Jump to content

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

ம்....தமிழ் நாடு போன்று கள்ள சாராயம் குடித்து  இலங்கையில் மக்கள் இறந்து நான் கேள்விபடவில்லை.

அதெண்டா உண்மைதான்.

 

On 24/6/2024 at 13:10, விளங்க நினைப்பவன் said:

மதுவின் மீதான மோகம் தமிழ்நாட்டில் மிக அதிகம்

அண்ணை இலங்கையிலும் மதுப்பிரியர்கள் அதிகமாகி இருக்கினம்.
கசிப்பு மக்கள் குடியிருப்பிற்குள் தனி வீடுகளில் காய்ச்சி விக்கிறாங்கள்!

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் நடவடிக்கை எடுப்து இல்லையா 🙆‍♂️

வேகமான நடவடிக்கை தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

449106987_3688723551369613_3957397019639

  • Haha 1
Link to comment
Share on other sites

கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் காசு கொடுப்பது சரியா? : கோபத்தில் பறக்கும் மீம்ஸ்கள்


UPDATED : மே 16, 2023 12:31 PM

ADDED : மே 16, 2023 09:00 AM

Google News
 
Latest Tamil News
 
 
 
 
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து, 19 பேர் இறந்ததைத் தொடர்ந்து அனைத்து மாவட்டப் போலீசாரும், 'அலெர்ட்' ஆகியுள்ளனர். அதிரடி சாராய வேட்டையில் இறங்கி உள்ளனர். ஓரிரு நாட்களில் 1558 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.Image 1112928இதை ஏன் முன்பே செய்யவில்லை என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடர்வதும், அதற்கு அரசியலும் காவல் துறையும் கை கொடுப்பதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.Image 1112929இதற்கிடையில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி என்பது ஆறுதல் நடவடிக்கையா அல்லது காய்ச்சும் தொழிலுக்கு ஆதரவு நடவடிக்கையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.Image 1112964கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் ரூபாய் என்பது மேலும் பலரை இந்தப் பழக்கத்திற்குத் துாண்டி விடுவது போல் அமைந்து விடுமே என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.Image 1112942'டாஸ்மாக்' விற்பனையைக் கண்காணிக்கவும், நேரத்திற்கு மீறி திறந்து வைக்கப்படும் கடைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும், கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் தடுத்து, தொடர்ந்து நடைபெறாமல் கண்காணிக்கவும், தனி பிரிவை முந்தைய அரசு உருவாக்கி இருந்தது.Image 1112965அந்த பிரிவு கலைக்கப்பட்டு அங்கிருந்த அனைவரும் தற்போது கஞ்சா கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக போதை தரும் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் சர்வ வல்லமையுடன் நடைபெற்று வருகிறது.Image 1112943கள்ளச்சாராய வியாபாரத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிக பணம் கொடுத்து இரக்கம் காட்டும் விதத்தில் தீவிரமாக சிந்தித்து மாற்று நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்கும் என்ற ரீதியில், கடுமையான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
இது தொடர்பான விமர்சனங்கள், கேலி கிண்டல்கள் சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்'களாக அதிகம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
- நமது நிருபர்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2024 at 21:13, nunavilan said:

 

 

கவி அருணாச்சம் ஐயா இந்த வீடியோவைக் ப்பர்க்கவில்லை போலும் .

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

449106987_3688723551369613_3957397019639

அடேங்கப்பா.....கள்ளச்சாராயம் குடிச்சு செத்தால் ஒரு லைவ் இன்சூரன்ஸ் செய்து செத்ததுக்கு சமன். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

448756933_483570977530057_76305530695001

Link to comment
Share on other sites

 

எழுத்தாளர் இரா.முருகவேள் தன் முகநூலில் எழுதியது...

//

‘ஏழை மக்கள் உடல் வலிக்காகக் குடிக்கிறார்கள். அவர்களுக்குக் குறைந்த விலையில் பாதுகாப்பான சாராயமும் கள்ளும் அரசே தர வேண்டும்' என்ற வாதம் படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

உடல் வலி தாங்க முடியாத அளவுக்கு மக்கள் உழைக்கிறார்கள் என்றால், அவர்கள் உழைப்பின் கடுமையைக் குறைக்க வேண்டும். உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு வேலை நேரம், ஊதியம், நிம்மதியாகத் தூங்க ஓரளவு வசதியான வாழ்விடம் இவைதான் அரசு செய்ய வேண்டியவை.

மக்கள் வலிக்காகக் குடிக்கத் தொடங்கி அது பழக்கமாகி குடிக்கு அடிமையாகி ஐம்பது வயதில் உழைக்கத் தகுதியற்றவர்களாக உடைந்துபோகிறார்கள். இந்த வாழ்நிலையில் எந்தச் சாராயத்தைக் கொடுத்தாலும் இதுதான் நடக்கும். குறைந்த விலை சரக்கு என்பது குறுக்கு வழி. உதிரிப் பாட்டாளி வர்க்கம் ஈடுபடும் கடின உடலுழைப்பு பணிகள் அன்றாடக் கூலிப் பணிகளாக உள்ளன. அரசு வரிகளுக்குள் வருவதில்லை. எனவே பெரும் நிறுவனங்களும் இப்படிப்பட்ட பணிப்பாதுகாப்பு இல்லாத உழைப்பில் மக்களை ஈடுபடுத்திவருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியமான பகுதி, இதுபோன்ற உழைப்பை நம்பியுள்ளது.

இவர்களுக்காக அரசுக் கண்காணிப்பு, வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு உள்ளே வராத கள்ளச் சாராயம் போன்றவை கண்டும் காணாமலும் விடப்படுகின்றன.

கறுப்புப் பணம் என்பது போல இது கணக்கில் வராத உழைப்பு. இந்த மக்களின் உயிருக்கு பத்து லட்சம்தான் விலை. இதோடு கணக்குத் தீர்க்கவே முதலாளித்துவ அரசுகள் முயலும். குறைந்த விலை, பாதுகாப்பான சாராயம் என்ற அவர்கள் வாதத்தில் சிக்கினால் நாம் சாராயக் கம்பெனிகளின் விற்பனைப் பிரதிநிதிகள் ஆவோம்.//

  • Like 2
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.