Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியாவில் மாணவனை தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

க. அகரன் 

வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவன் நேற்று (21.09) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு, அப் பாடசாலையின் பகுதித் தலைவராகிய ஆசிரியர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார். 

ஆனாலும், குறித்த மாணவன் மீண்டும் மீண்டும் குறித்த ஆசிரியரிடம் ஏன் என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்டத்தற்கு பதில் கூறாது அதற்கும் தன்னை தாக்கியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.

எனினும், மாணவன் பெற்றோருக்கு இது தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இதனால் அதிக மன அழுத்ததிற்கு உள்ளான மாணவன் நேற்றைய தினம் (20.09) ஒரு கடிதத்தை தனது வீட்டில் எழுதி வைத்துள்ளார். 

குறித்த கடிதத்தை  கண்ட பெற்றோர் மாணவனை விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உட்காயங்களையும் காட்டியுள்ளார். தொடர்ந்து மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோர் இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் மாணவன் மூலம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதுடன், மாணவனின் கடிதத்தினை கொண்டு வவுனியா தலமை பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் மாணவனின் தந்தையால் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. 

மாணவனால் எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

அன்புள்ள அப்பா, அம்மா நான் சுயநினைவுடன் எழுதும் கடிதம். எனக்கு பாடசாலை செல்ல விருப்பமில்லாத நிலை ஏற்படுகிறது. காரணம் 11.09.2023 தொடக்கம் எனது கற்றல் நடவடிக்கை தொடர்பாக என்னை வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை.

அதற்கு காரணம் கேட்ட போது, பகுதித் தலைவர் பிரதாஸ் என்னை கீழே விழுத்தி தும்புத் தடியால் அடித்து, சப்பாத்து காலால் மிதித்து என்னை மாணவன் என்றும் பார்க்காது சித்திரவதை செய்கிறார்.

அதற்கு பிறகு இடைவேளை நேரம் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற போது என்னை வெளியே செல்ல விடவில்லை.

சிறுநீர் கழிக்க செல்ல கேட்டத்தற்கு தும்புத் தடியால் அடித்து, சப்பாத்து கால்களால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் உதைந்தார்.

20.09.2023 அன்று என்னை தும்புத்தடியால் அடித்து என் கை விறைத்து நிற்கும் போது என்னை பாவம் என்றும் பார்க்காமல் பூங்கன்றுக்கு தண்ணீர் ஊற்ற விட்டார். எனக்கு உடல் எங்கும் வலியாக உள்ளது. மூச்சு விட கஸ்டமாகவுள்ளது.

பாடசாலைக்கு வருவதற்கு சைக்கிள் ஓட நெஞ்சு வலிக்கிறது. இதனால் எனக்கு பாடசாலை வரவே விருப்பமில்லாது இருக்கிறது. எனவே எனது உடம்பிற்கு ஏற்படுமாயின் அதற்கு முழுக் காரணம் எனது பகுதித் தலைவராகிய ந.பிரதாஸ் ஆசிரியர் ஆவார் என அதில் கூறப்பட்டுள்ளது. 

இதேவளை, குறித்த ஆசிரியரால் ஏற்கனவே ஒரு மாணவன் மீது தும்புத்தடி கொண்டு தாக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பாடசாலை பெற்றோர் வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. 

குறித்த பாடசாலையில் ஒருசில மாதங்களுக்கு முன் பிறிதொரு ஆசிரயரால் வேறு ஒரு மாணவனின் செவியில் தாக்கி  அவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பதுடன் பாடசாலையின் நற்பெயர் குறித்து பெற்றோர் குறித்த விடயத்தை பெரிது படுத்தாமல் விட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. R

image_be9d741647.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KB


  • கருத்துக்கள உறவுகள்

இருபக்க விவாதத்தினையும் கேடட   பின் தான் முடிவுக்கு வரவேண்டும்.இருப்பினும் ஆசிரியத் தொழில் கடவுளுக்கு சமமானது . இப்படிநடக்கலாமா ?

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

மாணவனின் தவறை முதலில் சுட்டிக்காட்டவேண்டும், பின்னர் வன்முறை அற்ற வழியில் மாணவன் திருந்தும் வகையில் தண்டனை வழங்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

ஆசிரியர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர்கள் கொடூரம் தொடர்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பாடசாலை உள்முரண்களை தூக்கி பிடிக்காமல் எல்லாரும் சேர்ந்து அந்த பாடசாலைக்கு இன்னொரு தும்புதடி வேண்டி கொடுக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

இப்படியான பாடசாலை உள்முரண்களை தூக்கி பிடிக்காமல் எல்லாரும் சேர்ந்து அந்த பாடசாலைக்கு இன்னொரு தும்புதடி வேண்டி கொடுக்க வேண்டும்

ஓம் தமிழ் மணவர்கள் தமிழ் ஆசிரியர்கள் உறவு என்பது நல்ல நிலையில் உயர் தரத்தில் உள்ளது என்று  சிங்களவர்களும்,  முஸ்லிம்களும் நம்பவைக்கபட வேண்டியது முக்கியம். ஆசிரியர் தும்புதடியால் மாணவனை போட்டு  நல்லாக அடிக்கலாம். செய்திகளை வெளியே தெரியவிட கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

இருபக்க விவாதத்தினையும் கேடட   பின் தான் முடிவுக்கு வரவேண்டும்.இருப்பினும் ஆசிரியத் தொழில் கடவுளுக்கு சமமானது . இப்படிநடக்கலாமா ?

 

6 hours ago, ஏராளன் said:

மாணவனின் தவறை முதலில் சுட்டிக்காட்டவேண்டும், பின்னர் வன்முறை அற்ற வழியில் மாணவன் திருந்தும் வகையில் தண்டனை வழங்க வேண்டும். 

மாணவன் என்ன தான் தவறு செய்திருந்தாலும் இப்படி மிருகத்தனமாக துன்புறுத்தக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்தப்பிள்ளையானால் இப்படித் தாக்குவாரா? கொஞ்சமாவது அறிவு வேண்டாம், பிழைகளை எப்படி சுட்டிக்காட்டுவது தண்டிப்பதென்று.  அவருக்கு உடலில் மனதில் பிரச்சனையென்றால், உரிய முறைப்படி கடமையிலிருந்து விடுப்பு பெற்று முறைப்படி  தகுந்த சிகிச்சை பெற்றபின் பணிக்கு வந்திருக்கலாம். அந்த மாணவனின் மனதையும் உடலையும் வருத்துவதால் இவருக்கு நலம் கிடைக்குமா? சரி.... மாணவன் தவறே செய்திருந்த்தாலும் அதை எப்படி திருத்துவது என்று தெரியாதவர்,  குறித்த மாணவனின் பெற்றோரிடமாவது கேட்டுத்தெரிந்திருக்கலாம், எப்படி அவர்களுக்கு உரிய வகையில் புரியும் முறையில் கற்பிப்பார் என்று தெரியவில்லையே. இப்படிப்பட்ட ஆசிரியர்களாலேயே மாணவர்கள் இடை நடுவில் பாடசாலையில் இருந்து விலகி  எதிர்காலத்தை தொலைத்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பெற்றோரும் ஆசிரியரும் அதிகப்பொறுப்புடன் கையாளவேண்டும் அவர்களை. எதற்கு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு வைக்கிறார்கள்? இணைந்து செயற்பட்டாலே ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கலாம். ஆசிரியர்களை கௌரவிப்பதற்காக ஆசிரியர் தினம் என விசேஷமாக ஒரு நாளை ஒதுக்கி தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பது எதற்காக? "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்." சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். உருவாகும் சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகளா உருகுலைக்கும் சிந்தனை கொண்டவர்களா என்பதை மாணவரின் எதிர்காலம் சாட்சி பகரும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

குறித்த பாடசாலையில் ஒருசில மாதங்களுக்கு முன் பிறிதொரு ஆசிரயரால் வேறு ஒரு மாணவனின் செவியில் தாக்கி  அவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பதுடன் பாடசாலையின் நற்பெயர் குறித்து பெற்றோர் குறித்த விடயத்தை பெரிது படுத்தாமல் விட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. R

இதுதான் பிரச்சனையே, குடும்பப்பெயர் கெட்டுவிடும் , பாடசாலை பெயர் கெட்டுவிடும், ஊர் பெயர் கெட்டுவிடும், சமூகத்தின் பெயர் கெட்டுவிடும் என்று பல பிரச்சனைகளை மூடி மறைப்பதால்தான், மன உளைச்சல் தொடங்கி தவறான முடிவுகள் எடுக்கப்படுகிறது. 

சிலர் மனசாட்சியும் இல்லை, பயமும் இல்லை. யார் கேட்ப்பார்கள் என்ற எண்ணத்தில் தாம் நினைத்தபடி இப்படியெல்லாம் நடக்கத்தூண்டுகிறது. 

மாணவன் தவறு செய்தால் அதனை விசாரிப்பதற்கு ஒரு முறை உள்ளது. இப்படி செய்தமையால் ஆசிரியரின் தரம்தான் தாழ்ந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

இருபக்க விவாதத்தினையும் கேடட   பின் தான் முடிவுக்கு வரவேண்டும்.இருப்பினும் ஆசிரியத் தொழில் கடவுளுக்கு சமமானது . இப்படிநடக்கலாமா ?

நீங்கள் கூறியது சரி . இரு பக்கமும் விசாரித்தால் நல்லது. அந்த நாட்களில் மாணவர்களாக இருந்த பொது ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்கள். நல்லஒழுக்கம் மிகவும் முக்கியமாக பேண படடது.

இப்போது மாணவர்களின் நடத்தையில் அப்படியெல்லாம் காண முடியாது. ஆசிரியருக்கு முன்னாலேயே தூசனத்தில் ஏசுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படியாக நிறைய ஒழுக்க கேடுகள் நடக்கின்றன. எனவே ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிப்பதை தவறாக எடுக்க முடியாது.

இருந்தாலும் இங்கு காலால் அடிப்பது, தும்புத்தடி கொண்டு அடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரம்பை கையாடாதவன் தன பிள்ளையை பகைக்கிறான் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே அளவுடன் பிரம்பை கையாடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் நடந்தது வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தில். இது அடிதடி, குத்து வெட்டு, அதிபரை அடித்து இரவில் வகுப்பில் பூனையோடு பூட்டி வைத்து கொடுமைப் படுத்தல் , டெலோ புளொட் மாணவர் அணி சண்டையில் சுடப்பட்டு சாவது என்று பல சாகச நிகழ்வுகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால் bio / maths Al ரிசல்ட் வரும் பொழுது இழந்த பெயரை காப்பாற்றிக் கொள்ளும்.

நான் தரம் ஐந்தில் இருந்து உயர்தரம் வரைக்கும் இங்கு தான் படித்தேன்.

இரு பக்க விசாரணை முக்கியம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.