Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுலுக்கு திருமணம் செய்ய பெண் பாருங்களேன்! - ஹரியானா பெண்களிடம் சோனியா காந்தி பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
30 JUL, 2023 | 10:17 AM
image
 

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். அப்போது, ஹரியாணா மாநிலம் சோனிபட் மதினா கிராம பெண் விவசாயிகளை சந்தித்தார்.

அப்போது, ‘‘நாங்கள் டெல்லியை இதுவரை பார்த்ததே இல்லை’’ என்று ராகுல் காந்தியிடம் அந்த பெண்கள் கூறினர். அப்போது, ‘‘நான் உங்களை டெல்லிக்கு வரவழைக்கிறேன்’’ என்று உறுதி அளித்தார். அதன்படி, மதினா கிராமத்து பெண் விவசாயிகளுக்கு டெல்லியின் எண் 10 ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி வீட்டில் ராகுல் காந்தி விருந்தளித்தார். அப்போது சோனியா, பிரியங்கா காந்தி மற்றும் பெண்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக கலந்துரையாடினர்.

அந்தப் பெண்களிடம், ‘‘உணவு நன்றாக இருக்கிறதா, பிடித்திருக்கிறதா?’’ என்று ராகுல் கேட்டறிந்தார். அவர்களுடன் வந்திருந்த குழந்தைகளுக்கு ராகுல் சாக்லேட்டுகள் வழங்கினார்.

இதுகுறித்து ராகுல் கூறும்போது, ‘‘பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஹரியாணா பெண் விவசாயிகள், அவர்கள் கொண்டு வந்திருந்த உணவை எங்களுக்கு அளித்தனர். எங்களை மிகவும் மரியாதையாகவும் அன்பாகவும் நடத்தினார்கள். தங்களுடைய குடும்ப உறுப்பினர்களைப் போல எங்களிடம் பாசம் காட்டினார். டெல்லியை பார்க்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையை மட்டும்தான் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர்களுடைய அன்புக்கும் மரியாதைக்கும் நான் செலுத்தும் பிரதிபலன் இது. அவர்களுக்கு நான் கடன் பட்டுள்ளேன். அதை எப்படி திருப்பி செலுத்தாமல் இருக்க முடியும்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகள் அனைத்தையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். ஜிஎஸ்டி.யால் அவர்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். அரசு கொள்கைகள் தொடர்பாக பேசுகின்றனர். எங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றி ஆர்வமாக கேட்டு சிரித்தார்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

இந்த கலந்துரையாடலின் போது சோனியா காந்தியைப் பார்த்து ஒரு பெண், ‘‘ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வையுங்கள்’’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். அதற்கு, ‘‘ராகுலுக்கு பெண் பாருங்கள்’’ என்று சோனியாவும் சிரித்தபடியே கூறினார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ராகுல், ‘‘அது நடக்கும்’’ என்று கூறியதும் அனைவரும் மனம்விட்டு சிரித்தனர். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

https://www.virakesari.lk/article/161242

  • கருத்துக்கள உறவுகள்

53 வயசாச்சு😪

ராகுல் காந்தியை நான் ...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

53 வயசாச்சு😪

ராகுல் காந்தியை நான் ...

 

உடையார் ஐம்பதிலும் ஆசை வரும்.

இவரும் திருமணம் செய்து பிள்ளைகள் இல்லாவிட்டால் நேரு பரம்பரையே இவருடன் முடிந்துவிடுமா?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் ஐம்பதிலும் ஆசை வரும்.

இவரும் திருமணம் செய்து பிள்ளைகள் இல்லாவிட்டால் நேரு பரம்பரையே இவருடன் முடிந்துவிடுமா?

ஈழப்பிரியன், ராகுல் காந்தி திருமணம் செய்யாவிட்டால்... நேரு  பரம்பரை முற்றுப் பெறாது.
ராகுலின் சகோதரி பிரியங்கா காந்திக்கு... ஆண், பெண் என்று  இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அத்துடன் ராஜீவின் சகோதரர் சஞ்சய் காந்திக்கும் வருண்(காந்தி) என்று என்று ஒரு மகன் இருக்கின்றார்.

உங்களுடைய பதிவை பார்த்து, இவர்களுடைய குடும்ப நிலவரத்தை தேடிக் கொண்டு போகும் போது...   பிரியங்கா காந்தி, 👇 புத்த சமயத்தை சேர்ந்தவர் என்ற புதிய தகவலும் கிடைத்தது.

https://starsunfolded.com/priyanka-gandhi/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ராகுலின் சகோதரி பிரியங்கா காந்திக்கு... ஆண், பெண் என்று  இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

பெண் பிள்ளைகளின் பெயர்கள் திருமணத்திற்குப் பின் மாறுவதால் பரம்பரையில் இருந்து வேறுபடுகிறார்கள்.

ஆனால் ராகுலின் சகோரருக்கு மகன் இருக்கிறது இப்ப தான் தெரியும்.

தகவலுக்கு நன்றி சிறி.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

—— ராகுலின் சகோரருக்கு மகன் இருக்கிறது இப்ப தான் தெரியும்.

தகவலுக்கு நன்றி சிறி.

ராஜீவின் சகோதரருக்கு   என்று வந்திருக்க வேண்டும் ஈழப்பிரியன்.
தவறுதலாக ராகுலின் சகோதரருக்கு என்று எழுதி விட்டீர்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ராஜீவின் சகோதரருக்கு   என்று வந்திருக்க வேண்டும் ஈழப்பிரியன்.
தவறுதலாக ராகுலின் சகோதரருக்கு என்று எழுதி விட்டீர்கள் போலுள்ளது.

ஓ தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

சஞ்சாய் குடும்பத்தினர் இன்போதும் அரசியலில் இருக்கிறார்களா?

இல்லை என்றே எண்ணுகிறேன்.

ராகுலுக்குப் பின் அந்தக் குடும்பத்துக்கு அரசியலே இல்லை.

ஈழத்தமிழர்களை அழித்ததோடு காங்கிரசின் அரசியலும் அழிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

சஞ்சாய் குடும்பத்தினர் இன்போதும் அரசியலில் இருக்கிறார்களா?

இல்லை என்றே எண்ணுகிறேன்.

ராகுலுக்குப் பின் அந்தக் குடும்பத்துக்கு அரசியலே இல்லை.

ஈழத்தமிழர்களை அழித்ததோடு காங்கிரசின் அரசியலும் அழிந்தது.

சஞ்ஜயின் மனைவி மேனகா காந்தி லோக் சபாவில் எம் பி யாக இருக்கிறார். பி.ஜே.பியின் உறுப்பினர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

சஞ்ஜயின் மனைவி மேனகா காந்தி லோக் சபாவில் எம் பி யாக இருக்கிறார். பி.ஜே.பியின் உறுப்பினர்.

சஞ்சாய்க்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களா?

ஆம் என்றால் அவர்கள் வழி தொடரலாம்.

இல்லை என்றால் ராகுலோடு சரி.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

சஞ்சாய்க்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களா?

ஆம் என்றால் அவர்கள் வழி தொடரலாம்.

இல்லை என்றால் ராகுலோடு சரி.

வருண்காந்தி என்றொரு மகன் இருக்கிறார். 2019 வரை அவரும் லோக்சபாவின் எம்பியாக இருந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன் ராஜீவின் சகோதரர் சஞ்சய் காந்திக்கும் வருண்(காந்தி) என்று என்று ஒரு மகன் இருக்கின்றார்.

 

2 minutes ago, nunavilan said:

வருண்காந்தி என்றொரு மகன் இருக்கிறார். 2019 வரை அவரும் லோக்சபாவின் எம்பியாக இருந்தவர்.

ஓ சரி சரி சிறியும் எழுதியிருந்தார். மறதி அதிகம்.

ஆனாலும் வருண்காந்தி போன்றவர்களால் அரசியல் தலைவர்களாக வர முடியுமா என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

சஞ்சாய் குடும்பத்தினர் இன்போதும் அரசியலில் இருக்கிறார்களா?

இல்லை என்றே எண்ணுகிறேன்.

ராகுலுக்குப் பின் அந்தக் குடும்பத்துக்கு அரசியலே இல்லை.

ஈழத்தமிழர்களை அழித்ததோடு காங்கிரசின் அரசியலும் அழிந்தது.

என்ன பிரச்சனை என்றால்   சஞ்சாய். மனைவி   பஞ்சாப்காரி.  இந்திராகாந்தி  சுட்ட வம்சத்தைச் சேர்ந்தவர்    இந்த காரணத்தால் ஒட்டு உறவு இல்லை     காதல் திருமணம்    அவனை தான்  இந்திராகாந்தி  தனக்கு பின்    வாரிசு ஆக  பயிற்சி கொடுத்து வந்தவர். ரொம்பக் குழப்படி   எலிகப்ரல். விபத்தில் இளம் வயதில் இறந்துபோனான்.  

குறிப்பு...செய்திகளை தேடி வாசிக்கவும்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

 எலிகப்ரல். விபத்தில் இளம் வயதில் இறந்துபோனான். ?😀

Helicopter  ,..ஹெலிகாப்டர்  ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

என்ன பிரச்சனை என்றால்   சஞ்சாய். மனைவி   பஞ்சாப்காரி.  இந்திராகாந்தி  சுட்ட வம்சத்தைச் சேர்ந்தவர்    இந்த காரணத்தால் ஒட்டு உறவு இல்லை     காதல் திருமணம்    அவனை தான்  இந்திராகாந்தி  தனக்கு பின்    வாரிசு ஆக  பயிற்சி கொடுத்து வந்தவர். ரொம்பக் குழப்படி   எலிகப்ரல். விபத்தில் இளம் வயதில் இறந்துபோனான்.  

குறிப்பு...செய்திகளை தேடி வாசிக்கவும்.  🤣

தகவலுக்கு நன்றி.

4 hours ago, நிலாமதி said:

 எலிகப்ரல். விபத்தில் இளம் வயதில் இறந்துபோனான். ?😀

Helicopter  ,..ஹெலிகாப்டர்  ?

அக்கா ஒரு தடி எடுத்து இரண்டு போட்டு சொல்லி கொடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

 எலிகப்ரல். விபத்தில் இளம் வயதில் இறந்துபோனான். ?😀

Helicopter  ,..ஹெலிகாப்டர்  ?

நன்றி   

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2023 at 23:34, Kandiah57 said:

என்ன பிரச்சனை என்றால்   சஞ்சாய். மனைவி   பஞ்சாப்காரி.  இந்திராகாந்தி  சுட்ட வம்சத்தைச் சேர்ந்தவர்    இந்த காரணத்தால் ஒட்டு உறவு இல்லை     காதல் திருமணம்    அவனை தான்  இந்திராகாந்தி  தனக்கு பின்    வாரிசு ஆக  பயிற்சி கொடுத்து வந்தவர். ரொம்பக் குழப்படி   எலிகப்ரல். விபத்தில் இளம் வயதில் இறந்துபோனான்.  

குறிப்பு...செய்திகளை தேடி வாசிக்கவும்.  🤣

இந்திராவை சீக்கியர் போட்டுதள்ள முதலிலேயே மேனகாவுக்கும், இந்திராவுக்கும் பெரிய லடாய் எண்டு கேள்வி பட்டுள்ளேன். மாமியார் - மருமகள் சண்டை.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இந்திராவை சீக்கியர் போட்டுதள்ள முதலிலேயே மேனகாவுக்கும், இந்திராவுக்கும் பெரிய லடாய் எண்டு கேள்வி பட்டுள்ளேன். மாமியார் - மருமகள் சண்டை.

 

ஆமாம் ஆனால் மகனில்.  ரொம்பவும் பாசத்துடன் இருந்தவர்  .....அவர் எதிர்பார்க்கவில்லை இப்படி இறப்பனென்று    பல மாதங்கள் கவலையாய். உடைத்து போய்யிருந்தார.      தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள்  நெடுமாறன். மூப்பானார்   ...போன்றோர் ஆறுதலாக இருநதார்கள். ...அவன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் ஈழம் அல்லது சுயாட்சி கிடைத்திருக்குமா   இலங்கை தமிழருக்கு   ?? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

ஆமாம் ஆனால் மகனில்.  ரொம்பவும் பாசத்துடன் இருந்தவர்  .....அவர் எதிர்பார்க்கவில்லை இப்படி இறப்பனென்று    பல மாதங்கள் கவலையாய். உடைத்து போய்யிருந்தார.      தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள்  நெடுமாறன். மூப்பானார்   ...போன்றோர் ஆறுதலாக இருநதார்கள். ...அவன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் ஈழம் அல்லது சுயாட்சி கிடைத்திருக்குமா   இலங்கை தமிழருக்கு   ?? 🤣

உயிருடன் இருந்திருந்தால் - 87-89 காலத்தில் எந்த எல்லைக்கும் சென்று, தலைவரை முடித்திருப்பார்.

ஆனால் ரஜீவை போல ஜேஆரின் சூழ்சிக்கு பலியாகி இருக்கமாட்டார் எனவே இந்தியா - புலி மோதல் வந்திருக்க வாய்ப்பு குறைவு.

இந்தியாவில் யார் வந்தாலும் 87 உடன்படிக்கைக்கு மேலாக எமக்கு எதைவும் தர விடமாட்டார்கள்.

இந்திரா காலத்திலேயே 13 தான் இந்தியாவின் நிலைப்பாடு என்பதை திம்புவில் கலந்து கொண்ட யாழ் உறவு ஒருவர் எழுதியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.