Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இல்லை

இதை தான் நான் இங்கே முதலிலேயே குறிப்பிட்டேன்

1) சேர்ந்து நடக்காதவர்களது பார்வை இது தான்.

2[இனி சேரவும் மாட்டார்கள்

3) தேவையும் இல்லை.

எனவே இப்படியே மாறி மாறி கேள்விகளும் மீண்டும் கேள்விகளுமாக தொடர்ந்து செல்லும். 

3) நாம் சாதாரணமாக எமது வாழ்வில் வேலையில் நடாத்தும் ஒரு பேச்சு வார்த்தை மேசை எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு நிர்வாக விடயமே தெரியாதவர்களுக்கு என்னால் எழுத முடியாது. நன்றி. 

1) நீங்கள் சேர்ந்து  நடந்தவர் என்பதால் பிறரைச் சேர்ந்து நடக்காதவர் என்று தீர்ப்பிடும் தகுதி உங்களுக்கு இல்லை 

2) நீங்கள் யார் அதைத் தீர்மானிக்க?

3) தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உங்களுக்கு ஒருவராலும் வழங்கப்படவில்லை. 

2 minutes ago, விசுகு said:

எனது கோபத்துக்கு காரணமாக

செயலற்ற வீண் பேச்சு

மற்றும் நேரத்தை வீணடிக்க செய்தல்.

நன்றி வணக்கம் 

கோபத்தில் நிதானம் இழப்பது மூத்தவரிற்கு அழகு அல்ல. 

  • Replies 196
  • Views 15.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • 1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம்.  2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால்

  • சமஷ்டி(உள்ளக) என்கிற அடிப்படையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் இணங்கியிருந்தன என்பதுதான் என் புரிதல்.  தற்போது அது தொடர்பான தரவுகள் என்னிடம் இல்லை. முடிந்த அளவு தேடிப்பார்த்த

  • நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது,    பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை  அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்களால் தரக்கூடிய ஏதாவது ஒன்றை நீங்கள் முன் வையுங்கள் என்பது. 

இருந்தால் தானே வைப்பது ??  பேச்சுவார்த்தை தோல்வி இல்லை  ஏமாத்திட்டீங்களே என்பது தான் சரி  ஏனெனில் அரசாங்கத்திடம் ஏதுமில்லை   அரசாங்கம் என்ன வைத்திருந்தது ?? கொடுப்பதற்கு  என்று எவருமே கேட்கவில்லை  ஏன்?? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இருந்தால் தானே வைப்பது ??  பேச்சுவார்த்தை தோல்வி இல்லை  ஏமாத்திட்டீங்களே என்பது தான் சரி  ஏனெனில் அரசாங்கத்திடம் ஏதுமில்லை   அரசாங்கம் என்ன வைத்திருந்தது ?? கொடுப்பதற்கு  என்று எவருமே கேட்கவில்லை  ஏன்?? 

அதைத் தான் அண்ணா கடைசியாக கேட்டார்கள். அதற்கும் எதுவுமில்லை.

அத்துடன் இங்கே வந்திருந்தவர்களுடனான சந்திப்புகள் அதிகமாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இருந்தால் தானே வைப்பது ??  பேச்சுவார்த்தை தோல்வி இல்லை  ஏமாத்திட்டீங்களே என்பது தான் சரி  ஏனெனில் அரசாங்கத்திடம் ஏதுமில்லை   அரசாங்கம் என்ன வைத்திருந்தது ?? கொடுப்பதற்கு  என்று எவருமே கேட்கவில்லை  ஏன்?? 

ஏமாத்திவிட்டார்களென்றால் நாங்கள் ஏமாளிகள் என்று பொருள். 

ஏற்றுக்கொள்கிறீர்களா? 

"சிங்கலெயா மொடயா, கவும் கன்ட ஜோதயா"

என்று கூறிக் கூறியே எம்மை நாம் முட்டாளாக்கியதுதான் இறுதியில் நாம்  கண்டது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

பேச்சு வார்த்தைத் தோல்விக்கு இது ஒரு காரணம் என்பது சரி. ஆனால், நான் கேட்டது அதுவல்ல, என்ன மாற்றுத் திட்டம் (பேச்சு வார்த்தை சரி வராது என்று தெரிந்த பின்னர்) புலிகளிடம் இருந்தது? 

நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது,    பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை  அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்னரை விட பெறலாம்  என்ற விடுதலைப்புலிகளின் கணிப்பே. இதற்காகவே தென்னிலங்கையில் வெளிப்படையாக கடும் போக்கை காட்டக்கூடியவர்கள் பதவிக்கு வருவது எமது போராட்டத்துக்கு அனுகூலமாக அமையும் என்று நினைத்தார்கள்.

 இதற்கு முன்னர் பிரேமதாசவுடனான பேச்சுவார்ததையின் பின்னரும் சந்திரிக்காவுடனான பேச்சுவார்ததையின் பின்னரும்  பாரிய இராணுவ வெற்றிகளை பெற்று  முன்னரை விட மிகப் பலமான நிலையை அடைந்தது  போல் மேலும் இராணுவ ரீதியில் பலமடைவதே எமது எமது இலட்சியத்தை அடைய வழி என்றே புலிகள் கணித்தார்கள். இது பல காரணங்களால் பிழைத்துப் போனது. 

ஆனால், முன்னைய பேச்சுவார்ததைகளின் முடிவிலான தமது  இராணுவத்த்தோல்விகளின்  தமது முன்னைய  அனுபவங்களை பாடமாக எடுத்த  ஶ்ரீலங்கா அரசு இதனை   மிக கவனமாகவும் சிறப்பாகவும் நவீன தொழில்நுட்பங்களுடன் தனது போர்த் தயாரிப்புகளைச் செய்தது.   இதற்காக உலக நாடுகளிடம் உதவிகளை பெற்று கொண்டு மிக கடுமையான தாக்குதல்களை தொடுத்தது.  

விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் மீது மேற்கு  நாடுகள் அதிப்தி கொண்டிருந்தமையும்  தமிழீழம் என்ற நாடு அமைவதையும் இணைத்தலைமை நாடுகள் விரும்பாமை இலங்கை அரசுக்கு  இயல்பான சாதக நிலையாக   அமைந்தது.  இது அரசியல் ரீதியில் ஶ்ரீலங்கா அரசுக்கு பலம் சேர்த்தது. 

இவ்விடயங்களைப் புலிகள் சற்றும்  எதிர்பார்ககவில்லை. எதிர்பார்ததிருந்திருந்தால் நீங்கள் கேட்ட plan B யை வகுத்து,  பேச்சுவார்ததைகளை சாட்டுக்காவது  நீடித்து அரசியல் ரீதியான நகர்வுகளை செய்து  குறைந்தது மக்களின் இழப்புகளையாவது தவிர்த்திருப்பர்.  அதற்கான நிபுணத்துவம் வழங்கும்  மதியுரைஞரை இழந்ததும் தமிழரின் துரதிஷரமே. 

இறுதியில் இலங்கை அரசின் கண்மூடித்தனமான மக்கள் மீதான தாக்குதல்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து ஒரு யுத்த நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று விடுதலைப்புலிகள் கணிப்பும் ஈடேறவில்லை. காலம் கடந்தபின் புலம் பெயர் நாடுகளில் யுத்த நிறுத்தத்தை கோரி நடத்தப்பட்ட ஆர்பபாட்டங்களை மக்கள் கோரிக்கையாக ஏற்காமல் புலிகளின் அநுதாபிகள் தான் அவர்களை காப்பாற்ற செய்கிறார்கள் என்ற பார்வையுடன் மேற்கு நாடுகள் அதை உதாசீனம் செய்ததுடன் புலிகளின் அழிவை அவர்கள் விரும்பியதும்  காரணம். 

 விளைவு:  பேரம்  பேசி எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாத இன்றைய  அவல நிலையை  அமைந்தோம். 

Edited by island
எழுத்துப் பிழைத்திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, island said:

1) நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது,    பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை  அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்னரை விட பெறலாம்  என்ற விடுதலைப்புலிகளின் கணிப்பே. இதற்காகவே தென்னிலங்கையில் வெளிப்படையாக கடும் போக்கை காட்டக்கூடியவர்கள் பதவிக்கு வருவது எமது போராட்டத்துக்கு அனுகூலமாக அமையும் என்று நினைத்தார்கள்.

 2) இதற்கு முன்னர் பிரேமதாசவுடனான பேச்சுவார்ததையின் பின்னரும் சந்திரிக்காவுடனான பேச்சுவார்ததையின் பின்னரும்  பாரிய இராணுவ வெற்றிகளை பெற்று  முன்னரை விட மிகப் பலமான நிலையை அடைந்தது  போல் மேலும் இராணுவ ரீதியில் பலமடைவதே எமது எமது இலட்சியத்தை அடைய வழி என்றே புலிகள் கணித்தார்கள். இது பல காரணங்களால் பிழைத்துப் போனது. 

ஆனால், முன்னைய பேச்சுவார்ததைகளின் முடிவிலான தமது  இராணுவத்த்தோல்விகளின்  தமது முன்னைய  அனுபவங்களை பாடமாக எடுத்த  ஶ்ரீலங்கா அரசு இதனை   மிக கவனமாகவும் சிறப்பாகவும் நவீன தொழில்நுட்பங்களுடன் தனது போர்த் தயாரிப்புகளைச் செய்தது.   இதற்காக உலக நாடுகளிடம் உதவிகளை பெற்று கொண்டு மிக கடுமையான தாக்குதல்களை தொடுத்தது. 

3) விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் மீது மேற்கு  நாடுகள் அதிப்தி கொண்டிருந்தமையும்  தமிழீழம் என்ற நாடு அமைவதையும் இணைத்தலைமை நாடுகள் விரும்பாமை இலங்கை அரசுக்கு  இயல்பான சாதக நிலையாக   அமைந்தது.  இது அரசியல் ரீதியில் ஶ்ரீலங்கா அரசுக்கு பலம் சேர்த்தது. 

இவ்விடயங்களைப் புலிகள் சற்றும்  எதிர்பார்ககவில்லை. எதிர்பார்ததிருந்திருந்தால் நீங்கள் கேட்ட plan B யை வகுத்து,  பேச்சுவார்ததைகளை சாட்டுக்காவது  நீடித்து அரசியல் ரீதியான நகர்வுகளை செய்து  குறைந்தது மக்களின் இழப்புகளையாவது தவிர்த்திருப்பர்.  அதற்கான நிபுணத்துவம் வழங்கும்  மதியுரைஞரை இழந்ததும் தமிழரின் துரதிஷரமே. 

இறுதியில் இலங்கை அரசின் கண்மூடித்தனமான மக்கள் மீதான தாக்குதல்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து ஒரு யுத்த நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று விடுதலைப்புலிகள் கணிப்பும் ஈடேறவில்லை. காலம் கடந்தபின் புலம் பெயர் நாடுகளில் யுத்த நிறுத்தத்தை கோரி நடத்தப்பட்ட ஆர்பபாட்டங்களை மக்கள் கோரிக்கையாக ஏற்காமல் புலிகளின் அநுதாபிகள் தான் அவர்களை காப்பாற்ற செய்கிறார்கள் என்ற பார்வையுடன் மேற்கு நாடுகள் அதை உதாசீனம் செய்ததுடன் புலிகளின் அழிவை அவர்கள் விரும்பியதும்  காரணம். 

 விளைவு:  பேரம்  பேசி எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாத இன்றைய  அவல நிலையை  அமைந்தோம். 

1) இந்த ஆலோசனைகளை யார் விபு க்களுக்குக் கொடுத்தது (நிச்சயம் இலங்கையில் உள்ளவர்கள் அல்ல)

2) முதல் இரு பேச்சுவார்த்தைகளின் பின்னரும் ஆயுத, தளபாட பண வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்களின் பின்ணனியில் இருந்தவர்கள்  யார்?

3) இது விபு க்களுக்குத் தெரியாதா? சாதாரண பொதுமக்கள் உணரத் தலைப்பட்ட ஒரு விடயத்தை போராளிகள் உணரவில்லை என்று கூறுவதுபொருத்தமற்றது.

அப்படியாயின் போராளிகளை இந்த முடிவிற்குத் தள்ளியது யார்?  

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2024 at 01:36, Kapithan said:

இறுதியில், யானை பார்த்த குருடனின் நிலையில் இந்தத் திரியின் நிலை 

🤣

எனக்கும் சப்பென்று போய் விட்டது🙂...அங்கால இன்னொரு திரியில் குசாவிற்கும், இணையவனுக்கும் சண்டை நடக்கும் என்று எதிர் பாத்தேன் அதையும் காணேல்ல....என்ன நடக்குது என்று புரியவில்லை 

5 hours ago, Kandiah57 said:

இருந்தால் தானே வைப்பது ??  பேச்சுவார்த்தை தோல்வி இல்லை  ஏமாத்திட்டீங்களே என்பது தான் சரி  ஏனெனில் அரசாங்கத்திடம் ஏதுமில்லை   அரசாங்கம் என்ன வைத்திருந்தது ?? கொடுப்பதற்கு  என்று எவருமே கேட்கவில்லை  ஏன்?? 

அரசு,புலிகளை ஏமாத்தி கால அவகாசம் பெற தான் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டது என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது ஆச்சரியம் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

அரசு,புலிகளை ஏமாத்தி கால அவகாசம் பெற தான் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டது என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது ஆச்சரியம் 

நன்றாகவே தெரியும்  ஆனால் என்னை விட  மற்றவருக்கும். தெரியும் என்று நம்புவதால்  வெளியில் சொல்வது இல்லை  

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

1) எனக்கும் சப்பென்று போய் விட்டது🙂...அங்கால இன்னொரு திரியில் குசாவிற்கும், இணையவனுக்கும் சண்டை நடக்கும் என்று எதிர் பாத்தேன் அதையும் காணேல்ல....என்ன நடக்குது என்று புரியவில்லை 

2) அரசு,புலிகளை ஏமாத்தி கால அவகாசம் பெற தான் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டது என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது ஆச்சரியம் 

1) மெலிதாகக் கிளறுவதுதானே ...🤣

2) நாங்கள் யார்? சிங்களத்தை முட்டாள் என்று சொல்லிக்கொண்டே  ஏமாறும் ஆட்களெல்லோ நாங்கள்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

நீங்கள் தோல்வி கண்டது என்பதை வைத்துக்கொண்டு எல்லாம் பிழை எல்லவற்றையும் தவறவிட்டோம் என்பவர்.

ஆனால் நான் புலிகள் செய்த அனைத்தையும் ஆதரித்தவன் அதற்காக அவர்களுடன் இணைந்து நின்றவன் உழைத்தவன்.

எனவே அந்தந்த நேரத்திலேயே காலப் பகுதியிலேயே அவற்றிற்கான விளக்கம் அல்லது தெளிவு தரப்பட்டுள்ளது. எனவே குறை சொல்வது என்னை நானே குறை சொல்வதாகும். தோல்வி என்றவுடன் எனக்கு நானே வெள்ளை அடித்து எனது ஏழாவது அறிவை பாவித்து அப்பவே சொன்னேன் என்பவர்களுடன் நான் தொடர்புகளை பேணுவதில்லை. அதனால் தான் இன்றும் அவர்கள் தெய்வமாக என் வீட்டில் உள்ளார்கள். 

அவர் சொன்னார் இவர் கிசுகித்தார் கேள்விப்பட்டேன் என்பதல்ல வரலாறு. அது கிசுகிசு. நன்றி.

 

7 hours ago, Kapithan said:

பிரச்சனையின் ஆரம்பமே நீங்கள்/நாங்கள் மட்டுமே விடுதலைப் போராட்டத்தின் மொத்த குத்தகைக்காறர் எனும் சிந்தனைதான். 

விபு க்களுடன் பேச்சுவார்த்தை குழுவினருக்கு நெருக்கமாக இருந்தவர் என்று கூறியபடியால்தான் உங்களிடம் கேட்டேன்.  அதற்கு பதில் தரக்கூடிய ஆளுமை/விபரம்  உங்களிடத்தில் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். 

 

புலிகளிலும் அரைவாசிக்கு அரைவாசி பிழை என்றும் , பேச்சு வார்த்தை குழம்பினால் அதற்கான மாற்று திட்டமே புலிகளிடம் இருக்கவில்லை என்பது விசுகு அண்ணாவிற்கு தெரியும்....இரு தரப்புமே பேச்சு வார்த்தையை சீரியசாக[ அதாவது தமிழர்களுக்கான தீர்வை  பெற்று கொடுப்பதற்காய் ] பயன்படுத்தவில்லை ...ஆனால் அரச தரப்பு திறமையாய் பயன்படுத்திருந்தார்கள்...என்ன தானெதிரிகளாய் இருந்தாலும் சிங்களவர்கள் இராஜ தந்திரத்திரத்திற்கு முன் தமிழர்கள் தூசி .
 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

அரசு,புலிகளை ஏமாத்தி கால அவகாசம் பெற தான் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டது என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது ஆச்சரியம்

நிச்சயமாக.

அது தான் கூறினேன்  முன்னைய இரு பேச்சுவார்ததைகளை தொடர்ந்து,  விடுதலைப்புலிகள் இராணுவ வெற்றிகளை பெற்றதை பாடமாக கொண்டு யுத்த தயாரிப்பு வேலைகளை செய்தார்கள் என்றே கூறினேன். அதற்கான கால அவகாகாத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.  இதில் என்ன இரகசியம் உள்ளது . அது தெரிந்தது தானே ரதி. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

 

புலிகளிலும் அரைவாசிக்கு அரைவாசி பிழை என்றும் , பேச்சு வார்த்தை குழம்பினால் அதற்கான மாற்று திட்டமே புலிகளிடம் இருக்கவில்லை என்பது விசுகு அண்ணாவிற்கு தெரியும்....இரு தரப்புமே பேச்சு வார்த்தையை சீரியசாக[ அதாவது தமிழர்களுக்கான தீர்வை  பெற்று கொடுப்பதற்காய் ] பயன்படுத்தவில்லை ...ஆனால் அரச தரப்பு திறமையாய் பயன்படுத்திருந்தார்கள்...என்ன தானெதிரிகளாய் இருந்தாலும் சிங்களவர்கள் இராஜ தந்திரத்திரத்திற்கு முன் தமிழர்கள் தூசி .
 

இதில என்ன இன்னும் சோகம் என்னவென்றால் தமிழரை மீள எழ முடியா படுகுழிக்குள் தள்ளி விட்டு ஏன் இன்னும் மற்றவர்கள் தீர்வு பெற்று கொடுக்கிறார்கள் இல்லை என்று விசுகு அண்ணா போன்றவைகள் கேள்வி கேட்பது தான் 
 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

இதில என்ன இன்னும் சோகம் என்னவென்றால் தமிழரை மீள எழ முடியா படுகுழிக்குள் தள்ளி விட்டு ஏன் இன்னும் மற்றவர்கள் தீர்வு பெற்று கொடுக்கிறார்கள் இல்லை என்று விசுகு அண்ணா போன்றவைகள் கேள்வி கேட்பது தான் 
 

இத்தனை தியாகங்களைச் செய்தவர்கள் மீது யாரும் குற்றம் சொல்லிவிடக்கூடாது  என்கிற நியாயமான  பயம் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

இத்தனை தியாகங்களைச் செய்தவர்கள் மீது யாரும் குற்றம் சொல்லிவிடக்கூடாது  என்கிற நியாயமான  பயம் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. 

ஓம் ...அதற்காக எவ்வளவு காலத்திற்கு எல்லாத்தையும் மூடி மறைத்து கொண்டு தாங்கள் விட்ட பிழைகளை கதைக்காமல் மற்றவரை மற்றும் குறை சொல்லிக் கொண்டு இருப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

ஓம் ...அதற்காக எவ்வளவு காலத்திற்கு எல்லாத்தையும் மூடி மறைத்து கொண்டு தாங்கள் விட்ட பிழைகளை கதைக்காமல் மற்றவரை மற்றும் குறை சொல்லிக் கொண்டு இருப்பார்கள் 

(தேவையற்ற) குற்றவுணர்ச்சி/பயம் ? 

வேறு எதுவாக இருக்க முடியும்? 

ஆரோக்கியமான ஆய்வுக்கு எல்லோரும் உண்மைகளையும் தங்கள் கருத்துக்களையும் வெளிப்படையாகக் கூற வேண்டியது அவசியம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரதி said:

அரசு,புலிகளை ஏமாத்தி கால அவகாசம் பெற தான் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டது

இது சரி

 

26 minutes ago, ரதி said:

புலிகளிலும் அரைவாசிக்கு அரைவாசி பிழை என்றும் , பேச்சு வார்த்தை குழம்பினால் அதற்கான மாற்று திட்டமே புலிகளிடம் இருக்கவில்லை

பேச்சுவார்த்தை குழம்பும்   அதற்கான மாற்றுத்திட்டமும் குழம்பும்   காரணம் நீங்கள் மேலே கூறியுள்ளீர்கள்  அதாவது அரசாங்கம் கால அவகாசம் பெற முனைந்தது   

மாற்றுத்திட்டம்  செல்வா- பண்டா ஒப்பந்தம் அல்லது 

செல்வா- டல்லி ஒப்பந்தம்      இவை கிழித்து எறியப்பட்டது  எப்படி வைக்கிறது??? இந்த இரண்டு ஒப்பந்தம்களையும் விட  கீழே  ஏதாவது அதிகாரமுள்ள. தீர்வுகள் உண்டா??? 

ஆயுதப் போராட்டம் நடத்தியது மட்டுமல்லாமல் பல நாடுகளில் பல சுற்று பேச்சுவார்த்தைகளயும். நடத்திய அதேநேரம்  முப்படைகளையும் வைத்து நீதிமன்றம் காவல்துறை ...போன்றவற்றுடன் வரியையும் வசூலித்து  ஒரு அரசாங்கம் நடத்திய  புலிகள் தோற்று விட்டார்கள் பலரும் எந்தவொரு ஒழுங்கு வரையறையுமின்றி  கேள்விகள் கேட்டு தீர்ப்பும் வழங்குகிறார்கள்   முடியவில்லையடா   சாமி     

புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியது  இலங்கை அரசாங்கம் தீர்வுகள் தரமாட்டார்கள் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்து காட்டவே   அதனை பரிபூரணமாக  வெற்றியுடன் செய்து விட்டார்கள்   நன்றி வணக்கம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

இதில என்ன இன்னும் சோகம் என்னவென்றால் தமிழரை மீள எழ முடியா படுகுழிக்குள் தள்ளி விட்டு ஏன் இன்னும் மற்றவர்கள் தீர்வு பெற்று கொடுக்கிறார்கள் இல்லை என்று விசுகு அண்ணா போன்றவைகள் கேள்வி கேட்பது தான் 

புலிகள் இல்லை என்றால் தீர்வு சுலபமாக கிடைக்கும் என்றவர்களிடம் தான் அந்த கேள்வி. 

புலிகள் அழிக்கப்பட்டால் இந்த நிலையில் தான் தாயகம் நிற்கும் என்று கணிக்கக்கூட முடியாதவர்களாகவா அந்த கற்பனை கனவான்கள் இருந்தார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

 

ஆயுதப் போராட்டம் நடத்தியது மட்டுமல்லாமல் பல நாடுகளில் பல சுற்று பேச்சுவார்த்தைகளயும். நடத்திய அதேநேரம்  முப்படைகளையும் வைத்து நீதிமன்றம் காவல்துறை ...போன்றவற்றுடன் வரியையும் வசூலித்து  ஒரு அரசாங்கம் நடத்திய  புலிகள் தோற்று விட்டார்கள் பலரும் எந்தவொரு ஒழுங்கு வரையறையுமின்றி  கேள்விகள் கேட்டு தீர்ப்பும் வழங்குகிறார்கள்   முடியவில்லையடா   சாமி     

புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியது  இலங்கை அரசாங்கம் தீர்வுகள் தரமாட்டார்கள் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்து காட்டவே   அதனை பரிபூரணமாக  வெற்றியுடன் செய்து விட்டார்கள்

⁉️

  நன்றி வணக்கம் 🙏

வெளி உலகத்துக்கு காட்டுவதற்குத்தான் போராட்டமா? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

வெளி உலகத்துக்கு காட்டுவதற்குத்தான் போராட்டமா? 

😏

இல்லையே !...குறைந்த பட்ச தீர்வை தேடுவதற்க்கு,   

மாற்று திட்டங்கள் முன் வைப்பதற்கு 

அரசாங்கத்துடன். அண்டி. பிழைப்பு நடத்தும் வழிமுறைகளை  நவீன உத்திகளை கண்டு பிடிப்பதற்கு,..

இன்னும் முடிவிலி திட்டங்கள் உண்டு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்  🤣

  • கருத்துக்கள உறவுகள்

""புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியது  இலங்கை அரசாங்கம் தீர்வுகள் தரமாட்டார்கள் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்து காட்டவே ""

இது தாங்கள் எழுதியது 👆

பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுவோர் போராட்டத்தைப்பற்றிக் கதைக்கவே தகுதியில்லை என்பது என் கருத்து 

 

53 minutes ago, Kandiah57 said:

இல்லையே !...குறைந்த பட்ச தீர்வை தேடுவதற்க்கு,   

மாற்று திட்டங்கள் முன் வைப்பதற்கு 

அரசாங்கத்துடன். அண்டி. பிழைப்பு நடத்தும் வழிமுறைகளை  நவீன உத்திகளை கண்டு பிடிப்பதற்கு,..

இன்னும் முடிவிலி திட்டங்கள் உண்டு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்  🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

""புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியது  இலங்கை அரசாங்கம் தீர்வுகள் தரமாட்டார்கள் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்து காட்டவே ""

இது தாங்கள் எழுதியது 👆

பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுவோர் போராட்டத்தைப்பற்றிக் கதைக்கவே தகுதியில்லை என்பது என் கருத்து 

 

 

தந்தை செலவா. தமிழ் ஈழம் என்ற தீர்மானம் எடுத்தது  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு சாத்தியம் இல்லை என்பதால் தான்   அது இன்றுவரையும் உண்மை என்று உறுதி செய்யபட்டுள்ளது   

அன்றிலிருந்து என் போன்ற  எந்தவொரு தமிழனும்  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வரும் என்று நம்பவில்லை   பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்கும் காணலாம் என்றால் ஏன்ஆயுதம் ஏந்த வேண்டும்??? பேசி பார்த்த பிறகு தான் ஆயத போராட்டம் தொடங்கியது,..இங்கே பாம்பு மீன் இரண்டுமே ஒன்று தான்  இரண்டும் வாலையும் தலையையும் பார்க்கிறது  ஆனால்  அதற்கு வித்தியாசம் தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

தந்தை செலவா. தமிழ் ஈழம் என்ற தீர்மானம் எடுத்தது  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு சாத்தியம் இல்லை என்பதால் தான்   அது இன்றுவரையும் உண்மை என்று உறுதி செய்யபட்டுள்ளது   

அன்றிலிருந்து என் போன்ற  எந்தவொரு தமிழனும்  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வரும் என்று நம்பவில்லை   பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்கும் காணலாம் என்றால் ஏன்ஆயுதம் ஏந்த வேண்டும்??? பேசி பார்த்த பிறகு தான் ஆயத போராட்டம் தொடங்கியது,..இங்கே பாம்பு மீன் இரண்டுமே ஒன்று தான்  இரண்டும் வாலையும் தலையையும் பார்க்கிறது  ஆனால்  அதற்கு வித்தியாசம் தெரியவில்லை 

கந்தையா 

போராட்டமும்  வேண்டாம், பேச்சுவார்த்தையும் வேண்டாம்,  சும்மா குந்தொயிருப்போம் என்கிறீர்கள். 

😩

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2024 at 19:56, Kapithan said:

 (சஷ்டியை ஏற்றுக்கொள்வதாக கொள்கையளவில் இணங்கியதன் பின்ணணியிலே கருணாவின் பிளவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன

தற்போது தான் இந்த அவியலை பார்த்தேன் 

இது பற்றி கொஞ்சம் விரிவாக எதிர் பார்க்கிறோம் 😭

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Kandiah57 said:

தந்தை செலவா. தமிழ் ஈழம் என்ற தீர்மானம் எடுத்தது  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு சாத்தியம் இல்லை என்பதால் தான்   அது இன்றுவரையும் உண்மை என்று உறுதி செய்யபட்டுள்ளது   

அன்றிலிருந்து என் போன்ற  எந்தவொரு தமிழனும்  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வரும் என்று நம்பவில்லை   பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்கும் காணலாம் என்றால் ஏன்ஆயுதம் ஏந்த வேண்டும்??? பேசி பார்த்த பிறகு தான் ஆயத போராட்டம் தொடங்கியது,..இங்கே பாம்பு மீன் இரண்டுமே ஒன்று தான்  இரண்டும் வாலையும் தலையையும் பார்க்கிறது  ஆனால்  அதற்கு வித்தியாசம் தெரியவில்லை 

Guten Morgen   கந்தையர்! 
அன்றைய இன்றைய அரசியல்வாதிகள் என்ன செய்திருக்க வேணும்? என்ன செய்திருக்கலாம் எண்டுறியள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தற்போது தான் இந்த அவியலை பார்த்தேன் 

இது பற்றி கொஞ்சம் விரிவாக எதிர் பார்க்கிறோம் 😭

ஒஸ்லோ பேச்சின் பின்னணியில் கருணா சமஸ்டியை ஏற்றுக்கொள்ள விரும்பியதாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று hotel  திரும்பி  இலங்கையில் தலைமையுடன் தொடர்புகொண்டபோது கருத்து வேறுபாடு எழுந்தது  என்று கதைகள் உலாவியதாக ஞாபகம். 

(இப்ப நீங்கள் தாழிச்சுக் கொட்டுங்கோ) 

8 minutes ago, குமாரசாமி said:

Guten Morgen   கந்தையர்! 
அன்றைய இன்றைய அரசியல்வாதிகள் என்ன செய்திருக்க வேணும்? என்ன செய்திருக்கலாம் எண்டுறியள்?

கந்தையர் நாய் கறிச்சட்டியை கவ்விக்கொண்டு கொல்லையைச் சுத்தி ஓடுறமாதிரி ஓடுவாரே  தவிர, ஒரு உருப்படியா ஒன்றையும் சொல்ல மாட்டார். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.