Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22 ஜனவரி 2024
புதுச்சேரியில் மூன்று அடுக்கு மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. கட்டி ஒரு மாதமே ஆன நிலையில், புதுமனை புகுவிழா கூட நடைபெறவில்லை.

புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. கணவர் ரங்கநாதன் உயிரிழந்த நிலையில், இவர் தனது மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த பட்டா இடத்தில் மூன்று மாடி வீடு கட்டி வந்தனர். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிந்த நிலையில், வருகின்ற 26 ஆம் தேதி வீட்டின் புதுமனை புகுவிழா நடத்த சாவித்திரி திட்டமிட்டிருந்தார்.

இதற்கிடையே அந்த வீட்டின் அருகே செல்லும் வாய்காலுக்கு சுவர் கட்டும் பணி கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்திரி வீட்டருகே வாய்கலுக்கு சுவர் கட்டுவதற்காக ஆழமாக பள்ளம் எடுக்கப்பட்டது. அப்போது புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி வீடு லேசாக சாய்ந்து காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சாவித்திரி இதுதொடர்பாக வாய்க்கால் சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று வீடு மிக மோசமாக சாய்ந்தவாறு காணப்பட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர், ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய வந்து பேசிகொண்டிருந்தபோது வீடு திடீரென முற்றிலுமாக சரிந்து விழுந்தது. அப்போது அங்கு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்ததால் யாருக்கும் உயிர் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை.

தொடர்ந்து வீடு இடிந்து விழுந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவவும், அதற்கு பின்னரே வீடு அதிக உயரத்தில் தரமன்றி கட்டப்பட்டதால் சரிந்து விழுந்ததா? அல்லது வாய்க்காலுக்கு பள்ளம் எடுத்ததால் விழுந்ததா என தெரியவரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/czvqlzee1jro

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண வீடு மாதிரி 3 மாடி வீட்டினை கட்டியுள்ளார்கள் . சும்மா அத்திவாரம்(Piling இல்லை ) போட்டுள்ளார்கள் . அதே நேரம் தூண்களுக்கு(Column ) இரும்பு கம்பி(Reinforcement ) பாவிக்கவில்லை . 

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்க்க மனம் வேதனைப் படுகின்றது.......வேறு என்னத்த சொல்ல, அவர்கள் இத் துயரில் இருந்து மீண்டு வரவேண்டும்........!

  • கருத்துக்கள உறவுகள்

கூலியாள் எல்லாம் இஞ்சினியர் ஆனால் இதுதான் நிலை. 

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். வீட்டுக்காரர் குடியேறியபின்னர் இப்படி நடக்கவில்லை. 

தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பெரிய வாழ்க்கை கனவு, எல்லாம்  ஒரு நிமிடத்தில் போய் விட்டது. 😥

  • கருத்துக்கள உறவுகள்

YouTube ஐப் பார்த்து வீடு கட்டியிருப்பார்களோ? 

  • கருத்துக்கள உறவுகள்

சரிந்து விழுந்தது வீடுமட்டுமல்ல அவர்களது முழு சேமிப்பும் தான். எதிர் கால நம்பிக்கையே கேள்விக்குறியாக ?  உயிர் தப்பியது இறைவன் செயல். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திடீரென சரிந்து வீழ்ந்த புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வீடு

Published By: DIGITAL DESK 3   23 JAN, 2024 | 03:45 PM

image

தமிழ்நாட்டில் புதுச்சேரியில் திங்கட்கிழமை வாய்க்காலில் தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக புதிதாக 3 மாடி கட்டிமுடிக்கப்பட்ட வீடொன்று திடீரென சரிந்து வீழ்ந்து தரைமட்டடமாகியுள்ளது.

புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த நிலையிலேயே இவ்வாறு குறித்த வீடு இடிந்து விழுந்துள்ளது.

தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 

புதுச்சேரியில் நகரத்தின் வாய்க்காலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று இன்று மதியம் பெக்கோ இயந்திரம் மூலம் வாய்க்காலின் பக்கவாட்டு பகுதி சீரமைக்கப்பட்டு சுவர் எழுப்புதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக வாய்க்காலின் மண் அகழும் பகுதியில் ஜேசிபி இயந்திரம் ஈடுபட்டது. இதனால் வாய்க்கால் ஓரம் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில், திடீரென அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனை சற்றும் எதிர்பாராத அதன் அருகே நின்றிருந்த பொதுமக்கள், பொலிஸார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் அங்கிருந்து ஓடினார்கள்.

குறித்த வீட்டுக்கு இன்னும் சில தினங்களில் புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது. இந்நிலையில் குறித்த புது வீடு சரிந்து வீழ்ந்துள்ளது.

வீடு கட்டுமான பணி நிறைவு பெற்றும் கிரகப்பிரவேசம் நடக்காததால் வீட்டின் உள்ளே எவரும் இருக்கவில்லை. வெளியே நின்று இருந்தவர்களும் ஓடியதால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதிகப்படியான மணல் அள்ளியதன் காரணமாக வீடு இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17059273753078.jpg

17059273643078.jpg

 

17059273553078.jpg

https://www.virakesari.lk/article/174622

  • கருத்துக்கள உறவுகள்

சரிந்து விழுந்த வீட்டிற்கு பதில் வேறு வீடு - உதவிக்கரம் நீட்டிய முதலமைச்சர் 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.