Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔 | Election Survey Hambantota | EP 02

நன்றி - யூரூப்

இலங்கை அதிபர் தேர்தலோடு தொடர்புடைய விடயமாக இருப்பதால் இணைத்துள்ளேன்.    

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே தற்போது சென்றிருக்கும் எமது ஆட்கள் சிலரது தகவல்படி தமிழர்களிடம் சஜித்துக்கும்  ரணிலுக்கும் நல்ல ஆதரவு உள்ளது என்கின்றார்கள். தாங்களே சென்றவருடம் மார்ச்சில் அங்கே நின்றதற்கும் இப்போ ரணில் வந்த பின்பு வந்ததிற்கும்  பெரிய நல்ல வேறுபாடுகளை காண முடிகின்றது  என்கின்றார்கள்.
சிங்கள மக்களின் நல்ல கருத்துக்கள்  - "ராசபக்சாவை மக்கள் வீட்டுக்கு அனுப்பியது மிகவும் நல்லம் இல்லாவிட்டால் நாடு இன்னும் மோசமாக போய் இருக்கும்  யாரையும் நம்பமுடியாமல் உள்ளது "  ஆனால் யேவிபிக்கு ம் அவர்களிடம் ஆதரவு உள்ளது தான் பயமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அங்கே தற்போது சென்றிருக்கும் எமது ஆட்கள் சிலரது தகவல்படி தமிழர்களிடம் சஜித்துக்கும்  ரணிலுக்கும் நல்ல ஆதரவு உள்ளது என்கின்றார்கள். தாங்களே சென்றவருடம் மார்ச்சில் அங்கே நின்றதற்கும் இப்போ ரணில் வந்த பின்பு வந்ததிற்கும்  பெரிய நல்ல வேறுபாடுகளை காண முடிகின்றது  என்கின்றார்கள்.
சிங்கள மக்களின் நல்ல கருத்துக்கள்  - "ராசபக்சாவை மக்கள் வீட்டுக்கு அனுப்பியது மிகவும் நல்லம் இல்லாவிட்டால் நாடு இன்னும் மோசமாக போய் இருக்கும்  யாரையும் நம்பமுடியாமல் உள்ளது "  ஆனால் யேவிபிக்கு ம் அவர்களிடம் ஆதரவு உள்ளது தான் பயமாக உள்ளது.

இது வெறும் கானல்நீரே.

மக்களுக்கு போதிய வருமானமில்லாமல் வரிகள் மக்கள் மீது சுமத்தப்படுகிறது.

ஏறிய விலைகள் பெரிதாக இறங்கவில்லை.

ஏற்றும் போது நுhற்றுக் கணக்கிலும் 

இறக்கும் போது ரூபா கணக்கிலும் இறக்குகின்றார்கள்.

உங்கள் வருமானம் குறைவாக இருக்கும் போது எந்தவித கட்டணமும் இல்லாமல் இருக்க விட்டமாதிரி அரசை விட்டுவைத்திருக்கிறார்கள்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட இறக்குமதி இன்னமும் அப்படியே தான் இருக்கிறது.

ஏற்றுமதியில் முன்னேற்றம் இல்லை.

டாலர் உள்ளே வருகுதே தவிர வெளியே போகும் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

இதனாலேயே நெருக்குவாரம் குறைந்த மாதிரி இருக்கிறது.

இறக்குமதி தடையை திறந்துவிடும் போது பிரச்சனைகள் வரலாம்.

மீண்டும் ரணில் வந்தால் வைத்தியம் பல்கலைகளை பணமாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

அங்கே தற்போது சென்றிருக்கும் எமது ஆட்கள் சிலரது தகவல்படி தமிழர்களிடம் சஜித்துக்கும்  ரணிலுக்கும் நல்ல ஆதரவு உள்ளது என்கின்றார்கள். தாங்களே சென்றவருடம் மார்ச்சில் அங்கே நின்றதற்கும் இப்போ ரணில் வந்த பின்பு வந்ததிற்கும்  பெரிய நல்ல வேறுபாடுகளை காண முடிகின்றது  என்கின்றார்கள்.
சிங்கள மக்களின் நல்ல கருத்துக்கள்  - "ராசபக்சாவை மக்கள் வீட்டுக்கு அனுப்பியது மிகவும் நல்லம் இல்லாவிட்டால் நாடு இன்னும் மோசமாக போய் இருக்கும்  யாரையும் நம்பமுடியாமல் உள்ளது "  ஆனால் யேவிபிக்கு ம் அவர்களிடம் ஆதரவு உள்ளது தான் பயமாக உள்ளது.

ஏன் ஜேவிபி வந்தால் என்ன பிரச்சினை வரும் என்றுநினைக்கிறியள்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் தடை செய்யப்பட்ட இறக்குமதி இன்னமும் அப்படியே தான் இருக்கிறது.

அடுத்த வருடத்தில் இருந்து கார்கள் இறக்குமதி செய்ய முடியாது என (புதிய)கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

ஏன் ஜேவிபி வந்தால் என்ன பிரச்சினை வரும் என்றுநினைக்கிறியள்?

தமிழர்களுக்கும் பயன் இல்லை முழு இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தை ஒருபோதும் உயர்த்தாது.பதிலுக்கு வெனிசுலா மாதிரி கொண்டு போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர்களுக்கும் பயன் இல்லை முழு இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தை ஒருபோதும் உயர்த்தாது.பதிலுக்கு வெனிசுலா மாதிரி கொண்டு போகும்.

என்னைப்பொறுத்தவரை ரணிலின் மத்திய வங்கி ஊழல், ராஜபக்ச வம்சத்தின் ஊழல் அதைத்தொடர்ந்த பொருளாதார பிரச்சினை இதனை விட எதுவும் பெரிதாக நடக்க சந்தர்ப்பம் இல்லை. ஒரு மாற்றத்துக்காக அவர்களும் வந்துதான் பார்க்கட்டுமே. வந்தால் மலை போனால் ஒன்டுமில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, வாதவூரான் said:

ஏன் ஜேவிபி வந்தால் என்ன பிரச்சினை வரும் என்றுநினைக்கிறியள்?

அவர் நல்லவர் இவர் நல்லவர் என நான் கங்கணம் கட்டவில்லை.
என்னைப்பொறுத்தவரை ஜேவிபியும் ஒரு தடவை ஆட்சிசெய்து காட்டட்டும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அவர் நல்லவர் இவர் நல்லவர் என நான் கங்கணம் கட்டவில்லை.
என்னைப்பொறுத்தவரை ஜேவிபியும் ஒரு தடவை ஆட்சிசெய்து காட்டட்டும் என நினைக்கின்றேன்.

இன்று ஒரு கூட்டத்தில் போதைப்பொருள் சிறுவர்கள் பாவிப்பது பற்றியும் அரசியல் வாதிகள், பொலிஸ், பாதாளக்குழு சம்பந்தப்பட்டதையும் சுட்டிக்காட்டி இவற்றை இல்லாமல் செய்வது இலகுவான காரியம் இல்லை என்றும் அதனை இல்லாமல் செய்ய ஜே விபி அர்ப்பணிப்புடன் செயற்படும் என உறுதி அளித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர்களுக்கும் பயன் இல்லை முழு இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தை ஒருபோதும் உயர்த்தாது.பதிலுக்கு வெனிசுலா மாதிரி கொண்டு போகும்.

ஜேவிபியின் கொள்கைப் படி இலங்கையில் வெவ்வேறு அடையாளங்கள் கொண்ட மக்களே கிடையாது. எல்லோரும் இலங்கையர்களே. அது தான் அவர்களின் தீர்வு. தமிழர்களுக்கு என்றோ அல்லது வேறு எந்தப் பிரிவினருக்கு என்றோ அங்கு தனிப்பட்ட பிரச்சனை என்று ஒன்றே கிடையாது என்பது தான் அவர்களின் நிலைப்பாடு. மற்ற அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு பிரச்சனை இருக்கின்றது, நாங்கள் தீர்த்து வைக்கின்றோம் என்று சொல்வார்கள், ஆனால் ஒருபோதும் அவர்களில் ஒருவரும் இது சம்பந்தமாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடப் போவதில்லை. ஜேவிபி அப்படி ஒரு பிரச்சனையையே கிடையாது என்று ஆரம்பத்திலேயே அடித்து மூடிவிடுவார்கள்.

இவர்கள் பொறுப்புக்கு வந்தால் இலங்கை வெனிசுவேலா ஆவது துரிதகதியில் நடக்கும். இவர்களின் தேசியமயம் என்ற ஒரு கொள்கையே போதும் நாட்டை இருப்பதை விட இன்னும் சில தசாப்தங்கள் பின்னுக்கு கொண்டு போக.

அசாமில் ஒரு தடவை மாணவர் புரட்சி வென்று, ஆட்சிக்கும் வந்தார்கள். புரட்சியில் வென்ற அவர்கள், ஆட்சியில் அந்த மாநிலத்தை அழித்தார்கள். அதே வரலாறு இங்கே மீண்டும் திரும்பும்.

கட்டப் பஞ்சாயத்தை நேரில் பார்க்கலாம். அது தான் அவர்களின் சட்டம் ஒழுங்கு.   

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரசோதரன் said:

ஜேவிபியின் கொள்கைப் படி இலங்கையில் வெவ்வேறு அடையாளங்கள் கொண்ட மக்களே கிடையாது. எல்லோரும் இலங்கையர்களே. அது தான் அவர்களின் தீர்வு. தமிழர்களுக்கு என்றோ அல்லது வேறு எந்தப் பிரிவினருக்கு என்றோ அங்கு தனிப்பட்ட பிரச்சனை என்று ஒன்றே கிடையாது என்பது தான் அவர்களின் நிலைப்பாடு. மற்ற அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு பிரச்சனை இருக்கின்றது, நாங்கள் தீர்த்து வைக்கின்றோம் என்று சொல்வார்கள், ஆனால் ஒருபோதும் அவர்களில் ஒருவரும் இது சம்பந்தமாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடப் போவதில்லை. ஜேவிபி அப்படி ஒரு பிரச்சனையையே கிடையாது என்று ஆரம்பத்திலேயே அடித்து மூடிவிடுவார்கள்.

இப்போது எவர் நல்லவர்?

நெஞ்சிலே குத்துபவரா?

முதுகிலே குத்துபவரா?

எப்படியும் குத்து வாங்கத்தானே போறம்.எங்க வாங்கினால் என்ன இப்படிணும் யோசிக்கலாம்.

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர்களுக்கும் பயன் இல்லை முழு இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தை ஒருபோதும் உயர்த்தாது.பதிலுக்கு வெனிசுலா மாதிரி கொண்டு போகும்.

இரண்டு வருடத்துக்கு முன் வெனிசூலா ஆக்கியது ஜேவிபியா சார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இன்று ஒரு கூட்டத்தில் போதைப்பொருள் சிறுவர்கள் பாவிப்பது பற்றியும் அரசியல் வாதிகள், பொலிஸ், பாதாளக்குழு சம்பந்தப்பட்டதையும் சுட்டிக்காட்டி இவற்றை இல்லாமல் செய்வது இலகுவான காரியம் இல்லை என்றும் அதனை இல்லாமல் செய்ய ஜே விபி அர்ப்பணிப்புடன் செயற்படும் என உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்காவில் உறுதியளித்தால் செய்ய வேண்டும்.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் புதிது புதிதாக சொல்லிக் கொண்டே  இருப்பார்கள்.

31 minutes ago, ரசோதரன் said:

இவர்கள் பொறுப்புக்கு வந்தால் இலங்கை வெனிசுவேலா ஆவது துரிதகதியில் நடக்கும். இவர்களின் தேசியமயம் என்ற ஒரு கொள்கையே போதும் நாட்டை இருப்பதை விட இன்னும் சில தசாப்தங்கள் பின்னுக்கு கொண்டு போக.

அசாமில் ஒரு தடவை மாணவர் புரட்சி வென்று, ஆட்சிக்கும் வந்தார்கள். புரட்சியில் வென்ற அவர்கள், ஆட்சியில் அந்த மாநிலத்தை அழித்தார்கள். அதே வரலாறு இங்கே மீண்டும் திரும்பும்.

கட்டப் பஞ்சாயத்தை நேரில் பார்க்கலாம். அது தான் அவர்களின் சட்டம் ஒழுங்கு.   

இவைகள் நடந்து மேற்குலகை கைவிட்டால்த் தான்

மேற்குலகு தமிழர் பக்கம் திரும்பும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்போது எவர் நல்லவர்?

நெஞ்சிலே குத்துபவரா?

முதுகிலே குத்துபவரா?

எப்படியும் குத்து வாங்கத்தானே போறம்.எங்க வாங்கினால் என்ன இப்படிணும் யோசிக்கலாம்.

இரண்டு வருடத்துக்கு முன் வெனிசூலா ஆக்கியது ஜேவிபியா சார்?

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இவர்கள் எல்லோரும், நீங்கள் சொல்வது போலவே, நல்லவர்கள் இல்லை, குத்துபவர்கள் போன்றே தெரியும். அதுவும் சரி தான், ஏனென்றால் வெளிநாட்டில் வாழ்வோர் எதிர்பார்ப்பது தனிநாடு அல்லது சமஷ்டி அல்லது ஆகக் குறைந்தது காணி, போலீஸ் அதிகாரங்களுடன் கூடிய வட கிழக்கு இணைந்த மாகாணசபை. இது எதுவுமே ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

ஆனால் அங்கே வாழும், தொடர்ந்து வாழப் போகும் தமிழ் மக்களின் தெரிவோ எவர் குறைவாக அவர்களின் வயிற்றில் அடிப்பவர் என்றே இருக்கும். எவரால் வேலை வாய்ப்புகள், வசதிகள் கிடைக்கும் என்று தேடியே வாக்களிக்கப் போகின்றனர். இந்த வகையில் அநுர குமார நல்ல ஒரு தெரிவில்லை.

கோத்தா நாட்டைக் கெடுத்த பின், ஓடினார். அவர் ஓடியது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது. ஜேவிபியினருக்கு அதிகாரம் கிடைத்து, இதே நிலைமை மீண்டும் வந்தால், அவர்கள் ஓடமாட்டார்கள். இருந்து முடிவு வரை தொடர்வார்கள்.

இன்றைய பலஸ்தீனத்தையே திரும்பிப் பார்க்காத மேற்குலகம் எங்களை என்றும், எது நடந்தாலும் திரும்பிப் பார்க்கப் போவதும் இல்லை. தொடர்ந்து ஆயிரத்தில் ஒன்றாக எங்களின் கதை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

அசாமில் ஒரு தடவை மாணவர் புரட்சி வென்று, ஆட்சிக்கும் வந்தார்கள். புரட்சியில் வென்ற அவர்கள், ஆட்சியில் அந்த மாநிலத்தை அழித்தார்கள். அதே வரலாறு இங்கே மீண்டும் திரும்பும்.

இந்தியாவில் ஒரு மாகாணத்தில் மாணவர்களே பெரும் புரட்சி செய்து வென்றார்கள் என்றும் அதன் பின்பு மக்களின் மாபெரும் ஆதரவுடன்  ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தார்கள் என்றும் அதன் பின்பு அவர்கள் செய்த லஞ்சம் ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகத்தால் இந்தியாவே அதிர்ந்து போனது என்று  இந்தியாவில் படித்த எனது உறவினர்கள் மூலம் சிறுவயதில் அறிந்திருக்கிறேன்.மாகாணத்தின் பெயர் மறந்துவிட்டது நீங்கள் இப்போது சொன்னபடியால் அது அசாம் என்று நம்புகிறேன்
இந்த யேவிபி   இலங்கையில் அட்காசம் செய்த காலங்களில் மக்கள் இரவில் வெளிச்சம் பாவிக்க கூடாது என்று  மின்சாரத்தை  துண்டித்து விடுவார்களாம் ஆனால் யேவிபி தலைவர்கள் மின்சார இயந்திரம் வைத்து அவர்கள் வீடுகளில் வெளிச்சம் போட்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனராம். தற்போதைய பலஸ்தீன மக்கள் துன்பபட ஹமாஸ் தலைவர்கள் அவர்களை அடக்குமுறையின் கீழ்வைத்திருந்து தாங்கள்  சுகபோக வாழ்க்கை வாழ்வது போன்று

49 minutes ago, ரசோதரன் said:

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இவர்கள் எல்லோரும், நீங்கள் சொல்வது போலவே, நல்லவர்கள் இல்லை, குத்துபவர்கள் போன்றே தெரியும். அதுவும் சரி தான், ஏனென்றால் வெளிநாட்டில் வாழ்வோர் எதிர்பார்ப்பது தனிநாடு அல்லது சமஷ்டி அல்லது ஆகக் குறைந்தது காணி, போலீஸ் அதிகாரங்களுடன் கூடிய வட கிழக்கு இணைந்த மாகாணசபை. இது எதுவுமே ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

ஆனால் அங்கே வாழும், தொடர்ந்து வாழப் போகும் தமிழ் மக்களின் தெரிவோ எவர் குறைவாக அவர்களின் வயிற்றில் அடிப்பவர் என்றே இருக்கும். எவரால் வேலை வாய்ப்புகள், வசதிகள் கிடைக்கும் என்று தேடியே வாக்களிக்கப் போகின்றனர். இந்த வகையில் அநுர குமார நல்ல ஒரு தெரிவில்லை.

கோத்தா நாட்டைக் கெடுத்த பின், ஓடினார். அவர் ஓடியது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது. ஜேவிபியினருக்கு அதிகாரம் கிடைத்து, இதே நிலைமை மீண்டும் வந்தால், அவர்கள் ஓடமாட்டார்கள். இருந்து முடிவு வரை தொடர்வார்கள்.

இன்றைய பலஸ்தீனத்தையே திரும்பிப் பார்க்காத மேற்குலகம் எங்களை என்றும், எது நடந்தாலும் திரும்பிப் பார்க்கப் போவதும் இல்லை. தொடர்ந்து ஆயிரத்தில் ஒன்றாக எங்களின் கதை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்.   

நீங்கள் தெரிவித்தமை அவ்வளவும் உண்மை 👌 நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

கோத்தா நாட்டைக் கெடுத்த பின், ஓடினார். அவர் ஓடியது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது. ஜேவிபியினருக்கு அதிகாரம் கிடைத்து, இதே நிலைமை மீண்டும் வந்தால், அவர்கள் ஓடமாட்டார்கள். இருந்து முடிவு வரை தொடர்வார்கள்.

யார் யார் ஓட வேண்டும் 

ஆள வேண்டும் 

என்று முடிவெடுப்பது அமெரிக்கா தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

கட்டப் பஞ்சாயத்தை நேரில் பார்க்கலாம். அது தான் அவர்களின் சட்டம் ஒழுங்கு.   

ஒரு இரவு, எங்களின் அறைக் கதவுகளில் படபடவென்று அடித்தார்கள். நாங்கள் திறந்தோம். வந்திருந்தவர்களில் சிலர் எங்களுக்கு ஏலவே தெரிந்த ஜேவிபி ஆதரவு மாணவர்கள். சிலர் எங்களின் பீடம், வகுப்பு, சிலர் வேறு பீடங்களைச் சேர்ந்தவர்கள்.  எங்களை வெளியில் நிற்க விட்டு விட்டு அறைகள் முழுவதும் தேடினர். சில 'புலிகள்' எங்களுடன் வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார்கள். போலீஸோ அல்லதோ இராணுவமோ வரவில்லை. இவர்கள் மட்டும் தான் வந்திருந்தனர். 

இடதுசாரிகள் என்னும் நிலையிலிருந்து சிங்கள தேசியத்திற்கு இவர்களின் தலைமை அன்று மாறிக் கொண்டிருந்தது. விமல் வீரவன்ச போன்றவர்களால் இந்த மாற்றம் பொதுவெளியிலேயே நடந்து கொண்டிருந்தது. அன்று வந்த எல்லா தீர்வுப் பேச்சுவார்த்தைகளையும் எதிர்த்தனர். இன்றும் தான்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.