Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும்! அச்சுறுத்திய பௌத்த பிக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும்! அச்சுறுத்திய பௌத்த பிக்கு

 

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.... ஒரு பௌத்த துறவி பகிரங்கமாக நல்லிணக்கத்தை குலைக்கும் ஆக்ரோஷ  வார்த்தைகளை கூறி இரத்த ஆறு ஓடும் என அச்சறுத்துகிறார், பொலிஸார் வேடிக்கை பார்க்கின்றனர். இவர்களுடன் எப்படி நாம் சேர்ந்து பாதுகாப்பாக வாழ்வது? இங்கே, எங்கே நல்லிணக்கம் இருக்கிறது? இரத்த ஆறு ஓடும், இனக்கலவரம் வெடிக்கும் என்று அச்சுறுத்தியே சாதிக்கின்றனர். அன்று தலைவர் இருந்த போது இவர்களெல்லாம் எங்கே போனார்கள்? இன்று அந்தப் பலம் நம்மிடம் இல்லை, கேட்பதற்கும் யாருமில்லை, மீண்டும் தங்கள் பரம்பரைப்புத்தியை காட்ட வெளிக்கிட்டு விட்டார்கள். இந்தக்காணொளியை ஐ. நாவில் போட்டுக்காட்டி நிஞாயம் கேட்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாடு ஏலவே இந்த ஆறு ஓடி தான் இப்ப பட்டினி ஆறு ஓடுது.

இந்த மொட்டைகளுக்கு தானம் போடுவதை நிறுத்தினால்.. நல்ல தண்ணி ஆறு ஓடும். நாடும் செழிக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களை இனவாதிகளாக மாற்றுவதில்  பிக்குகளின் பங்கு பெரியது. அரசியல்வாதிகளும் இவர்களின் பின்னால் இருந்து  செயற்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிக்குகளின் காலில் விழுந்து கூம்பிட்டால் இரத்த ஆறு ஓட்டத்தை தவிர்கலாம்👍

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

சிங்கள மக்களை இனவாதிகளாக மாற்றுவதில்  பிக்குகளின் பங்கு பெரியது. அரசியல்வாதிகளும் இவர்களின் பின்னால் இருந்து  செயற்படுகிறார்கள்.

அரசியல் வாதிகள் என்று பொதுவாக சொல்வதை விட ராஜபக்சேக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். சரத் வீரசேகரா, வீரவன்ச, கம்மன்பில , இனவாத காவிகள் எல்லோருமே ராஜபக்சேக்களின் தீவிரவாத ஆட்கள்தான். நேரடியாக பேசினால் தமிழர்களின் வாக்கை கேட்க முடியாது என்பதட்காக இவர்களை வைத்து பேசுகிறார்கள்.

மற்ற சிங்கள அரசியல்வாதிகள் எல்லாம் நல்லவர்கள் என்றுமில்லை. ஆனால், நிலைமைக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ளுவார்கள். இந்த நாட்டில் ரத்த ஆறு ஓடவிடடால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு வன்முறையைத் தூண்டும் சொல்லாடல்களைப் பிரயோகிப்பவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயலாமல் தமிழ் பாஉ க்கள் என்ன புடுங்குகிறார்கள்?  அவர்கள்தான் பெரிய சட்டத்தரணிகளாயிற்றே.  ஒருவருக்கு வாய்ப்பூட்டுப் போட்டால் எல்லாம் தானாக நின்றுவிடாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/8/2023 at 11:52, nunavilan said:

சிங்கள மக்களை இனவாதிகளாக மாற்றுவதில்  பிக்குகளின் பங்கு பெரியது. அரசியல்வாதிகளும் இவர்களின் பின்னால் இருந்து  செயற்படுகிறார்கள்.

இவற்றை எல்லாம் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றார்கள்?
ஒவ்வொரு கல்லாக நகர்த்துவோம் என கூறும் நம் தமிழ் அரசியல்வாதிகளும் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றார்கள்?
ஏன்????
எம்மைப்போல் புலம்பெயர்ந்து வாழும் சிங்கள மக்களும் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றார்கள்?

நாம் எல்லோரும் மேற்குலகை பாராட்டிக்கொண்டு எந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்?

On 28/8/2023 at 21:26, nunavilan said:

இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும்! அச்சுறுத்திய பௌத்த பிக்கு

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இவர்களின் இனவாத கூச்சலுக்குப்பின்னால் யாரும் அணிதிரண்டதாக தெரியவில்லை, கொழுப்பு பிடித்த பிக்குகளை தவிர. கொழுத்தி விட துடிக்கும் சரத் வீரசேகர, கம்மன்பில, விமல் போன்றோர் கூட கூட்டத்துக்குள் இருந்து கூவுகின்றனரே தவிர வீதிக்கு இறங்கவில்லை, இறங்கினால் தாக்கப்படுவோம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்களோ என்னவோ? (அல்லது கூட்டம் திரண்டால் வழிநடத்துவோம் என்று காத்திருக்கிறார்களோ தெரியவில்லை). இதிலிருந்து இவர்களின் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அவதானிக்கலாம். எல்லாநேரமும் ஒரே தந்திரம் பலிக்காது. ஒரு வேளை இதையெல்லாம் கடந்து ரணில் வெற்றி பெற்றால், முதலில் உடனடியாக  இவர்ளை கைது செய்ய வேண்டும், தோற்றுவிட்டால் இவர்களை ஆட விட்டு வேடிக்கை பார்த்ததன் பலனை அறுப்பார். இவர்ளை அடக்கி சமாதானத்தை ஏற்படுத்த முடியாமல் இனங்களுக்கிடையில் பதட்டத்தை வேடிக்கை பார்ப்பவர் எப்படி நாட்டை முன்னேற்றுவார், முன்னேற்ற முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, karu said:

இவ்வாறு வன்முறையைத் தூண்டும் சொல்லாடல்களைப் பிரயோகிப்பவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயலாமல் தமிழ் பாஉ க்கள் என்ன புடுங்குகிறார்கள்?  அவர்கள்தான் பெரிய சட்டத்தரணிகளாயிற்றே.  ஒருவருக்கு வாய்ப்பூட்டுப் போட்டால் எல்லாம் தானாக நின்றுவிடாதா?

அப்படி பேசி இருக்கலாம். அதட்கு சடடதரணிகள்தான் பேச வேண்டும் என்றில்லை. சரத் வீரசேகரா தமிழ் நீதிபதிக்கு எதிராக பாராளுமன்றில் பேசிய போது , வெளியில் அரசாங்கத்துக்கு அடிக்கடி எச்சரிக்கை விடுக்கும் அடைக்கலநாதன் போன்றோர் அதே வரப்பிரசாதத்தை பயன்படுத்தி அதே தோரணையில் சிங்கள நீதி எப்படி தமிழர்களுக்கு இருந்ததென்று பேசி இருக்கலாம்.

நிறையவே அநீதி நடந்திருக்கிறதென்று படிக்காத முடடல்களுக்கும், படித்த முடடால்களுக்கும் தெரியும்.  இவர்கள் எல்லாம் வரப்பிரசாதங்களை பெறுவதட்காக சென்றவர்களே அன்றி உரிமைக்காக சென்றவர்கள் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் காக்கும் மௌனம் அல்லது பேசுபவர்களுக்கும் வாய் பூட்டு போட்டு தடுப்பது , அவர்களுக்கு அனுகூலமாக அமைந்து விடுகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.