Jump to content

Skill இல்லாத வேலை விசாவில் வந்தோரின் அவலநிலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சனியன்று, ஈஸ்ட்காம், முருகன் கோவிலுக்கு எள் எண்ணெய் எரிக்க போனால், கோவிலில் உள்ள அளவுக்கு பிரசாதம் கொடுக்கும் இடத்தில் கூட்டம். பார்த்தால் அனைவருமே புதியவர்கள். வழக்கத்துக்கு மாறாக அதாவது, பிரசாதம் கொடுக்க தொடங்க முன்னம், அங்கே, குவிந்து நின்றார்கள்.  இவர்களில் பலர் இந்தியர்கள். அங்கே ஏன் கூடி நிக்கிறார்கள் என்று விசாரித்தால், வந்தது தலை கிறுகிறுக்கும் செய்தி. 

அவர்கள் அனைவருமே, மோசடி முகவர்களுக்கு காசு கொடுத்து விசா எடுத்து, வேலைக்கு வந்திருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி ஏமாத்தப்பட்டார்கள் ?

மோசடியாளர்கள், 10, 20 வருடம் முன்னதாக பதிவு செய்த, திவாலாகாமல், சிறிதானாலும், நனறாக நடந்த கொம்பனிகளை, கம்பெனி ஹவுஸ் தளத்தில் தேடிப்பிடித்து, விலை கொடுத்து வாங்கி, அவைகளை, care home services தரும் கொம்பனிகளாக பதிவை செய்து, ஆட்களை இறக்க, approval எடுத்து, அப்புறம், முடிந்த அளவுக்கு விசாக்களை வெளிநாடுகளில் process பண்ணி, எடுத்ததும், அவர்களை, குறித்த நாளில் அல்லது குறித்த வார இறுதியில் சேர்ந்தே வரப்பண்ணி, எல்லோரும் ஒட்டு மொத்தமாக வந்த பின்னர், அங்கே வாங்கிய பணதுடன் காணாமல் போய்விட்டனர்.

இங்கே நடந்த பெரு மோசடியால், அரசு, ஜனவரி முதல் care workers விசாவை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

ஆக, வந்து இறங்கியவர்கள், அவர்களை, அழைத்தவர்களோ, அல்லது, எந்த நிறுவனத்துக்காக வேலைக்கு அழைக்கப்பட்டார்களோ, யாருமே இல்லாமல், என்ன செய்வது என்று புரியாத அவலத்தினுள் சிக்கி விட்டனர். இப்படி வந்த நம்மவர்கள், சமூக உதவி (உறவினர் உதவி) இருப்பதால் தப்பி விடுகின்றனர். இவர்களுக்கு அப்படி உதவி இல்லை. ஆகவே, கோவிலில் கிடைக்கும் உணவுக்காக வந்து தவித்து நிற்கிறார்கள். இது லண்டணில் உள்ள சகல கோவில்களிலும் உள்ள நிலைமை. 

இவர்களே, இந்த கோவில்களில் உணவுக்காக வந்து அலைமோதும் பரிதாபம். இவர்கள் இரண்டு மாதத்தில் வேலை எடுத்து, அரசுக்கு வரி செலுத்தாவிடில், deport பண்ணப்படுவார்கள் என்ற சிக்கலும் உள்ளது.

போனவாரம் இதேபோல ஒரு தமிழ் கடை வைத்திருக்கும் ஒருவர், இருவரை, ஆளாளுக்கு 25 லச்சம் வீதம் இறக்கி, வெளியே டெலிவரி வேலைக்கு விட்டிருக்கிறார். அங்கேயும் ஒரு இடத்தில் இமிகிரேசின் சுற்றி வளைத்து கைது செய்ததால், எதுவுமே இலகுவானதல்ல.

இதனை நம்மவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.

***

அதேவேளை, ரெய்னர்ஸ் லேன் ரொட்டி ஹட் take away யில் ஒரு இலங்கை இஸ்லாமிய பெண்ணும், முன்னால் புதிதாக திறந்திருக்கும், சம்பல் take away யில் சிங்கள மாணவியும் வேலை செய்வது பார்க்க நன்றாக இருக்கிறது. சிங்கள மனைவி, இது எமது 9வது கிளை, 10வது விரைவில் வெம்பிளியில் என்று பெருமையாக சொன்னார். இலங்கையர் நிறுவனத்தில் வேலை செய்வது மிகப்பெருமை என்றும் சொன்னார்.

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதம் தகவலுக்கு இலங்கையில் எனக்கு தெரிந்த பலருக்கு இதை அனுப்பி உள்ளேன்.. உறவுகளும் தங்களுக்கு தெரிந்த வட்சப் குறூப்களில் இதை பகிர்ந்தால் பலர் ஏமாறாமல் இருப்பார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

பார்க்க நன்றாக இருக்கிறது.

அப்படியா சொல்றீங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி நாதம் தகவலுக்கு இலங்கையில் எனக்கு தெரிந்த பலருக்கு இதை அனுப்பி உள்ளேன்.. உறவுகளும் தங்களுக்கு தெரிந்த வட்சப் குறூப்களில் இதை பகிர்ந்தால் பலர் ஏமாறாமல் இருப்பார்கள்..

https://www.gov.uk/employee-lose-sponsor-licence

https://www.citizensadvice.org.uk/immigration/health-and-care-worker-visas/losing-your-job-if-you-have-a-health-and-care-worker-visa/

2022 பிப்ரவரியில் பராமரிப்புப் பணியாளர்களை திறமையான வேலை விசாக்களுக்குத் தகுதியுடையதாக மாற்றும் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜூன் 2023 இல் முடிவடைந்த ஆண்டில் பராமரிப்பு மற்றும் மூத்த பராமரிப்புப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நீண்ட கால வேலை விசாக்களின் எண்ணிக்கை 77,700ஐ எட்டியது. இது 2022 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் 12,300 ஆக இருந்தது. பிரான்சில் இருந்து அகதியாக வந்தவர்களில் பார்க்க இது அதிகமாக இருப்பதால், இந்த விசாவினை நிறுத்தி, அகதிகளுக்கு இந்த வேலையினை செய்வதுக்கு உரிய பயிற்சியினை கொடுக்கலாமே என்று ஆலோசனை வைக்கப்படுள்ளது.

4 hours ago, goshan_che said:

அப்படியா சொல்றீங்க

😍🥰 🤫

விபரம் தந்தது உங்களுக்காக தானே... 😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

நான் எனக்கு என்று ஒரு சிறு கம்பெனி ஒன்றை உருவாக்கி பதிந்து அதனூடாக மற்ற கம்பெனிகளுக்கு வேலை செய்கின்றேன் (incorporated / consultant). வருடா வருடம் எந்த பிசகும் இல்லாமல், நேர்மையான ஒரு தமிழ் கணக்காளரினூடாக அதன் வரிகளை அரசுக்கு கட்டிக் கொண்டு வருகின்றேன்.

அண்மையில் நெருங்கிய உறவு ஒருவரின் ஆண்டுத்துவசத்துக்கு அழைத்து இருந்தனர். அங்கு வந்திருந்த சிலருக்கு நான் எவ்வாறு கம்பெனி ஒன்றினூடாக வேலை செய்கின்றேன் என தெரியும். அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து ஒரு டீல் பேசினார்.

என் கம்பெனியின் பெயரால் 3 பேருக்கு வேலை கொடுப்பதாக ஒரு செட்டப் பின்வருமாறு செய்ய முடியுமா எனக் கேட்டார்.


1. முதலில் என் கம்பெனிக்கு 3 பேர் தேவை என்று சட்டப்படி அறிவிப்பது.


2. ஒரு வேலைக்கு 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பது. 


3. அதில் தாம் காட்டும் ஒருவரையும் அழைப்பது (அவர் ஊரில் இருந்து இறக்கப்பட்டவர்)


4. 10 பேரையும் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளித்ததாக காட்டுவது. அதில் 9 பேர் இங்கு சிட்டிசன் எடுத்தவர்களாக இருக்க வேண்டும்.


5. அதில் தாம் காட்டும் நபரை தெரிவு செய்வது. இதன் மூலம் மிச்ச 9 பேருக்கும் இல்லாத தகுதி, ஊரில் இருந்து வந்து நிற்பவரிடம் உள்ளதாக காட்டுவது.


6. மூன்று நான்கு மாதங்கள் payroll போட்டு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது (இந்த சம்பள தொகையை ஊரில் இருந்து வந்தவர் வெளியில் காசுக்கு வேலை செய்து எனக்கு கொடுக்க வேண்டும், அதை நான் அவருக்கு கொடுக்க வெண்டும்)

7. பின் LMIA இற்கு விண்ணபித்து அதை பெற வேண்டும்


8. பின் ஊரில் இருந்து வந்தவர் அதைக் காட்டி Work Permit எடுக்க முடியும்.

இவ்வாறு செய்தால், எனக்கு ஆளொன்றுக்கு 15,000 கனடிய டொலர்கள் தருவேன் என்றார். ஆக, 3 பேருக்கு 45,000 கனடிய டொலர்கள் எனக்கு கிடைக்குமாம். ஏதும் பிரச்சனை வந்தால், அந்த கம்பெனியை திவாலாகி (bankruptcy) விட்டதாகக் காட்டி, இன்னொரு கம்பெனியை உருவாக்கட்டாம்.

நான் அப்பனே சிவனே.. எனக்கு இப்ப கிடைக்கும் வருமானமே போதம், ஆளை விடுங்கள் என்று சொல்லி தெறித்து விலகி விட்டேன்.

நான் அப்படிச் செய்தது பின்னால் ஏதும் பிரச்சினை வந்து என் குடுமி அறுபடுமோ என்ற பயத்தினால் மட்டுமே.  மற்றப்படி பார்த்தால், இப்படி துணிந்து செய்து ஊரில் இருந்து வந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களை பாராட்டுகின்றேன்.


 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

கடந்த சனியன்று, ஈஸ்ட்காம், முருகன் கோவிலுக்கு எள் எண்ணெய் எரிக்க போனால், கோவிலில் உள்ள அளவுக்கு பிரசாதம் கொடுக்கும் இடத்தில் கூட்டம். பார்த்தால் அனைவருமே புதியவர்கள். வழக்கத்துக்கு மாறாக அதாவது, பிரசாதம் கொடுக்க தொடங்க முன்னம், அங்கே, குவிந்து நின்றார்கள்.  இவர்களில் பலர் இந்தியர்கள். அங்கே ஏன் கூடி நிக்கிறார்கள் என்று விசாரித்தால், வந்தது தலை கிறுகிறுக்கும் செய்தி. 

அவர்கள் அனைவருமே, மோசடி முகவர்களுக்கு காசு கொடுத்து விசா எடுத்து, வேலைக்கு வந்திருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி ஏமாத்தப்பட்டார்கள் ?

மோசடியாளர்கள், 10, 20 வருடம் முன்னதாக பதிவு செய்த, திவாலாகாமல், சிறிதானாலும், நனறாக நடந்த கொம்பனிகளை, கம்பெனி ஹவுஸ் தளத்தில் தேடிப்பிடித்து, விலை கொடுத்து வாங்கி, அவைகளை, care home services தரும் கொம்பனிகளாக பதிவை செய்து, ஆட்களை இறக்க, approval எடுத்து, அப்புறம், முடிந்த அளவுக்கு விசாக்களை வெளிநாடுகளில் process பண்ணி, எடுத்ததும், அவர்களை, குறித்த நாளில் அல்லது குறித்த வார இறுதியில் சேர்ந்தே வரப்பண்ணி, எல்லோரும் ஒட்டு மொத்தமாக வந்த பின்னர், அங்கே வாங்கிய பணதுடன் காணாமல் போய்விட்டனர்.

இங்கே நடந்த பெரு மோசடியால், அரசு, ஜனவரி முதல் care workers விசாவை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

ஆக, வந்து இறங்கியவர்கள், அவர்களை, அழைத்தவர்களோ, அல்லது, எந்த நிறுவனத்துக்காக வேலைக்கு அழைக்கப்பட்டார்களோ, யாருமே இல்லாமல், என்ன செய்வது என்று புரியாத அவலத்தினுள் சிக்கி விட்டனர். இப்படி வந்த நம்மவர்கள், சமூக உதவி (உறவினர் உதவி) இருப்பதால் தப்பி விடுகின்றனர். இவர்களுக்கு அப்படி உதவி இல்லை. ஆகவே, கோவிலில் கிடைக்கும் உணவுக்காக வந்து தவித்து நிற்கிறார்கள். இது லண்டணில் உள்ள சகல கோவில்களிலும் உள்ள நிலைமை. 

இவர்களே, இந்த கோவில்களில் உணவுக்காக வந்து அலைமோதும் பரிதாபம். இவர்கள் இரண்டு மாதத்தில் வேலை எடுத்து, அரசுக்கு வரி செலுத்தாவிடில், deport பண்ணப்படுவார்கள் என்ற சிக்கலும் உள்ளது.

போனவாரம் இதேபோல ஒரு தமிழ் கடை வைத்திருக்கும் ஒருவர், இருவரை, ஆளாளுக்கு 25 லச்சம் வீதம் இறக்கி, வெளியே டெலிவரி வேலைக்கு விட்டிருக்கிறார். அங்கேயும் ஒரு இடத்தில் இமிகிரேசின் சுற்றி வளைத்து கைது செய்ததால், எதுவுமே இலகுவானதல்ல.

இதனை நம்மவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.

***

அதேவேளை, ரெய்னர்ஸ் லேன் ரொட்டி ஹட் take away யில் ஒரு இலங்கை இஸ்லாமிய பெண்ணும், முன்னால் புதிதாக திறந்திருக்கும், சம்பல் take away யில் சிங்கள மாணவியும் வேலை செய்வது பார்க்க நன்றாக இருக்கிறது. சிங்கள மனைவி, இது எமது 9வது கிளை, 10வது விரைவில் வெம்பிளியில் என்று பெருமையாக சொன்னார். இலங்கையர் நிறுவனத்தில் வேலை செய்வது மிகப்பெருமை என்றும் சொன்னார்.

👆

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நான் எனக்கு என்று ஒரு சிறு கம்பெனி ஒன்றை உருவாக்கி பதிந்து அதனூடாக மற்ற கம்பெனிகளுக்கு வேலை செய்கின்றேன் (incorporated / consultant). வருடா வருடம் எந்த பிசகும் இல்லாமல், நேர்மையான ஒரு தமிழ் கணக்காளரினூடாக அதன் வரிகளை அரசுக்கு கட்டிக் கொண்டு வருகின்றேன்.

அண்மையில் நெருங்கிய உறவு ஒருவரின் ஆண்டுத்துவசத்துக்கு அழைத்து இருந்தனர். அங்கு வந்திருந்த சிலருக்கு நான் எவ்வாறு கம்பெனி ஒன்றினூடாக வேலை செய்கின்றேன் என தெரியும். அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து ஒரு டீல் பேசினார்.

என் கம்பெனியின் பெயரால் 3 பேருக்கு வேலை கொடுப்பதாக ஒரு செட்டப் பின்வருமாறு செய்ய முடியுமா எனக் கேட்டார்.


1. முதலில் என் கம்பெனிக்கு 3 பேர் தேவை என்று சட்டப்படி அறிவிப்பது.


2. ஒரு வேலைக்கு 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பது. 


3. அதில் தாம் காட்டும் ஒருவரையும் அழைப்பது (அவர் ஊரில் இருந்து இறக்கப்பட்டவர்)


4. 10 பேரையும் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளித்ததாக காட்டுவது. அதில் 9 பேர் இங்கு சிட்டிசன் எடுத்தவர்களாக இருக்க வேண்டும்.


5. அதில் தாம் காட்டும் நபரை தெரிவு செய்வது. இதன் மூலம் மிச்ச 9 பேருக்கும் இல்லாத தகுதி, ஊரில் இருந்து வந்து நிற்பவரிடம் உள்ளதாக காட்டுவது.


6. மூன்று நான்கு மாதங்கள் payroll போட்டு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது (இந்த சம்பள தொகையை ஊரில் இருந்து வந்தவர் வெளியில் காசுக்கு வேலை செய்து எனக்கு கொடுக்க வேண்டும், அதை நான் அவருக்கு கொடுக்க வெண்டும்)

7. பின் LMIA இற்கு விண்ணபித்து அதை பெற வேண்டும்


8. பின் ஊரில் இருந்து வந்தவர் அதைக் காட்டி Work Permit எடுக்க முடியும்.

இவ்வாறு செய்தால், எனக்கு ஆளொன்றுக்கு 15,000 கனடிய டொலர்கள் தருவேன் என்றார். ஆக, 3 பேருக்கு 45,000 கனடிய டொலர்கள் எனக்கு கிடைக்குமாம். ஏதும் பிரச்சனை வந்தால், அந்த கம்பெனியை திவாலாகி (bankruptcy) விட்டதாகக் காட்டி, இன்னொரு கம்பெனியை உருவாக்கட்டாம்.

நான் அப்பனே சிவனே.. எனக்கு இப்ப கிடைக்கும் வருமானமே போதம், ஆளை விடுங்கள் என்று சொல்லி தெறித்து விலகி விட்டேன்.

நான் அப்படிச் செய்தது பின்னால் ஏதும் பிரச்சினை வந்து என் குடுமி அறுபடுமோ என்ற பயத்தினால் மட்டுமே.  மற்றப்படி பார்த்தால், இப்படி துணிந்து செய்து ஊரில் இருந்து வந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களை பாராட்டுகின்றேன்.


 

அதே தான் கதை.

எனது கம்பனி, அப்படீயே விலைக்கு கேட்டார்கள். மறுத்தேன்.

பங்குதாரராக செய்வோம் என்றும் கேட்டார்கள்.

வேண்டாம் வாய்ப்பில்லை ராசாக்களே என்று விட்டேன்.

எனது நண்பர் சில வருடங்களுக்கு முன்னர், மத்திய கிழக்கில் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஒரு உறவினர் என்று, 5 சதம் கூட வாங்காமல், விசாவுக்கு உதவ, முழு குடும்பமும் வந்து சேர்ந்தது.

வந்த பின்னர், உறவினர் வீட்டில் தங்கியிருந்தவர், உறவினர் புத்திமதிப்படி, நீங்கள் இவ்வளவு காசு சம்பளம் தருவன் எண்டு தானே கூப்பிட்டியள். அதை எப்ப தருவியள் எண்டு கேட்க.... அரண்டு போனார்.

மறுக்க, வக்கீல் நோட்டீஸ் போடுவன் என்று சொல்ல, இவர் கையோட நாம் எதிர்பார்த்த திறமை இல்லாததால் உமது விசாவை கான்சல் செய்து திருப்பியனுப்ப அரசை கோரப்போகிறன் எண்டவுடன் தான் நிலமை உணர்ந்து என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்தார்.

அதனால் தான் இது உபத்திரவமானது. தூரத்தில் வைத்திருக்க வேண்டும்.

1 hour ago, யாயினி said:

👆

இந்த மோபைல் ஓட்டோ கரெக்சன் பண்ணுற வேலை!! 🥹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சவுத் ஹரோ பெஸ்ட் பூட் கடைக்கு சென்று வந்தேன்.

அங்கே நம்ம நிழலி போல ஒருவர் இருப்பார்.

எப்படி வியாபாரம் என்று கேட்டேன். தீடீரென அதிக இந்தியர்கள் வந்துள்ளனர். வேலை கேட்டு தினமும் வருகிறார்கள். குறிப்பாக, ரூம் எடுக்க முடியுமா என்று பலர் கேட்கிறார்கள். 

ரிஷியும், சுலேலாவும் இந்தியர்களை இறக்குகிறார்கள் என்று வெள்ளைகள் கதைக்க தொடங்க போகிறார்கள். அதனால் தான் ஜனவரியில் இருந்து விசா கொடுப்பதை நிறுத்தப்போகிறார்கள் என்றார். ஆனால் அதன் இடையே பலர் வருவார்கள். எனினும், பலரை உள்ளே விட்டு, கண்காணிப்பையும் அதிகரித்து விட்டார்கள்.

முன்பு போல, சுத்துமாத்து விட முடியாது. இவர்களுக்கு சமூக கொடுப்பனவு இல்லை என்பதால், வந்ததில் ஒரு பிரயோசனமும் இல்லை என்பதை விரைவில் உணர்வார்கள் என்றார். @goshan_che

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

அங்கே நம்ம நிழலி போல ஒருவர் இருப்பார்.

ஐயோ பாவம்🤣

@நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2023 at 10:19, நிழலி said:

நான் எனக்கு என்று ஒரு சிறு கம்பெனி ஒன்றை உருவாக்கி பதிந்து அதனூடாக மற்ற கம்பெனிகளுக்கு வேலை செய்கின்றேன் (incorporated / consultant). வருடா வருடம் எந்த பிசகும் இல்லாமல், நேர்மையான ஒரு தமிழ் கணக்காளரினூடாக அதன் வரிகளை அரசுக்கு கட்டிக் கொண்டு வருகின்றேன்.

அண்மையில் நெருங்கிய உறவு ஒருவரின் ஆண்டுத்துவசத்துக்கு அழைத்து இருந்தனர். அங்கு வந்திருந்த சிலருக்கு நான் எவ்வாறு கம்பெனி ஒன்றினூடாக வேலை செய்கின்றேன் என தெரியும். அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து ஒரு டீல் பேசினார்.

என் கம்பெனியின் பெயரால் 3 பேருக்கு வேலை கொடுப்பதாக ஒரு செட்டப் பின்வருமாறு செய்ய முடியுமா எனக் கேட்டார்.


1. முதலில் என் கம்பெனிக்கு 3 பேர் தேவை என்று சட்டப்படி அறிவிப்பது.


2. ஒரு வேலைக்கு 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பது. 


3. அதில் தாம் காட்டும் ஒருவரையும் அழைப்பது (அவர் ஊரில் இருந்து இறக்கப்பட்டவர்)


4. 10 பேரையும் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளித்ததாக காட்டுவது. அதில் 9 பேர் இங்கு சிட்டிசன் எடுத்தவர்களாக இருக்க வேண்டும்.


5. அதில் தாம் காட்டும் நபரை தெரிவு செய்வது. இதன் மூலம் மிச்ச 9 பேருக்கும் இல்லாத தகுதி, ஊரில் இருந்து வந்து நிற்பவரிடம் உள்ளதாக காட்டுவது.


6. மூன்று நான்கு மாதங்கள் payroll போட்டு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது (இந்த சம்பள தொகையை ஊரில் இருந்து வந்தவர் வெளியில் காசுக்கு வேலை செய்து எனக்கு கொடுக்க வேண்டும், அதை நான் அவருக்கு கொடுக்க வெண்டும்)

7. பின் LMIA இற்கு விண்ணபித்து அதை பெற வேண்டும்


8. பின் ஊரில் இருந்து வந்தவர் அதைக் காட்டி Work Permit எடுக்க முடியும்.

இவ்வாறு செய்தால், எனக்கு ஆளொன்றுக்கு 15,000 கனடிய டொலர்கள் தருவேன் என்றார். ஆக, 3 பேருக்கு 45,000 கனடிய டொலர்கள் எனக்கு கிடைக்குமாம். ஏதும் பிரச்சனை வந்தால், அந்த கம்பெனியை திவாலாகி (bankruptcy) விட்டதாகக் காட்டி, இன்னொரு கம்பெனியை உருவாக்கட்டாம்.

நான் அப்பனே சிவனே.. எனக்கு இப்ப கிடைக்கும் வருமானமே போதம், ஆளை விடுங்கள் என்று சொல்லி தெறித்து விலகி விட்டேன்.

நான் அப்படிச் செய்தது பின்னால் ஏதும் பிரச்சினை வந்து என் குடுமி அறுபடுமோ என்ற பயத்தினால் மட்டுமே.  மற்றப்படி பார்த்தால், இப்படி துணிந்து செய்து ஊரில் இருந்து வந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களை பாராட்டுகின்றேன்.


 

 

பலர் அணுகப்பட்டு உள்ளார்கள். ஆட்கள் இந்த வழியில் வந்து பீ ஆர் எடுக்கின்றார்கள் போலும். ஆனால், இங்கு ஸ்பொன்சர் செய்யும் நிறுவனத்துக்கு பல ரிஸ்க் உள்ளன. 

எனது நண்பர் ஒருவர் இந்தியர் ஒருவருக்கு உதவி கேட்டு இந்த வழியில் உதவினார். ஆனால், அந்த இந்தியர் ஏற்கனவே தொழில் வீசாவில் வந்துவிட்டார். சிறிது காலத்தில் வேலையில் தன்னை டிஸ்கிரிமினேட் செய்துவிட்டார்கள் என ஒரு புது கேசை உருவாக்கி டிப்போடேசன் ஓடரை தள்ளிபோட்டு விட்டார். கடைசியில் உதவி செய்த நண்பருக்கு ஆப்பு. வாழ்வா சாவா என வரும்போது உதவி பெற்றவர்கள் உதவி செய்தவருக்கு எந்த நேரத்திலும் ஆப்பு அடிப்பார்கள். ஒரு வக்கீல் இந்த இந்தியருக்கு இப்படி வழக்கு போட்டு எஸ்கேக் ஆகலாம் என அறிவுரை கொடுத்து உள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நியாயம் said:

 

பலர் அணுகப்பட்டு உள்ளார்கள். ஆட்கள் இந்த வழியில் வந்து பீ ஆர் எடுக்கின்றார்கள் போலும். ஆனால், இங்கு ஸ்பொன்சர் செய்யும் நிறுவனத்துக்கு பல ரிஸ்க் உள்ளன. 

எனது நண்பர் ஒருவர் இந்தியர் ஒருவருக்கு உதவி கேட்டு இந்த வழியில் உதவினார். ஆனால், அந்த இந்தியர் ஏற்கனவே தொழில் வீசாவில் வந்துவிட்டார். சிறிது காலத்தில் வேலையில் தன்னை டிஸ்கிரிமினேட் செய்துவிட்டார்கள் என ஒரு புது கேசை உருவாக்கி டிப்போடேசன் ஓடரை தள்ளிபோட்டு விட்டார். கடைசியில் உதவி செய்த நண்பருக்கு ஆப்பு. வாழ்வா சாவா என வரும்போது உதவி பெற்றவர்கள் உதவி செய்தவருக்கு எந்த நேரத்திலும் ஆப்பு அடிப்பார்கள். ஒரு வக்கீல் இந்த இந்தியருக்கு இப்படி வழக்கு போட்டு எஸ்கேக் ஆகலாம் என அறிவுரை கொடுத்து உள்ளார். 

இதைத்தான் மேலே எனது நண்பர் உதவிய விசயத்திலும் நடந்தது.

வந்து, உறவினர் வீட்டில் நன்றாக சாப்பிட்டு, வீடியோவில் படமும் பார்த்து, அட, இது அருமையான வாழ்வு என்று காலை நீட்டிக்கொண்டு இருந்தவர்கள், வேலை தேட மாட்டார்கள் போல என்று, வீட்டுக்காரர், மெதுவாக கதைகொடுத்து, கூப்பிட்டவர்கள் சம்பளம் தர தானே வேண்டும், கேட்டு பாருங்கோவன் என்று கிளப்பி.... அவரும் என்ன பேசிக்கொண்டு வந்தமோ அதனை மறந்து... நன்றி கெட்ட வேலை பார்த்தார்.   

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக்கு ந‌ல்ல‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம்   தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இர‌ட்டை ம‌கிழ்ச்சி   இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக‌ இந்திய‌ அணிய‌ தெரிவு செய்தேன்   அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிட‌ம் தோக்க‌ கூடும்   மிஸ்சில் ஸ்ராக் இர‌ண்டு விளையாட்டில் விளையாட‌ வில்லை காய‌ம் போல‌............................
    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.