Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா: ஹார்ட்ஃபோர்ட் நகரமுதல்வராகும் அருணன் அருளம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Screen-Shot-2023-11-10-at-12.54.37-AM-e1
 

அமெரிக்கா: ஹார்ட்ஃபோர்ட் நகரமுதல்வராகும் அருணன் அருளம்பலம்

 

 அமெரிக்க கனெக்ரிகட் மாநிலத்திலுள்ள ஹார்ட்ஃபோர்ட் என்னும் நகரின் முதல்வருக்கான (மேயர்) தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமிழரான அருணன் அருளம்பலம் தேர்வாகியுள்ளார். இத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட, இதற்கு முன்னர் தொடர்ந்து எட்டு வருடங்களாக முதல்வராக இருந்த லூக் புறோனின் தான் இனிமேல் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

“தேர்தல் பிரசாரத்தின்போது உங்களில் பலர் இந் நகரத்திற்கான உங்கள் நம்பிக்கைகளையும், கனவுகளையும் என்னோடு பகிர்ந்துகொண்டிருந்தீர்கள். நான் நகர மண்டபம் செல்லும்போது நான் அதை எப்போதும் மனதில் வைத்திருப்பேன். நான் உங்கள் ஒவ்வொருக்காகவும் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பேன்” என வெற்றியை ஏற்றுக்கொண்ட அருளம்பலம் தெரிவித்தார்.

 

போரின் காரணமாக இலங்கையை விட்டு சிம்பாப்வே சென்ற அவரது பெற்றோர்களுக்கு அங்கு பிறந்தவர் அருணன். பின்னர் அமெரிக்கா வந்து அங்கு திருமணமாகி நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாக உள்ளார்.

மாநில ஆளுனர் நெட் லமொண்ட்டின் நிர்வாகத்தின்கீழ் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராகப் பணியாற்றிய அருணன் பின்னர் ஹார்ட்ஃபோர்ட் நகரிலுள்ள பாழடைந்த வீடுகளைத் திருத்திக் கொடுக்கும் இலாபநோக்கற்ற ஒரு நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியாகப் பணியாற்றிவந்தார்.

https://marumoli.com/அமெரிக்கா-ஹார்ட்ஃபோர்ட்/?fbclid=IwAR1UCVvsKjZb0206bKKINUtv6KpqnJkRluyZEO29H9Z3GXeNQ_e8v7Gdsbo

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:
Screen-Shot-2023-11-10-at-12.54.37-AM-e1
 

அமெரிக்கா: ஹார்ட்ஃபோர்ட் நகரமுதல்வராகும் அருணன் அருளம்பலம்

 

 அமெரிக்க கனெக்ரிகட் மாநிலத்திலுள்ள ஹார்ட்ஃபோர்ட் என்னும் நகரின் முதல்வருக்கான (மேயர்) தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமிழரான அருணன் அருளம்பலம் தேர்வாகியுள்ளார். இத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட, இதற்கு முன்னர் தொடர்ந்து எட்டு வருடங்களாக முதல்வராக இருந்த லூக் புறோனின் தான் இனிமேல் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

“தேர்தல் பிரசாரத்தின்போது உங்களில் பலர் இந் நகரத்திற்கான உங்கள் நம்பிக்கைகளையும், கனவுகளையும் என்னோடு பகிர்ந்துகொண்டிருந்தீர்கள். நான் நகர மண்டபம் செல்லும்போது நான் அதை எப்போதும் மனதில் வைத்திருப்பேன். நான் உங்கள் ஒவ்வொருக்காகவும் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பேன்” என வெற்றியை ஏற்றுக்கொண்ட அருளம்பலம் தெரிவித்தார்.

 

போரின் காரணமாக இலங்கையை விட்டு சிம்பாப்வே சென்ற அவரது பெற்றோர்களுக்கு அங்கு பிறந்தவர் அருணன். பின்னர் அமெரிக்கா வந்து அங்கு திருமணமாகி நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாக உள்ளார்.

மாநில ஆளுனர் நெட் லமொண்ட்டின் நிர்வாகத்தின்கீழ் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராகப் பணியாற்றிய அருணன் பின்னர் ஹார்ட்ஃபோர்ட் நகரிலுள்ள பாழடைந்த வீடுகளைத் திருத்திக் கொடுக்கும் இலாபநோக்கற்ற ஒரு நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியாகப் பணியாற்றிவந்தார்.

https://marumoli.com/அமெரிக்கா-ஹார்ட்ஃபோர்ட்/?fbclid=IwAR1UCVvsKjZb0206bKKINUtv6KpqnJkRluyZEO29H9Z3GXeNQ_e8v7Gdsbo

வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

கேட்கவே... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.  👍
அமெரிக்காவின் ஹார்ட்ஃபோர்ட்  நகர முதல்வர் அருணன் அருளம்பலத்திற்கு 
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்.உள்நாட்டில் அரசியலுரிமைகள் மறக்கப்பட்ட தமிழர்கள் சென்ற  நாடுகளில் அரசியலிலும் ஏனைய துறைகளிலும் முக்கிய பொறுப்பில் இருப்பது. தமிழர்களின் முன்னேற்றததை எந்தசக்தியாலும் தடுக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்து  போரின் காரணமாக ஆபிரிக்க நாடுகளுக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றதாக இதுவரை தகவல்கள் இல்லை.

சிம்பாப்பே போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கு தொழில் ரீதியில் தமிழர்கள் சென்று வந்ததுதான் இதுவரை நான் அறிந்தது.

"போரின் காரணமாக"  என்கிற கூற்று மறுமொழியின் இடைச் செருகலாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்

அருணன் அருளம்பலத்துக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இலங்கையில் இருந்து  போரின் காரணமாக ஆபிரிக்க நாடுகளுக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றதாக இதுவரை தகவல்கள் இல்லை.

சிம்பாப்பே போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கு தொழில் ரீதியில் தமிழர்கள் சென்று வந்ததுதான் இதுவரை நான் அறிந்தது.

"போரின் காரணமாக"  என்கிற கூற்று மறுமொழியின் இடைச் செருகலாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். 

அது சரி  நீங்கள் அருணன் வாழ்ந்துகிறீகளா??? இல்லையா??? 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அது சரி  நீங்கள் அருணன் வாழ்ந்துகிறீகளா??? இல்லையா??? 😁

"இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க" என்பது நான் கல்விகற்ற பாடசாலையின் நாளாந்த காலைநேர வழிபாட்டின் இறுதி வசனமாகக் கூறுவது. எனக்கு மிகவும் பிடித்த  வசனம். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன நகரத்திற்கும் மக்களுக்கும் நன்மை செய்ய முயற்சிப்பார் 👍மதத்தின் சட்டம் அந்த நகரத்தை ஆளவேண்டும் என்று முயற்சிக்க மாட்டார் 👍

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

"இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க" என்பது நான் கல்விகற்ற பாடசாலையின் நாளாந்த காலைநேர வழிபாட்டின் இறுதி வசனமாகக் கூறுவது. எனக்கு மிகவும் பிடித்த  வசனம். 

நல்லது மிக்க மகிழ்ச்சி நீங்கள் படித்து இருக்கிறீர்கள்  உங்களுக்கு சொல்லி தந்துள்ளார்கள்  இருந்தாலும் வாழ்த்தவில்லை   

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ஹார்ட் போர்ட் நகர மேயருக்கு......!  💐

On 11/11/2023 at 06:59, Kapithan said:

இலங்கையில் இருந்து  போரின் காரணமாக ஆபிரிக்க நாடுகளுக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றதாக இதுவரை தகவல்கள் இல்லை.

சிம்பாப்பே போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கு தொழில் ரீதியில் தமிழர்கள் சென்று வந்ததுதான் இதுவரை நான் அறிந்தது.

"போரின் காரணமாக"  என்கிற கூற்று மறுமொழியின் இடைச் செருகலாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். 

எனக்கு தெரிந்த ஒருவர், அவரது தந்தையார் திறைசேரியில் நல்ல உத்தியோகத்தில் இருந்தவர். 83ம் ஆண்டு கலவரத்தில் எல்லோரையும் போல் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஓடிவந்து, பின்னர் போஸ்வனியா போனவர். அவரைத்தொடர்ந்து பிள்ளைகளும் போஸ்வனியாவிற்கு குடிபெயர்ந்து, இன்று அமெரிக்காவில் உள்ளார்கள்.

யுத்தம் பல பொருளாதார அகதிகளை அல்லது குடியேறிகளை உருவாக்கியது என்பது உண்மை. 

வாழ்த்துக்கள் அருணன்  அருளம்பலம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சீனித்தம்பி said:

எனக்கு தெரிந்த ஒருவர், அவரது தந்தையார் திறைசேரியில் நல்ல உத்தியோகத்தில் இருந்தவர். 83ம் ஆண்டு கலவரத்தில் எல்லோரையும் போல் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஓடிவந்து, பின்னர் போஸ்வனியா போனவர். அவரைத்தொடர்ந்து பிள்ளைகளும் போஸ்வனியாவிற்கு குடிபெயர்ந்து, இன்று அமெரிக்காவில் உள்ளார்கள்.

யுத்தம் பல பொருளாதார அகதிகளை அல்லது குடியேறிகளை உருவாக்கியது என்பது உண்மை. 

வாழ்த்துக்கள் அருணன்  அருளம்பலம். 

  நன்றி சீனித்தம்பி அவர்களே. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய பேரன் Jaffna St. John's College ன் பழைய மாணவர்,............

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.