Jump to content

விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

வி பு க்களின் தனித்துவத்தை யார் எங்கே சிறுமைப்படுத்தியது என்பதை தாங்கள் ஆதாரத்துடன் நிறுவுதல் நன்று. 

நாங்க கன்றுக்குட்டியை கன்றுக்குட்டி என்கிறம். நீங்கள் இல்ல.. கன்றுக்குட்டி தான் மாடு என்றீங்க. கன்றுக்குட்டியை கன்றுக்குட்டியாக ஏற்றுக் கொண்டு போயிருந்தால்.. இந்த அநாவசிய வெட்டி ஒட்டல்கள் அவசியமில்லை. ஏனெனில்.. இவை ஏலவே மேற்கு சார்பு ஆட்களால் பலவகையாக எழுதப்பட்டு விடப்பட்டவை தான். அவை எப்போதுமே தாங்கள் தான் எல்லாம் முதலில் என்று எழுதித் தள்ளுபவர்கள். நாங்கள் பயங்கரவாதிகள். எங்களுக்கு சார்ப்பானவை எல்லாம் பயங்கரவாதம் சார்பானது என்று எழுதுபவர்களின் ஆக்கங்ளை ஒட்டி கன்றுக்குட்டியை மாடு என்று நிறுவ முற்படுவதை.. யாழ் கள வாசகர்கள் நன்கு உணரக் கூடிய பக்குவமானவர்கள். 😄

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nedukkalapoovan said:

நாங்க கன்றுக்குட்டியை கன்றுக்குட்டி என்கிறம். நீங்கள் இல்ல.. கன்றுக்குட்டி தான் மாடு என்றீங்க. கன்றுக்குட்டியை கன்றுக்குட்டியாக ஏற்றுக் கொண்டு போயிருந்தால்.. இந்த அநாவசிய வெட்டி ஒட்டல்கள் அவசியமில்லை. ஏனெனில்.. இவை ஏலவே மேற்கு சார்பு ஆட்களால் பலவகையாக எழுதப்பட்டு விடப்பட்டவை தான். அவை எப்போதுமே தாங்கள் தான் எல்லாம் முதலில் என்று எழுதித் தள்ளுபவர்கள். நாங்கள் பயங்கரவாதிகள். எங்களுக்கு சார்ப்பானவை எல்லாம் பயங்கரவாதம் சார்பானது என்று எழுதுபவர்களின் ஆக்கங்ளை ஒட்டி கன்றுக்குட்டியை மாடு என்று நிறுவ முற்படுவதை.. யாழ் கள வாசகர்கள் நன்கு உணரக் கூடிய பக்குவமானவர்கள். 😄

1) உங்கள் கருத்தை நிறுவுவதற்கு ஆதாரம் இல்லை என்பது புரிந்துகொள்ள முடிகிறது. 

2) மேலே கொடுக்கப்பட்ட தரவுகள் உங்களுக்கு வேண்டுமானால்  அனாவசிய வெட்டி ஒட்டல்களாகத் தெரியலாம். ஆனால் . இவை உசாத்துணை என ஆய்வுப் பரப்பில்/உயர் கல்வித்துறையில் கூறப்படும். இவை வாசிப்பவரின் Knowledge அறிவை  அதிகரிக்க உதவுவதுடன் ஆய்வு செய்யப்படும் விடயத்தின் முடிவிற்கு/ நிலைப்பாட்டை நிறுவுவதற்கு உதவும். 

அத்துடன் அவை இங்கே இணைக்கப்படுவதற்குக் காரணம்  வாசகர்களின் பார்வையை விசாலமாக்கும்  என்பதுவே. 

உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிறருக்கு அப்படி இருக்க என்பதிலையே. 👍

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Eppothum Thamizhan said:

இதில் அவிப்பது  யாரென்று எல்லோருக்கும் புரியும். சும்மா அமெரிக்கனுக்கும் இஸ்ரேலுக்கும் கொடிபிடிப்பதை விட்டுவிட்டு வேறு வேலையிருந்தால் பாருங்கள்.

100இக்கு மேற்பட்ட விமானங்கள் வருவதை பார்த்துவிட்டும் உயர் அதிகாரி உதாசீனம் செய்ய சொன்னாராம். கேக்கிறவன் கேனையனாயிருந்தால் .......

இதை நீங்கள் உங்களுடைய தகவல் மூலத்தை இணைப்பதன் மூலமே நிரூபீக்கலாமென நினைக்கிறேன்? ஏன் தயக்கம்😎?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 24/2/2024 at 12:35, nedukkalapoovan said:

H I Sutton - Covert Shores

இது புலிகளது வடிவமைப்பு.

Ukraine is using sea drones to deliver the fight beyond front lines

இது உக்ரைனது. 

 

புலிகளை பிரதி செய்த உக்ரைன்

Published By: DIGITAL DESK 5

09 OCT, 2022 | 01:40 PM

https://www.virakesari.lk/article/137295

ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்படையின் தளம் அமைந்துள்ள செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகே கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி தரைதட்டியிருந்த ஆளில்லாமல் இயங்க கூடிய படகு (USV - uncrewed surface vessel) ஒன்றை ரஷ்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர்.

செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகேயுள்ள உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு அண்மையாக அந்த படகு காணப்பட்டது. அது உக்ரேனுக்குச் சொந்தமானதென ரஷ்ய கடற்படையினர் கூறுகின்றனர்.

ஆனால், படகு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில்  இருந்து 150 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.

வெடிமருந்து நிரப்பப்பட்ட அந்தப் படகை, ரஷ்ய கடற்படையினர் பின்னர் நடுக்கடலில் வெடிக்க வைத்து அழித்தனர்.

இந்தப் படகின் வடிவமைப்பும், பயன்பாட்டு நோக்கமும், கடற்புலிகளின் கரும்புலிப் படகுகளை முன்மாதிரியாவை கொண்டிருந்தது.

உக்ரேனின் இந்தப் புதிய ஆயுதம், ரஷ்ய கடற்படையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கைக் கடற்படையினருக்கு எதிரான கடற்புலிகள் கையாண்ட போர் உத்திகளை, உக்ரேன் தனக்குரிய பாணியில்- தன்னிடம் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கையாளத் தொடங்கியிருப்பதே அதற்குக் காரணம்.

இலங்கைக் கடற்படைக்கு எதிராக கடற்புலிகள், பயன்படுத்திய கரும்புலிப் படகுகள் ஆட்களால் இயக்கப்படுவது. பெரும்பாலும் அவை வெளியிணைப்பு இயந்திரங்களைக் கொண்டது.

ஆனால் செவஸ்டபோல் துறைமுகம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட உக்ரைன் படகு, ஆட்களின்றி பயணம் செய்யக் கூடியது. 

‘வோட்டர் ஜெட்’ எனப்படும் ஒற்றை நீருந்து விசை இயந்திரத்தினால் செயற்படக் கூடியது.

ஆனாலும், போரின் இறுதிக்கட்டத்தில் உடையார்கட்டுப் பகுதியில், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட கடற்புலிகளின் படகு கட்டுமான மையத்தில் இதே வடிவத்தை கொண்ட மற்றும் நீருந்து விசையில் இயங்கும் ஒற்றை இயந்திர படகுகள் வடிவமைப்பு நிலையில் மீட்கப்பட்டிருந்தன.

கிட்டத்தட்ட பெரும்பகுதி மூழ்கிய நிலையில், பயணம் செய்யக் கூடியதாக இந்தப் படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் கரும்புலிப் படகுகளின் முனையில், குண்டுத் தலையாக (war head) ஆட்டிலறி குண்டு அல்லது மோட்டார் குண்டு, பொருத்தப்பட்டது.

படகில் நிரப்பப்பட்ட வெடிபொருளை வெடிக்கச் செய்வதற்கு அதுவே வெடிப்பு ஊக்கியாக இருந்தது.

ஆனால், காங்கேசன்துறை துறைமுகத்தில் கடற்படைக் கப்பல் ஒன்றின் மீது மோதிய கரும்புலிப்படகு வெடிக்கவில்லை.

தொழில்நுட்பக் கோளாறு அல்லது குண்டுத் தலை செயலிழந்தால், அந்த நிலை ஏற்பட்டிருக்கலாம்.

இதன் பின்னர் கடற்புலிகள் தங்களின் கரும்புலிப் படகுகளில் இரண்டு குண்டுத் தலைகளைப் பொருத்தினர்.

செவஸ்டபோல் துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உக்ரேனின் ஆளில்லா குண்டுப் படகிலும், அதேபோன்று இரண்டு குண்டுத் தலைகளே பொருத்தப்பட்டிருந்தன.

கடற் கரும்புலிகளின் படகுகளில் இல்லாத நவீன சோனார் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள் அதில் பொருத்தப்பட்டிருந்தன.

உக்ரேன் இந்த படகுகளை எப்போது வடிவமைத்தது என்று தெரியவில்லை.  ஆனால், இதனை உக்ரேனின் புதிய ஆயுதம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.  

எனினும், இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே, விடுதலைப் புலிகள் இந்த வகை குண்டுப் படகுகளை கடற்படையினருக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகள் இந்தப் படகுகளை கட்டுவதற்கு முன்னோடியாக இருந்தது இத்தாலி தான்.

இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானிய கடற்படைக் கப்பல்களை மூழ்கடிப்பதற்கு, வெடிமருந்து நிரப்பிய படகுகளை இத்தாலி பயன்படுத்தியது.

ஆனால் ஜப்பானிய விமானப்படையின் ‘கமிகாசி’ எனப்படும் தற்கொலைப்படை விமானிகளைப் போல, இத்தாலிய கடற்படையினர், செயற்படவில்லை.

அவர்கள் ஆறு சிறிய படகுகளில் 330 கிலோ வெடிபொருட்களை நிரப்பி, சுடா குடாவில் (Suda Bay)  பிரித்தானிய கடற்படையின் 3 கப்பல்களை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

‘யோர்க்’ என்ற பிரித்தானிய கடற்படையின் பாரிய போர்க்கப்பலின் மீது இரண்டு படகுகள் மோதி வெடித்தன. மூன்றாவது படகு எண்ணெய் தாங்கி கப்பல் மீது மோதி வெடித்தது. 

ஏனைய மூன்று படகுகளும், தொழில்நுட்ப காரணங்களாரோ மனித காரணங்களாலோ வெடிக்கவில்லை.

இந்த தாக்குதலை நடத்திய இத்தாலிய கடற்படையினர், பிரித்தானிய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள், போரில் எதிரியிடம் சிக்கும் மரபைக் கொண்டிராதவர்கள். 

அவர்கள், கடற்படைக் கப்பலின் மீது மோதி வெடித்து, சாகும் வகையில்- தங்களின் உத்தியை வடிவமைத்தனர்.

இத்தாலிக்குப் பின்னர் 1948இல், எகிப்தின் அமீர் பாரூக் என்ற போர்க்கப்பலை இஸ்ரேலியப் படையினர் சிறிய வெடிபொருள் படகு ஒன்றை வெடிக்க வைத்து மூழ்கடித்திருந்தனர்.

அதற்குப் பின்னர், விடுதலைப் புலிகளே இந்த போர் உத்தியைக் கையாண்டிருந்தனர். 

பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளுக்கு மத்தியில், குறைந்தளவு வசதிகள், தொழில்நுட்பங்களைக் கொண்டு தான், விடுதலைப் புலிகள் கரும்புலிப் படகுகளை வடிவமைத்தனர்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் பயன்படுத்திய படகுகள் மற்றும் போர் உத்திகளை, பல நாடுகளின் கடற்படையினர் ஆர்வத்துடன் அறிந்து கொள்வதற்கு முயன்றனர்.

பல நாடுகளின் கடற்படை அதிகாரிகள், இலங்கை கடற்படையினரிடம் இதுபற்றி கேட்டறிந்துள்ளனர். கடற்புலிகளின் படகுகளின் திறன் மற்றும் வடிவமைப்பு குறித்து, அவர்கள் நேரிலும் ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர்.

உக்ரைனிய கடற்படை அதிகாரிகள் அல்லது நிபுணர்களும் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொண்டனரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஆனாலும் அவர்கள் விடுதலைப் புலிகளின் கரும்புலிப் படகுகளின் வடிவமைப்பு மற்றும் உத்திகளைப் பிரதி செய்திருக்கின்றனர் அல்லது அதனை முன்னோடியாகப் பயன்படுத்தியுள்ளனர்.

அவர்கள், தங்களின் படகில், நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒன்றுக்கு இரண்டு குண்டுத் தலைகளை, படகுடன் சேர்த்தே வடிவமைத்திருக்கிறார்கள்.

ஆனாலும், அந்தப் படகு இலக்குத் தவறி ரஷ்யப் படைகளிடம் சிக்கியிருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், வெடிபொருள் நிரப்பிய படகுகளைப் பயன்படுத்தியவர்கள், யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தான்.

சவூதி அரேபிய கடற்படைக்கு எதிராக அவர்கள் இத்தகைய படகுகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.

கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி அவர்களின் ஆயுத அணிவகுப்பு ஒன்றில் ஆளில்லா வெடிமருந்துப் படகுகளும் இடம்பெற்றிருந்தன.

இந்தப் படகுகளிலும் நவீன தொழில்நுட்பம் காணப்படுகிறது.

இதனை, வடிவமைத்துக் கொடுத்திருப்பது ஈரான் தான் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

ஈரான், ஆளில்லா விமானங்களை அதிகளவில் உற்பத்தி செய்கிறது. அவற்றை தாக்குதல்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைப்புகளில் திருத்தங்களைச் செய்திருக்கிறது.

அதுபோவே ஆளில்லா தாக்குதல் படகுகளையும் ஈரான் வடிவமைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், இவ்வாறான வெடிபொருள் நிரப்பிய படகுகளை கொண்டு தாக்கும் உத்திகளை கையாண்ட, அதில் தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெற்றவையெல்லாம் நாடுகளாகவே இருந்து வருகின்றன. விடுதலைப் புலிகள் மட்டுமே, அதிலிருந்து வேறுபட்டு விளங்குகின்றனர். 

 

 

நீங்கள் இங்கே களவெடுத்ததாக கூறியிருக்கிறீர்கள்.

கரவு கடற்கலங்களை (Stealth Naval Vessal) முதன் முதலில் பாவித்தது, அமெரிக்கா தான். Sea Shadow என்ற கடற்கலத்தை 1984 இல் பாவித்துள்ளது. அது 1993இல் முதன்முதலில் பொதுவெளியில் அறியப்பட்டது.

கரவு படகு (Stealth Boat) என்ற சொல்லிற்குள் அடங்க வேண்டுமெனில் அதுவும் அமெரிக்காவே தான். CB90 என்ற படகை அமெரிக்கா பாவித்தது, 1990 முதல்.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முதலாவது கரவுப் படகு 1998ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. அதனை அமெரிக்காவின் எஃவ் 117 வான்வழி குண்டுதாரிகளை (airborne bomber) மாதிரியாகக் கொண்டுதான் மங்கை படகு கட்டுமானப் பிரிவுப் போராளிகள் வடிவமைத்தனர். முதலாவது இடியனின் கலப்பெயர் தணிகை (கடற்கரும்புலிகளின் மகளிர் அணி கடற்கரும்புலி கப்டன் தணிகை நினைவாய்). இது இருவர் செல்லக்கூடிய ஆளுள்ள கரவுப் படகு ஆகும்.  

 

கடற்புலிகளின் கரவு வகைப் படகான "கவிர்" வகுப்பு இடியன்களின் நீளமும் (16')  உக்ரேனினதும் ஒன்றே (16'). எனினும் உக்ரேனினதோ ஆளில்லா கடல்வழி வண்டு (Unmanned seaborne drone) . எம்மை விட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம். 

Ukraine 16' Unmanned seaborne drone

Ukrainian Drone Boat Appears To Have Been Captured By Russia

 

எவ்வாறெயினும் உக்ரேனினது ஆளில்லா கடல்வழி வண்டின் (இதில் மொத்தம் இரண்டு விதம் உண்டு. நான் கூறியிருப்பது இரண்டாவது; அதிகமாக பாவிக்கப்படுவது) வடிவமைப்பும் கடற்புலிகளின் இடியனின் வடிவமைப்பும் வெவ்வேறானவை.

--> உக்ரேனினது படகின் வடிவமைப்பானது 1995இற்குப் பிற்பகுதியில் கட்டப்பட்ட அமெரிக்காவின் சீ லயன் - 2 (Sealion II) இன் வடிவமைப்பை ஒத்தது.  http://www.hisutton.com/SEALION and Alligator stealth boats.html

--> எமதோ எஃவ் 117 குண்டுதாரியை ஒத்தது. 

Top view of angular aircraft banking left while flying over mountain range

எனவே (எடுகோளாக) புலிகளை முன்னோடியாக "சில வேளைகளில்" உக்ரைன் பாவித்திருக்கலாம் எனக் கொள்ளலாம். ஆனால் புலிகளிடமிருந்து எக்காரணத்தைக் கொண்டும் களவெடுக்கவில்லை. கரவு தொழில்நுட்பம் மேற்கினுடையது. தமது தொழில்நுட்பத்தை அவர்கள் தமக்கு ஏற்ப நுட்பமாக ஆளில்லா படகோடு சேர்த்து மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து பாவித்திருக்கிறார்கள். அவ்வளவே

இதற்கு மேல் முடிவு உங்களிடம்.

Edited by நன்னிச் சோழன்
கூடுதல் தகவல் சேர்ப்பு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2024 at 10:40, Eppothum Thamizhan said:

இதில் அவிப்பது  யாரென்று எல்லோருக்கும் புரியும். சும்மா அமெரிக்கனுக்கும் இஸ்ரேலுக்கும் கொடிபிடிப்பதை விட்டுவிட்டு வேறு வேலையிருந்தால் பாருங்கள்.

100இக்கு மேற்பட்ட விமானங்கள் வருவதை பார்த்துவிட்டும் உயர் அதிகாரி உதாசீனம் செய்ய சொன்னாராம். கேக்கிறவன் கேனையனாயிருந்தால் .......

What were the two waves of attacks on Pearl Harbor?

On the morning of December 7th, at 6:10 AM, the first wave of Japanese planes launched. At 6:45 AM, the USS Ward spotted and open fired on a Japanese submarine off the coast of Hawaii. At 6:53 AM, the Ward reported sinking the sub, but decoding the message took time. At 7:02 AM, a radar station on Oahu spotted unidentified aircraft heading towards the island. However, radar systems were less than a month old, and the lieutenant who received the warning thought it was a false alarm. By 7:40 AM, the first wave of Japanese aircraft had reached Oahu, having evaded American early warning systems. Shortly thereafter, the Japanese aerial commander ordered the attack.

The Japanese aircraft flew in two waves. The first wave attacked airfields and anti-air defenses on the west side of the island, while the second wave, almost an hour later, concentrated on the eastern side. Both waves met over Pearl Harbor. In the harbor, anchored ships made perfect targets for the Japanese bombers.

https://www.britannica.com › study

 

https://www.britannica.com/study/timeline-of-the-attack-on-pearl-harbor#:~:text=The Japanese aircraft flew in,targets for the Japanese bombers.

Edited by Kapithan
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2024 at 01:21, Kapithan said:

What were the two waves of attacks on Pearl Harbor?

On the morning of December 7th, at 6:10 AM, the first wave of Japanese planes launched. At 6:45 AM, the USS Ward spotted and open fired on a Japanese submarine off the coast of Hawaii. At 6:53 AM, the Ward reported sinking the sub, but decoding the message took time. At 7:02 AM, a radar station on Oahu spotted unidentified aircraft heading towards the island. However, radar systems were less than a month old, and the lieutenant who received the warning thought it was a false alarm. By 7:40 AM, the first wave of Japanese aircraft had reached Oahu, having evaded American early warning systems. Shortly thereafter, the Japanese aerial commander ordered the attack.

The Japanese aircraft flew in two waves. The first wave attacked airfields and anti-air defenses on the west side of the island, while the second wave, almost an hour later, concentrated on the eastern side. Both waves met over Pearl Harbor. In the harbor, anchored ships made perfect targets for the Japanese bombers.

https://www.britannica.com › study

 

https://www.britannica.com/study/timeline-of-the-attack-on-pearl-harbor#:~:text=The Japanese aircraft flew in,targets for the Japanese bombers.

 

On 25/2/2024 at 16:16, Justin said:

இதை நீங்கள் உங்களுடைய தகவல் மூலத்தை இணைப்பதன் மூலமே நிரூபீக்கலாமென நினைக்கிறேன்? ஏன் தயக்கம்😎?

மேலே சிவப்பு எழுத்தில் உள்ளதை வாசிக்கவும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Eppothum Thamizhan said:

 

மேலே சிவப்பு எழுத்தில் உள்ளதை வாசிக்கவும்!!

இதைத் தான் நான் முதலே சுட்டிக் காட்டினேன்.  ஜப்பானிய விமானங்கள் ரேடாரில் வந்திருக்கிறது. கீழ் நிலை படையினன் மேலதிகாரிக்கு தெரியப் படுத்தியிருக்கிறார், மேலதிகாரி தவறான சமிக்ஞை என்று உதாசீனம் செய்திருக்கிறார். இதன் சுருக்கம் தான் மேலே சிவப்பில் இருக்கிறது.


அப்ப, ஜப்பான் காரன் தாழப்பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினான் என்பது பொய் தானே?

இப்ப யார் அவியல் வைத்திருப்பதாக புலனாகிறது உங்களுக்கு😂?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2024 at 22:07, ஏராளன் said:

தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சிறிலங்கா பிரஜைகள் ஆயுதங்களுடனும் ,போதை பொருடகளுடனும் இந்திய புலனாய்வினர் மற்றும் இந்தியா மற்றும் வேறு நாட்டு படைகளினால் கைது செய்யப்பட்டால் அவர்களை இலகுவாக புலிகள்  என முத்திரை குத்தி விடுவார்கள்...

தற்பொழுது தமிழ்நாட்டில் பிடிபட்டுள்ள (இரண்டு,மூன்று நாட்  களுக்கு முதல்)  போதை பொருகளுக்கும் ;  விழிஞம் கடற்கரையில், 2021 ஆம் ஆண்டு 300 கிலோ போதைப்பொருட்களுடனும் ,ஆயுதங்களுடனும் பிடிபட்ட சிறிலங்கா பிரஜைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் ....இதில் பிடிபட்டவர்கள் தமிழ் பேசுபவர்கள்....திமுக வின் அயலக தொடர்பாளரக்ள்,,,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/2/2024 at 16:12, Justin said:

இதைத் தான் நான் முதலே சுட்டிக் காட்டினேன்.  ஜப்பானிய விமானங்கள் ரேடாரில் வந்திருக்கிறது. கீழ் நிலை படையினன் மேலதிகாரிக்கு தெரியப் படுத்தியிருக்கிறார், மேலதிகாரி தவறான சமிக்ஞை என்று உதாசீனம் செய்திருக்கிறார். இதன் சுருக்கம் தான் மேலே சிவப்பில் இருக்கிறது.


அப்ப, ஜப்பான் காரன் தாழப்பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினான் என்பது பொய் தானே?

இப்ப யார் அவியல் வைத்திருப்பதாக புலனாகிறது உங்களுக்கு😂?

முதலில் ராடேரில் சிக்கியது Reconnaissance aircraft. அது அவர்களின் கவனத்தை திசைதிருப்ப அனுப்பப்பட்டது. பின்னர் வந்த விமானங்கள் அனைத்தும் having evaded American early warning systems என்று சொல்லியிருப்பது உங்களுக்கு புரியவில்லையா?

அதுசரி விழுந்தாலும் மீசையில் மண் படவில்லையென்று மேலதிகாரி மீது பழியைப்போட்டு சமாளிக்க வேண்டிய நிலைமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2024 at 05:32, Eppothum Thamizhan said:
On 19/2/2024 at 16:50, Justin said:

தாழப் பறந்து ரேடாரில் இருந்து தப்புவதெல்லாம் இஸ்ரேல் 60 களில் பயன்படுத்திய நுட்பம், அதை புலிகள் பின்பற்றினர், இப்ப உக்ரைன் பின்பற்றுகிறது. இது "தமிழ் தான் உலகின் எல்லா மொழிகளுக்கும் தோற்றுவாய்" என்ற உருட்டல் போல அல்லவா இருக்கிறது?

உதை ஜப்பான்காரன் 1941இல் பேர்ல் ஹார்பரை அடிக்கும்போதே பயன்படுத்தி விட்டான். சும்மா அமெரிக்காவின் அல்லக்கைகளுக்கு துதிபாடுவதே வேலையாய் கொண்டு அலையினம் கொஞ்சப்பேர்!!

உங்கள் முதல் கருத்து மேலே👆

உங்களோடான உரையாடல்கள் எல்லாம் சிறு பிள்ளையோடு பேசுவது போன்ற சிவிங்க நீட்டல்களாக மாறுவது என் தவறோ உங்கள் இயல்போ என்று புரியவில்லை😂.

இதற்கு ஆதாரம் எங்கே?

அமெரிக்கா கோட்டை விடவில்லையென்று எங்கே யார் சொன்னார்கள்? 2022 இல் ரேடாரில் ஜப்பானிய விமானங்களைக் கண்ட இராணுவ சிப்பாய் இறக்கும் வரை இதைப் பற்றிய பேச்சும் செய்திகளும் அமெரிக்காவில்  தொடர்ந்து வந்திருக்கின்றன. எனவே, இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இப்ப நீங்கள் உங்கள் செய்தி மூலத்தைத் தாருங்கள். மீசையைப் பற்றி பிறகு யோசிப்பம்😎.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.