Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(குறுங்கதை)
 

தோற்ற வழு

-------------------
இது அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இங்கு பல்கலைக்கழகம் ஒன்றுக்கு செல்வது. அவர்கள் அங்கு மீண்டும் படிக்கவே போகின்றார்கள் என்ற ஒரு எண்ணம் உங்களுக்கு வந்தால், அந்த எண்ணத்தை தயவுடன் இங்கேயே விட்டுவிடவும். அவர்கள் அவ்வளவு ஆர்வமானவர்கள் கிடையாது. அவர்களின் மகள் தான் அங்கு படிக்கப் போகின்றார். அவர்களின் மகன் மூன்று வருடங்களின் முன் வேறொரு பல்கலைக்கழகத்திற்கு போயிருந்தார். அதுவே அவர்கள் முதன் முதலாக இங்கு ஒரு பல்கலைக்கு உள்ளே போனது.
 
இங்கு எல்லா பல்கலைகளும் அங்கு படிக்கப் போகும் பிள்ளைகளுடன் பெற்றோர்களுக்கும் சேர்த்து ஒரு அறிமுக வகுப்பை இரண்டு நாட்கள் ஒழுங்கு செய்வார்கள். இது இலவசம் அல்ல, இதற்கு பெரிய கட்டணமும் வசூலித்துக் கொள்வார்கள். இங்கு பாடசாலைக் கல்வி இலவசம் தான், ஆனால், அதற்கு கந்து வட்டியும் சேர்த்து வாங்குவது போல பல்கலைக்கு கட்டணம் இருக்கும். பெரும்பாலும் கடன் எடுத்து தான் கட்டணம் கட்ட வேண்டும். எடுத்த கடனிலேயே அறிமுக வகுப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதுதான். மூழ்க நினைத்தால், நடுக்கடலில் மூழ்கினால் என்ன, இரண்டு பாக கடலில் மூழ்கினால் என்ன.
 
உண்மையில் இந்த அறிமுக வகுப்புகளுக்கு போவதால், புதிதாக எதுவும் தெரிய வரும் என்றில்லை. முக்கியமாக முன்னர் ஒரு பிள்ளையுடன் போயிருந்தால், பின்னர் இன்னொரு பிள்ளையுடன், அது வெவ்வேறு பல்கலைகளாக இருந்தாலும், போக வேண்டும் என்றில்லை. எல்லா தகவல்களும் அவர்களின் இணையத்தில் கிடைக்கும். தகவல்களில் ஒரு புதுமையும் கிடையாது. ஆனாலும் மனம் விடாது, மணம் முடித்தவரும் விடார்.
 
முதல் நாள் அறிமுக வகுப்பு. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். வகுப்பு ஆரம்பித்துவிட்டது. ஒரு அவசர நிலையில் அவசரப் போலீஸை எப்படித் தொடர்பு கொள்வது என்று வகுப்பு போய்க் கொண்டிருந்தது.
 
அந்த நேரத்தில் ஒருவர் அவசரமாக வகுப்புக்குள் ஓடி வந்தார். வந்தவர் அவனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தை எடுத்துக்கொண்டார். எந்த தயக்கமும் இல்லாமல், 'வகுப்புகள் ஆரம்பிச்சு எவ்வளவு நேரமாச்சு?' என்று தமிழிலேயே கேட்டார். இந்தக் கூட்டத்தில் இன்னுமொரு தமிழ் குடும்பம் இருக்கும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் இவர் தமிழிலேயே தொடங்குகின்றாரே என்று ஆச்சரியம் அவன் மனைவியின் முகத்திலும் தெரிந்தது.
 
தமிழ் முகம் என்று ஒன்று இருக்கின்றது போல, அது அந்த நபருக்கு தெரிந்தும் இருக்கின்றது.
 
பின்னர் அந்த நபர் அவனை விட்டுப் பிரியவேயில்லை. இடைவேளை, உணவு வேளை என்று எல்லா நேரமும் கூடவே வந்தார். வகுப்பில் அவர் எதையும் கவனிக்கவில்லை. இவனும் கவனிக்கவில்லை. இவனின் மனைவி தான் வகுப்பையும் கவனித்து, இவர்கள் இருவரையும் அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்தார்.
 
அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று அவர் சொல்லாமலேயே தெரிய வந்தது. அவன் கன்னியாகுமரி அல்லது நாகர்கோயில் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். அவரும் கேட்கவில்லை. 
 
இங்கு மருத்துவம் படித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும், அத்துடன் பெரும் செலவும் ஆகும் என்று சொன்னார். ஏன், இந்தியாவிலும் அதற்கு பெரும் செலவு தானே என்றான் அவன். இல்லை, இல்லை, இந்தியாவில் இலவசமாகவே படிக்கலாம் என்றார். கதை போதும், வகுப்பை கவனியுங்கள் என்று கண்ணாலேயே கடுமையான ஒரு அறிவுறுத்தல் அவனுக்கு அருகில் இருந்து வந்தது. இந்தியாவில் எப்படி இலவசமாகப் படிக்கலாம் என்ற கேள்வியை சேமித்து வைத்துக்கொண்டான் அவன்.
 
வகுப்புகள் முடிந்தது உடனேயே அவர் கிளம்பிவிட்டார். இரவு பெரிய விருந்திருக்குதே, நன்றாக இருக்குமே என்று இவன் சொல்லவும், அவர் நிற்காமல் போனார். போகும் பொழுது காலை உணவு கொடுப்பார்களா என்று கேட்டு விட்டுப் போனார். இது என்ன கணக்கு என்று இவன் முழித்தான். இப்ப பெரிய விருந்து வேண்டாம் என்கின்றார், ஆனால் காலையில் என்ன கொடுப்பார்கள் என்று கேட்கின்றார். அவரை காலையில் அவர் வீட்டிலிருந்து யாரோ ஒருவர் இங்கு வலுக்கட்டாயமாக அனுப்பி விடுகின்றார்களோ?
 
அந்த ஆளை பார்த்தாலே ஒரு பைத்தியக்காரர் மாதிரி இருக்குது, நாளைக்கு நீங்கள் அவர் பக்கத்தில் இருக்கவே கூடாது என்று அவனின் மனைவி நல்லாகவே கடுமை காட்டினார். அவனா அந்த ஆளின் பக்கத்தில் போய் இருந்தான், அவர் தானாகவே வந்தாரே. நாளைக்கு அவரை எப்படி தவிர்ப்பது என்று அவனுக்கு தெரியவில்லை. மனைவியிடமே பின்னர் கேட்டு விடுவோம் என்று நினைத்தான். ஆலோசனைகளுக்கு அங்கு என்றும் குறைவு வருவதேயில்லை.  
 
அவரின் பெயரை அவன் கவனித்திருந்தான். பெயர்கள் எழுதப்பட்ட ஒரு துண்டை எல்லோரும் இடது பக்க நெஞ்சுப் பகுதியில் ஓட்டியிருந்தனர். ஏதோ ஒரு எண்ணத்தில் கூகிளில் அவரின் பெயரை அவன் அடித்து தேடினான்.
 
வந்த முதலாவது கூகிளின் முடிவிலேயே அவரின் பெயரும், படமும் இருந்தது. அவர் தான் அந்தப் பகுதியிலேயே மிகப் பிரபலமான மனநல மருத்துவர் என்றிருந்தது. 
  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் புதுமையாகவே உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இது கொஞ்சம் புதுமையாகவே உள்ளது.

நாங்கள் பொதுவாகவே, எங்களையும் அறியாமல் கூட, புதிய ஒருவரை கண்டவுடன் ஏதோ ஒரு விதத்தில் அந்தப் புதிய மனிதரை எடை போட்டுக் கொள்கின்றோம். பல நேரங்களில் அது தப்பாக இருக்கும். இந்த நிகழ்வில்/கதையில் வருவது போன்று முற்றிலும் தப்பாக மாறும் சந்தர்ப்பங்களும் சில வேளைகளில் அமைந்துவிடுகின்றன.   

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

இது கொஞ்சம் புதுமையாகவே உள்ளது.

இந்த கதை நன்றாக உள்ளது, முன்னர் நான் வேலை செய்த நிறுவனத்தில் இந்தியாவினை சேர்ந்த வைத்தியர் ஒருவர் வேலை செய்திருந்தார், அவர் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஆலோசகராக எமது நிறுவனத்தில் பணிபுரிந்ததாக நினைவுள்ளது.

அதற்கு முன்னர் அவர் சிட்னியில் உள்ள மான்லி (அவ்வாறாக நினைவுள்ளது) வைத்தியசாலையில் இரவுநேரக்கடமைக்கு பொறுபாக இருந்த அவரின் கீழ் பல வைத்தியர்களும் தாதியர்களும் பணிபுரிந்திருந்தனர், எமது நிறுவனத்தில் இருந்து விலகி இன்னொரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றபோது அவர்கள் கண்டுபிடித்தார்கள், அவர் ஒரு போலி வைத்தியர் என.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

இந்த கதை நன்றாக உள்ளது, முன்னர் நான் வேலை செய்த நிறுவனத்தில் இந்தியாவினை சேர்ந்த வைத்தியர் ஒருவர் வேலை செய்திருந்தார், அவர் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஆலோசகராக எமது நிறுவனத்தில் பணிபுரிந்ததாக நினைவுள்ளது.

அதற்கு முன்னர் அவர் சிட்னியில் உள்ள மான்லி (அவ்வாறாக நினைவுள்ளது) வைத்தியசாலையில் இரவுநேரக்கடமைக்கு பொறுபாக இருந்த அவரின் கீழ் பல வைத்தியர்களும் தாதியர்களும் பணிபுரிந்திருந்தனர், எமது நிறுவனத்தில் இருந்து விலகி இன்னொரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றபோது அவர்கள் கண்டுபிடித்தார்கள், அவர் ஒரு போலி வைத்தியர் என.

இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ஏராளமான போலி வைத்தியர்கள் பற்றிய செய்திகளை பார்த்திருக்கின்றேன். அப்படியான ஒருவர் ஆஸ்திரேலியா வரை வந்தது ஆச்சரியமாக இருக்கின்றது. 'பலே கில்லாடிகள்..' என்ற சொற்தொடருக்கு சிலர் அப்படியே பொருந்துவார்கள்.....🤣

கணினி தொழில்நுட்ப துறையில் நேர்முகத் தேர்விற்கு ஒருவர் வருவதும், பின்னர் வேலைக்கு இன்னொருவர் வருவதும் ஒரு நிகழ்வாக சில காலம் வரை இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

கணினி தொழில்நுட்ப துறையில் நேர்முகத் தேர்விற்கு ஒருவர் வருவதும், பின்னர் வேலைக்கு இன்னொருவர் வருவதும் ஒரு நிகழ்வாக சில காலம் வரை இருந்தது.

உண்மையான ஒருவரின் அடையாளத்தினை திருடி (உண்மையானவர் இங்கிலாந்தில் வாழ்கிறார்) அவுஸ்ரேலியாவில் அவர் வேலை பெற்றிருக்கிறார், தற்போதய தொழினுட்ப வளர்ச்சியில் இது எவ்வாறு சாத்தியமானது என தெரியவில்லை (இது நடந்தது கிட்டதட்ட 10 வருடங்கள் இருக்கும்) நாடுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் நிகழும் காலத்தில் எவ்வாறு இதனை சாத்தியப்படுத்தினார் என்பது தெரியவில்லை.

அவரிடம் துறைசார் திறைமை இருந்துள்ளது என்பதனை அவருடன் பணிபுரிந்தவர்கள் ஒத்துக்கொண்டுள்ளார்கள், அதனாலேயே அவரலால் சமாளித்திருக்க முடிந்திருக்கிறது, முன்னா பாய் எம்பிபிஸ் அவரை தூண்டியிருக்கக்கூடும்😁.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.abc.net.au/news/2017-07-05/inquiry-hears-staff-covered-up-fake-doctor-shyam-acharya/8680756

இந்த திரியினை திசை திருப்புவது என் நோக்கமல்ல, இந்த இணைப்பினை இணையத்தில் கண்டேன் ப்ல சுவாரசியமான விடயங்கள் உள்ளடங்கியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கும், தகவலுக்கும் நன்றிகள்.

ஒரு பெருச்சாளி (possum)  உள்ளே புகுந்து அவரது ஆவணங்களை சேதப்படுத்தி விட்டது என்பது சிரிப்பை உண்டாக்கியது. அவருக்கு அதிர்ஷ்டம் நிறையவே.....😀. சில நாட்கள் முன் இங்கு களத்தில் 'எச்சரிக்கை' என்னும் ஒரு சுய ஆக்கம் எலிகள் பற்றி நான் எழுதி, பின்னர் பெருச்சாளி, மூஞ்சூறு என்று அது போனது..........🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

இணைப்பிற்கும், தகவலுக்கும் நன்றிகள்.

ஒரு பெருச்சாளி (possum)  உள்ளே புகுந்து அவரது ஆவணங்களை சேதப்படுத்தி விட்டது என்பது சிரிப்பை உண்டாக்கியது. அவருக்கு அதிர்ஷ்டம் நிறையவே.....😀. சில நாட்கள் முன் இங்கு களத்தில் 'எச்சரிக்கை' என்னும் ஒரு சுய ஆக்கம் எலிகள் பற்றி நான் எழுதி, பின்னர் பெருச்சாளி, மூஞ்சூறு என்று அது போனது..........🤣

அந்த விடயத்தில் எனக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது, 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2024 at 20:08, ரசோதரன் said:

அவர் தானாகவே வந்தாரே. நாளைக்கு அவரை எப்படி தவிர்ப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.

மனநல வைத்தியர் அவருக்கு  உதவ முன்வந்திருக்கலாம்.  அந்த ‘அவர்’ நீங்கள் இல்லைத்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

"புகழ் பெற்ற போலிகள்" என்று ஒரு புத்தகம் வெகு காலத்துக்கு  முன்பு வந்தது.......ஆனால் இப்ப எனக்கு அதில் இருந்த கதைகள் ஒன்று கூட ஞாபகம் வரவில்லை.......!  😁

இந்தக் குட்டிக்கதை நல்லா இருக்கு.......! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

மனநல வைத்தியர் அவருக்கு  உதவ முன்வந்திருக்கலாம்.  அந்த ‘அவர்’ நீங்கள் இல்லைத்தானே?

😀.....

நாங்கள் எல்லோரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களே என்று எங்கேயோ படித்த ஒரு ஞாபகம். பாதிப்பின் அளவு தான் ஆள் ஆளுக்கு மாறுபடும் என்று அதில் சொல்லியிருந்தவர்கள் என்றும் ஞாபகம்.

நான் அவனில்லை....🤣  

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக ஒரு அங்கதம் (satire) உள்ளதோ - மன நோயாளிகளுக்கும் மனநல மருத்துவர்க்கும் வேறுபாடு எளிதாகத் தெரிவதில்லை என்று ! 🙂

(இக்களத்தில் மனநிலை மருத்துவர்கள் இருந்தால் என்னை மட்டும் பழிக்கவும். ரசோதரன் கண்டிப்பாக அவ்வாறு நினைத்து எழுதியிருக்க மாட்டார். அவர் நல்லவர்; நேராக சிந்திக்கக் கூடியவர் என்பது அவர் எழுத்திலேயே தெளிவு)

Edited by சுப.சோமசுந்தரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, suvy said:

"புகழ் பெற்ற போலிகள்" என்று ஒரு புத்தகம் வெகு காலத்துக்கு  முன்பு வந்தது.......ஆனால் இப்ப எனக்கு அதில் இருந்த கதைகள் ஒன்று கூட ஞாபகம் வரவில்லை.......!  😁

இந்தக் குட்டிக்கதை நல்லா இருக்கு.......! 

🙏...

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பிடித்து இருப்பது மிகச் சந்தோசம். இங்கே யாழில் எழுதி எழுதியே என் எழுத்து நல்லா வந்து விடும் போல....😀 

5 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கடைசியாக ஒரு அங்கதம் (sarcasm) உள்ளதோ - மன நோயாளிகளுக்கும் மனநல மருத்துவர்க்கும் வேறுபாடு எளிதாகத் தெரிவதில்லை என்று ! 🙂

(இக்களத்தில் மனநிலை மருத்துவர்கள் இருந்தால் என்னை மட்டும் பழிக்கவும். ரசோதரன் கண்டிப்பாக அவ்வாறு நினைத்து எழுதியிருக்க மாட்டார். அவர் நல்லவர்; நேராக சிந்திக்கக் கூடியவர் என்பது அவர் எழுத்திலேயே தெளிவு)

🤣......

இதில் நான் எதுவும் சொல்லாமல் இருப்பதே உசிதம் என்று நினைக்கின்றேன்.....😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

"புகழ் பெற்ற போலிகள்" என்று ஒரு புத்தகம் வெகு காலத்துக்கு  முன்பு வந்தது.......ஆனால் இப்ப எனக்கு அதில் இருந்த கதைகள் ஒன்று கூட ஞாபகம் வரவில்லை.......!  😁

இந்தக் குட்டிக்கதை நல்லா இருக்கு.......! 

நான் சிறுவனாக இருந்தபோது கற்கண்டு எனும் (தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் சஞ்சிகை) சஞ்சிகையில் இத்தாலிய ஓவியர் ஒருவர் (பெயர் நினைவில்லை) பல சிறந்த ஓவியங்களை போல் போலி ஓவியம் தயாரிப்பவர் எனவும் அந்த ஓவியங்கள் உண்மையான ஓவியங்களை விடவும் சிறப்பாக இருக்கும் என வாசித்த நினைவுள்ளது.

கலைப்படைப்புக்களை உருவாக்குபவர்கள் வலது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள் எனவும் அவர்கள் தூரதரிசன பார்வை (Big picture) கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என வாசித்த நினைவுள்ளது.

தி இ மித் எனும் புத்தகத்தில் வியாபாரம் தொடங்குபவர்கள் ஏன் தோற்றுபோகிறார்கள் என்பதற்கு ஒரு சம்பவம் ஒன்றை விவரிப்பார் அதில் ஒரு சிறந்த பேக்கர் ஒரு பேக்கரியினை ஆரம்பித்து மிகவும் சிரமப்படுவார், அதற்கு காரணம் அவர் ஒரு டெக்னீசியன் என குறிப்பிடுவார்.

சிறந்த வர்த்தகர்கள் தொலைநோகுடையவர்கள் என கூறுகிறார்.

சாதாரண கலைஞர்களுக்குரிய வலது மூளை ஆதிக்கத்துடன் இடது மூளை ஆதிக்க டெக்னீசியனாக அந்த இத்தாலிய ஓவியர் இருப்பார் என நினைக்கிறேன், அதனாலேயே மிக நேர்த்தியாக ஒன்றை பிரதி எடுக்க அவரால் முடிந்திருக்கிறது, 

  • கருத்துக்கள உறவுகள்

உளவியலை எம்மவர்கள் தேர்ந்தெடுத்து படிப்பதில்லை என்பதற்கு முதல் காரணம் எமது சமூகத்தில் அவர்களைப்(உளவியல் மருத்துவர்கள், உளவள ஆலோசகர்கள்) பற்றிய கருத்துக்களே காரணம்.. 

ஒருவருடைய வெளித்தோற்றத்திற்கும் அவரது குணவியல்புகளுக்கும் சம்பந்தமே இல்லாதவர்களைத் தான் இப்பொழுது அதிகம் காண்பதாக நான் உணர்வதுண்டு.. 

பச்சை முடிந்துவிட்டது😔

கதைக்கு மிக்க நன்றி😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, P.S.பிரபா said:

உளவியலை எம்மவர்கள் தேர்ந்தெடுத்து படிப்பதில்லை என்பதற்கு முதல் காரணம் எமது சமூகத்தில் அவர்களைப்(உளவியல் மருத்துவர்கள், உளவள ஆலோசகர்கள்) பற்றிய கருத்துக்களே காரணம்.. 

ஒருவருடைய வெளித்தோற்றத்திற்கும் அவரது குணவியல்புகளுக்கும் சம்பந்தமே இல்லாதவர்களைத் தான் இப்பொழுது அதிகம் காண்பதாக நான் உணர்வதுண்டு.. 

பச்சை முடிந்துவிட்டது😔

கதைக்கு மிக்க நன்றி😊

🙏....... வந்து வாசித்ததிற்கு என் நன்றிகள்.

தோற்றமும், வெளிப் பேச்சுகளும் தாண்டிப் போனால், ஒவ்வொருவரின் உள்ளேயும் இன்னொரு மனிதன் இருப்பான். ஒவ்வொரு மனிதனும் உண்மையில் மூன்று மனிதர்கள் என்று ஜப்பானியர்கள் கருதுவதாக எங்கோ வாசித்த ஒரு ஞாபகம்.....😀 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரசோதரன் said:

🙏....... வந்து வாசித்ததிற்கு என் நன்றிகள்.

தோற்றமும், வெளிப் பேச்சுகளும் தாண்டிப் போனால், ஒவ்வொருவரின் உள்ளேயும் இன்னொரு மனிதன் இருப்பான். ஒவ்வொரு மனிதனும் உண்மையில் மூன்று மனிதர்கள் என்று ஜப்பானியர்கள் கருதுவதாக எங்கோ வாசித்த ஒரு ஞாபகம்.....😀 

அப்படியென்றால் நான் கூட மூன்று மனிதர்கள் தான் ... 🤣..இது  ஐப்பானியர்களை  விட  எங்களது  தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு   நன்றாகவே தெரியும்  அது தான் அவர் மூன்று மனைவிகளை கட்டி கொண்டார் போலும்” 🤣🤣🤣🤣

இந்த உலகமே போலியானது    மனிதர்கள் போலியாகயிருப்பதில் வியப்பில்லை   ஆனாலும் இந்த அல்லது தொழில்களை பரம்பரையாச் செய்பவர்கள் படித்து பட்டங்கள் பெற விடினும். திறமைசாலிகள்………………  அந்த கால மருத்துவர்கள்  குறிப்பாக ஆயுள்வேத மருத்துவர்கள்  கையை பிடித்து முகத்தை பார்த்து  மருந்துகள் தருவார்கள்   இப்போது ஆயிரம் கேள்விகள் கேட்ப்பார்கள். சரியான பதில்கள் சென்னால் மட்டுமே சரியான மருந்துகள் கிடைக்கும்  கதை ரொம்ப நன்று     

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

அப்படியென்றால் நான் கூட மூன்று மனிதர்கள் தான் ... 🤣..இது  ஐப்பானியர்களை  விட  எங்களது  தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு   நன்றாகவே தெரியும்  அது தான் அவர் மூன்று மனைவிகளை கட்டி கொண்டார் போலும்” 🤣🤣🤣🤣

இந்த உலகமே போலியானது    மனிதர்கள் போலியாகயிருப்பதில் வியப்பில்லை   ஆனாலும் இந்த அல்லது தொழில்களை பரம்பரையாச் செய்பவர்கள் படித்து பட்டங்கள் பெற விடினும். திறமைசாலிகள்………………  அந்த கால மருத்துவர்கள்  குறிப்பாக ஆயுள்வேத மருத்துவர்கள்  கையை பிடித்து முகத்தை பார்த்து  மருந்துகள் தருவார்கள்   இப்போது ஆயிரம் கேள்விகள் கேட்ப்பார்கள். சரியான பதில்கள் சென்னால் மட்டுமே சரியான மருந்துகள் கிடைக்கும்  கதை ரொம்ப நன்று     

ஜப்பானியர்கள் சொன்ன மூன்று முகங்கள்: பொதுவெளியில் காட்டும் முகம், நெருங்கிய நண்பர்களுடன் வெளிப்படும் முகம், தனிமையில் வெளிப்படும் முகம் என்று நினைக்கின்றேன்.

கருணாநிதி வகையில் இன்னும் மேலே போய் உலக சாதனை செய்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். எப்படித்தான் சமாளித்தார்களோ......🤣  

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.