உத்திகள் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் ரஷ்ய படைகளின் குற்றச்சாட்டு பிபிசி ஐ (BBC Eye) புலனாய்வில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

போருக்கு சென்ற போது தங்களது மூத்த அதிகாரிகள் தங்களை ‘இறைச்சி’ என்று அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர் ரஷ்ய ராணுவ வீரர்கள்.

‘தகுதியற்ற’ தளபதிகள் மற்றும் அவர்களது ‘மீட்-கிரைண்டர்’ உத்திகள் யுக்ரேன் போரில் ஏற்பட்டுள்ள ரஷ்ய தோல்வியின் அடையாளமாக மாறியுள்ளது.

இந்தப் போர் தொடங்கியபோது, ரஷ்யா தனது 155-ஆவது கடற்படை மற்றும் காலாட்படையை ஒரு உயர்தர பிரிவாகக் கருதியது. ஆனால் போர் முன்னேற்றம் அடைந்த சமயத்தில் தான், இந்தப் பிரிவின் பலவீனங்கள் போர்க்களத்திலேயே அம்பலமாக தொடங்கின.

பிபிசி புலனாய்வின் படி, இந்த படைப்பிரிவில் மட்டும் ஒரே தாக்குதலில் குறைந்தபட்சம் 60 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இப்படி கொல்லப்பட்ட ராணுவவீரர்களில் 25 வயதாகும் ரமாஸ் கோர்காட்ஸேவும் ஒருவர். இவர் ரசியாவின் கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்தவர்.

ராப் பாடல்கள் மீது ஆர்வம் கொண்ட ரமாஸ் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். போருக்கு செல்வதற்கு முன்பு “ ரஷ்யா உங்களுடன் நிற்கிறது. ரஷ்ய ராணுவவீரர்கள் உங்களுக்காக சண்டையிடுகிறார்கள்” என்ற பாடலை கூட ரமாஸ் கோர்காட்ஸே பாடி தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

ராணுவ சீருடையில் தான் இருப்பது போன்ற போட்டோக்களை கூட அவர் பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு படத்தில் யுக்ரேனுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர் கடைசியாக உண்ட பீட்சா மற்றும் பீருடன் இருக்கும் படமும் அடங்கும்.

அவர் தனிப்பட்ட முறையில் போர்களை எதிர்த்தாலும், அரசு உத்தரவின்படி அக்டோபர் 2022 இல் தென்கிழக்கு யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் 155 வது கடற்படை காலாட்படை பிரிவில் சேர்ந்தார். அந்த நேரத்தில் தான், இந்த பிரிவு பூச்சா மற்றும் இசியம் பகுதிகளில் போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அதை ரஷ்யா மறுத்தது.

ரமாஸ் கோர்காட்ஸேவின் தாய் ரஷ்ய செய்தி ஊடகமான மகடன் பிராவ்தாவிடம், “யுக்ரேனில் அவனுக்கு நண்பர்கள் இருப்பதாக அவன் என்னிடம் சொன்னான், ‘இறப்பது மோசமான விஷயம் அல்ல, ஆனால் என்னைப் போன்றவர்களை சுடுவதே மோசமான விஷயம்’ என்று அவரது மகன் தன்னிடம் கூறியதாக” தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் போரில் ரஷ்யா கோட்டை விட்டது என்ன?

பட மூலாதாரம்,INSTAGRAM

படக்குறிப்பு,

ரஷ்யாவின் விநியோக பாதையை குறிவைத்து தாக்கியது உக்ரேனிய இராணுவம்

புதிய ரத்தமும் சதையும்

கோர்காட்ஸே விரைவிலேயே உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களான பாவ்லிவ்கா மற்றும் வுலேடாரைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டார்.

இந்த போரின் ரத்தக் களரியான மோதல் ஒருகாலத்தில் 15 ஆயிரம் சுரங்க தொழில் குடும்பங்கள் வாழ்ந்த பகுதியான வுஹ்லேடரில் நடைபெற்றது. இந்த பகுதி உயரமான இடத்தில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் விநியோக பாதையை குறிவைத்து தாக்க உக்ரேனிய ராணுவம் இந்த இடத்தை தான் பயன்படுத்தியது.

அதே நேரத்தில், கோர்காட்ஸே அருகிலுள்ள வோல்னோவாகா பகுதியில் ஏற்பட்ட அழிவு குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதற்கு பின், வுலேடார் பகுதியில் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு தனது தாய்க்கு அவர் அனுப்பும் தகவல்கள் நின்று விட்டன.

 
யுக்ரேன் போரில் ரஷ்யா கோட்டை விட்டது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

155 வது படைப்பிரிவின் வீரர்கள் பிரிமோர்ஸ்கி க்ரேயின் ஆளுநர் ஓலெக்குக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

காட்டிக்கொடுத்த கடிதங்கள்

தங்களது பிரிவுகளில் இருந்து வீரர்கள் காணாமல் போகும் செய்திகள் மிக வழக்கமானதாகி விட்டது என்று 155 ஆவது படைப்பிரிவு வீரர்கள் கடிதம் ஒன்றை எழுதினர்.

நவம்பர் மாத தொடக்கத்தில், 155 ஆவது படைப்பிரிவின் வீரர்கள் ரஷ்ய மாகாணமான பிரிமோர்ஸ்கி க்ரேயின் ஆளுநர் ஓலெக் கோஜெமியாகோவுக்கு டெலிகிராம் வழியாக அந்த கடிதத்தை அனுப்பினார்கள். அது உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

போர்க்களத்தில் நிலவும் குழப்பமான சூழலை விவரித்தும், இராணுவ தளபதிகளை கடுமையாக விமர்சித்தும் அந்த வீரர்களால் அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது.

"எதிர்பாராத தாக்குதல்களுக்கு" மத்தியில் நான்கு நாட்களில் மட்டும் "சுமார் 300 பேர் வரை உயிரிழப்புகள் அல்லது காணாமல் போயுள்ளார்கள்" என்று அந்த வீரர்கள் தெரிவித்திருந்தனர். மேலதிகாரிகள் தங்களை 'இறைச்சி' என்று அழைப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கடிதம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கடற்படையினரின் கூற்றுக்களை நிராகரிக்கும் ஒரு அரிதான பொது மறுப்பு வெளியிட நிர்பந்தமாக அமைந்தது.

“ஆம், அங்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளன, கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அந்த கடிதத்தில் இருப்பது போல் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படவில்லை” என்று தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்டுள்ள நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் ஓலெக் கோஜெமியாகோவ்.

இந்த வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் கொடுப்பதற்கான உறுதியையும் வழங்கினார் கவர்னர்.

போர் பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பிபிசி - ஐ புலனாய்வு பிரிவு ஆய்வு செய்தது. யுக்ரேனின் உளவு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோக்கள், அதே தவறுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுவதைக் காட்டுகிறது.

புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெவ்வேறு நாட்களில், யுக்ரேனிய இராணுவம் ரஷ்யாவின் பல கவச வாகனங்களை பாவ்லிவ்காவுக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் வைத்து ஒரே பகுதியில் வெடிக்கச் செய்துள்ளது.

இது ரஷ்யர்கள் ‘தரைவழிப் போரின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை' என்பதை உறுதிப்படுத்துவதாக கூறுகிறார் 2004 இல் ரஷ்ய கடற்படையினருடன் பணிபுரிந்த பாதுகாப்பு ஆய்வாளர் டைஃபன் ஆஸ்பர்க்.

“பயன்படுத்த ஒரே ஒரு திறந்தவெளி சாலை மட்டுமே உள்ள இடத்தில் எங்கு சுடுவது என்று யுக்ரேன் படைகளுக்கு தெரியும்” என்று கூறுகிறார் அவர்.

கண்ணிவெடி அகற்றப்படாமலும், வான்வழி உளவு செயல்பாடுகள் இன்றியும், போதிய உளவுத்துறை இன்றியும் நடைபெறும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் தற்கொலைச் செயலாகும்" என்கிறார் அவர்.

“கீவை கைப்பற்றும் முயற்சியில் ஏற்கனவே 155வது படைப்பிரிவு பெரும் இழப்பை சந்தித்து விட்டது” என்கிறார் லண்டனில் உள்ள சர்வதேச மூலோபாய ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த போர் நிபுணர் வில்லியம் ஆல்பர்ட்க்.

"அந்த வீரர்களுக்கு போதுமான பயிற்சி அல்லது போதுமான உபகரணங்கள் கூட தரப்படவில்லை என்பது போல் தெரிவதாக" கூறுகிறார் அவர்.

இதர ராணுவ ஆய்வாளர்கள் வுலேடருக்கு முன்தயாரிப்பின்றி படைகளை அனுப்பும் முடிவை, ‘மீட் - கிரைண்டர் உத்தியை’ கொண்டு விவரிக்கின்றனர்.

 
யுக்ரேன் போரில் ரஷ்யா கோட்டை விட்டது என்ன?

பட மூலாதாரம்,OK.RU

படக்குறிப்பு,

7000 கிலோமீட்டர் வரை பயணித்து யுக்ரேன் சென்றுள்ளார் ஸ்வெட்லானா

ஒரு தாயின் பயணம்

தனது மகன் குறித்த எந்த தகவலுமே டிசம்பர் வரை வராததால் கோர்காட்ஸேவின் தாயார் ஸ்வெட்லானா விரக்தியில் இருந்தார். எனவே, அவரே கோர்காட்ஸேவை தேடுவதற்காக போர்ப்பகுதிக்கு செல்ல முடிவெடுத்தார்.

யுக்ரேன் செல்ல 7000 கிலோமீட்டர் வரை பயணித்ததாக அவர் கூறுகிறார். அதை தாண்டி அங்கே சென்றடைந்த போது தான் தனது மகன் இறந்துவிட்டார் என்பது அவருக்கு தெரிந்தது.

கவர்னருக்கு கடிதம் அனுப்பப்படுவதற்கு முந்தைய நாள், பாவ்லிவ்காவில் உள்ள ஒரு கட்டிடத்தில் கோர்காட்ஸே நுழைந்துள்ளார்.

அப்போது ஆளில்லா விமானம் வீசிய கைக்குண்டு வெடித்ததில் அவரது கால்கள் வெடித்து சிதறியுள்ளது. பின் அவர் காயம் காரணமாக இறந்துள்ளார்.

 
யுக்ரேன் போரில் ரஷ்யா கோட்டை விட்டது என்ன?
படக்குறிப்பு,

60 கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன மாலுமிகளை அடையாளம் கண்டுள்ளது பிபிசி அய் குழு

155 படைப்பிரிவில் எத்தனை பேர் இறந்துள்ளனர்?

உயிரிழப்புகள் குறித்து ரஷ்யாவின்அதிகாரப்பூர்வ தரவுகள் ஏதும் இல்லாத நிலையில், பிபிசி ரஷ்ய சேவையின் ஓல்கா இவ்ஷினா, ரஷ்யாவின் சுயாதீன செய்தி இணையதளமான மீடியாஜோனா மற்றும் இறந்தவர்களைக் கணக்கிடும் தன்னார்வலர்களின் வலையமைப்புடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

அதிகாரபூர்வ அறிக்கைகள், சமூக வலைதள பதிவுகள், ஊடக அறிக்கைகள் மற்றும் ரஷ்யாவில் உள்ள கல்லறைகளின் போட்டோக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து 155-ஆவது கடற்படை காலாட்படை பிரிவில் மார்ச் 6, 2022 முதல் பிப்ரவரி 22, 2023 வரை இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 157 ஆக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பாவ்லிவ்கா மற்றும் வுலேடார் பகுதிகளில் நடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 தாக்குதல்களில் தான் அதிக வீரர்கள் இறந்துள்ளதும் இந்த தரவுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

குறைந்தது 60 கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன மாலுமிகளை அடையாளம் கண்டுள்ளது பிபிசி அய் குழு.

“தற்போது கிடைத்துள்ள எண்ணிக்கையை விட 155-ஆவது படைப்பிரிவில் இறந்துள்ள போர்வீரர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள தரவுகளை விட ரஷ்ய இழப்புகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகமாகத்தான் இருக்கும் என்று தாங்கள் நம்புவதாக” கூறுகிறார் ஓல்கா இவ்ஷினா.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், இந்த போரில் இழப்புகளின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை எட்டும் என தெரிவித்துள்ளது. இதில் தோராயமாக 70 ஆயிரம் இறப்புகளும் அடக்கம்.

 
யுக்ரேன் போரில் ரஷ்யா கோட்டை விட்டது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோர்காட்ஸே இறந்து ஓராண்டுகள் ஆகியும் கூட ரஷ்ய ராணுவத்தால் வுலேடார் பகுதியை கைப்பற்ற முடியவில்லை.

முடிவு என்ன?

ரஷ்யா வுலேடார் மீது அடுத்த தாக்குதலை அறிவித்த அதே சமயத்தில், ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் தனது சொந்த நகரமான யாகோட்னோய் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது கோர்காட்ஸேவின் உடல்.

அதிலிருந்து சில நாட்கள் கழித்து, 155 வது படைப்பிரிவின் வீரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மற்றொரு கடிதத்தில் , தரைவழி நிலை குறித்து மேலும் பேரழிவு தரக்கூடிய மதிப்பீடு குறித்து கூறப்பட்டுள்ளது.

ரஷியாவின் கடற்படை வீரர்கள் குறித்து அதிபர் புதினிடம் கேட்டபோது, “கடற்படை வீரர்கள் தற்போது நன்றாகவே பணிபுரிந்து வருவதாகவும், தைரியத்துடன் சண்டையிட்டு வருவதாகவும்” கூறியுள்ளார்.

கோர்காட்ஸே இறந்து ஓராண்டுகள் ஆகியும் கூட ரஷ்ய ராணுவத்தால் வுலேடார் பகுதியை கைப்பற்ற முடியவில்லை. சமீபத்தில் கூட கவச வாகனங்கள் வெடி வைத்து தகர்க்கப்படக்கூடிய தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/czkjln27ynmo

  • Replies 565
  • Views 53.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எல்லாரும் தான் வரி கட்டுகிறார்கள், இதையெல்லாம் சாதனையாகச் சொல்பவர்கள் எங்கள் ஆசியக் குடிகளாக மட்டும் தான் இருப்பரென நினைக்கிறேன்😂. கட்டின வரிக்கேற்ப விழுந்தால் அம்புலன்ஸ், வேலை போனால் சாப்பிடக் க

  • "ஒரு வாரத்தில் கியேவ் விழுந்து விடும்!"  என்று சொன்னது பலித்தது போலவே, "ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும்" என்பதும் பலிக்க இன்னும் ஒரு நாள் தான் மிச்சமிருக்குது😎!  இப்படி ஊர் உலக நிலவர

  • இதையும் இராசதந்திரம் என்று யாழ் களத்தினர் கூறுவார்களோ,...🤣 "ஒலிம்பிக்" கும் அரசியலும் 😁 👇 Lavrov calls IOC out for hypocrisy in context of Palestinian-Israeli conflict "Once again

  • கருத்துக்கள உறவுகள்

https://www.ft.com/content/7aeb25e6-c131-4f10-863f-3a0018b36867

☝️ ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பின் பக்க விளைவான நிகழ்வு என்பதால் இங்கே இதை இணைக்கிறேன்:

சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளைப் பின்பற்றி, டென்மார்க்கும் இந்த வாரம் அமெரிக்க படைகளை தங்கள் நாட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்கும் ஒப்பந்தங்களில் இணைந்திருக்கிறது.

இது ஏன் முக்கியம்? நேட்டோவின் ஆரம்ப கால உறுப்பினராக இணைந்த பின்னரும், தன் நாட்டினுள் அமெரிக்கப் படைகளை நிறுத்தி வைக்கும் ஏற்பாட்டை டென்மார்க் அனுமதிக்காமல் இருந்திருக்கிறது. தற்போது டென்மார்க்கின் எதிர்காலப் பாதுகாப்புப் பற்றிய கவலை கொள்கையை மாற்றியிருக்கிறது.

இதெல்லாம் ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த windfall வெற்றி! (யாருக்கு வெற்றியென்று கேட்கக் கூடாது😎!)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் கிவ் நகரில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் ரஷ்யா டிரோன் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் சண்டை ஓய்ந்த பாடில்லை. ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அவர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போரிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு அருகே சோலாமியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது இன்று ரஷ்யா ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் மேல்தளம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

https://thinakkural.lk/article/285711

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தத்திற்கு தயாராகும் புட்டின்

ரஷ்யா கடந்த ஆண்டு தனது அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து மிகப்பெரிய பாதிப்புகளை ரஷ்யா ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து பதிலடி தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள்.

உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படைகள் கணிசமான இடத்தை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளன. என்றாலும் உக்ரைனை இது வரை ரஷ்யாவால் பணிய வைக்க இயலவில்லை. உக்ரைன் நாட்டுக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.

Capture-16.jpg

இதன் காரணமாக ரஷ்யாவால் முழுமையாக போரை முடிக்க இயலவில்லை. இந்த நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன.

இதையடுத்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை அவர் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை. மிக
இரகசியமாக அவர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

உக்ரைனுக்கும் தனக்கும் நெருக்கமாக இருக்கும் சிலர் மூலம் போர் நிறுத்தம் செய்ய கடந்த செப்டெம்பர் மாதம் புட்டின் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக மீண்டும் அவர் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது.

https://thinakkural.lk/article/285883

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

போர் நிறுத்தத்திற்கு தயாராகும் புட்டின்

ரஷ்யா கடந்த ஆண்டு தனது அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து மிகப்பெரிய பாதிப்புகளை ரஷ்யா ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து பதிலடி தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள்.

உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படைகள் கணிசமான இடத்தை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளன. என்றாலும் உக்ரைனை இது வரை ரஷ்யாவால் பணிய வைக்க இயலவில்லை. உக்ரைன் நாட்டுக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.

Capture-16.jpg

இதன் காரணமாக ரஷ்யாவால் முழுமையாக போரை முடிக்க இயலவில்லை. இந்த நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன.

இதையடுத்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை அவர் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை. மிக
இரகசியமாக அவர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

உக்ரைனுக்கும் தனக்கும் நெருக்கமாக இருக்கும் சிலர் மூலம் போர் நிறுத்தம் செய்ய கடந்த செப்டெம்பர் மாதம் புட்டின் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக மீண்டும் அவர் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது.

https://thinakkural.lk/article/2858

எப்படி இருந்த ரசியா???

போர் நிறுத்தம் கேட்டு கெஞ்சுது???

  • கருத்துக்கள உறவுகள்

Novocherkassk என்ற கிரைமியாவில் தரித்து நின்ற ரஸ்யாவின் பெரிய தரையிறங்கு கப்பல் (landing craft) உக்ரேனால் தாக்கி அழிப்பு என உக்ரேனும், சேதம் என ரஸ்யாவும் அறிவிப்பு.

 

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தத் திரி இன்னும் ஓடுதா 😁

கடந்த மே மாதம் பக்முட் Bakhmut நகரைக் கைப்பற்றியதன் பின்னர், தற்போது கேந்திர  முக்கியத்துவம் மிக்க மரியின்கா Maryinka நகரைக் கைப்பற்றியிருப்பதாக ரஸ்யா அறிவித்துள்ளது . தனது படைகள் எல்லா முனைகளிலும் முன்னேறி வருவதாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார். 

Russia says it seizes Ukrainian town of Maryinka; Kyiv denies the claim

Putin hails Moscow’s biggest military success since the capture of Bakhmut in May.

A drone view shows the remains of Maryinka city that was destroyed by the Russians, as Russia's attack on Ukraine continues,
A drone image from May shows the remains of Maryinka, the eastern Ukrainian town that Russia said on December 25, 2023, that it had captured [File: Andriy Yermak via Telegram/Reuters]
Published On 25 Dec 202325 Dec 2023
 

Defence Minister Sergey Shoigu says Russian troops have gained full control of the eastern Ukrainian town of Maryinka, registering their first major success since the capture of the strategic city of Bakhmut in May.

Shoigu told President Vladimir Putin on Monday about the capture of what has now become a ghost town just southwest of the Russian-held regional capital of Donetsk during a video exchange shared by a Kremlin journalist.

“I want to congratulate you. This is a success,” Putin is seen telling Shoigu in the video, saying it gives Russian troops “the opportunity to move into a wider operational area”.

Piles of rubble and gutted apartment buildings could be seen in drone images shown on Russian television that were said to be of Maryinka, which was once home to 10,000 people.

Putin had offered to award soldiers who had distinguished themselves in the battle for Maryinka, The Moscow Times reported.

https://www.aljazeera.com/news/2023/12/25/russia-says-it-seizes-ukrainian-town-of-maryinka-kyiv-denies-the-claim

23 hours ago, விசுகு said:

எப்படி இருந்த ரசியா???

போர் நிறுத்தம் கேட்டு கெஞ்சுது???

நமது மொழிபெயர்ப்புப் பத்திரிகைகளை  நம்பினால் கதை கந்தல்தான்,.....😀

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கண்ணெதிரில் பழைய உலக ஒழுங்கு மறைந்து  புதிய உலக ஒழுங்கு ஒன்று  உருவாகிவருவதைக் காண்கிறோம்.

உண்மையை ஏற்றுக்கொள்ள நெஞ்சுரம் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

எங்கள் கண்ணெதிரில் பழைய உலக ஒழுங்கு மறைந்து  புதிய உலக ஒழுங்கு ஒன்று  உருவாகிவருவதைக் காண்கிறோம்.

உண்மையை ஏற்றுக்கொள்ள நெஞ்சுரம் வேண்டும். 

உங்கள் கனவு பகற்கனவு என்பதற்குள் கூட பொருந்துதில்லை.  ரசிக்கும்படி யாவது கனவை தொடருங்கள். 

இதில் நெஞ்சுரம் வேறு?

😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

உங்கள் கனவு பகற்கனவு என்பதற்குள் கூட பொருந்துதில்லை.  ரசிக்கும்படி யாவது கனவை தொடருங்கள். 

இதில் நெஞ்சுரம் வேறு?

😂

நீங்கள் அப்படியே  அந்தப் பழைய  நம்பிக்கையுடனேயே இருங்கள். 

அதுதான் உங்களுக்கு நல்லது. 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

நீங்கள் அப்படியே  அந்தப் பழைய  நம்பிக்கையுடனேயே இருங்கள். 

அதுதான் உங்களுக்கு நல்லது. 

🤨

எப்படி ரசியா பலமான கம்யூனிச பேரரசு என்று தானே?😛 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எப்படி ரசியா பலமான கம்யூனிச பேரரசு என்று தானே?😛 

அப்படியே இருங்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எப்படி ரசியா பலமான கம்யூனிச பேரரசு என்று தானே?😛 

ஐயோ பயங்கரமாக பயமுறுத்துகிறார்களே 😭 தற்போது ஈரானுடன் கூட்டு சேர்ந்த  ஆண்கள் எல்லாம் தாடி வைத்து பெண்கள் எல்லாம் புர்க்கா கட்டாயமாக்கபட்ட ஷரியா சட்டம் ஆட்சி செய்கின்ற நவீன கம்யுனிச பேரரசு.
நல்ல நாடுகளில் நன்றாக வாழ்ந்து கொண்டு எதற்காக பயங்கரமான கணவுகள் காணவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அப்படியே இருங்கள் 👍

நாங்கள் காலத்திற்கு ஏற்ப எம்மை புறம் போடுபவர்கள். அதற்கு உதாரணம் நாங்கள் ரசியாவை தெரிவு செய்து வாழாமல் ஐரோப்பிய நாடுகளில் வாழ்வது. நீங்கள் ரசியாவில் வாழ்ந்தால் எமக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெறுகிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

1) நாங்கள் காலத்திற்கு ஏற்ப எம்மை புறம் போடுபவர்கள். அதற்கு உதாரணம்

2) நாங்கள் ரசியாவை தெரிவு செய்து வாழாமல் ஐரோப்பிய நாடுகளில் வாழ்வது.

3) நீங்கள் ரசியாவில் வாழ்ந்தால் எமக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெறுகிறீர்கள் 

1) அப்படியா? அது உண்மையானால் நல்ல விடயமே 👍

2)  பொருளாதார நலனுக்காக

3) நீங்கள் பிரான்ஸ்  ஸில் இருந்துகொண்டே இலங்கைத்  தமிழருக்கும்  சிங்களவருக்கும்   ஆலோசனை  சொல்வது போல  👍

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

1) அப்படியா? அது உண்மையானால் நல்ல விடயமே 👍

2)  பொருளாதார நலனுக்காக

3) நீங்கள் பிரான்ஸ்  ஸில் இருந்துகொண்டே இலங்கைத்  தமிழருக்கும்  சிங்களவருக்கும்   ஆலோசனை  சொல்வது போல  👍

மன்னிக்கவும் நான் ஆலோசனை சொல்வதில்லை

அவர்கள் கேட்பதை என்னால் முடிந்த அளவு செய்து கொடுப்பது. அது தலைவர் கேட்டது உட்பட. 

அதை விட முக்கியம் இதில் எதுவும் சிங்களவருக்கு போகாமல் பார்த்துக் கொள்வது. 

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸியாவுக்குக் கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதேயளவு இழப்புக்கள் உக்ரேன் பக்கத்திலும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த வீணான போரின்மூலம் ரஸ்ஸிய வல்லரசின் ராணுவ பலம் பலவீனப்பட்டிருக்கும் அதேவேளை உக்ரேனின் பல கட்டுமானங்கள் நிரந்தரமாகவே ரஸ்ஸியாவால் அழிக்கப்பட்டிருக்கின்றன. போர் நீண்டு முடிவின்றிச் செல்கிறது.

ரஸ்ஸியா தானாகவே விரும்பி நிறுத்தினால் ஒழிய இப்போர் நிற்கப்போவதில்லை. உக்ரேனினால் ரஸ்ஸியாவை தனது நாட்டிலிருந்து விரட்டும் பலம் எப்போதுமே இருக்கப்போவதில்லை. மேற்குலகின் உதவிகள் வற்றத் தொடங்கியிருக்கும் இவ்வேளை, தனது எதிர்த்தாக்குதல் இன்னமும் வீரியம் இழக்கவில்லை என்பதைக் காட்ட செலென்ஸ்கி படாத பாடு படுவது தெரிகிறது. 

தேவையற்ற அநியாய யுத்தம். நிறுத்தப்பட வேண்டும். ரஸ்ஸியாவும் உக்ரேனும் வீம்பிற்குப் போரிடுவதை நிறுத்தி இரு நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ வழி விடவேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேன் சார்பில் ரஷ்யாவுடன் போர் செய்வது அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் தான். இனி உக்ரேன் சமாதானம் எண்டு சொன்னாலும் மேற்குலகம் விடாது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, விசுகு said:

நாங்கள் காலத்திற்கு ஏற்ப எம்மை புறம் போடுபவர்கள். அதற்கு உதாரணம் நாங்கள் ரசியாவை தெரிவு செய்து வாழாமல் ஐரோப்பிய நாடுகளில் வாழ்வது. நீங்கள் ரசியாவில் வாழ்ந்தால் எமக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெறுகிறீர்கள் 

ஒருவன் ஒரு நாட்டைப்பற்றி கருத்து சொல்வதற்கு அந்த நாட்டில் இருந்து கொண்டுதான் கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியமேதும் இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஒருவன் ஒரு நாட்டைப்பற்றி கருத்து சொல்வதற்கு அந்த நாட்டில் இருந்து கொண்டுதான் கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியமேதும் இருக்கா?

இல்லை

ஆனால் நமது பெற்றார் நமது பிள்ளைகள்

நமது வீடு நமது ஊர் நமது நாடு

இவற்றை விட மற்றவை திறம் என்று நினைப்பது தவறு அல்லவா . 

அடுத்தவன் மனைவி அழகு என்று புலம்புவதும் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

. ரஸ்ஸியாவும் உக்ரேனும் வீம்பிற்குப் போரிடுவதை நிறுத்தி இரு நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ வழி விடவேண்டும். 

உக்ரைன் வீம்புக்கு போராடுகிறது என்பது தவறாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

இல்லை

ஆனால் நமது பெற்றார் நமது பிள்ளைகள்

நமது வீடு நமது ஊர் நமது நாடு

இவற்றை விட மற்றவை திறம் என்று நினைப்பது தவறு அல்லவா . 

தவறு ரொம்ப தவறு விசுகர்!
பெற்றோராகினும் பிள்ளைகளாயினும்  தவறு செய்தால் அந்த இடத்திலேயே சுட்டிக்காட்ட வேண்டும். எனக்கொரு நியாயம் உனக்கொரு நியாயம் எனும் போக்கு அறவே இருக்கக்கூடாது.

2 hours ago, விசுகு said:

அடுத்தவன் மனைவி அழகு என்று புலம்புவதும் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

அடுத்தவன் மனைவி அழகாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கின்றது?
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை அக்கரைக்கு போய் பார்த்த பின் தானே  எல்லாம் தெரியும்....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை அக்கரைக்கு போய் பார்த்த பின் தானே  எல்லாம் தெரியும்....:cool:

இப்ப ஆரம்பத்தில் விட்ட இடம் வருகிறதா??

அங்கே நின்று சொல்லுங்கள் என்று தானே அவருக்கு சொன்னேன் 👍

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

உக்ரைன் வீம்புக்கு போராடுகிறது என்பது தவறாகும்.

தவறுதான், ஏற்றுக்கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, விசுகு said:

உக்ரைன் வீம்புக்கு போராடுகிறது என்பது தவறாகும்.

உக்ரேனா இந்த போரை நடத்துகின்றது? 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.