Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 JUL, 2023 | 02:09 PM
image
 

1996 ஆம் ஆண்டு 91 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த, இலங்கை மத்திய வங்கி மீதான  குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உள்ளிட்ட இருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

செல்லையா நவரட்ணம் என்ற குறித்த அரசியல் கைதியுடன் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சண்முகரட்ணம் சண்முகராஜா என்ற தமிழ் அரசியல் கைதியும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இவர்கள் கடந்த 18 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த செல்லையா நவரட்ணம் தனது 69 ஆவது வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் விடுதலை செய்யப்பட்டுள்ள சண்முகரட்ணம் சண்முகராஜாவின் வயது 56 ஆகும். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பொருட்களை கொண்டு சென்ற குற்றத்திற்காக இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

சிறைச்சாலையில் இவர்களது நன்னடத்தையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

https://www.virakesari.lk/article/160646

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய வங்கி தாக்குதல் - தண்டனை வழங்கப்பட்ட இருவருக்கு பொதுமன்னிப்பு - ஜனாதிபதி சட்டத்தரணி அதிருப்தி

Published By: RAJEEBAN

24 JUL, 2023 | 11:29 AM
image
 

மத்திய வங்கி மீதான தாக்குதல் தொடர்பில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட இருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து சட்டத்தரணி  மனோகர டி சில்வா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

யுத்தத்தின்போது வடக்குகிழக்கிற்கு வெளியே விடுதலைப்புலிகள் இழைத்த மிகமோசமான அட்டுழியத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்தவர்களிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து அரசாங்கம் விளக்கமளிக்கவேண்டும் என  அவர் கோரியுள்ளார்.

விசேட சூழ்நிலைகளில் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதை  நான் எதிர்க்கவில்லை, ஆனால்பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

1996 ஜனவரி 31ம் ம் திகதி மத்திய வங்கிதாக்குதலில் தொடர்புபட்டிருந்ததாக தண்டனை விதிக்கப்பட்ட இருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்தே  ஜனாதிபதி சட்டத்தரணி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/160771

  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவில் கொலை, திருகோணமலையில் மாணவர்கள் கொலை  போன்றவற்றில் ஈடுபட்ட இராணுவம் தண்டனை இன்றி எப்படி வெளியில் நடமாடுகிறார்கள் சட்டத்தரணி  மனோகர டி சில்வா?

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி!

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி..

  • கருத்துக்கள உறவுகள்

இனப் பயங்கரவாதிகள் அப்பாவிகளை ஆயுதம் தூக்க வைத்து, அவர்களின் இளமையை அழித்து, பொதுமன்னிப்பு கொடுக்கினமாம். கேட்பதற்க்கு யார் இருக்கிறார்கள்?

On 24/7/2023 at 16:26, ஏராளன் said:

1996 ஜனவரி 31ம் ம் திகதி மத்திய வங்கிதாக்குதலில் தொடர்புபட்டிருந்ததாக தண்டனை விதிக்கப்பட்ட இருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்தே  ஜனாதிபதி சட்டத்தரணி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இவரெல்லாம் ஒரு சட்டத்தரணி ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.