Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 MAR, 2024 | 08:15 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

வடக்கு, கிழக்கில் பௌத்த மரபுரிமைகளை அழித்து அதன் மீது பிற மத அடையாளங்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம். இது சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 1987 ஆம் ஆண்டு  13 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்து நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் செயற்பாட்டுக்கு  ஒத்துழைப்பு வழங்கினார்.ஆகவே சபாநாயகரை நாங்கள் பாதுகாப்போம்.

அரசியலமைப்பு  பேரவையின் செயற்பாடுகள் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் இரண்டு உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டம் மற்றும் ஒழுங்கை  செயற்படுத்தும் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தால் வழங்கப்படவில்லை.

19 ஆவது திருத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியால் பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் பாரிய இழுபறி நிலை ஏற்பட்டது. இந்த நிலைமைக்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

வெடுக்குநாறி மலை விவகாரத்தை குறிப்பிட்டுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள்  பாராளுமன்றத்தில் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தெற்கில் உள்ள மத சுதந்திரம் வடக்குக்கும் வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்.

வடக்கில் மத சுதந்திரம் உள்ளதா? என்பதை முதலில் ஆராய வேண்டும். வெடுக்குநாறி மலையில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் பொதிந்துள்ளன. வெடுக்குநாறி மலையில் இருந்த  பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு அதன் மீது  சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா? ஆகவே தெரியாத விடயங்களை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசக் கூடாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்  பிரதிநிதிகள் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பேசி பிரச்சினைகளை தூண்டி விடுகிறார்கள். பின்னர் கொழும்புக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மீண்டும் வடக்கு  மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு செல்கிறார்கள்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் இவர்கள் இவ்வாறு சுதந்திரமாக வாழ்கிறார்கள். பௌத்த தொல்பொருள் மரபுரிகளை அழித்து அதன் மீது பிற மத அடையாளங்களை காட்சிப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம் என்றார்.

https://www.virakesari.lk/article/179337

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் இவர்கள் இவ்வாறு சுதந்திரமாக வாழ்கிறார்கள்

அமெரிக்கர், சீனர்,இந்தியர்,ரஸ்யர்....இப்படி உலகத்தில் உள்ள எல்லோரும் உங்கன்ட நாட்டில் சுதந்திரமாக வாழ்கின்றனர் ...தமிழன் வாழ்ந்தால் பிரச்சனை ...75 வருடமா அர்சியல் செய்ய நீங்கள் எடுத்த ஆயுதம் இன்னும் தொடர்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் இவர்கள் இவ்வாறு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

IMG-6043.jpg

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம்

அட ..... சிங்கள பௌத்தர்களிடம் அப்படி ஒன்று இருக்கிறதா? வரலாறு அப்படி சொல்லவில்லையே.

14 hours ago, ஏராளன் said:

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் இவர்கள் இவ்வாறு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

இலங்கை சிங்கள  பௌத்த நாடு என்பதாலேயே இத்தனை லட்ஷம் தமிழர்கள் கொலையுண்டு, சொத்துக்களை இழந்து, ஏதிலிகளாக சொந்த நாட்டிலேயே இருக்கிறார்கள். வேறு எந்த பௌத்த நாட்டிலும் இப்படி கொடுமை நடந்தேறவில்லையே.

இவர் அப்பப்ப கனவிலே இருந்து எழும்பி வந்து உபதேசிப்பார், அந்த உபதேசம் சீறிப்பாயும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

இது சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்

இதை தமிழ் பேசும் மக்கள் அல்லவா சொல்ல வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

வடக்கு, கிழக்கில் பௌத்த மரபுரிமைகளை அழித்து அதன் மீது பிற மத அடையாளங்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம். இது சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இப்போதைக்கு பொருளாதார மீட்சி கிடையாது இப்படியே பாரளுமன்றத்தில் இனவாதம் கத்தி கொண்டு இருக்கவேண்டியதுதான் வெளியாலை சிங்களம் கோவணத்தையும் வித்து அந்த காசிலைதான்  கஞ்சி குடிக்கபோகுதுகள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, பெருமாள் said:

இப்போதைக்கு பொருளாதார மீட்சி கிடையாது இப்படியே பாரளுமன்றத்தில் இனவாதம் கத்தி கொண்டு இருக்கவேண்டியதுதான் வெளியாலை சிங்களம் கோவணத்தையும் வித்து அந்த காசிலைதான்  கஞ்சி குடிக்கபோகுதுகள் .

செல்வந்த நாடுகளே பொருளாதார நெருக்கடியாலை சிக்கி தவிக்குது. இதுகள் வாய்க்கொழுப்பிலை திரியுதுகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.