Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

f-dfghrthj-750x375.jpg

யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி.

யாழ் பெரிய பள்ளிவாசல்  நிர்வாகத் தெரிவை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எமது யாழ் பெரிய பள்ளிவாசல் 1967 ஆம் ஆண்டு சாதாரண ஒரு கொட்டகையாக அமைக்கப்பட்டு அதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினார்கள்.

1990 ஆம் ஆண்டு வெளியற்றப்பட்டு மீண்டும் 2002இல் மீண்டும் மீள்குடியேறி வந்து பார்த்தபோது பள்ளிவாசலை உடைந்த நிலைமையில் கண்டோம். பின்னர் அதனை பெரிய கஷ்டத்தின் மத்தியில் ஒவ்வொரு தனவந்தர்களிடமும் பண உதவி பெற்று பள்ளிவாசலை நாங்கள் புனரமைத்து இன்று அல்லாவினுடைய கிருபையினால் ஒரு மர்க்கசாக இருந்து கொண்டிருக்கிறது.

எனவே எங்கே பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களுடைய அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரே பள்ளியின் தலைவராக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை.

எமது மக்கள் பாதிக்கப்பட்டு தற்போது மீள்குடியேளி இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த தெரிவுகளை நடத்துபவர்களும் சரி முஸ்லிம் கலாசார தினைக்களத்தில் இருப்பவர்களும் சரி யோசிக்க வேண்டும், அவர்களுடைய ஊர்களில் பள்ளிவாசல் நிர்வாக தெரிவு நடந்தால் ஒரு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தலைவராக நியமிப்பார்களா ஏன் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் இந்த நிலைமை,

அல்லாஹ்வுக்காக இந்த நிர்வாக தெரிவை உடனடியாக நிறுத்தி புனித ரமலான் நாளை ஆரம்பமாக உள்ளதால் ரமலான் முடிந்த பிறகு முஸ்லிம் கலாசார தினைக்கள அதிகாரிகள் முன்னிலையில் இந்த தெரிவை நடத்தி எதிர்காலத்தில் யாழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவி செய்வீர்களா என்று கேட்டுக்கொள்ளுகின்றேன் ” ,இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1373085

  • கருத்துக்கள உறவுகள்

சுமா.....சும்மாபோய் கூட்டத்தை எட்டிப்பார்த்திருப்பாரோ?😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எமது மக்கள் பாதிக்கப்பட்டு தற்போது மீள்குடியேளி இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த தெரிவுகளை நடத்துபவர்களும் சரி முஸ்லிம் கலாசார தினைக்களத்தில் இருப்பவர்களும் சரி யோசிக்க வேண்டும், அவர்களுடைய ஊர்களில் பள்ளிவாசல் நிர்வாக தெரிவு நடந்தால் ஒரு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தலைவராக நியமிப்பார்களா ஏன் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் இந்த நிலைமை

வெளிமாவட்டத்தவரை யாழில் உள்ளவர்கள் தானே தெரிவு செய்தார்கள்.

அப்புறம் ஏன் துள்ளிக் குதிப்பான்?

2 hours ago, alvayan said:

சுமா.....சும்மாபோய் கூட்டத்தை எட்டிப்பார்த்திருப்பாரோ?😁

சுமேயின் காற்றுப்பட்டாலே பிரச்சனை போல இருக்கு.

போனகிழமை கிரிக்கட் போட்டி பார்த்தாரே 

அங்கு ஒன்றும் நடக்கலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளிமாவட்டத்தவரை யாழில் உள்ளவர்கள் தானே தெரிவு செய்தார்கள்.

அப்புறம் ஏன் துள்ளிக் குதிப்பான்?

சுமேயின் காற்றுப்பட்டாலே பிரச்சனை போல இருக்கு.

போனகிழமை கிரிக்கட் போட்டி பார்த்தாரே 

அங்கு ஒன்றும் நடக்கலையோ?

தனிய ஒராள் தானே அவரது கட்சியில். 🙂

கக்கீம் வெளிமாவட்டத்தவர் எப்படி கட்சி தலைவர் ஆகலாம் என முந்தி கிழக்கு முஸ்லிம்கள் புலம்பியது நினைவுக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் தமிழர்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

சுமேயின் காற்றுப்பட்டாலே பிரச்சனை போல இருக்கு.

போனகிழமை கிரிக்கட் போட்டி பார்த்தாரே 

அங்கு ஒன்றும் நடக்கலையோ?

சுமேயின் மூச்சுப் பட்டபின் ரோயல்  டீம்  பிரிஞ்சிருக்கும்...ஆனால் பக்கத்திலை...இருந்த நரி பக்கா ஆளாச்சே...உடனடியாக நாம் ..நமது இனம் ..பவுத்தம் என்றுசொல்லி ஒட்டவைத்திருக்கும்..🙃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

சுமேயின் மூச்சுப் பட்டபின் ரோயல்  டீம்  பிரிஞ்சிருக்கும்...ஆனால் பக்கத்திலை...இருந்த நரி பக்கா ஆளாச்சே...உடனடியாக நாம் ..நமது இனம் ..பவுத்தம் என்றுசொல்லி ஒட்டவைத்திருக்கும்..🙃

அடுத்த றோயல், தோமியன் கிரிக்கட் மட்ச் அம்பாந்தோட்டையில் ....நடை பெறுவதை யாரும் தடுக்க முடியாது .....அந்த ம‌ட்ச் அம்பாந்தொட்டையில் நடக்கும் என்றால் அதை எதிர்த்து சம் வழக்கு போடுவார் ...அதற்காக வாதடவும் தயங்க மாட்டார்..

4 hours ago, விசுகு said:

இவர்களும் தமிழர்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்???

சில சமயம் யாழ் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தவர்களுடன் சேர்ந்து நல்லிணக்கமாக வாழ்ந்தால்  அது சிறிலங்காவின் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகமாக மாறிவிடும்  ஆகவே வெளிமாவட்ட முஸ்லீம்களை தெரிவு செய்துள்ளனர் ..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.