Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை : அமைச்சர் டக்ளஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை பாதிக்கும் செயற்பாடுகளையே தொல்லியல் திணைக்களங்கள் முன்னெடுத்துள்ளன

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை : அமைச்சர் டக்ளஸ்!

வட மாகாணத்தில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட வட மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விடயம் குறித்து, பிரதமரோடு கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வட மாகாணத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கும் போது தமிழ் மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்து, எதிர்வரும் வாரங்களில் இவை நடைமுறைக்கு வரும் என பிரதமர் உறுதியளித்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2023/1356420

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கொழும்பு தமிழர்களை பாதிக்காதா?

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

இது கொழும்பு தமிழர்களை பாதிக்காதா?

இது சும்மா ஒரு பூச்சாண்டி, இவராவது நடவடிக்கை எடுப்பதாவது, ஒருவரையாவது அனுப்பி பார்க்கட்டுமே, 

கருத்து மட்டும்தான், இதற்கு இவரிடம் பஞ்சமா🤣

  • கருத்துக்கள உறவுகள்

மண் கிள்ள சிங்கள இராணுவத்தை அழைப்பவர்.. வடக்குக் கிழக்கில் இலட்சக்கணக்கில் சிங்கள இராணுவ இருப்பை ரசிப்பவர்.. சிங்கள தொழிலாளர்களை விரட்டுவாராம். முதலில் தமிழர் கடற்பரப்பில்.. அடாத்தாக மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்களை வெளியேற்றட்டும் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

இது சும்மா ஒரு பூச்சாண்டி, இவராவது நடவடிக்கை எடுப்பதாவது, ஒருவரையாவது அனுப்பி பார்க்கட்டுமே, 

கருத்து மட்டும்தான், இதற்கு இவரிடம் பஞ்சமா🤣

உங்களுக்கு விளங்குது அங்கு இருப்பவர்க்கு விளங்கனுமே பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

இது கொழும்பு தமிழர்களை பாதிக்காதா?

இல்லை. நீங்கள் பணம் அனுப்பும் வரைக்கும் பாதிக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் : டக்ளஸ் தேவானந்தா!

kugenNovember 1, 2023
 

 

douglas-720x450.jpg

 

வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தொடர்பாக ஊடகங்களுக்கு திங்கட்கிழமை (30) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
இன்று காலை பிரதமரோடு கலந்துரையாடி இருந்தேன். வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மை மக்கள் தமிழ் பேசுகின்ற மக்கள். தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற போது தமிழ் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. அது உடனடியாக களையப்பட வேண்டும் என்று சொல்லி இருந்தேன் இதற்கு முன்னர் அமைச்சரவையிலும் அவரோடு கலந்துரையாடி இருக்கின்றேன்.

ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் தென்னிலங்கையில் இருந்து நியமிக்கப்பட்டு இங்கு வருவதாக அறிந்து தான் அதனை உடனடியாக நிறுத்துமாறும், இங்கிருக்கின்றவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சொல்லியபோது அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். அடுத்த அடுத்த கிழமைகளில் இவை நடைமுறைக்கு வரும்.

தற்போது வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு இங்கு மொழிப் பிரச்சனை, தங்குமிட பிரச்சினைகள் இருக்கின்றது, இதனால் அதற்கே அவர்கள் உழைப்பது செலவுக்கே போய்விடும்.

இது ஒரு அறியாமையில் செய்யப்பட்ட விடயமா அல்லது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விடயமா என்பது வேறு. என்னை பொறுத்தவரையில் நான் இதற்கு இடம் கொடுக்க மாட்டேன்.

கடந்த காலத்தில் நல்லாட்சி என்ற பெயரில் இங்கு நடந்தது போன்று நான் இங்கு நடக்க விட மாட்டேன்.

ஏற்கனவே தொல்லியல் திணைக்களத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பிய போது அவர்களும் திருப்பி அனுப்பபடுவார்கள் என தெரிவித்தார்.
 

 

http://www.battinews.com/2023/11/blog-post_96.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Cruso said:

இல்லை. நீங்கள் பணம் அனுப்பும் வரைக்கும் பாதிக்காது. 

கொடுத்தவன் கொடுக்கா விட்டால் வெட்டுக்குத்து பகைதான் வரும்.....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2023 at 02:42, தமிழ் சிறி said:

வட மாகாணத்தில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நியமனம் வழங்கிய பின் இது சாத்தியமா?

பெரியதொரு போராட்டம் நடாத்த இத்தனை பேரும் போதுமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.