Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Vasee யை நான் ஒரு சித்தாந்தவாதி என்று எல்லோ நினைத்தேன்.  இடைக்கிடை இவர் குரான் படிக்கின்றாரோ என்றும் குழம்பியதுண்டு. ஈழத்து நாம் தமிழர் கட்சி தலைவர் போன்று இப்போது பேசுகின்றார்.

  • Replies 379
  • Views 35.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவா

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இராணுவ வீரர் 

1,.இராணுவ உடையில் இருக்க வேண்டும் என்பது இல்லை

2,..துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்பது இல்லை  

3.  களத்தில் நிற்க வேண்டும் என்பது இல்லை 

4 .....குளிர் ஊட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு போரை அவர் நினைந்தபடி  வழி நடத்த முடியும்  

5,.மேலே இலக்கம்,4.இல் சொல்லப்பட்டவர்  ஒரு இராணுவ வீரரை விட. மோசமானவர்  மிக மிக மோசமானவர்  கண்ணுக்கெட்டாத நேரடியாக பார்க்க முடியாத எதிரி. களத்தில் நிற்கும் இராணுவ வீரர்களை கொல்லப்படுவது சரியென்றால்.  இவர் கொல்லப்படுவது பல பல மடங்குகள் சரியாகும்   

6,  .மேலே   4.   இல சொல்லப்ட்டவர்கள். தான்   நீலன,.கதிர்காமர்,.   போன்றவர்கள்.   இவர்கள் இலங்கை அரசுக்கு ஆலோசனைகளையும். பிரச்சாரகர்களையம்.  தமிழ் மக்களின் உரிமை போருக்கு  எதிராக மேற்கொண்டுள்ளார்கள்  

7,...தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர்களை பெறுத்த வரையிலும் தமிழ் மக்களை பெறுத்த வரையிலும்  இவர்கள் இராணுவ உடை அணியாத இராணுவம் தான்   

8,....இவர்கள் சிவிலியன்கள். இல்லை   இவர்களை சாதாரண குடிமக்கள்  என்று கூறக்கூடாது  எப்படி கூற முடியும் ???

9,. இவர்களை கொன்றபடியால். தான்  முள்ளிவாய்க்கால் எற்பட்டது என்பது  பிற்போக்குத்தானமான கருத்துகள்   இவர்கள் உயிர் உடனிருந்தாலும். முள்ளிவாய்க்கால் நடத்திருக்கும். அது அதிக வினைத்திறனுடன். இவரகளின் அலோசனைகளுடன். நடத்திருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒரு இராணுவ வீரர் 

1,.இராணுவ உடையில் இருக்க வேண்டும் என்பது இல்லை

2,..துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்பது இல்லை  

3.  களத்தில் நிற்க வேண்டும் என்பது இல்லை 

4 .....குளிர் ஊட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு போரை அவர் நினைந்தபடி  வழி நடத்த முடியும்  

5,.மேலே இலக்கம்,4.இல் சொல்லப்பட்டவர்  ஒரு இராணுவ வீரரை விட. மோசமானவர்  மிக மிக மோசமானவர்  கண்ணுக்கெட்டாத நேரடியாக பார்க்க முடியாத எதிரி. களத்தில் நிற்கும் இராணுவ வீரர்களை கொல்லப்படுவது சரியென்றால்.  இவர் கொல்லப்படுவது பல பல மடங்குகள் சரியாகும்   

6,  .மேலே   4.   இல சொல்லப்ட்டவர்கள். தான்   நீலன,.கதிர்காமர்,.   போன்றவர்கள்.   இவர்கள் இலங்கை அரசுக்கு ஆலோசனைகளையும். பிரச்சாரகர்களையம்.  தமிழ் மக்களின் உரிமை போருக்கு  எதிராக மேற்கொண்டுள்ளார்கள்  

7,...தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர்களை பெறுத்த வரையிலும் தமிழ் மக்களை பெறுத்த வரையிலும்  இவர்கள் இராணுவ உடை அணியாத இராணுவம் தான்   

8,....இவர்கள் சிவிலியன்கள். இல்லை   இவர்களை சாதாரண குடிமக்கள்  என்று கூறக்கூடாது  எப்படி கூற முடியும் ???

9,. இவர்களை கொன்றபடியால். தான்  முள்ளிவாய்க்கால் எற்பட்டது என்பது  பிற்போக்குத்தானமான கருத்துகள்   இவர்கள் உயிர் உடனிருந்தாலும். முள்ளிவாய்க்கால் நடத்திருக்கும். அது அதிக வினைத்திறனுடன். இவரகளின் அலோசனைகளுடன். நடத்திருக்கும் 

இப்படிப் பட்ட வித்தியாசமான சிந்தனைகளை வரவேற்கிறேன் கந்தையர்😎.

இந்த புதிய பார்வையின் படி பார்த்தால் முள்ளிவாய்க்காலிலோ அதற்கு முன்னரோ இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைக் கொன்றது என்று எங்கும் முறையிட முடியாது என்கிறீர்கள்?

புலிகளுக்கு சாப்பாடு போட்டவன், நகை/காசு கொடுத்தவன், ஆஸ்பத்திரியில் நின்று காயப்பட்டவனைப் பார்த்தவன், வாயால் புலிகளை மெச்சியவன், எழுதியவன் எல்லாரும் சீருடை போடாத புலி வீரர்கள், அவர்களைக் கொன்றதை எப்படி சிங்களவன் அப்பாவிகளைக் கொன்றான் என்பதாம்?

(தென்பகுதியில், இப்படி புலிகளின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த பலர் காணாமல் போயிருக்கின்றனர், அதே நேரம் இன்னும் பலர் கைதாகி, சிறை சென்று தண்டனை அனுபவித்து மீண்டும் வெளியே வந்து வாழ்கின்றனர் - அப்ப சிங்களவரின் சிஸ்ரம் புலிகளின் சிஸ்ரத்தை விட டீசன்ட் என்கிறீர்கள்! அப்படியா?) 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

Vasee யை நான் ஒரு சித்தாந்தவாதி என்று எல்லோ நினைத்தேன்.  இடைக்கிடை இவர் குரான் படிக்கின்றாரோ என்றும் குழம்பியதுண்டு. ஈழத்து நாம் தமிழர் கட்சி தலைவர் போன்று இப்போது பேசுகின்றார்.

உங்கள் கருத்திற்கும் நன்றி, ஆனால் நீங்கள் நினைத்ததுபோல் நான் இல்லை, ஆனால் எனது கருத்துகளை அனுபவத்தினடிப்படையிலும் (உதாரணமாக curve fitting தொடர்பான கருத்து), அனுபவப்பட்டவர்களின் கருத்தினூடாகவும் (உதாரணமாக நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான கருத்து) மட்டுமே கருத்து கூறுவதுண்டு.

அனைத்து திட்டங்களும் வெளியே நல்ல பெயர்களிலேயே அறிமுகப்படுதப்படுகிறது உதாரணமாக மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சிங்கள குடியேற்றம் போல், இதனை நீங்கள் இணையத்தில் தேடினால் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எது சரி, பிழை என்பது ஒவ்வொருவரது சுய முடிவில் தாங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, vasee said:

உங்கள் கருத்திற்கும் நன்றி, ஆனால் நீங்கள் நினைத்ததுபோல் நான் இல்லை, ஆனால் எனது கருத்துகளை அனுபவத்தினடிப்படையிலும் (உதாரணமாக curve fitting தொடர்பான கருத்து), அனுபவப்பட்டவர்களின் கருத்தினூடாகவும் (உதாரணமாக நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான கருத்து) மட்டுமே கருத்து கூறுவதுண்டு.

அனைத்து திட்டங்களும் வெளியே நல்ல பெயர்களிலேயே அறிமுகப்படுதப்படுகிறது உதாரணமாக மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சிங்கள குடியேற்றம் போல், இதனை நீங்கள் இணையத்தில் தேடினால் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எது சரி, பிழை என்பது ஒவ்வொருவரது சுய முடிவில் தாங்கியுள்ளது.

எப்படி வசி தரவுகள் கூட ஒருவரின் சுயமுடிவில் தான் சரியா பிழையா என்று தீர்மானிக்கப் பட முடியும் என்கிறீர்கள்?

தரவு என்பது objective அல்லவா? 1972 நிலச்சீர்திருத்தம் மூலம் பெரிதும் காணிகளை இழந்தது தென்பகுதியில் வளவு காரர்கள் என அழைக்கப் பட்ட பணக்காரர்கள். ஏனெனில், மில்லியன் கணக்கான ஏக்கர்கள் வயல் காணிகளும், வயல் செய்யாத காணிகளும் அவர்கள் வசமிருந்தே அரசுக்குப் போனது. அதைக் கூட அரசு உடனே ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை. அரச கூட்டுத் தாபனங்கள் எதையும் செய்ய முதலே 1977 இல் இந்தச் சட்டமெல்லாம் உதாசீனம் செய்யப் பட்டு விட்டது!

இவை தரவுகள்-data. இதை விட ஏதாவது தரவுகள் இருக்கின்றனவா, உங்கள் கருத்திற்கு பலம் சேர்க்க? அபிப்பிராயங்களுக்கும் (opinion), தரவுகளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

உப்படி எதிர்கருத்காளர்களை உசுப்பேதினால் பிறகு நானும் எழுதி அதிக பச்சைகளை பெற்று விடுவேன் ...

எதிர் கருத்தாளர்கள் என்று சொல்லக்கூடாது. உண்மையை எழுதுபவர்கள் என்று எழுத வேண்டும். அதாவது இன்னும் சொல்வதென்றால் யுத்த காலத்தில் அதட்குள் அகப்பட்டு, படிக்கும்காலத்திலேயே சிங்களவர்களின் தாக்குதலை சந்தித்து, இன்றும் அந்த (சிங்கள / தமிழ்) மக்களுடன் வாழ்ந்து கொண்டு உண்மையை எழுதும் எங்களை போன்றவர்களை எதிர் கருத்தாளர்கள் என்று சொல்ல வேண்டாம். பச்சை குத்துவார்களோ, சிவப்பு குத்துவார்களோ என்பதெல்லாம் பார்க்க கூடாது.

ஒன்றை நான் இங்கு எழுத வேண்டும். இந்த கருத்து களத்துக்குள் வரும்போது நான் ஒரு தமிழன் என்ற உணர்வுடன் அதாவது தமிழ் இனவாதி என்று கூட சொல்லுமளவுக்குத்தான் இருந்தேன். ஆனால் இங்கு எழுத தொடங்கிய பின்னர் அப்படி எல்லாம் இல்லை இலங்கையன் என்ற நிலைக்கு மாறினேன். இன்னும் சொல்லப்போனால் தமிழர் சிங்களவர் எங்கு என்றாலும் சமாதானமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.

சிங்கள தீவிரவாதிகள் சில தமிழர் விரோத செயல்பாட்டில் இருந்தாலும் அவற்றையும் சமாளித்து சமாதானமாக சீவிப்பதுதான் ஒரே வழி என்ற நிலைமை. எனவே இலங்கையின் அரசியல் நிலைமையை பொறுத்து இனிமேல் எல்லாமே மார்பொகின்றது.

நிச்சயமாக ஒரு அதிகாரமுமற்ற மாகாண சபையும் இனிக்கிடைக்கும் என்ற எண்ணமில்லை. எனவே அந்த கனவி எல்லாம் இனி மறந்து விட்டு இனி எப்படி சீவிப்பது என்பதை தமிழ் அரசியல்வாதிகள் (??) தீர்மானிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Justin said:

தரவு என்பது objective அல்லவா? 1972 நிலச்சீர்திருத்தம் மூலம் பெரிதும் காணிகளை இழந்தது தென்பகுதியில் வளவு காரர்கள் என அழைக்கப் பட்ட பணக்காரர்கள். ஏனெனில், மில்லியன் கணக்கான ஏக்கர்கள் வயல் காணிகளும், வயல் செய்யாத காணிகளும் அவர்கள் வசமிருந்தே அரசுக்குப் போனது. அதைக் கூட அரசு உடனே ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை. அரச கூட்டுத் தாபனங்கள் எதையும் செய்ய முதலே 1977 இல் இந்தச் சட்டமெல்லாம் உதாசீனம் செய்யப் பட்டு விட்டது!

 

நில உச்ச வரம்பாக வெறும் 50 ஏக்கராக நிர்ணயிக்கப்பட்டதாக நினைவுள்ளது, தென்பகுதியில் உள்ள தமிழர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை வட கிழக்கிலும் அந்த சட்டம் அமுலில் இருந்தது, எனது உறவினர் ஒருவர் பளையில் தென்னந்தோப்பு வைத்திருந்தார் அந்த சட்டத்திலிருந்து தப்ப சட்டத்தரணியினை நாடினார், சட்டத்தரணி அந்த குறிப்பிட்ட நில உச்சவரம்பிற்கு மேலான பகுதியினை தானே சுருட்டிவிட்டார், இந்த இருவரும் எனது உறவினர்கள். அத்துடன் நான் அறிந்தவரை அனைத்து நிலங்களும் விளைச்சலில் உள்ள நிலங்களாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துகளால் இறந்தவர்களுக்கு இழுக்கு ஏற்படக்கூடாது என விரும்புவதுபோலவே மற்றவர்கள் கருத்துகளாலும் அவ்வாறான இழுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக சில கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, vasee said:

நில உச்ச வரம்பாக வெறும் 50 ஏக்கராக நிர்ணயிக்கப்பட்டதாக நினைவுள்ளது, தென்பகுதியில் உள்ள தமிழர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை வட கிழக்கிலும் அந்த சட்டம் அமுலில் இருந்தது, எனது உறவினர் ஒருவர் பளையில் தென்னந்தோப்பு வைத்திருந்தார் அந்த சட்டத்திலிருந்து தப்ப சட்டத்தரணியினை நாடினார், சட்டத்தரணி அந்த குறிப்பிட்ட நில உச்சவரம்பிற்கு மேலான பகுதியினை தானே சுருட்டிவிட்டார், இந்த இருவரும் எனது உறவினர்கள். அத்துடன் நான் அறிந்தவரை அனைத்து நிலங்களும் விளைச்சலில் உள்ள நிலங்களாக இருந்தது.

உறவே,

தென்பகுதியிலோ வடக்கு கிழக்கிலோ 50 ஏக்கருக்கு மேல் வைத்திருக்க முடியாது என்பது தான் ஒரிஜினல் சட்டம். இதை யாரும் மறுக்கவில்லையே? ஆனால், உங்கள் முதல் கருத்து இந்த காணி சீர் திருத்தம் மூலம் தமிழர்கள் காணி சிங்களக் குடியேற்றத்திற்கு பயன்பட்டது என்றல்லவா சொன்னீர்கள்? அதைத் தான் ஆதாரமில்லாத கருத்து என்கிறோம். உங்கள் உறவினரின் தென்னங்காணி சிங்களவர்களுக்கு வழங்கப் பட்டதா? இல்லையல்லவா?

அது மட்டுமா? 50 ஏக்கருக்கு கூடிய காணி வைத்திருந்தோர் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் மைனர்களாக இருந்தாலும் ஒரு விலைக்கு விற்கலாம், அல்லது அரசு எடுத்த காணியை அந்தக் குடும்பத்தினர் யாராவது மீள ஒரு நியாய விலை கொடுத்து வாங்கலாம் இப்படியெல்லாம் பல வழிகளில் பரம்பரைச் சொத்து துண்டாடப் படாமல் ஒட்டைகள் விட்டுத் தான் சீர் திருத்தம் நடந்தது.

இதெல்லாம் நடந்து 30 வருடங்கள் கடந்த பின்னர் மத்திய மாகாணத்தில் யானைக்கும், கால்நடைகளுக்கும் வைத்தியம் பார்க்க பல வளவுகாரர்களின் எஸ்ரேற்களுக்குப் போயிருக்கிறேன். அவர்களது காணிகள் 50 ஏக்கருக்கு மேலாக அப்படியே அவர்களிடம் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். எனவே, காணிச் சீர்த்திருத்தம் தெற்கிலேயே நடைமுறையாகவில்லை, வடக்கு கிழக்கிலும் நடைமுறையாகவில்லை. ஆனால், வடக்கு கிழக்கில் இதனோடு சம்பந்தமில்லாமல் ஆக்கிரமிப்பு மூலம் தமிழர் காணிகள் பறிபோயின.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

உறவே,

தென்பகுதியிலோ வடக்கு கிழக்கிலோ 50 ஏக்கருக்கு மேல் வைத்திருக்க முடியாது என்பது தான் ஒரிஜினல் சட்டம். இதை யாரும் மறுக்கவில்லையே? ஆனால், உங்கள் முதல் கருத்து இந்த காணி சீர் திருத்தம் மூலம் தமிழர்கள் காணி சிங்களக் குடியேற்றத்திற்கு பயன்பட்டது என்றல்லவா சொன்னீர்கள்? அதைத் தான் ஆதாரமில்லாத கருத்து என்கிறோம். உங்கள் உறவினரின் தென்னங்காணி சிங்களவர்களுக்கு வழங்கப் பட்டதா? இல்லையல்லவா?

 

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் எனது உறவினர்களின் அனுபவத்தினையே இங்கு கருத்தாக பதிவிட்டுள்ளேன் என.

 

22 minutes ago, Justin said:

அது மட்டுமா? 50 ஏக்கருக்கு கூடிய காணி வைத்திருந்தோர் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் மைனர்களாக இருந்தாலும் ஒரு விலைக்கு விற்கலாம், அல்லது அரசு எடுத்த காணியை அந்தக் குடும்பத்தினர் யாராவது மீள ஒரு நியாய விலை கொடுத்து வாங்கலாம் இப்படியெல்லாம் பல வழிகளில் பரம்பரைச் சொத்து துண்டாடப் படாமல் ஒட்டைகள் விட்டுத் தான் சீர் திருத்தம் நடந்தது.

 

இல்லை ஒரே குடும்ப உறுபினர்களுக்குள் மாற்றமுடியாது. எனவே கேள்விப்பட்டேன் அதனாலேயே பல சம்பவங்கள் நிகழ்ந்தேறியிருந்தது.

Edited by vasee

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

எனது உறவினர் ஒருவர் பளையில் தென்னந்தோப்பு வைத்திருந்தார் அந்த சட்டத்திலிருந்து தப்ப சட்டத்தரணியினை நாடினார், சட்டத்தரணி அந்த குறிப்பிட்ட நில உச்சவரம்பிற்கு மேலான பகுதியினை தானே சுருட்டிவிட்டார், இந்த இருவரும் எனது உறவினர்கள்.

உச்சநிலவரம்பு சட்டத்தைக் காட்டி சட்டத்தரணி தென்னந்தோப்புக் காணியில் ஒரு பகுதியை சுருட்டிவிட்டார்! இப்படியான சுத்துமாத்து தமிழ் சட்டவாளர்களிடம் உச்சநில வரம்புக்கு மேலாகவே காணிகள் இருந்திருக்கும்.!

மேலும் இந்த சட்டத்தைக் கொண்டுவந்த சிறீமாவோ பண்டாரநாயக்கா தமது காணிகளையும் இழந்தார் என்று அறிந்திருக்கின்றேன்.

5 hours ago, Justin said:

காணிச் சீர்த்திருத்தம் தெற்கிலேயே நடைமுறையாகவில்லை, வடக்கு கிழக்கிலும் நடைமுறையாகவில்லை

காணிச் சீர்திருத்தச் சட்டம் விவசாயத்தை நவீனப்படுத்த தடையாகத்தான் இருக்கின்றது. 25 ஏக்கர் வயல்காணி அல்லது 50 ஏக்கர் தோட்டக்காணி என்பது பெரும் இயந்திரங்களை வைத்து விவசாயம் செய்ய உதவாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

இப்படிப் பட்ட வித்தியாசமான சிந்தனைகளை வரவேற்கிறேன் கந்தையர்😎.

    நன்றி இது  எனது சிந்தனைகள் இல்லை  நடந்த செயல்களை தொகுத்து எழுதி உள்ளேன் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

இந்த புதிய பார்வையின் படி பார்த்தால் முள்ளிவாய்க்காலிலோ அதற்கு முன்னரோ இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைக் கொன்றது என்று எங்கும் முறையிட முடியாது என்கிறீர்கள்?

புலிகளுக்கு சாப்பாடு போட்டவன், நகை/காசு கொடுத்தவன், ஆஸ்பத்திரியில் நின்று காயப்பட்டவனைப் பார்த்தவன், வாயால் புலிகளை மெச்சியவன், எழுதியவன் எல்லாரும் சீருடை போடாத புலி வீரர்கள், அவர்களைக் கொன்றதை எப்படி சிங்களவன் அப்பாவிகளைக் கொன்றான் என்பதாம்?

 கோத்தா  சொல்லி உள்ளார்,....தமிழர்கள் தான் புலிகள் ........புலிகள் தான் தமிழர்கள் என்று உறுதியாகவும். தெளிவாகவும்  

நீங்கள் ஏன் ரொம்ப சிரமப்பட்டு  தமிழர்களை,....புலிகள் என்றும்,தமிழர்கள் என்றும்  பிரித்து எழுதுகிறீர்கள் , பாரக்கிறீர்கள்  ,கதைக்கிறீர்கள்.  தமிழர்கள் என்று சொல்லலாம் அல்லது புலிகள் என்று சொல்லலாம்   

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

எனது கருத்துகளை அனுபவத்தினடிப்படையிலும் (உதாரணமாக curve fitting தொடர்பான கருத்து), அனுபவப்பட்டவர்களின் கருத்தினூடாகவும் (உதாரணமாக நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான கருத்து) மட்டுமே கருத்து கூறுவதுண்டு.

நன்றி

-------------

அனுபவப்பட்ட குடும்பத்தவர்களின் கருத்தினூடாக  எனக்கும் சிறுவயதில் இருந்து சிங்கலவர்கள் என்றாலே தமிழர்களின் வீடுகளை எரித்துவிடுவார்கள் என்ற பயம் இருந்தது.பின்பு தான் மெல்ல மெல்ல விளங்க தொடங்கியது.அவர்கள் மட்டுமல்ல தென்கிழக்காசிய நாடுகளின் மக்களே நிறைய மாறவேண்டும் என்பது
தமிழ்நாட்டில் சாதியால் தாழ்த்தி தமிழர்கள் வீட்டை தமிழர்களே எரித்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

 அதாவது இன்னும் சொல்வதென்றால் யுத்த காலத்தில் அதட்குள் அகப்பட்டு, படிக்கும்காலத்திலேயே சிங்களவர்களின் தாக்குதலை சந்தித்து, இன்றும் அந்த (சிங்கள / தமிழ்) மக்களுடன் வாழ்ந்து கொண்டு 

ஒன்றை நான் இங்கு எழுத வேண்டும். இந்த கருத்து களத்துக்குள் வரும்போது நான் ஒரு தமிழன் என்ற உணர்வுடன் அதாவது தமிழ் இனவாதி என்று கூட சொல்லுமளவுக்குத்தான் இருந்தேன். ஆனால் இங்கு எழுத தொடங்கிய பின்னர் அப்படி எல்லாம் இல்லை இலங்கையன் என்ற நிலைக்கு மாறினேன். இன்னும் 

அதாவது இத்தனை வருட அனுபவங்கள் பாடங்கள் பாதிப்புக்கள் தராத முடிவை யாழ் களத்தில் பேசப்படும் அல்லது தட்டப்படும் பேப்பர் அனுபவங்கள் தந்து விட்டன?? 

அவிக்கவும் இடம் பொருள் ஏவல் இருக்கு. அது யாழ் போன்ற தளங்களில் கடினம். 

கவனம் அரசியல் மேடைகளில் மைக்குக்கு பக்கத்தில் உட்கார்ந்து விடவேண்டாம். அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

 கோத்தா  சொல்லி உள்ளார்,....தமிழர்கள் தான் புலிகள் ........புலிகள் தான் தமிழர்கள் என்று உறுதியாகவும். தெளிவாகவும்  

நீங்கள் ஏன் ரொம்ப சிரமப்பட்டு  தமிழர்களை,....புலிகள் என்றும்,தமிழர்கள் என்றும்  பிரித்து எழுதுகிறீர்கள் , பாரக்கிறீர்கள்  ,கதைக்கிறீர்கள்.  தமிழர்கள் என்று சொல்லலாம் அல்லது புலிகள் என்று சொல்லலாம்   

உங்களுக்குச் சுட்டு விட்ட அந்தக் கேள்வியின் பிரதான பாதியை வசதியாக மறந்து விட்டீர்களே😎?

ஆமி கொன்ற தமிழ் மக்களெல்லாம் கோத்தா சொன்னது போல, உங்கள் நூதன சிந்தனையில் நீங்கள் கண்டு பிடித்தது போல, "சீருடை அணியாத புலிகள்" என்றால் பிறகேன் இனவழிப்பு, போர்க்குற்றம் என்று முறைப்பட்டுத் திரிகிறோம் என்கிறீர்கள்😂?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

உங்களுக்குச் சுட்டு விட்ட அந்தக் கேள்வியின் பிரதான பாதியை வசதியாக மறந்து விட்டீர்களே😎?

ஆமி கொன்ற தமிழ் மக்களெல்லாம் கோத்தா சொன்னது போல, உங்கள் நூதன சிந்தனையில் நீங்கள் கண்டு பிடித்தது போல, "சீருடை அணியாத புலிகள்" என்றால் பிறகேன் இனவழிப்பு, போர்க்குற்றம் என்று முறைப்பட்டுத் திரிகிறோம் என்கிறீர்கள்😂?

அண்மையில் ஒரு zoom உரையாடல் கேட்டேன். அதில் இவ்வாறான பல  அரசியல் படுகொலைகளைப் பற்றியும் ஆயுதமின்றிச் சரணடைந்த 600 இலங்கைப்பொலிசார் புலிகளால் கொலை செய்யப்பட்டது பற்றியும் பேசப்பட்டது.

அதில் கலந்து  ஐரோப்பாவில்  இருந்து  கலந்து கொண்ட தேசிய பற்றாளர் ஒருவர் கொலைகளை நியாயப்படுத்தி பேசினார்.   கொல்லப்பட்ட துரோகிகள் எல்லோரும் துரோகிகள் என்றும் எனவே  கொல்லப்பட வேண்டியவர்களே என்று கூற குறுக்கிட்ட கலந்துரையாடலின் நெறியாளர் சர்வதேச விசாரணை ஒன்று வருமானால் தமிழர் தரப்பில்  இதைக் கூற முடியுமா என்று கேட்க,  பதட்டப்பட்ட தேசியபற்றாளர் இந்த விடயங்கள் எல்லாம் சர்வதேச விசாணைக்குட்படுத்த முடியாது. அது தமிழ்மக்களின் விவகாரம். முள்ளிவாய்க்கால் விடயத்தை மட்டுமே சர்வதேச விசாரணை செய்யலாம் என்று பதிலளித்தார். கோத்தபாயவுக்கும்  அந்த தேசியருக்கும் என்னால் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

உங்களுக்குச் சுட்டு விட்ட அந்தக் கேள்வியின் பிரதான பாதியை வசதியாக மறந்து விட்டீர்களே😎?

ஆமி கொன்ற தமிழ் மக்களெல்லாம் கோத்தா சொன்னது போல, உங்கள் நூதன சிந்தனையில் நீங்கள் கண்டு பிடித்தது போல, "சீருடை அணியாத புலிகள்" என்றால் பிறகேன் இனவழிப்பு, போர்க்குற்றம் என்று முறைப்பட்டுத் திரிகிறோம் என்கிறீர்கள்😂?

எனக்கு எந்த கேள்வியும் சுட்டு விடவில்லை,   அது என்ன கேள்வி?? 

புலிகளும். மனிதர்கள் தான்   தமிழ் மக்கள் தான்    தமிழ் இனம் தான் அவர்களின் இனம்    எனவே… அவர்களை கொன்று குவிப்பது  இனவழிப்பு  போர் குற்றம் ஆகும்   

நீங்கள் நினைப்பது போல  நான்கு கால் புலிகள் அல்ல   மாறாக 

தூய தமிழ் மொழி பேசுகின்ற இரண்டு கால்கள் கொண்ட மனிதர்கள்  புலிகளை கேட்டு கேள்விகள் இன்றி கொன்று குவிக்கலாம். என்று நீங்கள் நினைக்கிறீங்களா?? புலிகளை கொல்வது இனவழிப்பு இல்லையா???

புலிகளை கொல்வது போர் குற்றம் இல்லையா?? 

புலிகளை கொல்லப்படுவது தமிழ் மக்கள் அழிக்க படுவது ஆகும்   

இலங்கை இராணுவத்தையும். சிங்கள மக்களையும்  பிரித்து  பேசுவது எழுதுவது கதைப்பது கிடையாது   ஆனால் நாம் தமிழர்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

எனக்கு எந்த கேள்வியும் சுட்டு விடவில்லை,   அது என்ன கேள்வி?? 

புலிகளும். மனிதர்கள் தான்   தமிழ் மக்கள் தான்    தமிழ் இனம் தான் அவர்களின் இனம்    எனவே… அவர்களை கொன்று குவிப்பது  இனவழிப்பு  போர் குற்றம் ஆகும்   

நீங்கள் நினைப்பது போல  நான்கு கால் புலிகள் அல்ல   மாறாக 

தூய தமிழ் மொழி பேசுகின்ற இரண்டு கால்கள் கொண்ட மனிதர்கள்  புலிகளை கேட்டு கேள்விகள் இன்றி கொன்று குவிக்கலாம். என்று நீங்கள் நினைக்கிறீங்களா?? புலிகளை கொல்வது இனவழிப்பு இல்லையா???

புலிகளை கொல்வது போர் குற்றம் இல்லையா?? 

புலிகளை கொல்லப்படுவது தமிழ் மக்கள் அழிக்க படுவது ஆகும்   

இலங்கை இராணுவத்தையும். சிங்கள மக்களையும்  பிரித்து  பேசுவது எழுதுவது கதைப்பது கிடையாது   ஆனால் நாம் தமிழர்கள்  

புலிகளை சீருடையோடோ இல்லாமலோ கொல்வது தமிழ் இனவழிப்பு, போர்க்குற்றம்! சீருடை அணிந்த புலிகள் சீருடை அணியாத இராணுவமான நீலன், அமீர் போன்றோரைக் கொல்வது என்ன குற்றம்?

என்ன "சிரிக்க சிறக்க" பகுதியில் எழுதுவதாக நினைத்து எழுதுகிறீர்களா?  உங்கள்  குழப்பமான அலம்பல் உங்களுக்கே புரிகிறதா😂?

46 minutes ago, island said:

அண்மையில் ஒரு zoom உரையாடல் கேட்டேன். அதில் இவ்வாறான பல  அரசியல் படுகொலைகளைப் பற்றியும் ஆயுதமின்றிச் சரணடைந்த 600 இலங்கைப்பொலிசார் புலிகளால் கொலை செய்யப்பட்டது பற்றியும் பேசப்பட்டது.

அதில் கலந்து  ஐரோப்பாவில்  இருந்து  கலந்து கொண்ட தேசிய பற்றாளர் ஒருவர் கொலைகளை நியாயப்படுத்தி பேசினார்.   கொல்லப்பட்ட துரோகிகள் எல்லோரும் துரோகிகள் என்றும் எனவே  கொல்லப்பட வேண்டியவர்களே என்று கூற குறுக்கிட்ட கலந்துரையாடலின் நெறியாளர் சர்வதேச விசாரணை ஒன்று வருமானால் தமிழர் தரப்பில்  இதைக் கூற முடியுமா என்று கேட்க,  பதட்டப்பட்ட தேசியபற்றாளர் இந்த விடயங்கள் எல்லாம் சர்வதேச விசாணைக்குட்படுத்த முடியாது. அது தமிழ்மக்களின் விவகாரம். முள்ளிவாய்க்கால் விடயத்தை மட்டுமே சர்வதேச விசாரணை செய்யலாம் என்று பதிலளித்தார். கோத்தபாயவுக்கும்  அந்த தேசியருக்கும் என்னால் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. 😂

இப்படிப் பட்ட தீவிர தேசியர்கள் "அப்பன் குதிருக்குள்" இல்லை என்று புலிகளைக் காட்டிக் கொடுக்கும் முழுமையான கூழ்முட்டை கேசுகள்! இப்படிப் பட்டோருடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் போதும்,  அமரர் விவேக் கொமெடி பார்த்த அளவு சிரிப்பு வரும்😂

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kandiah57 said:

எனக்கு எந்த கேள்வியும் சுட்டு விடவில்லை,   அது என்ன கேள்வி?? 

புலிகளும். மனிதர்கள் தான்   தமிழ் மக்கள் தான்    தமிழ் இனம் தான் அவர்களின் இனம்    எனவே… அவர்களை கொன்று குவிப்பது  இனவழிப்பு  போர் குற்றம் ஆகும்   

நீங்கள் நினைப்பது போல  நான்கு கால் புலிகள் அல்ல   மாறாக 

தூய தமிழ் மொழி பேசுகின்ற இரண்டு கால்கள் கொண்ட மனிதர்கள்  புலிகளை கேட்டு கேள்விகள் இன்றி கொன்று குவிக்கலாம். என்று நீங்கள் நினைக்கிறீங்களா?? புலிகளை கொல்வது இனவழிப்பு இல்லையா???

புலிகளை கொல்வது போர் குற்றம் இல்லையா?? 

புலிகளை கொல்லப்படுவது தமிழ் மக்கள் அழிக்க படுவது ஆகும்   

இலங்கை இராணுவத்தையும். சிங்கள மக்களையும்  பிரித்து  பேசுவது எழுதுவது கதைப்பது கிடையாது   ஆனால் நாம் தமிழர்கள்  

கந்தையா போரிடும் புலிகளை இராணுவம் கொன்றால் அது  இன அழிப்பும் ஆகாது போற்குற்றமும் ஆகாது. ஆனால்,  ஆயுதமின்றி சரணடைந்த புலிகளை இலங்கை இராணுவம் கொலை செய்தது நிச்சயமாகப் போர்க குற்றம் தான்.  ஆனால் 1990 ல் ப  ஆயுதமின்றி சரண்டைந்த பொலிசாரை  புலிகளும் சுட்டுக் கொலை செய்த போர்க்குற்றத்தை செய்துள்ளார்கள்  என்பது தமிழ் மக்களின் போராட்டத்தை பின்னடையச்செய்த நிகழ்வுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

கந்தையா போரிடும் புலிகளை இராணுவம் கொன்றால் அது  இன அழிப்பும் ஆகாது போற்குற்றமும் ஆகாது. ஆனால்,  ஆயுதமின்றி சரணடைந்த புலிகளை இலங்கை இராணுவம் கொலை செய்தது நிச்சயமாகப் போர்க குற்றம் தான்.  ஆனால் 1990 ல் ப  ஆயுதமின்றி சரண்டைந்த பொலிசாரை  புலிகளும் சுட்டுக் கொலை செய்த போர்க்குற்றத்தை செய்துள்ளார்கள்  என்பது தமிழ் மக்களின் போராட்டத்தை பின்னடையச்செய்த நிகழ்வுதான். 

@நன்னிச் சோழன் மேடைக்கு அழைக்கபடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, பெருமாள் said:

@நன்னிச் சோழன் மேடைக்கு அழைக்கபடுகிறார்.

ஓம்... 700-800 வரையான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் காவல்துறையினர் சரணடைந்தனர். இவர்களில் சிங்களம் மற்றும் முஸ்லிம் காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழ் காவல்துறையினரில் பெரும்பாலானோர் தமிழீழ காவல்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.  

சில சிங்கள மற்றும் முஸ்லிம் காவல்துறையினர் தப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, Justin said:

சீருடை அணிந்த புலிகள் சீருடை அணியாத இராணுவமான நீலன், அமீர் போன்றோரைக் கொல்வது என்ன குற்றம்?

இனத்திற்கு இந்தியாவோடு சேர்ந்தும் (அமிர்தலிங்கம்) சிங்களத்தோடு சேர்ந்தும் (நீலன்) சவக்குழி குழிதோண்டியோருக்கு புலிகள் சவக்குழி தோண்டினர். இனத்தை சிதைக்க நினைத்தவர்களை வேரோடு பிடுங்கி எறிந்தனர் - 

என்றெல்லாம் எழுத ஏலும். ஆனால் அது வேண்டாம். 

நீலன், நீலன் என்று ஒப்பரி வைக்கிறீர்கள்... அந்த நீலன் தமிழர் அரசியலுக்கு செய்த ஒரு நல்ல விடையத்தை தானுமோ எழுதுங்கோவன், பாப்பம்.


 

 

22 hours ago, Cruso said:

எதிர் கருத்தாளர்கள் என்று சொல்லக்கூடாது. உண்மையை எழுதுபவர்கள் என்று எழுத வேண்டும். அதாவது இன்னும் சொல்வதென்றால் யுத்த காலத்தில் அதட்குள் அகப்பட்டு, படிக்கும்காலத்திலேயே சிங்களவர்களின் தாக்குதலை சந்தித்து, இன்றும் அந்த (சிங்கள / தமிழ்) மக்களுடன் வாழ்ந்து கொண்டு உண்மையை எழுதும் எங்களை போன்றவர்களை எதிர் கருத்தாளர்கள் என்று சொல்ல வேண்டாம். பச்சை குத்துவார்களோ, சிவப்பு குத்துவார்களோ என்பதெல்லாம் பார்க்க கூடாது.

குபீர்... உங்களுக்கு நீங்களே வெள்ளைப் பெயின்ரை வாளியோட தூக்கி ஊத்துங்கோ.... அப்பதான் சரியா இருக்கும்😂

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நன்னிச் சோழன் said:

ஓம்... 700-800 வரையான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் காவல்துறையினர் சரணடைந்தனர். இவர்களில் சிங்களம் மற்றும் முஸ்லிம் காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழ் காவல்துறையினரில் பெரும்பாலானோர் தமிழீழ காவல்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.  

சில சிங்கள மற்றும் முஸ்லிம் காவல்துறையினர் தப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

அதை யார் செய்தது அப்போதைய பொறுப்பாளரின் பெயர் தெரியுமா ?

Guest
This topic is now closed to further replies.



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.