Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்தள சர்வதேச விமான நிலையம் இந்தியாவிடம் ஒப்படைப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

download-10.jpg?resize=299,168&ssl=1

மத்தள சர்வதேச விமான நிலையம் இந்தியாவிடம் ஒப்படைப்பு?

ஹம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திர கூறியுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் மத்தள விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

அங்கு பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனத்தின் ஊடாக வழங்க திட்டமிட்டுள்ளது

மேலும் இந்த திட்டத்தினூடாக ஈட்டப்படும் வருமானத்தின் ஒரு பகுதி, அரசுக்கு சொந்தமாகும் எனவும் துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மத்தள சர்வதேச விமான நிலையத்தை பராமரிப்பதற்காக அரசாங்கம் வருடாந்தம் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடுவதாகவும், புதிய வேலைத்திட்டத்தின் மூலம் அந்த தொகையை சேமிக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1362263

Edited by தமிழ் சிறி

பேசாமல், ஒட்டு மொத்த இலங்கை சனத்தொகையை மூன்றாகவோ அல்லது 10 ஆகவோ பிரித்து, ஒவ்வொடு நாட்டுக்கும் விலை பேசி விட்டால் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

பேசாமல், ஒட்டு மொத்த இலங்கை சனத்தொகையை மூன்றாகவோ அல்லது 10 ஆகவோ பிரித்து, ஒவ்வொடு நாட்டுக்கும் விலை பேசி விட்டால் நல்லது. 

நீங்கள் நினைத்த 

காரியம் கை கூடும்

ஆனால் நாள் செல்லும்.

2 hours ago, தமிழ் சிறி said:

மத்தள சர்வதேச விமான நிலையம் இந்தியாவிடம் ஒப்படைப்பு?

என்னப்பா நெல்லு காயப்போட இவ்வளவு அடிபாடா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பலாலி சர்வதேச விமானநிலையம் ஆருக்காம் விற்கப்போகினம்....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

பேசாமல், ஒட்டு மொத்த இலங்கை சனத்தொகையை மூன்றாகவோ அல்லது 10 ஆகவோ பிரித்து, ஒவ்வொடு நாட்டுக்கும் விலை பேசி விட்டால் நல்லது. 

இப்ப நீங்களே சொல்லிட்டிங்க .

1 hour ago, alvayan said:

அப்ப பலாலி சர்வதேச விமானநிலையம் ஆருக்காம் விற்கப்போகினம்....

அநேகமா லைக்கா எடுக்கும் என்கிறார்கள் பகிடிக்குத்தான் 😀

5 hours ago, தமிழ் சிறி said:

மேலும் இந்த திட்டத்தினூடாக ஈட்டப்படும் வருமானத்தின் ஒரு பகுதி, அரசுக்கு சொந்தமாகும் எனவும் துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தை நடத்த முடியாது என்பது இலங்கை அரசின் இயலாமையைக் குறிக்கும். நாளுக்கு நாள் விமானப் பயணங்கள் அதிகமாகிவரும் நிலையில் விமான நிலையங்கள் நட்டமடையாது. இதனை வேறொரு நிறுவனம் எடுத்து நடத்தித் தாமும் இலாபம் ஈட்டி மேலதிகமாக இலங்கை அரசங்கத்துக்கும் பங்கு கிடைக்குமாம். இதனையே இலங்கை அரசாங்கத்தால் தனியாக நடத்த முடியாதென்பது இலங்கையின் நிர்வாகத் திறனைக் கேவலமாகக் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அப்ப பலாலி சர்வதேச விமானநிலையம் ஆருக்காம் விற்கப்போகினம்....

அதை யாருக்கும் விற்க இந்தியா அனுமதிக்காது .

இந்தியாவை பொறுத்த வரையில் இலங்கையின் தென் பகுதியில்  பெரிதாக ஒரு கட்டுப்பாடும் இல்லை. துறைமுகமும் நூறு வருடங்களுக்கு சீனாவின் கைக்கு போய் விட்ட்து. இதையும் விடடாள் சீனா எடுத்துவிடும் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே இந்தியா இதனை எடுக்கும் கடடாய நிலைமைக்கு இந்திய வந்துள்ளது.


இப்போது இலங்கை இரும்பு விலைக்குத்தான் எல்லாவற்றையும் ஏலம் போடுது. கண்டி, நுவெரேலியா போன்ற இடங்களிலுள்ள தபால் கந்தோரையும் ஏலத்துக்கு விட்டிருக்கு. அதையும் இந்தியா எடுப்ப போகுதாம். இன்னும் விவசாய நிலங்களும் ஏலம் விடப்போவதாகவும் இந்தியா அதனையும் எடுக்கப்போவதாகவும் கூறப்படுகின்றது. இன்னும் நிறைய இரும்பு சாமான்கள் விரைவில் ஏலத்துக்கு வரும். 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

அதை யாருக்கும் விற்க இந்தியா அனுமதிக்காது .

இந்தியாவை பொறுத்த வரையில் இலங்கையின் தென் பகுதியில்  பெரிதாக ஒரு கட்டுப்பாடும் இல்லை. துறைமுகமும் நூறு வருடங்களுக்கு சீனாவின் கைக்கு போய் விட்ட்து. இதையும் விடடாள் சீனா எடுத்துவிடும் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே இந்தியா இதனை எடுக்கும் கடடாய நிலைமைக்கு இந்திய வந்துள்ளது.


இப்போது இலங்கை இரும்பு விலைக்குத்தான் எல்லாவற்றையும் ஏலம் போடுது. கண்டி, நுவெரேலியா போன்ற இடங்களிலுள்ள தபால் கந்தோரையும் ஏலத்துக்கு விட்டிருக்கு. அதையும் இந்தியா எடுப்ப போகுதாம். இன்னும் விவசாய நிலங்களும் ஏலம் விடப்போவதாகவும் இந்தியா அதனையும் எடுக்கப்போவதாகவும் கூறப்படுகின்றது. இன்னும் நிறைய இரும்பு சாமான்கள் விரைவில் ஏலத்துக்கு வரும். 😜

பழைய இரும்புச்சாமான் என்று மரியாதையாச் சொல்லுங்க.....அதாவது நம்ம காலத்திலை போத்தல் பித்தளை .. அடி ----- சாமான்  விக்கிறவையின் நினைவு  வருகுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Cruso said:

இன்னும் நிறைய இரும்பு சாமான்கள் விரைவில் ஏலத்துக்கு வரும். 😜

கோட்டை முனியப்பரை உங்கை ஆரும் ஏலத்துக்கு எடுக்கிற பிளான்????

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

கோட்டை முனியப்பரை உங்கை ஆரும் ஏலத்துக்கு எடுக்கிற பிளான்????

அதை கோடடை விஹாரையாக மாற்ற இருப்பதால் அதை ஏலத்துக்கு விடமுடியாது பாருங்கோ. 

22 hours ago, alvayan said:

பழைய இரும்புச்சாமான் என்று மரியாதையாச் சொல்லுங்க.....அதாவது நம்ம காலத்திலை போத்தல் பித்தளை .. அடி ----- சாமான்  விக்கிறவையின் நினைவு  வருகுது

ஓம் ஓம் அந்த காலத்தில சொல்வதைப்போல பழைய இரும்பு சாமான், பித்தளை, ஓடடை , ஒடிசல் எண்டுதான் இங்கு இப்போது போய்க்கொண்டு இருக்குது. 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.