Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

  மக்களை விரும்பும் அல்லது மக்கள் விடுதலைக்காக போராடும் எவரும் இவ்வாறு செய்யார். 

விபு க்களால் / எமது போராட்ட அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அரந்தலாவை, அனுராதபுரம் படுகொலைகளை எந்த வகைக்குள் கொண்டுவருவீர்கள்? 

ஏன் உத இஞ்ச சொல்லுறனெண்டா உங்கட இராச விசுவாசத்தின்ர எல்ல அளவுகணக்கில்லாம வெளியில கொட்டுறீங்க. அதுதான் உங்கள் முரண்பாட்டு மூட்டைய கொஞ்சம்  அவிழ்த்து விட்டனான். 

 

1 hour ago, நியாயம் said:

 

விடுதலை புலிகள் சிங்கள பிரதேசத்துக்குள் ஊடுறுவல் செய்து சிங்களவர்களை பணயக்கைதிகளாக பிடித்து தமது பகுதிக்குள் கொண்டுவந்து சிறை வைத்தார்கள். எனவே, சிங்கள பணயக்கைதிகளை விடுவிக்கும் நோக்கத்துடன் சிறீ லங்கா படை தாக்குதல் செய்து அதில் தமிழ்மக்கள் பழியானார்கள்? 

 

ஹமாஸ் இஸ்ரேலினுள் தாக்குதல் செய்ததும், இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக சிறைபிடித்ததும் சரினானது என நீங்கள் எண்ணுகின்றீர்கள் போல?

உங்கள் வாதப்படி இப்படித்தான் பேரம் பேசலாம் என பார்த்தால் இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்குள் புகுந்து செய்த அட்டூழியமும் ஹமாஸ் தாக்குதலும் சமன் ஆகின்றது போல?

ராசா ....

பிளேட்ட மாத்திப் போடாதேயுங்கோ. உங்க எல்லாருக்கும் நீங்க எழுதினது என்ணண்டு தெரியும். 

😁

  • Replies 57
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    பலஸ்தீன் மீது இவ்வளவு தாக்குதல் அழிவுகளை நடத்தும் இஸ்ரேல் நாடும் அங்கு வாழும் மக்களும் இனி வரும் காலங்களில் சுதந்திரமாக பயமில்லாமல் வாழுவார்கள் என்ற நம்பிக்கை யாருக்கும் உள்ளதா? இன்றைய உலக பல முன

  • Kapithan
    Kapithan

    மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமானால் விபுகள் மக்களை விடுவித்து  முள்ளிவாய்க்காலைத் தவிர்த்திருக்கலாம்  என்கிறீர்களா?  கழுவுவதற்கும் ஒரு அளவு வேண்டும் இல்லையா ?  பெயரில் மட்டும் நி

  • நியாயம்
    நியாயம்

    பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Kapithan said:

விபு க்களால் / எமது போராட்ட அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அரந்தலாவை, அனுராதபுரம் படுகொலைகளை எந்த வகைக்குள் கொண்டுவருவீர்கள்? 

ஏன் உத இஞ்ச சொல்லுறனெண்டா உங்கட இராச விசுவாசத்தின்ர எல்ல அளவுகணக்கில்லாம வெளியில கொட்டுறீங்க. அதுதான் உங்கள் முரண்பாட்டு மூட்டைய கொஞ்சம்  அவிழ்த்து விட்டனான். 

 

உண்மை பொய்களுக்கப்பால் பல சம்பவங்களை ஒன்றுடன் ஒன்றோடு ஒப்பிட்டு விவாதிக்க முடியாது.
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கடந்த 9 மாதங்களில் 40 ஆயிரம் அப்பாவி பலஸ்தீனிய குழந்தைகள், தாய்மார் (பெரும்பாலும்) கொல்லப்பட்டதற்கு ஒரு வரி கூட எழுதாமல் 4 பணய கைதிகளுக்கு வக்காலத்து வாங்குவதன் நோக்கம் என்ன?

நீங்கள் வைத்த வாதம் தவறு என உங்களுக்கு புரிகின்றது போலும். இதனால் நான் வக்காலத்து வாங்குவதாக கூறுகின்றீர்கள். 

1 hour ago, Kapithan said:

விபு க்களால் / எமது போராட்ட அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அரந்தலாவை, அனுராதபுரம் படுகொலைகளை எந்த வகைக்குள் கொண்டுவருவீர்கள்? 

ஏன் உத இஞ்ச சொல்லுறனெண்டா உங்கட இராச விசுவாசத்தின்ர எல்ல அளவுகணக்கில்லாம வெளியில கொட்டுறீங்க. அதுதான் உங்கள் முரண்பாட்டு மூட்டைய கொஞ்சம்  அவிழ்த்து விட்டனான். 

 

ராசா ....

பிளேட்ட மாத்திப் போடாதேயுங்கோ. உங்க எல்லாருக்கும் நீங்க எழுதினது என்ணண்டு தெரியும். 

😁

 

உங்களுக்கு என்ன எழுதினேன் என புரிந்ததை கூறுங்கள் போதும். நான் உங்களிடம் ஆரம்பத்தில் கேட்ட வினாவுக்கு ஆம் அல்லது இல்லை என ஒரு பதில் தரலாமே? பதில் இல்லை என்றால் சிரித்துவிட்டு தலையை சொரியலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இன்றைய கலவரங்களுக்கு முதல் இஸ்ரேல் பலஸ்தீன மண்ணில் செய்த அஜாரகங்களை பேச எவருக்கும் தைரியம் வரவில்லை போல......
 இஸ்ரேலியர்கள்  பலஸ்தீனியர்களின் வீடுகளை அழித்ததும்,வீதிகளை மூடியதும் பொருளாதார தடைகளை செய்ததும்  தமது உரிமைக்காக போராடியவர்களை கண்மூடித்தனமாக கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதையும் ஏன் விவாதிக்கவில்லை?

பலஸ்தீனிய மண்ணில் இஸ்ரேல் அரசு தினசரி செய்த அட்டூளியங்களை யாருமே கணக்கெடுக்காமல் இருந்ததின் விளைவே கமாஸ் இயக்கத்தின் வளர்ச்சி.

 

“பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம்.”

எனக்கு இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனைகள், முன்னைய சம்பவங்கள் பற்றி ஓரளவு தெரிந்தபடியாலே இவ்வாறு கூறினேன்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, நியாயம் said:

“பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம்.”

பயணக்கைதிகளை  விடுவித்திருந்தால் பலஸ்தீனியர் மீதான எந்த அழிவுகளையும் இஸ்ரேலியர்கள் எக்காலத்திலும் செய்ய மாட்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

பயணக்கைதிகளை  விடுவித்திருந்தால் பலஸ்தீனியர் மீதான எந்த அழிவுகளையும் இஸ்ரேலியர்கள் எக்காலத்திலும் செய்ய மாட்டார்கள்?

பணயக்கைதுகள் விடயத்தில் இஸ்ரேல் மூர்க்கத்தனமாக செயற்படும் என்பதே நான் கூறவந்த விடயம். 

பணயக்கைதுகள் மூலம் இஸ்ரேலை அடிபணிய வைக்கலாம் அல்லது அழுத்தம் கொடுக்கலாம் என்பது தவறான ஒரு நோக்கு. 

இங்கு ஓர் வரலாற்று சம்பவத்தையும் பார்க்கலாம். 

அது 1976ம் ஆண்டு இடம்பெற்ற விமான கடத்தல். இங்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் எப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்பது இஸ்ரேல் எப்படியான கடும்போக்குடையது என்பதற்கு நல்லதொரு வரலாற்று சான்று. 

இந்த தாக்குதலை தலமையேற்று நடாத்திய படை அதிகாரி வேறு யாரும் அல்ல. அவர் தற்போதைய இஸ்ரேலிய பிரதமரின் சொந்த அண்ணர். வெற்றிகரமான இந்த தாக்குதலில் அவர் நெஞ்சில் சூடுபட்டு உகண்டா விமானதளம் ஒன்றில் இறந்தார். ஒபரேசன் ஜொனாதன் என அழைக்கப்படுகிறது இந்த மீட்பு முயற்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

உண்மை பொய்களுக்கப்பால் பல சம்பவங்களை ஒன்றுடன் ஒன்றோடு ஒப்பிட்டு விவாதிக்க முடியாது.
 

ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடுவதல்ல  எனது நோக்கம். 

அச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தினால் அது இலங்கை அரசையும் நியாயப்படுத்துவதாக முடியும். ஆகவே அரச பயங்கரவாதம் எங்கிருந்தாலும் எந்த வடிவில் வந்தாலும்  அதை நியாயப்படுத்த முடியாது. 

16 minutes ago, நியாயம் said:

பணயக்கைதுகள் விடயத்தில் இஸ்ரேல் மூர்க்கத்தனமாக செயற்படும் என்பதே நான் கூறவந்த விடயம். 

பணயக்கைதுகள் மூலம் இஸ்ரேலை அடிபணிய வைக்கலாம் அல்லது அழுத்தம் கொடுக்கலாம் என்பது தவறான ஒரு நோக்கு. 

இங்கு ஓர் வரலாற்று சம்பவத்தையும் பார்க்கலாம். 

அது 1976ம் ஆண்டு இடம்பெற்ற விமான கடத்தல். இங்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் எப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்பது இஸ்ரேல் எப்படியான கடும்போக்குடையது என்பதற்கு நல்லதொரு வரலாற்று சான்று. 

இந்த தாக்குதலை தலமையேற்று நடாத்திய படை அதிகாரி வேறு யாரும் அல்ல. அவர் தற்போதைய இஸ்ரேலிய பிரதமரின் சொந்த அண்ணர். வெற்றிகரமான இந்த தாக்குதலில் அவர் நெஞ்சில் சூடுபட்டு உகண்டா விமானதளம் ஒன்றில் இறந்தார். ஒபரேசன் ஜொனாதன் என அழைக்கப்படுகிறது இந்த மீட்பு முயற்சி. 

Operation Entebbe

This is the remarkable account of the successful completion of Operation Entebbe as Lt. Col. (res.) Avi Mor – the navigator of three of the four planes sent to rescue the hostages in Uganda – describes in detail his experience in directing 103 Jewish hostages to freedom.

rate-icon.png 02.01.18
IDF Editorial Team

Lt. Col. (res.) Mor knows what it means to fight for freedom. He was born in Poland and escaped to Israel with his parents and seven siblings during the Nazi regime. He enlisted in the Israel Air Force and passed the rigorous Flight Academy course. During his time as a captain in the IAF, he became a trained navigator. His talent for navigation was put to the test when, on June 27, 1976, Air France Flight 139 was hijacked.

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

விபு க்களால் / எமது போராட்ட அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அரந்தலாவை, அனுராதபுரம் படுகொலைகளை எந்த வகைக்குள் கொண்டுவருவீர்கள்? 

ஏன் உத இஞ்ச சொல்லுறனெண்டா உங்கட இராச விசுவாசத்தின்ர எல்ல அளவுகணக்கில்லாம வெளியில கொட்டுறீங்க. அதுதான் உங்கள் முரண்பாட்டு மூட்டைய கொஞ்சம்  அவிழ்த்து விட்டனான். 

 

ராசா ....

பிளேட்ட மாத்திப் போடாதேயுங்கோ. உங்க எல்லாருக்கும் நீங்க எழுதினது என்ணண்டு தெரியும். 

😁

தாக்குதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது எங்கும் நடந்திருக்கிறது. அவையும் பின்னர் திருத்தப்பட்டு தவிர்க்க பட்டிருக்கிறது (கட்டுநாயக்க விமான நிலையம் உங்களுக்கு தெரிவதில்லை)

ஆனால் பெண்கள் மீதான கொடுமைகள் அதிலும் பாலியல் கொடுமைகளை நீங்கள் ஆதரிப்பது கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயம் said:

நீங்கள் வைத்த வாதம் தவறு என உங்களுக்கு புரிகின்றது போலும். இதனால் நான் வக்காலத்து வாங்குவதாக கூறுகின்றீர்கள். 

 

உங்களுக்கு என்ன எழுதினேன் என புரிந்ததை கூறுங்கள் போதும். நான் உங்களிடம் ஆரம்பத்தில் கேட்ட வினாவுக்கு ஆம் அல்லது இல்லை என ஒரு பதில் தரலாமே? பதில் இல்லை என்றால் சிரித்துவிட்டு தலையை சொரியலாம். 

இல்லை. உங்கள் வாதம் அப்படி இருப்பதால் தான் கூறினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தாக்குதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது எங்கும் நடந்திருக்கிறது. அவையும் பின்னர் திருத்தப்பட்டு தவிர்க்க பட்டிருக்கிறது (கட்டுநாயக்க விமான நிலையம் உங்களுக்கு தெரிவதில்லை)

ஆனால் பெண்கள் மீதான கொடுமைகள் அதிலும் பாலியல் கொடுமைகளை நீங்கள் ஆதரிப்பது கொடுமை.

விசுகர் வயதிற்குத் தகுந்தபடி எழுதுங்கள். உங்கள் பொறுப்பற்ற வெறுப்புக் கருத்துக்களுக்கு இதுவரை மிகவும் கண்ணியமாகவே பதிலளித்துள்ளேன். 

ஆனாலும், மேலே  "நான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை ஆதரிப்பதாக"  தாங்கள் எழுதியுள்ள கருத்து பொறுப்பற்ற, வெறுப்பைத் தூண்டும் கருத்துகள்,  தாங்கள்   எல்லை மீறுவதாக   உணர்கிறேன்.  

எனவே தங்கள் எழுத்துக்களை ஒவ்வொரு தடவையும் மீள வாசித்தபின்னர் பிரசுரிக்க பரிந்துரைக்கிறேன். 

😏

 

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன பெண்களை எப்படி சிறையில் இஸ்ரேலியர்கள் நடாத்துகிறார்கள் என்பதை அல்ஜசீரா பல காணொளிகளை வெளியிட்டு இருந்தது.
உண்மைகளை வெளியில் உடனுக்குடன் வெளியிடுவதால் இஸ்ரேல் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியமை குறிப்பிடதக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

விசுகர் வயதிற்குத் தகுந்தபடி எழுதுங்கள். உங்கள் பொறுப்பற்ற வெறுப்புக் கருத்துக்களுக்கு இதுவரை மிகவும் கண்ணியமாகவே பதிலளித்துள்ளேன். 

ஆனாலும், மேலே  "நான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை ஆதரிப்பதாக"  தாங்கள் எழுதியுள்ள கருத்து பொறுப்பற்ற, வெறுப்பைத் தூண்டும் கருத்துகள்,  தாங்கள்   எல்லை மீறுவதாக   உணர்கிறேன்.  

எனவே தங்கள் எழுத்துக்களை ஒவ்வொரு தடவையும் மீள வாசித்தபின்னர் பிரசுரிக்க பரிந்துரைக்கிறேன். 

😏

நன்றி கூட சொல்ல முடியாது 

காரணம் தனது கருத்தை புரியாத மாதிரி நடித்தபடி மற்றவர்களுக்கு இலவச ஆலோசனை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

பலஸ்தீன பெண்களை எப்படி சிறையில் இஸ்ரேலியர்கள் நடாத்துகிறார்கள் என்பதை அல்ஜசீரா பல காணொளிகளை வெளியிட்டு இருந்தது.
உண்மைகளை வெளியில் உடனுக்குடன் வெளியிடுவதால் இஸ்ரேல் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியமை குறிப்பிடதக்கது.

சாம்பிளுக்கு ஒரு காணொளியை இணைக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெயர்ந்து வரும் பாலஸ்தீனியர்கள் போல வந்து தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேலிய படையினர் - - தீர்ப்பு நாளின் பயங்கரம் போல காணப்பட்ட இஸ்ரேலின் பயணக்கைதிகள் மீட்பு நடவடிக்கை

10 JUN, 2024 | 04:19 PM
image

theguardian.

சனிக்கிழமை காலை நுசெய்ரெட்டின் சந்தை மும்முரமாக காணப்பட்டது. அங்கு காணப்பட்டவர்களில் ஆசியா அல் நெமெரும் ஒருவர். தனது சகோதரிக்கு தேவையான மருந்துகள் எஞ்சியிருக்ககூடிய மருந்தகத்தை அவர் தேடிக்கொண்டிருந்தார். அன்சாம் ஹரோன் எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக மகளிற்கு புத்தாடையை வேண்டும்  எதிர்பார்ப்புடன் அங்கு காணப்ட்டார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேலிய படையினர் தரைவழியாக உள்ளே வந்தவேளை காசாவின் இந்த பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியிருந்தனர். அவ்வேளை ஹரோனின் வீடு விமானக்தாக்குதலால் அழிக்கப்பட்டது.

எனினும் ரபாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து மில்லியன் கணக்கான மக்கள் மீண்டும் இந்த பகுதிக்கு வந்துசேர்ந்தனர்.

gaza_june10.jpg

நுசெய்ரட் சந்தை எப்போதும் சனக்கூட்டம் நிரம்பியது, இப்போது இந்த பகுதிக்கு அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளதால் அது மேலும் நெரிசலாக காணப்பட்டது என்கின்றார் 29 வயதான ஹரோன். அவர் தனது உறவினருடன் தங்கியிருக்கின்றார்.

அவர் தனது பிள்ளைகளிற்காக ஆடைகளை தெரிவுசெய்வதில் ஈடுபட்டிருந்தவேளையே இஸ்ரேலின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது, அவர் ஒருநொடி கூட சிந்திக்காமல் வெளியில் ஓடி பிள்ளைகள் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார்.

வெளியே தீர்ப்பு நாளின் பயங்கரம் போல ஒரு காட்சியை கண்டேன் என்கின்றார் அவர், பதற்றமடைந்த மக்கள் அந்த தாக்குதலில் இருந்து தப்புவதற்கு முயன்றுக்கொண்டிருந்தனர்.

சிறிதுநேரத்தில் ஹெலிக்கொப்டர்களும் ஆளில்லா விமானங்களும் தாக்குதலில் இணைந்துகொண்டன, இந்த தாக்குதல் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர், அவர்களுடைய சிதைந்த உடல்கள் வீதி எங்கும் சிதறிக்கிடப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அனைவரும் அச்சத்துடன் காணப்பட்டனர் அலறினார்கள் என தெரிவிக்கும் அவர் நான் நின்றிருந்த வீதி 50 மீற்றர் நீளமானது, ஆனால் நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் காணப்பட்டனர், அவர்கள் அனைவரும் ஓடிக்கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்தார்.

எனக்கு அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் அச்சம் காரணமாக மயங்கிவிழுந்தார், வீதியோரங்களில் பொருட்களை விற்றுக்கொண்டிருந்தவர்கள் அவற்றை கைவிட்டுவிட்டு ஒடினார்கள்"

அங்கிருந்து தப்பியோட முயன்றவர்களில் காசாவின் வடக்கினை சேர்ந்த பொறியியலாளரான எல்நெமெரும் 37 ஒருவர்.

நான் ஏனைய பெண்களுடன் வீதியில் நடந்துகொண்டிருந்தேன், நாங்கள் கடும் அச்சத்தின் பிடியில் சிக்கினோம் என அவர் தெரிவித்தார். அவர்கள் தாங்கள் அடைக்கலம் புகுந்திருக்ககூடிய மருத்துவநிலையங்கள் பாடசாலைகளை தவிர்த்துவிட்டு அங்கிருந்து ஒடினார்கள்.

இஸ்ரேல் மருத்துவமனைகளையும் பாடசாலைகளையும் தாக்குவதால் பொதுமக்கள் தற்போது அங்கு தஞ்சமடைவதை தவிர்த்துள்ளனர்.

gaza_june_101.jpg

எனினும் ஹெலிக்கொப்டர் ஒன்று அப்பகுதிக்கு வந்து பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்ததும் அங்கு காணப்பட்ட மக்கள் கடும் பீதியில் சிக்குண்டனர்.

எல்நெமர் அதிர்ச்சியால் மயக்கமடைந்த பெண் ஒருவரை இழுத்துக்கொண்டு அங்கு காணப்பட்ட வீடொன்றிற்குள் தஞ்சமடைந்தார்.

சந்தைக்கு அருகில் உள்ள தொடர்மாடியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பணயக்கைதிகளை விடுவிப்பதற்காகவே இஸ்ரேல் இந்த உக்கிர தாக்குதலை மேற்கொண்டது என்பது  பொதுமக்களிற்கு உடனடியாக தெரியாது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை காரணமாக 270 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 600 பேர் காயமடைந்தனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரபாவிலிருந்து வரும் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் போல தங்களை காண்பித்தவாறு வீட்டுத்தளபாடங்கள் ஏற்றப்பட்ட டிரக்கில் நுஸ்ரெய்ட்டின் மத்திய பகுதிக்கு  வந்த இஸ்ரேலின் விசேட படைப்பிரிவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என இஸ்ரேலின் செய்தி இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.

காரிலும் டிரக்கிலும் இஸ்ரேலிய படையினர் வந்துசேர்வதை தனது உறவினர் ஒருவர் பார்த்தார் என  தெரிவிக்கின்றார் ராத் தவ்பிக் அபு யூசுவ். அவர் தற்போது இந்த தாக்குதலின் போது காயமடைந்த மகனை மருத்துவமனையில் பாராமரித்து வருகின்றார்.

சிலர் டிரக்கிலிருந்து இறங்கினார்கள்  வீட்டிற்கு முன்னாலிருந்தவர்களிற்கு வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே சென்று அனைவரையும் கொலை செய்ய தொடங்கினார்கள்  என அவர் தெரிவிக்கின்றார்.

gaza_hostages_june_20241.jpg

இதன் பின்னரே குண்டுவீச்சு ஆரம்பமானது. தனது படையினர் தாக்கப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவிக்கின்றது.100 பேர் கொல்லப்பட்டனர் எத்தனை பேர் பொதுமக்கள் என்பது தெரியாது என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/185763

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

சாம்பிளுக்கு ஒரு காணொளியை இணைக்கலாமே!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, நியாயம் said:

பணயக்கைதுகள் விடயத்தில் இஸ்ரேல் மூர்க்கத்தனமாக செயற்படும் என்பதே நான் கூறவந்த விடயம். 

பணயக்கைதுகள் மூலம் இஸ்ரேலை அடிபணிய வைக்கலாம் அல்லது அழுத்தம் கொடுக்கலாம் என்பது தவறான ஒரு நோக்கு. 

இங்கு ஓர் வரலாற்று சம்பவத்தையும் பார்க்கலாம். 

அது 1976ம் ஆண்டு இடம்பெற்ற விமான கடத்தல். இங்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் எப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்பது இஸ்ரேல் எப்படியான கடும்போக்குடையது என்பதற்கு நல்லதொரு வரலாற்று சான்று. 

இந்த தாக்குதலை தலமையேற்று நடாத்திய படை அதிகாரி வேறு யாரும் அல்ல. அவர் தற்போதைய இஸ்ரேலிய பிரதமரின் சொந்த அண்ணர். வெற்றிகரமான இந்த தாக்குதலில் அவர் நெஞ்சில் சூடுபட்டு உகண்டா விமானதளம் ஒன்றில் இறந்தார். ஒபரேசன் ஜொனாதன் என அழைக்கப்படுகிறது இந்த மீட்பு முயற்சி. 

அதற்காக இஸ்ரேலியர்கள் தினசரி செய்யும் அஜாரகங்களை தாங்கிக்கொண்டு வாய் மூடி அமைதியாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, Kapithan said:

ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடுவதல்ல  எனது நோக்கம். 

அச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தினால் அது இலங்கை அரசையும் நியாயப்படுத்துவதாக முடியும். ஆகவே அரச பயங்கரவாதம் எங்கிருந்தாலும் எந்த வடிவில் வந்தாலும்  அதை நியாயப்படுத்த முடியாது. 

ஆயுதம் தாங்கிய விடுதலை போராட்டத்தையும் அதை நசுக்கும் அரச நடவடிக்கைக்கும்  வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

ஆயுதம் தாங்கிய விடுதலை போராட்டத்தையும் அதை நசுக்கும் அரச நடவடிக்கைக்கும்  வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றீர்கள்.

அப்படி அல்ல. 

இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும்போது இலங்கை அரசின் பயங்கரவாதத்தையும் எம்மையறியாமலேயே நியாயப்படுத்துகிறோம். இது உந்த மடையர்களுக்குப்  புரிவதில்லை. 

உந்த மட்டி, மாங்காய் மடையர்கள் ஒரு அரசுக்குள்ள அடிப்படைப் பொறுப்புக்களைக்கூட உணராமல் கருத்துரைப்பது கோபத்தை உண்டாக்குகிறது. 

இலங்கை முஸ்லிம்களின் மீதுள்ள வெறுப்பு உந்த மடையர்களைப்  புத்தியிழக்கச் செய்கிறது. 

உந்த மடையர்கள் வாயைப்பொத்திக்கொண்டு இருந்தாலே பல பிரச்சனைகள் தீரும். 

(மடையர்கள் என்பது வயலுக்கு நீர்பாச்சுபவர்களைக் குறிக்கும் பெயர்ச் சொல்)

😁

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா இல்லை என்றால் பலஸ்தீன் பிரச்சனை எப்பவோ முடிந்திருக்கும் என்பது பல முஸ்லீம்களின் கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2024 at 01:56, வாலி said:

சாம்பிளுக்கு ஒரு காணொளியை இணைக்கலாமே!

https://edition.cnn.com/2024/06/12/middleeast/un-report-israel-hamas-gaza-war-crimes-intl-hnk/index.html

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2024 at 08:15, nunavilan said:

பலஸ்தீன பெண்களை எப்படி சிறையில் இஸ்ரேலியர்கள் நடாத்துகிறார்கள் என்பதை அல்ஜசீரா பல காணொளிகளை வெளியிட்டு இருந்தது.
உண்மைகளை வெளியில் உடனுக்குடன் வெளியிடுவதால் இஸ்ரேல் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியமை குறிப்பிடதக்கது.

இதுதான் நீங்கள் எழுதியது. 

 

On 10/6/2024 at 11:56, வாலி said:

சாம்பிளுக்கு ஒரு காணொளியை இணைக்கலாமே!

இது நான் கேட்டது.

இன்றுவரை உங்களால் அல்-ஜஸீராவின் காணொளி ஒன்றையும் உங்களால் இணைக்க முடியவில்லை. மாறாக Middle East Eye என்ற யூடியூபில் இருந்து ஒட்டியிருக்கிறீர்ள். இந்தத் யூடியூப் தளம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானது. இல்லை இது நடுநிலையான தளம் என்றால் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பணயக்கையிகளாக பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள் தொடர்பான ஒரு காணொளியை இணையுங்கள் பார்க்கலாம்.

இரண்டு விடயங்களை கூறிக்கொள்ள விழைகின்றேன். முதலாவது உலகில் எந்த மூலையிலும் பெண்களுக்கெதிரான பாலியல் அடங்கலாக வன்முறையில் எவர் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது. அது எதிரி இன அல்லது நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேலாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது! 

இரண்டாவது, நீங்கள் எழுதியதை மீண்டும் தெளிவாக வாசித்து முடிந்தால் விளங்கி அதற்கு மற்றவர்களால் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை இறுத்தல் அல்லது இணைத்தல் முறையாகும். இல்லாவிட்டால் இன்னொருவர் உங்களைத்தொடர்ந்து தொடர்பே இல்லாமல் சமாவைத்துவிட்டுப் போய்விடுவார். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாலி said:

இதுதான் நீங்கள் எழுதியது. 

 

இது நான் கேட்டது.

இன்றுவரை உங்களால் அல்-ஜஸீராவின் காணொளி ஒன்றையும் உங்களால் இணைக்க முடியவில்லை. மாறாக Middle East Eye என்ற யூடியூபில் இருந்து ஒட்டியிருக்கிறீர்ள். இந்தத் யூடியூப் தளம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானது. இல்லை இது நடுநிலையான தளம் என்றால் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பணயக்கையிகளாக பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள் தொடர்பான ஒரு காணொளியை இணையுங்கள் பார்க்கலாம்.

இரண்டு விடயங்களை கூறிக்கொள்ள விழைகின்றேன். முதலாவது உலகில் எந்த மூலையிலும் பெண்களுக்கெதிரான பாலியல் அடங்கலாக வன்முறையில் எவர் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது. அது எதிரி இன அல்லது நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேலாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது! 

இரண்டாவது, நீங்கள் எழுதியதை மீண்டும் தெளிவாக வாசித்து முடிந்தால் விளங்கி அதற்கு மற்றவர்களால் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை இறுத்தல் அல்லது இணைத்தல் முறையாகும். இல்லாவிட்டால் இன்னொருவர் உங்களைத்தொடர்ந்து தொடர்பே இல்லாமல் சமாவைத்துவிட்டுப் போய்விடுவார். நன்றி!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.