Jump to content

தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:
2 hours ago, ஈழப்பிரியன் said:

சொல்லிப்போட்டு நிற்காமல் செயலில் இறங்குகுங்க.

ஜேர்மனியில் கால்.  வைத்தால்   கையால் தான் நடத்து. கனடா போக வேண்டும்

என்ன ஜேர்மன் வாள்வெட்டுக்குழு தலைவரே கபிதானை வெருட்டுறீர்களோ?

5 minutes ago, Kandiah57 said:

அப்படியென்றால் கோத்தா ஏன். பதவியை விட்டுட்டு ஒடினார்??   

கோத்தா ஓடியதற்கு அவரது ராணுவமே காரணம்.

ராணுவம் பார்த்துக் கொண்டிருந்ததற்கு அமெரிக்கா காரணம்.

Link to comment
Share on other sites

  • Replies 140
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நல்ல கொதிக்கும் தண்ணீரில் கையை ஐந்து நிமிடங்கள் மட்டும் வைத்து இருந்து விட்டு எடுங்கள்  கை அமைதியாகும்  🤣😂

ஜேர்மனியில் கால்.  வைத்தால்   கையால் தான் நடத்து. கனடா போக வேண்டும் 😂🤣😂🙏

ஐயோ,..

என்னை இந்த ஆளிடமிருந்து யாராவது காப்பாற்ற மாட்டீர்கள,...? 

🤣

1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன ஜேர்மன் வாள்வெட்டுக்குழு தலைவரே கபிதானை வெருட்டுறீர்களோ?

அவர் வாளால் வெட்டமாட்டார், வாயால்தான் வெட்டுவார்,..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

கண்டிப்பாக நீங்கள் தான் பொறுப்பு,      இதிலிருந்து தப்பிக்கவே முடியாது 😂🤣🤣. சுமத்திரனை மறந்து இருந்தேன்   இப்போது மறக்க வழி தெரியமால்.  இருக்கிறேன்    

நல்ல கதை   முன்பு வாசித்து உள்ளேன் மறந்து போனேன்   இப்போது மறக்க முடியவில்லை   

ஏன் இப்படி சுமத்திரனுக்குகாக பிரச்சாரம் செய்கிறீர்கள்?? 🤣🙏

ஏன் மறக்க முடியாதளவுக்கு அவரின் சுத்து அப்படியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டிக்கு ஆதரவளிக்கும் வேட்பாளர் என்ற நிலையிலிருந்து 13 ஆம் திருத்தத்துக்கு கீழிறங்கியுள்ளார். மேலும் தமிழர்பிரச்சினைளகள தொடர்பாக சுமத்திரனுடன் மட்டும் பேசுவதன் அர்த்தம். என்ன தனியாக பெட்டி வாங்குகிறாரா? தமிழசுக்கட்சியின் கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாக கட்சி ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடாது?13 ஆம் திலுத்தம் என்பது சிறிலங்காவின் அரசியலமைப்பில் உள்ளது. அதை நிறை வேற்றுவதற்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை. ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும்வரை காத்திருக்கவும் தேவை இல்லை. யாரை ஏமாற்ற இந்த நாடகம். சுமத்திரன் பெட்டி வாங்குலதைப் பார்த்து பொது வேட்பாளரை நிறுததியவர்களும் ரணிலுடன் பேச்சு வார்ததை நடத்தி பெட்டி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.சிறிதரன் வழமை போல் மதில் மேல் பூனையாக  மௌனமாக இருக்கிறார். அவர் எந்தப்பக்கம் தாவுவார் என்பது அண்மைக்கால மௌனமே சாட்சியாக இருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஐயோ,..

என்னை இந்த ஆளிடமிருந்து யாராவது காப்பாற்ற மாட்டீர்கள,...? 

🤣

அவர் வாளால் வெட்டமாட்டார், வாயால்தான் வெட்டுவார்,..🤣

உண்மை தான் நான் புழுக்கள் பூச்சிகளை  கூட கொன்றதில்லை 

ஒரு அப்பாவி.   எப்படி வாளால். வெட்டுவேன்.  இதுவரை வாளை தொட்டதில்லை 😂

10 hours ago, ஈழப்பிரியன் said:

ராணுவம் பார்த்துக் கொண்டிருந்ததற்கு அமெரிக்கா காரணம்.

அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களும்  தேவையற்ற வேலைகள் பார்ப்பார்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழன்பன் said:

ஏன் மறக்க முடியாதளவுக்கு அவரின் சுத்து அப்படியா ?

சுத்துறதும் தான் ஆனால்  இன்று இலங்கை தமிழ் அரசியல் என்றால்   சுமத்திரன். பெயர் தான் அடிபடுகிறது    முன்னுக்கும் அவர் தான் நிற்கிறார். எங்கே எவருடனும் பேசினாலும். தனியாக போகிறார் எவரையும் கூட்டிட்டுப் போவதில்லை  கலந்துரையாடல் செய்வதுமில்லை அவர் என்ன செயதலும்.  பிழையாகவிருந்தாலும். நடவடிக்கைகள் எடுக்கப்படாது  தமிழரசு கட்சியையும்  தமிழர்களின் அரசியலையும் அழித்து விட்டார்   

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 15 ஆண்டுகளில் திரு ரணில் விக்ரமசிங்கே 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார். 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கடந்த 15 ஆண்டுகளில் திரு ரணில் விக்ரமசிங்கே 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார். 

 

2000 மாம் ஆண்டு சந்திரிகா கொண்டுவந்த தீர்வுத் திட்டமும் யுஎன்பியாலும் ஜேவிபியாலும் மறுக்கப்பட ரணில் சபையில் வைத்தே கிழித்தெறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

2000 மாம் ஆண்டு சந்திரிகா கொண்டுவந்த தீர்வுத் திட்டமும் யுஎன்பியாலும் ஜேவிபியாலும் மறுக்கப்பட ரணில் சபையில் வைத்தே கிழித்தெறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அன்று தொடக்கம் இன்றுவரை எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் தமிழினத்திற்கு சாதகமாக எதையும் செய்ததில்லை. அப்படியிருக்க ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் எம் தமிழ் அரசியல்வாதிகள் அந்த இனவாத சாக்கடை கூட்டத்திலிருந்து ஒன்றை தேர்வுசெய்து வெள்ளையடித்து காட்டுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcSX9CnUv8iaVyY-6OznEYa   

கடந்த 15 ஆண்டுகளில் திரு. ரணில் விக்ரமசிங்க 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார்.

திரு. ரணில் விக்ரமசிங்க அவர்களின் அதிகாரத்தின் கீழ் தான்....

நாவற்குழி சிங்கள குடியேற்றம் சட்ட பூர்வமாக்கப்பட்டது. 

வவுனியா வடக்கு  கொக்கச்சான்குளம் (கலாபோகஸ்வெவ 1 & 2) நாமல்புர குடியேற்றங்கள்  சட்டபூர்வ சிங்கள குடியேற்றங்களாக்கப்பட்டன. 

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில்  மாலனூர் (12ஆம் கட்டை) மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. 

திருகோணமலை சலப்பையாறு பகுதியில் 650 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றபட்டன.  

வவுனியாவில் மன்னார் மதவாச்சி வீதியை சூழ்ந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. 

மன்னார் முசலிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது. 

கொக்கடிவான் குளத்தின் சூழலிருந்த இருநூறு ஏக்கர் வயல் நிலம் 165 சிங்கள குடும்பங்களுக்கு பகிரப்பட்டது. 

ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் பலவும் கஜபாகுபுர ஆக்கப்பட்டன. 

குறிப்பாக சிலோன் தியேட்டர்,டொலர்ஸ் பாம், தனிக்கல், நாவலர் பண்ணை போன்ற பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. 

முல்லைத்தீவின் எல்லையில் சிங்கபுர, 13 ஆம் கொலனி என பல சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. 

கொக்குத்தொடுவாயில் மட்டும் 2,156 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.  

கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால், வெள்ளக்கல்லடி,தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில்  சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 

கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியில் 825 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது. 

கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 20 ஏக்கர் நிலம் சிங்கள குடியிருப்புக்காக வழங்கப்பட்டது. 

நாயாறு கொக்கிளாய் - முகத்துவாரம் பகுதிகளில் சுமார் 794 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி பகுதியில் சிங்கள மீனவர்களுக்கு காணி உரிமம் வழங்கப்பட்டது. 

ஆண்டான்குளம், திருக்கோணப்பட்டி, ஆத்தங்கடவை, மருதடிக்குளவெளி, ஆலடிக்குளம், சாமிப்பில கண்டல், 
ஈரக்கொழுந்தன் வெளி, படலைக்கல்லு, நித்தகைகுளம் போன்ற பகுதிகளில் சுமார் 647 ஏக்கர் நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காக வழங்கப்பட்டது. 

கொக்குத்தொடுவாய்,புலிபாய்ந்தகல், நாயாறு, கொக்கிளாய் - முகத்துவாரம், சாலை ஆகிய 5 பல இடங்களில் பகுதிகளில் பருவகாலங்களில் தொழில் செய்ய தென்னிலங்கை மீனவர்கள் குடியேற்றப்பட்டனர். 

சூரியனாறு, முந்திரிகைக்குளம் பகுதிகளில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு தமிழ் மக்களின் வயல் நிலங்கள் அபகரிகப்பட்டு வழங்கப்பட்டது 

மட்டக்களப்பு கெவிலியாமடு பகுதியில்  சிங்கள மக்களுக்கான மாதிரி கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு 20-25 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளும் 60 .இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளும்  வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50 இற்கு மேற்பட்ட  பொலநறுவை, அம்பாறையை சேர்ந்த 
பண வசதி படைத்த சிங்கள விவசாயிகள் பண்ணைகள் அமைக்க காணி வழங்கப்பட்டது. 

மேற்படி திட்டமிட்டட் குடியேற்றங்களுக்கு மேலாக, இக் காலப்பகுதிகளில் இலங்கை இராணுவம், தொல்லியல் திணைக்களம் , வன வள திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் பிக்குகளால் மிக பல ஆயிரக்கணக்கான நிலங்கள்,  விவசாய காணிகள், மேய்ச்சல் தரைகள், நீர் நிலைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. 

இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை இப்போதும் சிலர்  மீட்பராக சித்தரிக்கின்றார்கள்.

இனமொன்றின் குரல்

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு ரணில் விக்ரமசிங்க அதிகாரத்திலிருந்த போது தான்...

மாமனிதர் ரவிராஜ் படு*கொ*லை வழக்கின் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். 

திருகோணமலை குமரபுரத்தில் 24 பொதுமக்களை படு*கொ*லை வழக்கின்  சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட  6 இராணுவ அதிகாரிகள்  விடுதலை செய்யப்பட்டார்கள்.
 
திருகோணமலை கடற்கரையில்  படு*கொ*லை செய்யப்பட்ட  5 மாணவர்கள் தொடர்பான வழக்கின்  சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட 13 இராணுவ அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். 

யாழ்ப்பாணத்தில் கூட்டு பலா*த்*காரத்தின் பின் கொ*லை செய்யப்பட்ட    ரஜினி வேலாயுதம்பிள்ளை என்கிற 24 வயது பெண் தொடர்பான வழக்கின் குற்றவாளிகளான 2 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டனர்.
 
அக்சன் பாம் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின்  பணியாளர்கள் 17 பேர்  படு*கொ*லை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட  இராணுவ அதிகாரிகள் மீதான விசாரணைகள் முடக்கப்பட்டன. 

1996 ஆம் ஆண்டு நாவற்குழிப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு வழக்கினை தாக்கல் செய்தவர்கள், அவர்களின் சார்பிலான  ஆஜரான சட்டத்தரணிகள் புலனாய்வாளர்களால் நீதிமன்ற வளாகத்திலேயே அச்சுறுத்தப்பட்டு குறித்த வழக்கு முடக்கப்பட்டது.
 
திருகோணமலை ஸ்ரீமலை நீலியம்மன் கோயில் தீயிடப்பட்டவழக்கில் அங்கு அத்துமீறி கட்டப்பட்டுள்ள  பாசன பப்பாத ராஜமஹா விகாரையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்ட போதும் அவர் விடுவிக்கப்பட்டு வழக்கும் கை விடப்பட்டது.
 
அதே போல தற்போது கொழும்பில் இருந்து கடத்தி திருகோணமலையில் வைத்து படு*கொ*லை செய்யப்பட்ட 11 தமிழ் மாணவர்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படை தளபதி Wasantha Karannagoda மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெற சட்டமா அதிபர் திணைக்களம் முயன்று வருகின்றது.

இது போதாதென்று திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அதிகாரத்தின் போது  தான் யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் காலம் சென்ற பேராசிரியர் விக்கினேஸ்வரன் இராணுவத்தினரின் வற்புறுத்தலில் பதவி பறிக்கப்பட்டார்.

இவ் விவகாரத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் நீதிமன்றிற்கு வழங்கிய சத்தியக் கூற்றில் புலனாய்வு முறைப்பாட்டின் பேரிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறிய விளக்கத்தை ஏற்று நீதிமன்றம் பேராசிரியர் விக்கினேஸ்வரனின் பதவி நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
 
குருந்தூர் மலை பௌத்த ஆக்கிரமிப்பை   கையாண்ட முல்லைத்தீவு நீதிவான் திரு சரவணராஜா அச்சறுத்தல் மூலம் நாட்டை  விட்டு வெளியேற்றப்பட்டார்.
 
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட  விகாரையின் விகாராதிபதி கோலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை  முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய  தீர்த்தக் கேணியில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Nellai Nellaiyaan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சுமந்தருக்கு..பெட்டி கண்ணை மறைக்குது.....இப்ப வேறொன்றும் தெரியாது...

1 hour ago, தமிழ் சிறி said:

திரு ரணில் விக்ரமசிங்க அதிகாரத்திலிருந்த போது தான்...

மாமனிதர் ரவிராஜ் படு*கொ*லை வழக்கின் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். 

திருகோணமலை குமரபுரத்தில் 24 பொதுமக்களை படு*கொ*லை வழக்கின்  சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட  6 இராணுவ அதிகாரிகள்  விடுதலை செய்யப்பட்டார்கள்.
 
திருகோணமலை கடற்கரையில்  படு*கொ*லை செய்யப்பட்ட  5 மாணவர்கள் தொடர்பான வழக்கின்  சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட 13 இராணுவ அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். 

யாழ்ப்பாணத்தில் கூட்டு பலா*த்*காரத்தின் பின் கொ*லை செய்யப்பட்ட    ரஜினி வேலாயுதம்பிள்ளை என்கிற 24 வயது பெண் தொடர்பான வழக்கின் குற்றவாளிகளான 2 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டனர்.
 
அக்சன் பாம் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின்  பணியாளர்கள் 17 பேர்  படு*கொ*லை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட  இராணுவ அதிகாரிகள் மீதான விசாரணைகள் முடக்கப்பட்டன. 

1996 ஆம் ஆண்டு நாவற்குழிப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு வழக்கினை தாக்கல் செய்தவர்கள், அவர்களின் சார்பிலான  ஆஜரான சட்டத்தரணிகள் புலனாய்வாளர்களால் நீதிமன்ற வளாகத்திலேயே அச்சுறுத்தப்பட்டு குறித்த வழக்கு முடக்கப்பட்டது.
 
திருகோணமலை ஸ்ரீமலை நீலியம்மன் கோயில் தீயிடப்பட்டவழக்கில் அங்கு அத்துமீறி கட்டப்பட்டுள்ள  பாசன பப்பாத ராஜமஹா விகாரையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்ட போதும் அவர் விடுவிக்கப்பட்டு வழக்கும் கை விடப்பட்டது.
 
அதே போல தற்போது கொழும்பில் இருந்து கடத்தி திருகோணமலையில் வைத்து படு*கொ*லை செய்யப்பட்ட 11 தமிழ் மாணவர்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படை தளபதி Wasantha Karannagoda மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெற சட்டமா அதிபர் திணைக்களம் முயன்று வருகின்றது.

இது போதாதென்று திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அதிகாரத்தின் போது  தான் யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் காலம் சென்ற பேராசிரியர் விக்கினேஸ்வரன் இராணுவத்தினரின் வற்புறுத்தலில் பதவி பறிக்கப்பட்டார்.

இவ் விவகாரத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் நீதிமன்றிற்கு வழங்கிய சத்தியக் கூற்றில் புலனாய்வு முறைப்பாட்டின் பேரிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறிய விளக்கத்தை ஏற்று நீதிமன்றம் பேராசிரியர் விக்கினேஸ்வரனின் பதவி நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
 
குருந்தூர் மலை பௌத்த ஆக்கிரமிப்பை   கையாண்ட முல்லைத்தீவு நீதிவான் திரு சரவணராஜா அச்சறுத்தல் மூலம் நாட்டை  விட்டு வெளியேற்றப்பட்டார்.
 
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட  விகாரையின் விகாராதிபதி கோலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை  முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய  தீர்த்தக் கேணியில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Nellai Nellaiyaan

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

திரு ரணில் விக்ரமசிங்க அதிகாரத்திலிருந்த போது தான்...

மாமனிதர் ரவிராஜ் படு*கொ*லை வழக்கின் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். 

திருகோணமலை குமரபுரத்தில் 24 பொதுமக்களை படு*கொ*லை வழக்கின்  சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட  6 இராணுவ அதிகாரிகள்  விடுதலை செய்யப்பட்டார்கள்.
 
திருகோணமலை கடற்கரையில்  படு*கொ*லை செய்யப்பட்ட  5 மாணவர்கள் தொடர்பான வழக்கின்  சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட 13 இராணுவ அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். 

யாழ்ப்பாணத்தில் கூட்டு பலா*த்*காரத்தின் பின் கொ*லை செய்யப்பட்ட    ரஜினி வேலாயுதம்பிள்ளை என்கிற 24 வயது பெண் தொடர்பான வழக்கின் குற்றவாளிகளான 2 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டனர்.
 
அக்சன் பாம் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின்  பணியாளர்கள் 17 பேர்  படு*கொ*லை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட  இராணுவ அதிகாரிகள் மீதான விசாரணைகள் முடக்கப்பட்டன. 

1996 ஆம் ஆண்டு நாவற்குழிப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு வழக்கினை தாக்கல் செய்தவர்கள், அவர்களின் சார்பிலான  ஆஜரான சட்டத்தரணிகள் புலனாய்வாளர்களால் நீதிமன்ற வளாகத்திலேயே அச்சுறுத்தப்பட்டு குறித்த வழக்கு முடக்கப்பட்டது.
 
திருகோணமலை ஸ்ரீமலை நீலியம்மன் கோயில் தீயிடப்பட்டவழக்கில் அங்கு அத்துமீறி கட்டப்பட்டுள்ள  பாசன பப்பாத ராஜமஹா விகாரையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்ட போதும் அவர் விடுவிக்கப்பட்டு வழக்கும் கை விடப்பட்டது.
 
அதே போல தற்போது கொழும்பில் இருந்து கடத்தி திருகோணமலையில் வைத்து படு*கொ*லை செய்யப்பட்ட 11 தமிழ் மாணவர்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படை தளபதி Wasantha Karannagoda மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெற சட்டமா அதிபர் திணைக்களம் முயன்று வருகின்றது.

இது போதாதென்று திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அதிகாரத்தின் போது  தான் யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் காலம் சென்ற பேராசிரியர் விக்கினேஸ்வரன் இராணுவத்தினரின் வற்புறுத்தலில் பதவி பறிக்கப்பட்டார்.

இவ் விவகாரத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் நீதிமன்றிற்கு வழங்கிய சத்தியக் கூற்றில் புலனாய்வு முறைப்பாட்டின் பேரிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறிய விளக்கத்தை ஏற்று நீதிமன்றம் பேராசிரியர் விக்கினேஸ்வரனின் பதவி நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
 
குருந்தூர் மலை பௌத்த ஆக்கிரமிப்பை   கையாண்ட முல்லைத்தீவு நீதிவான் திரு சரவணராஜா அச்சறுத்தல் மூலம் நாட்டை  விட்டு வெளியேற்றப்பட்டார்.
 
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட  விகாரையின் விகாராதிபதி கோலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை  முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய  தீர்த்தக் கேணியில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Nellai Nellaiyaan

சந்திரிகா கொண்டுவந்த தீர்வை 11 வாக்குகளே நிறைவேற்ற தேவையாக இருந்த போது ரணிலும் ஜேவிபியும் கடுமையாக எதிர்த்தார்கள்.

இதில் ரணில் ஒருபடி மேலே சென்று தீர்வு பொதியை பாராளுமன்றில் வைத்து கொழுத்தியதாக சொல்கிறார்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, alvayan said:

 சுமந்தருக்கு..பெட்டி கண்ணை மறைக்குது.....இப்ப வேறொன்றும் தெரியாது...

 

வேறு யாராவது போய்க் கதைக்கிறதுதானே அல்வாயன். அதுக்கு வழி இல்லையென்றால் வாய் கிழியக் கத்தி என்ன பிரயோசனம்? 

பேசாமல் போய்ப் படுங்கோ. 

😁

On 15/8/2024 at 13:32, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcSX9CnUv8iaVyY-6OznEYa   

கடந்த 15 ஆண்டுகளில் திரு. ரணில் விக்ரமசிங்க 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார்.

திரு. ரணில் விக்ரமசிங்க அவர்களின் அதிகாரத்தின் கீழ் தான்....

நாவற்குழி சிங்கள குடியேற்றம் சட்ட பூர்வமாக்கப்பட்டது. 

வவுனியா வடக்கு  கொக்கச்சான்குளம் (கலாபோகஸ்வெவ 1 & 2) நாமல்புர குடியேற்றங்கள்  சட்டபூர்வ சிங்கள குடியேற்றங்களாக்கப்பட்டன. 

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில்  மாலனூர் (12ஆம் கட்டை) மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. 

திருகோணமலை சலப்பையாறு பகுதியில் 650 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றபட்டன.  

வவுனியாவில் மன்னார் மதவாச்சி வீதியை சூழ்ந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. 

மன்னார் முசலிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது. 

கொக்கடிவான் குளத்தின் சூழலிருந்த இருநூறு ஏக்கர் வயல் நிலம் 165 சிங்கள குடும்பங்களுக்கு பகிரப்பட்டது. 

ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் பலவும் கஜபாகுபுர ஆக்கப்பட்டன. 

குறிப்பாக சிலோன் தியேட்டர்,டொலர்ஸ் பாம், தனிக்கல், நாவலர் பண்ணை போன்ற பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. 

முல்லைத்தீவின் எல்லையில் சிங்கபுர, 13 ஆம் கொலனி என பல சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. 

கொக்குத்தொடுவாயில் மட்டும் 2,156 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.  

கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால், வெள்ளக்கல்லடி,தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில்  சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 

கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியில் 825 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது. 

கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 20 ஏக்கர் நிலம் சிங்கள குடியிருப்புக்காக வழங்கப்பட்டது. 

நாயாறு கொக்கிளாய் - முகத்துவாரம் பகுதிகளில் சுமார் 794 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி பகுதியில் சிங்கள மீனவர்களுக்கு காணி உரிமம் வழங்கப்பட்டது. 

ஆண்டான்குளம், திருக்கோணப்பட்டி, ஆத்தங்கடவை, மருதடிக்குளவெளி, ஆலடிக்குளம், சாமிப்பில கண்டல், 
ஈரக்கொழுந்தன் வெளி, படலைக்கல்லு, நித்தகைகுளம் போன்ற பகுதிகளில் சுமார் 647 ஏக்கர் நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காக வழங்கப்பட்டது. 

கொக்குத்தொடுவாய்,புலிபாய்ந்தகல், நாயாறு, கொக்கிளாய் - முகத்துவாரம், சாலை ஆகிய 5 பல இடங்களில் பகுதிகளில் பருவகாலங்களில் தொழில் செய்ய தென்னிலங்கை மீனவர்கள் குடியேற்றப்பட்டனர். 

சூரியனாறு, முந்திரிகைக்குளம் பகுதிகளில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு தமிழ் மக்களின் வயல் நிலங்கள் அபகரிகப்பட்டு வழங்கப்பட்டது 

மட்டக்களப்பு கெவிலியாமடு பகுதியில்  சிங்கள மக்களுக்கான மாதிரி கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு 20-25 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளும் 60 .இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளும்  வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50 இற்கு மேற்பட்ட  பொலநறுவை, அம்பாறையை சேர்ந்த 
பண வசதி படைத்த சிங்கள விவசாயிகள் பண்ணைகள் அமைக்க காணி வழங்கப்பட்டது. 

மேற்படி திட்டமிட்டட் குடியேற்றங்களுக்கு மேலாக, இக் காலப்பகுதிகளில் இலங்கை இராணுவம், தொல்லியல் திணைக்களம் , வன வள திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் பிக்குகளால் மிக பல ஆயிரக்கணக்கான நிலங்கள்,  விவசாய காணிகள், மேய்ச்சல் தரைகள், நீர் நிலைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. 

இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை இப்போதும் சிலர்  மீட்பராக சித்தரிக்கின்றார்கள்.

இனமொன்றின் குரல்

இவற்றை முடிவுக்குக் கொண்டுவர ஏதாவது ஒரு தீர்வு வேண்டும் அல்லவா? 

அந்தத் தீர்வென்ன? அதற்காக யார் உழைப்பது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வேறு யாராவது போய்க் கதைக்கிறதுதானே அல்வாயன். அதுக்கு வழி இல்லையென்றால் வாய் கிழியக் கத்தி என்ன பிரயோசனம்? 

பேசாமல் போய்ப் படுங்கோ. 

😁

 

உங்கள் பெயரை  நான் பிரேரிக்கின்றேன் ஐயா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

உங்கள் பெயரை  நான் பிரேரிக்கின்றேன் ஐயா..

அடியேனும் கிறீஸ்தவன். எனவே தாங்கள் எப்படியும் மொத்திக்கொண்டே இருக்கப்போகிறீர்கள். 

புதிய மொந்தையில் பழைய கள். 

அம்புட்டுதே. 

🤣

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.