Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிள்ளைகளின் நிர்வாண படங்களை விற்று உழைக்கும் நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டுள்ளது - ஹரிணி அமரசூரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தமது பிள்ளைகளின்  நிர்வாண படத்தை வைத்து உழைக்கும் நிலைக்கு சமூக நிலை பலவீனமடைந்துள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.

இந்த அரசாங்கத்துடன் பேசி பயனில்லை. பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதங்களினால்  மக்களுக்கு பயனேதுமில்லை,ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (8) இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  விளையாட்டுத்துறை, இளைஞர்  விவகாரங்கள் அமைச்சு  மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான  செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு,மகளிர்  விவகார அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு மட்டுப்படுத்தல் உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பினர் இன்று காலை (நேற்று) கொழும்பில் மேற்கொண்ட போராட்டத்தில் பொலிஸார் வன்மையான முறையில் தாக்குதலை மேற்கொண்டார்கள்.

பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளவர் மூன்று மாத காலத்துக்குள் தனது செயற்பாடுகளை காண்பித்து ஆட்சியாளர்களை மகிழ்விக்க முயற்சிக்கிறார்.உயர்மட்டத்தில் இருந்து  வந்த கட்டளைகளுக்கு  அமையவே பொலிஸார் ஜனநாயக போராட்டத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள்.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் போது அதிகாரத்தை கொண்டு மக்களின் குரல்கள் முடக்கப்படுகின்றன.ஆனால் ஒன்றிணைந்து செயற்பட ஜனாதிபதி அழைப்பு விடுக்கிறார்.மக்களுக்கு எதிராக செயற்படும் இந்த அரசாங்கத்துடன் எவ்வாறு ஒன்றிணைவது.இனி பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை.சிறந்த தலைமைத்துவத்துக்காக பெண்களை ஒன்றிணைப்பேன்.

குருநாகல் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் பதிவாகியுள்ளன.ஒரு தந்தை தனது 15 மகளின் நிர்வாண படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து 01 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.

அதற்கு தனது மனைவிக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளார். இறுதில் மனைவி அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இறுதியில் அந்த 15 வயது சிறுமிக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை. இந்த சம்பவத்துக்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தினால் சமூகம் இன்று  இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

பாராளுமன்றத்தில் பேசுவது பயனற்றதாகவே உள்ளது. முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு இங்கு யாரும் இல்லை. முன்பள்ளி பாடசாலையின் ஆசிரியர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினை பற்றி பேசுமாறு பலர் கோரிக்கை விடுக்கிறார்கள். பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம், ஆனால் பேசுவதால் எவ்வித பயனுமில்லை.

வெளியில் நடப்பது ஒன்று பாராளுமன்றத்தில் நடப்பது பிறிதொன்று,அரசாங்கம் செயற்படுத்துவது பிறிதொன்று. ஆகவே இந்த ஆட்சியாளர்களினால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பிள்ளைகளின் நிர்வாண படங்களை விற்று உழைக்கும் நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டுள்ளது - ஹரிணி அமரசூரிய | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

குருநாகல் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் பதிவாகியுள்ளன.ஒரு தந்தை தனது 15 மகளின் நிர்வாண படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து 01 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.

அதற்கு தனது மனைவிக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளார். இறுதில் மனைவி அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இறுதியில் அந்த 15 வயது சிறுமிக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை. இந்த சம்பவத்துக்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தினால் சமூகம் இன்று  இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இததனே மோட்டு சிங்களவர் என்கிறோம் மற்றைய இனத்தவரையும் வாழ விடாமல் கடைசியில் தாங்களும் வாழாமல் போகிற இனம் என்றால் உலகில் சிங்கள இனம்தான் .

இனி வரும் காலம் இதைவிடமோசமான செய்திகள் வரும் ஏனென்றால் சிங்களவர்கள் உடல் உழைப்பு தெரியாதவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இனத்திலும் இப்படி ஊத்தைகள் இருக்கிறார்கள் அல்லவா?

பின்வரும் தலையங்ககளை பாருங்கள்
இவையெல்லம் தமிழர் பிரதேசங்களில் நடந்தவைகள் அல்லவா? 
அப்ப தமிழர்கள் இன்னும் நாகரீகம் அடையாதா முட்டாள்களா?

கள்ள விசாவில் இத்தாலி செல்ல முயன்ற யாழ், கிளிநொச்சி யுவதிகள் கைது!

சுவிஸ் சித்தியும் தாயும் ஏசியதால் யாழில் மாணவி தற்கொலை முயற்சி!! ஓ.எல் பெறுபேற்றில் விஞ்ஞான பாடத்தில் சாதாரண சித்தியாம்!!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

லண்டன் தமிழன் வாகீசனை புலி என பொலிசாரிடம் மாட்டிவிட்ட மனைவி தர்சிகா!! பரபரப்பு தகவல்!!

யாழில் மாணவிகள் ஆண்களுடன் சாப்பிட்டு படுத்து எழும்ப மணித்தியாலத்திற்கு வாடகை!! விதானை,அரச ஊழியர்களின் பாலியல் வீடியோக்கள்!!

ஆண் உறுப்பை பெரிதாக்கும் ஊசி யாழ் நோதேன் வைத்தியசாலை அஜந்தா டொக்டரிடம் உள்ளதா? நடப்பது என்ன?

யாழில் பட்டப்பகலில் ஆவா குழுக் காவாலிகள் சினிமாப் பாணியில் மோதல்!! மக்கள் சிதறி ஓட்டம்!!

 

இப்படி நான் கேட்பதனால் சிங்கள‌? ஆதரவாளன் அல்ல? 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நான் கேட்பதனால் சிங்கள‌? ஆதரவாளன் அல்ல? 

 

ஆமா..நான் அப்படி நினைக்கவிலை....😋

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

எல்லா இனத்திலும் இப்படி ஊத்தைகள் இருக்கிறார்கள் அல்லவா?

பின்வரும் தலையங்ககளை பாருங்கள்
இவையெல்லம் தமிழர் பிரதேசங்களில் நடந்தவைகள் அல்லவா? 
அப்ப தமிழர்கள் இன்னும் நாகரீகம் அடையாதா முட்டாள்களா?

கள்ள விசாவில் இத்தாலி செல்ல முயன்ற யாழ், கிளிநொச்சி யுவதிகள் கைது!

சுவிஸ் சித்தியும் தாயும் ஏசியதால் யாழில் மாணவி தற்கொலை முயற்சி!! ஓ.எல் பெறுபேற்றில் விஞ்ஞான பாடத்தில் சாதாரண சித்தியாம்!!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

லண்டன் தமிழன் வாகீசனை புலி என பொலிசாரிடம் மாட்டிவிட்ட மனைவி தர்சிகா!! பரபரப்பு தகவல்!!

யாழில் மாணவிகள் ஆண்களுடன் சாப்பிட்டு படுத்து எழும்ப மணித்தியாலத்திற்கு வாடகை!! விதானை,அரச ஊழியர்களின் பாலியல் வீடியோக்கள்!!

ஆண் உறுப்பை பெரிதாக்கும் ஊசி யாழ் நோதேன் வைத்தியசாலை அஜந்தா டொக்டரிடம் உள்ளதா? நடப்பது என்ன?

யாழில் பட்டப்பகலில் ஆவா குழுக் காவாலிகள் சினிமாப் பாணியில் மோதல்!! மக்கள் சிதறி ஓட்டம்!!

 

இப்படி நான் கேட்பதனால் சிங்கள‌? ஆதரவாளன் அல்ல? 

உண்மை கொழும்பான்.  மோசமான நடத்தை உள்ளவர்களும் கிறிமினல்களும் மோசடி பேர்வழிகளும் எல்லா இனத்திலும் உள்ளார்கள். தமிழர்களிலும் நிறையவே இருக்கிறார்கள். ஜரோப்பிய சிறைச்சாலைகளுக்கு ஒரு விசிற் போனால் தமிழர்களில் தமிழர்களில் உள்ள  கிறிமினல்கள் பற்றி.  இது தான் உலக ஜதார்ததம்.  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

எல்லா இனத்திலும் இப்படி ஊத்தைகள் இருக்கிறார்கள் அல்லவா?

பின்வரும் தலையங்ககளை பாருங்கள்
இவையெல்லம் தமிழர் பிரதேசங்களில் நடந்தவைகள் அல்லவா? 
அப்ப தமிழர்கள் இன்னும் நாகரீகம் அடையாதா முட்டாள்களா?

கள்ள விசாவில் இத்தாலி செல்ல முயன்ற யாழ், கிளிநொச்சி யுவதிகள் கைது!

சுவிஸ் சித்தியும் தாயும் ஏசியதால் யாழில் மாணவி தற்கொலை முயற்சி!! ஓ.எல் பெறுபேற்றில் விஞ்ஞான பாடத்தில் சாதாரண சித்தியாம்!!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

லண்டன் தமிழன் வாகீசனை புலி என பொலிசாரிடம் மாட்டிவிட்ட மனைவி தர்சிகா!! பரபரப்பு தகவல்!!

யாழில் மாணவிகள் ஆண்களுடன் சாப்பிட்டு படுத்து எழும்ப மணித்தியாலத்திற்கு வாடகை!! விதானை,அரச ஊழியர்களின் பாலியல் வீடியோக்கள்!!

ஆண் உறுப்பை பெரிதாக்கும் ஊசி யாழ் நோதேன் வைத்தியசாலை அஜந்தா டொக்டரிடம் உள்ளதா? நடப்பது என்ன?

யாழில் பட்டப்பகலில் ஆவா குழுக் காவாலிகள் சினிமாப் பாணியில் மோதல்!! மக்கள் சிதறி ஓட்டம்!!

 

இப்படி நான் கேட்பதனால் சிங்கள‌? ஆதரவாளன் அல்ல? 

நீங்கள் ஆதாரமாய் எடுத்து விட்ட அனைத்து தலையங்கமும் vampan.net எனும் இணைய தளத்தில் மட்டுமே செய்தியாக வெளியிடபட்டு உள்ளன வேறு தமிழ் தளங்கள் ஒன்றிலும் அந்த தலையங்கங்கள் கானபடவில்லையே என்ன காரணமாய் இருக்கும் ?

34 minutes ago, island said:

தமிழர்களிலும் நிறையவே இருக்கிறார்கள். ஜரோப்பிய சிறைச்சாலைகளுக்கு ஒரு விசிற் போனால் தமிழர்களில்

சும்மா ஆதாரம் இல்லாமல் தமிழர்களை விட இலங்கை முஸ்லிம்கள்  ஐரோப்பிய சிறைகளில் உள்ளனர் என்றால் நீங்கள் விடுவீங்களா? தமிழர் கிரிமினல்  புள்ளி விபரம் ஏதாவது உங்களிடம் இருந்து இருந்தால் அதனை காட்டி உங்கள் கருத்துக்களை வைத்து இருந்து இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

நீங்கள் ஆதாரமாய் எடுத்து விட்ட அனைத்து தலையங்கமும் vampan.net எனும் இணைய தளத்தில் மட்டுமே செய்தியாக வெளியிடபட்டு உள்ளன வேறு தமிழ் தளங்கள் ஒன்றிலும் அந்த தலையங்கங்கள் கானபடவில்லையே என்ன காரணமாய் இருக்கும் ?

சும்மா ஆதாரம் இல்லாமல் தமிழர்களை விட இலங்கை முஸ்லிம்கள்  ஐரோப்பிய சிறைகளில் உள்ளனர் என்றால் நீங்கள் விடுவீங்களா? தமிழர் கிரிமினல்  புள்ளி விபரம் ஏதாவது உங்களிடம் இருந்து இருந்தால் அதனை காட்டி உங்கள் கருத்துக்களை வைத்து இருந்து இருக்கலாம் .

தலையங்கம் வம்மனில் எடுக்கப்பட்டதுதான். செய்திகள் எல்லா தளங்களிம் வந்ததுத
கேள்வி இப்படி ஒருசம்பவம் ஒரு ஊத்தை செய்தால் சிங்களவன் மடையனா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, colomban said:

தலையங்கம் வம்மனில் எடுக்கப்பட்டதுதான். செய்திகள் எல்லா தளங்களிம் வந்ததுத
கேள்வி இப்படி ஒருசம்பவம் ஒரு ஊத்தை செய்தால் சிங்களவன் மடையனா?

அவசரம் வேணாம் உங்கள் தலையங்கம் வந்த வேறு ஒரு தமிழ்  தளத்தை தேட முடியவில்லை உங்களால் முடிந்தால் ?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, island said:

எல்லா இனத்திலும் உள்ளார்கள். தமிழர்களிலும் நிறையவே இருக்கிறார்கள். ஜரோப்பிய சிறைச்சாலைகளுக்கு ஒரு விசிற் போனால்

அங்கே  எல்லாம்  போய்  தான்  தமிழர்களும் அதே  மாதிரியானவர்கள்  என்பதை  அறிய வேண்டியது  இல்லை.  தமிழர்  பகுதிகளில்  தமிழர்கள்  செய்த  பாலியல்  கொடுமைகள்  பற்றி யாழ்களத்தில் செய்திகள் படித்தோமே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

சும்மா ஆதாரம் இல்லாமல் தமிழர்களை விட இலங்கை முஸ்லிம்கள்  ஐரோப்பிய சிறைகளில் உள்ளனர் என்றால் நீங்கள் விடுவீங்களா? தமிழர் கிரிமினல்  புள்ளி விபரம் ஏதாவது உங்களிடம் இருந்து இருந்தால் அதனை காட்டி உங்கள் கருத்துக்களை வைத்து இருந்து இருக்கலாம்

யார் அதிகம் இருக்கிறார்கள. என்ற புள்ளிவிபரம் நான் கூறவில்லை. பலவேறு நாடுகளை சேர்ந்த பல் வேறு இனங்கள் மதங்களைச் சேர்ந்த  கிறிமினல்கள் இருப்பது ஜதார்த்தம் .  அதில் எம்மவரும் நிறைய இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. 

நான் கூற வந்த பிரதான விடயம் நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா இனத்திலும் நீக்கமற நிறைந்து  இருக்கிறார்கள்.  இதை தெரிந்து கொள்ள சாதாரண பொது அறிவு இருந்தாலே போதுமானது.  

இந்த விடயத்தில் எந்த இனத்திக்கும் மற்றய இனத்தை நோக்கி சுட்டு விரல் நீட்டும் ஜோக்கிதை இல்லை என்பதே  நிதர்சனம். 

ஜேசுதாஸின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள். முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்.  

இந்த 'மோட்டுச்' சிங்களவனுக்கு எதிராகத் தான் 30 வருடத்துக்கும் மேலாக ஆயுத ரீதியில் போராடி வெல்ல முடியாமல் தலைமையும் முற்றாக அழிந்து படு தோல்விக்குள்ளாகி, இன்று கல்வி, பொருளாதார, கலாச்சாரம் என பல்வேறு அம்சங்களில் சீரழிந்து, போதை நுகரும், வாள் வெட்டும் குழுக்களாக மாறி அவனை விட பல்லாயிரம் மடங்கு மோட்டுச் சமூகமாகி நிற்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

யார் அதிகம் இருக்கிறார்கள. என்ற புள்ளிவிபரம் நான் கூறவில்லை. பலவேறு நாடுகளை சேர்ந்த பல் வேறு இனங்கள் மதங்களைச் சேர்ந்த  கிறிமினல்கள் இருப்பது ஜதார்த்தம் .  அதில் எம்மவரும் நிறைய இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. 

 

8 hours ago, colomban said:

தலையங்கம் வம்மனில் எடுக்கப்பட்டதுதான். செய்திகள் எல்லா தளங்களிம் வந்ததுத
கேள்வி இப்படி ஒருசம்பவம் ஒரு ஊத்தை செய்தால் சிங்களவன் மடையனா?

 

உசுபேத்தல் ஊடகங்கள் ஒவ்வொரு காலத்திலும் உண்டு இதே கொழும்பான் எனும் உறவுவால் நேரடியாக வம்பன் இணையத்தின் செய்திகளை இங்கு யாழில் இணைக்க முடியவில்லை ஏன் என்று அவரால் விளக்க முடியுமா ?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.