Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Published:Today at 7 AMUpdated:Today at 7 AM
wounded Rakus

wounded Rakus

மனிதர்களே… தங்களது நோய்களுக்கும், காயங்களுக்கும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதுண்டு. அதுவே விலங்குகள் சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறதா என்பது தெரியாது. 

ஆனால், சமீபத்தில் ஓராங்குட்டான் ஒன்று தனது காயத்திற்கு தானே சிகிச்சை எடுத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். அதாவது சில விலங்குகள் காடுகளில் உள்ள மருத்துவ தாவரத்தின் மூலம் வைத்தியம் பார்த்து தங்களது நோய்களையும், காயங்களையும் குணப்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். 

ரகுஸ் (Rakus) எனப் பெயரிடப்பட்ட ஓராங்குட்டானின் கண்ணிற்குக் கீழே ஒரு பெரிய காயம் இருந்துள்ளது. இந்த ஓராங்குட்டான் தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் வலி மற்றும் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் மருத்துவ தாவரத்தின் இலைகளை மென்று அதன் சாற்றைக் காயத்தின் மீது தடவியுள்ளது. 

அதன்பின் மென்ற தாவரத்தை பேண்டேஜ் கட்டுவது போலக் காயத்தின் மீது வைத்து அழுத்தியுள்ளது. உடலில் எந்த ஒரு பாகத்திற்கும் அந்த சாற்றைத் தடவாமல், காயத்தின் மீது மட்டும் தடவியுள்ளதால், இது ஒரு சுய சிகிச்சை முறை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒரு மாதத்திற்குள் அதன் பெரிய காயம் மூடி குணமடைந்தது.

இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் பல வகையான குரங்குகள் காடுகளில் மருந்துகளைத் தேடுகின்றன என ஆவணப்படுத்தப் பட்டிருந்தன. ஆனால், அவை எப்படி தன்னை குணப்படுத்திக் கொள்கின்றன என்பது ஆவணப்படுத்தப்படவில்லை. 

முதல்முறையாக விஞ்ஞானிகள் விலங்குகள் தங்கள் காயங்களுக்கு எவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றன என்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். 

2022-ல் ஓராங்குட்டானின் நடத்தைகள் வீடியோவாக ரெக்கார்டு செய்யப்பட்டது. இந்தோனேசியாவின் மேடானில் உள்ள சுவாக் திட்டத்தின் இணை ஆசிரியரும் கள ஆய்வாளருமான உலில் அஸாரி இதனை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்! | Scientists found, orangutan used a medicinal plant to treat a wound - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

Orangutan ஆச்சர்யம்: ஒரே வாரத்தில் காணாமல் போன காயம்; மூலிகை சிகிச்சை செய்த ஒராங்குட்டான் குரங்கு

 

இந்த ஒராங்குட்டான் குரங்கின் முகத்தில் பெரிய காயம் இருந்தது. ஆனால், ஒரு மாதம் கழித்து அந்தக் காயம் மறைந்துவிட்டது. அந்த ஒராங்குட்டான் குரங்கே தன்னுடைய காயத்தை ஆற்றிக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குரங்கின் பெயர் ரக்கூஸ். மற்ற ஆண் குரங்குகளுடன் சண்டையிடும்போது பெரும் சத்தத்தை எழுப்பியது. அந்தச் சத்தத்தை வைத்துத்தான் இந்த குரங்குக்குக் காயம் ஏற்பட்டதை விஞ்ஞானிகள் ஊகித்தனர்.

காயத்தை ஆற்றுவதற்காக, இக்குரங்கு மருத்துவ குணம் கொண்ட தாவரத்தின் இலைகளை மென்று, அதை பேஸ்ட் போன்று செய்து பின்னர் காயத்தில் தடவியுள்ளது.

இதனால், அந்தக் காயம் ஒரு மாதத்தில் ஆறியுள்ளது. வனவிலங்கு ஒன்று தன் காயத்திற்கு மருத்துவ தாவரங்கள் மூலம் தானே சிகிச்சை எடுத்துக் கொண்டதை ஆவணப்படுத்தியது இதுவே முதன் முறை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்தறிவு இருந்தாலும்  இயற்கை மருத்துவத்தின் மகிமையை  ஓராங்குட்டான் தெரிவித்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2024 at 16:47, குமாரசாமி said:

ஐந்தறிவு இருந்தாலும்  இயற்கை மருத்துவத்தின் மகிமையை  ஓராங்குட்டான் தெரிவித்து விட்டார்.

இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை இல்லாத ஆட்கள் எங்கிருந்தாலும்  ஓடி வரவும் 😁

ஊரில் நான் வளர்த்த நாட்டு நாயும், அங்கு இருந்த அதே போன்ற சில நாட்டு நாய்களும் சில நாட்கள், பச்சைபுல்லைச் சாப்பிட்டு விட்டு, சில மணித்தியாலங்களின் பின், பச்சையாகவே சத்தி (வாந்தி) எடுத்து இருக்கும். ஏன் அப்படி செய்கின்றன என்று எனக்கு இதுவரைக்கும் புரியவில்லை.

நீங்கள் எவராவது இப்படி கண்டு இருக்கின்றீர்களா? ஏன் இவை இப்படி செய்கின்றன என்று தெரியுமா?
 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

ஊரில் நான் வளர்த்த நாட்டு நாயும், அங்கு இருந்த அதே போன்ற சில நாட்டு நாய்களும் சில நாட்கள், பச்சைபுல்லைச் சாப்பிட்டு விட்டு, சில மணித்தியாலங்களின் பின், பச்சையாகவே சத்தி (வாந்தி) எடுத்து இருக்கும். ஏன் அப்படி செய்கின்றன என்று எனக்கு இதுவரைக்கும் புரியவில்லை.

நீங்கள் எவராவது இப்படி கண்டு இருக்கின்றீர்களா? ஏன் இவை இப்படி செய்கின்றன என்று தெரியுமா?
 

நாங்கள் வளர்த்த நாய்களும் இப்படிச் செய்வதை அவதானித்துள்ளேன். ஆனால். காரணம் தெரியாது.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, nochchi said:

நாங்கள் வளர்த்த நாய்களும் இப்படிச் செய்வதை அவதானித்துள்ளேன். ஆனால். காரணம் தெரியாது.

நன்றி

ஆடு மாடுகளும் உடல் நிலை சரியில்லா விட்டால்......சீரான நிலைக்கு வரும் வரைக்கும் தண்ணி கூட குடிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஊரில் நான் வளர்த்த நாட்டு நாயும், அங்கு இருந்த அதே போன்ற சில நாட்டு நாய்களும் சில நாட்கள், பச்சைபுல்லைச் சாப்பிட்டு விட்டு, சில மணித்தியாலங்களின் பின், பச்சையாகவே சத்தி (வாந்தி) எடுத்து இருக்கும். ஏன் அப்படி செய்கின்றன என்று எனக்கு இதுவரைக்கும் புரியவில்லை.

நீங்கள் எவராவது இப்படி கண்டு இருக்கின்றீர்களா? ஏன் இவை இப்படி செய்கின்றன என்று தெரியுமா?
 

நான் அந்த நாய்களை கண்டதில்லை😁, ஆனால் எங்கள் வீட்டு நாய் செய்ததை கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நந்தன் said:

நான் அந்த நாய்களை கண்டதில்லை😁, ஆனால் எங்கள் வீட்டு நாய் செய்ததை கண்டுள்ளேன்.

 நந்தன் எனும் தெய்வத்தை கண்டதில் மிகப்பெரிய சந்தோசம்.🙏🏼
ஏன் எழுதுவதில்லை தலைவா?👈🏽
எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

ஊரில் நான் வளர்த்த நாட்டு நாயும், அங்கு இருந்த அதே போன்ற சில நாட்டு நாய்களும் சில நாட்கள், பச்சைபுல்லைச் சாப்பிட்டு விட்டு, சில மணித்தியாலங்களின் பின், பச்சையாகவே சத்தி (வாந்தி) எடுத்து இருக்கும். ஏன் அப்படி செய்கின்றன என்று எனக்கு இதுவரைக்கும் புரியவில்லை.

நீங்கள் எவராவது இப்படி கண்டு இருக்கின்றீர்களா? ஏன் இவை இப்படி செய்கின்றன என்று தெரியுமா?
 

இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன். 

வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 

Edited by Kapithan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.