Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை

Vhg ஜூன் 11, 2024
1000259750.jpg

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழீழத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் இது தொடர்பான கோரிக்கையை தாம் அவரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் நேற்று (10-06-2024) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே, இதனை குறிப்பிட்டுள்ளார்.

1000259746.jpg

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது.

இரண்டு கோரிக்கைகள்

வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். கச்சத்தீவு  மீட்டெடுத்தால் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும்.

ஆகவே கச்சத்தீவு மீட்டு தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களே பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும்.

கச்சத்தீவு விவகாரம்

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். கச்சத்தீவு மீட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. பாஜகவின் கூட்டணி ஆட்சி சரியாக வரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்துஅங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். மக்களின் முடிவு சரியானதாக உள்ளது.

இருந்தபோதிலும் இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்காக வாக்கு அளித்துஇருக்கிறார்களே அதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது.

இலங்கை தமிழர்கள் விவகாரம்

மற்றும் கச்சத்தீவு விவகாரம் என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன். பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பாஜக குறைந்த தொகுதிகளில்வெற்றி பெற்றதால் அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள்.

பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அமுக்கியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறியிருப்பார்கள்.

ஜனநாயக நாட்டில் தோல்வி வெற்றி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களே 90 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் ஆட்சி கால கட்டத்தில் எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சி புரிந்த காலகட்டத்தில் யாருடைய ஆட்சிகளையும் கலைக்கவில்லை.

தமிழர்களுக்கு ஆதரவு 

இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். பிரதமர் மோடி சிவபெருமான் மீது பக்தியாக இருக்கிறார். தியானம் செய்கிறார், விபூதி பூசி கொள்கிறார். காசி விசுவநாதர் பிரதமர் எல்லா நாடுகளுக்கும் செல்கிறார் எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார்.

ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன், பாஜகவிற்காக நான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அதிமுக தோல்வி தழுவியுள்ளது.

அதிமுக கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. இந்த தேர்தலில் பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தமிழகத்தில் நல்ல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். இலங்கைக்கு நான் நேரில் சென்றால் என்னை சுட்டு விடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் இருந்தாலும் சிங்கள வெறியர்கள் அங்கே தான் இருக்கிறார்கள்” என கூறினார்.
 

 

https://www.battinatham.com/2024/06/blog-post_672.html

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியினர் சொல்லித்தான் கேட்டதாக சொல்லி இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாம் தமிழர் கட்சியினர் சொல்லித்தான் கேட்டதாக சொல்லி இருக்கிறார்

அப்படி என்றால் எமக்கு தமிழீழம் வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தமிழக மக்கள் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றவர்களை ஆதரித்தமை வருத்தமே" 

"ஈழத்தமிழர்களுக்காக தனி நாடு / தமிழீழம் அமைக்க வேண்டுமென பிரதமரிடம் நேரில் கோரிக்கை வைக்கவுள்ளேன்"  

 

 

28 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்படி என்றால் எமக்கு தமிழீழம் வேண்டாம்.

எனக்கும் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

"தமிழக மக்கள் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றவர்களை ஆதரித்தமை வருத்தமே" 

"ஈழத்தமிழர்களுக்காக தனி நாடு / தமிழீழம் அமைக்க வேண்டுமென பிரதமரிடம் நேரில் கோரிக்கை வைக்கவுள்ளேன்"  

 

 

எனக்கும் வேண்டாம்.

நீங்கள் வயோதிபர்கள். எங்கிருந்தாலும். ஒன்று தான்   😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாமியார் உளறும் போது சீமான் பெயரையும் சொல்லிவிட்டார் அதனால் இவருக்கு இங்கு மதிப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Kandiah57 said:

நீங்கள் வயோதிபர்கள். எங்கிருந்தாலும். ஒன்று தான்   😂😂😂

நான் நினைக்கிறேன் நீங்கள் ஈழத்தமிழர்கள் சகல  உரிமையுடன் வாழ்வதை விரும்பாதவர் என...
மாற்றுக்கருத்துக்களை வரவேற்கின்றேன். ஆனால் நீங்கள் போகும் வரும் இடமெல்லாம் ஈழமக்கள் ஆதரவு கருத்துக்களை ஓரம் கட்டியே வருகின்றீர்கள்.

இதிலிருந்து தெரிகின்றது நீங்கள் சிங்கள இனவாதியை விட மோசமானவர் என..... 

அந்த சாமியார்  ஏற்கனவே ஈழ ஆதரவாளர்.பல வருடங்களுக்கு முன்னரே ஈழ மக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

நான் நினைக்கிறேன் நீங்கள் ஈழத்தமிழர்கள் சகல  உரிமையுடன் வாழ்வதை விரும்பாதவர் என...
மாற்றுக்கருத்துக்களை வரவேற்கின்றேன். ஆனால் நீங்கள் போகும் வரும் இடமெல்லாம் ஈழமக்கள் ஆதரவு கருத்துக்களை ஓரம் கட்டியே வருகின்றீர்கள்.

இதிலிருந்து தெரிகின்றது நீங்கள் சிங்கள இனவாதியை விட மோசமானவர் என..... 

அந்த சாமியார்  ஏற்கனவே ஈழ ஆதரவாளர்.பல வருடங்களுக்கு முன்னரே ஈழ மக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அதை பற்றி நான்  இந்த திரியில். எழுதவில்லை   நீங்கள் தமிழ் ஈழம் வேண்டாம் என்பதற்காக தான் மேறமடி பதில்   

நான்  எழுதிய கருத்துகள் பிழை என்றால் அந்த திரியில்,அதாவது சம்பந்தப்பட்ட திரியில் எழுத வேண்டும் பதில்கள் தரலாம்.  நான் சிங்கள இனவாதி இல்லை தமிழ் இனவாதியும் இல்லை  உங்கள் சிந்தனை தவறானது    தமிழர் விடுதலை ஆதரவளான்.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த சாமியார் உளறும் போது சீமான் பெயரையும் சொல்லிவிட்டார் அதனால் இவருக்கு இங்கு மதிப்பு

அது அப்படியில்லை. அவர் சீமான் பெயரை சொல்லிவிட்டார் என்று சிலருக்கு கொதிப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர். 

தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.