Jump to content

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர்

— எழுவான் வேலன் —

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தென்னிலங்கை அரசியல் பெரும் மாற்றங்களையும் திருப்பங்களையும் சந்தித்து வருவதை சாதாரண பத்திரிகை வாசகனால் விளங்கிக் கொள்ள முடியும். பழம் பெரும் அரசியல் கட்சிகள் இரண்டுமே தங்கள் கட்சியின் சார்பாக வலுவான ஒரு தலைவரை முன்னிறுத்த முடியாதளவுக்கு அரசியல் சூழல் மாற்றமுற்றிருக்கின்றது. இந்த மாற்றத்துக்கேற்ப ஒவ்வொருத்தரும் தங்கள் தங்கள் அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்படுகின்றனர். அரசியல் வியூகம் எனும் போது கொள்கை சார்ந்த விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. இந்தக் கொள்கை சார்ந்தே வாக்குறுதிகள் நடைமுறைகள் என்பன அமைகின்றன.

பசுத்தோல் போர்த்திய சிங்கமாக இருந்த ஜே.வி.பி கூட இன்று தன்னை மாற்றிக் கொண்டு பயணிக்க முன்வந்திருக்கின்றது. சமூக, பொருளாதார, உலகப் போக்குக்கேற்ப மாறித்தான் ஆக வேண்டும் என்பதுதான் அரசியலாகும். இந்த மாற்றம் இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் 1980களில் ஆரம்பித்து விட்டது என்பதை இந்தியா, சீனா, ரசியா போன்ற நாடுகளின் அரசியலை அறிந்தவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.  

ஆனால் துரதிஸ்ட்டவசமாக தமிழர்களின் பாராளுமன்ற அரசியல் தடம் 47ம் ஆண்டிலிருந்து எவ்வித மாற்றமும் இன்றி அதே பாதையில் செல்வதை வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தக்கான முதலாவது தேர்தல் 1947ம் ஆண்டே இடம்பெற்றது. பாராளுமன்றத்துக்கான 100 ஆசனங்களில் டி.எஸ்.சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களை வென்றது. 54 ஆசனங்கள் டி.எஸ்.சேனநாயக்காவுக்கு எதிராகவே இருந்தன.

டி.எஸ்.சேனநாயக்காவின் சமயோசித நடவடிக்கையினால் சுயேட்சை வேட்பாளர்களை தம்பக்கம் இழுத்து அரசாங்கத்தினை அமைத்துக்கொண்ட போதும் ஒரு நிட்சயமற்ற அரசாங்கமாகவே டி.எஸ்.சேனநாயக்காவின் அரசாங்கம் காணப்பட்டது.

டி.எஸ்.சேனநாயக்கா பிரதமரான பின்பு அவருடைய அரசாங்கத்தை தோற்கடித்து இடதுசாரிகளும் சிறுபான்மையினரும் சேர்ந்த அரசாங்கமொன்றை அமைக்கும் பொருட்டு ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் கூடிய இடது சாரிக் கட்சிகளும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் சிலரும் பொதுக் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தை அமைப்பது என்று முடிவு எடுத்திருந்த போதிலும் பொதுக் கொள்கைக்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் எழுந்த முரண்பாடுகளை அடுத்து இம்முயற்சி பலனற்றுப் போய்விட்டது.  

சிறுபான்மையினரின் நலனுக்காக 50:50 கோரிக்கையில் விடாப்பிடியாக நின்ற ஜி.ஜி.பொன்னம்பலம் இடது சாரிகளால் முன்வைக்கப்பட்ட 60:40 என்ற முன்மொழிவையேனும் விட்டுக் கொடுப்போடு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை அமைத்திருக்கலாம் ஆனால் அச் சந்தர்ப்பத்தினைத் தவறவிட்டார்.  

திரு.அ.மகாதேவா ஜி.ஜி.யின் 50:50 கொள்கையுடன் முரண்பட்டு டி.எஸ்.சேனநாயக்காவுடன் சேர்ந்து உள்விவகார அமைச்சராக பதவி வகித்திருந்தார். மேற்படி 1947ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் டி.எஸ்சின் சகபாடியாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜி.ஜி. பின்வருமாறு உரையாற்றியிருந்தார். ‘மகாதேவா தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்து விட்டார். சோல்பரி அரசியல் திட்டம் தமிழ் மக்களுக்கு தீமையையே விளைவிக்கும். அத்தகைய அரசியல் அமைப்பை ஆதரித்து மகாதேவா வாக்களித்தார். அவரின் முடிவை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் என்பதை பிரிட்டிஷ் அரசுக்கும் உலகுக்கும் காட்ட வேண்டும். எனவே நீங்கள் திரண்டு வந்து எனக்கு வாக்களித்து மகாதேவாவின் துரோகத்தை அம்பலப்படுத்த வேண்டும்.’ (மேற்கோள், த.சபாரெத்தினம்) அத்துடன் அவருடைய சகபாடிகள் ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ எனும் இன உணர்ச்சியூட்டும் சுலோக அட்டைகளையும் விநியோகித்ததாக திரு.த.சபாரெத்தினம் குறிப்பிடுகின்றார்.

ஜி.ஜி.பொன்னம்பலத்துக்குக் கிடைத்த சந்தர்ப்பம் போன்றதொரு சந்தர்ப்பத்தை வரலாறு இம்முறையும் தழிழர்களுக்கு வழங்கியுள்ளது. மும்முனைப் போட்டி மிக வலுவாக இருக்கின்றது. எந்தவொரு வேட்பாளருமே அறுதிப் பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அரசியல் ஆய்வாளர்கள் கூற வேண்டிய அவசியமில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து சிங்கள மக்களின் நம்பிக்கையினைப் பெற்று அவர்களின் ஆதரவோடு தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு நோக்கி நகர வேண்டுமேயொழிய தமிழர்களின் திரட்சி, உலகுக்குக் காட்டுவது என்பதும் அதையொட்டி பேசப்படுகின்ற தமிழ் இன உணர்ச்சியூட்டும் பேச்சுக்களும் ஜி.ஜி.பொன்னம்பலம்த்தின் தொடர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இந்த உலகுக்குக் காட்டுகின்ற சுத்துமாத்து அரசிலையும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற அவர்களின் முன்மொழிவுகளையும் ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் செய்து வந்துள்ளதை அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்கள் எடுத்துக் காட்டும். ஆனால் அத்தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டவற்றை நோக்கிய எந்த நகவர்வையும் அர்த்தமுள்ளவகையிலும் நடைமுறைச் சாத்தியமான வழியிலும் முன்னெடுத்தார்கள் இல்லை. ஆயினும் அனைத்துத் தேர்தல்களிலும் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எல்லாச் சலுகைகளையும் அனுபவித்தவர்கள்தான்.

மிகச் சிறந்த எடுத்துக் காட்டு 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் போதுதான் முள்ளிவாய்க்கால் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து ஒரு போராட்டத்தை நடாத்த முடியாமல் எப்படியாவது புலிகள் அழியட்டும் என்று வேடிக்கை பார்த்திருந்தார்கள். அன்று அந்த 22 பேரும் சேர்ந்து ஏன் உலகுக்கு ஒரு செய்தியைத் தெரிவித்து முள்ளிவாய்க்காலுக்கு அப்பால் ஒரு மக்கள் போராட்டத்தை (இன்று கதிரைகளுக்காகச் செய்கின்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போன்றவை) செய்திருந்தால் அந்த யுத்தத்தில் அவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்க வாய்பிருந்திருக்காது. இந்த 22 பேரில் ஒருவர்தான் இன்றைய பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஆகும்.

எனவே அந்த முள்ளிவாய்கால் யுத்தத்தில் மௌனமாயிருந்த அரியநேத்திரன்தான் இன்று உலகுக்குச் செய்தி சொல்ல வாக்குக் கேட்கின்றார். தமிழ் மக்களை ஒன்று திரட்ட முற்பட்ட ‘தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு’ தமிழரசுக்கட்சியையே சின்னாபின்னமாக்கியுள்ளது. மாவை ஒரு புறம், சிறிதரன் ஒரு புறம், சுமந்திரன் ஒரு புறம் என சிதறுண்டு கிடக்கின்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான பா. அரியநேத்திரன்.

பா. அரியநேத்திரன் இந்தப் பொதுவேட்பாளராக களம் இறங்குவதற்கான அவரின் தனிப்பட்ட அரசியல் தேவையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியில் சிறிநேசன், சாணக்கியன் போன்றவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு தனக்கு இல்லை என்பதும் கட்சிக்குள்ளும் அவர் ஒரு ஆளுமைமிக்கவராக இல்லாமல் அங்கும் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறிநேசன் போன்றவர்களின் கருத்துகளுக்கு கை உயர்த்துபவராகவுமே இருந்து வந்திருக்கிறார். இது அவருக்கு தாழ்வுநிலை உளவியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தன்னை மற்றவர்களை விட உயர்ந்த இடத்தில் வைத்துக் காட்டவும் மற்றவர்களின் பார்வை தன்னை நோக்கித் திரும்பவும் இந்தப் பொது வேட்பாளர் என்ற சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தியுள்ளார்.

எனவே ‘தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு’ என்ற ஒன்றை உருவாக்கியவர்களுக்கும் அதில் வேட்பாளராக நிற்பவருக்கும் ஒரு வலுவான அரசியல் அடையாளம் தேவைப்படுகிறது. அந்த அடையாளத்தை நோக்கிய பணயத்தின் முதற்படிதான் இந்தப் பொதுவேட்பாளரும் ஆகும். அடுத்த பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக இந்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பே போட்டியிடலாம். அதற்கான வலுவான விளம்பரமே தமிழ்ப் பொது வேட்பாளராகும்.  

உலகில் தனது மக்களை இவ்வளவு தூரம் முட்டாளாக்கி அரசியல் செய்யும் தமிழ்க்; கட்சிகளை (தமிழரசுக் கட்சி உட்பட) எவரும் பார்த்திருக்க முடியாது. அது போல் தலைமைத்துவ ஒழுக்கம் இல்லாதவரை ஒரு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியிருப்பதையும் பார்த்திருக்க முடியாது. இந்தச் சீர்கேடுகள் எல்லாம் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகிறது.  

எனவே இந்த அரங்கேற்றத்தின் முட்டாள் பங்காளர்களாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என்றால் தயங்காமல் பொதுவேட்பாளருக்கு உங்கள் வாக்கையளித்து தமிழ் மக்கள் வரலாற்றில் இருந்து எதுவும் கற்றுக் கொள்ளாத முட்டாள்கள் என்பதை நிரூபியுங்கள்.

 

https://arangamnews.com/?p=11217

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

உலகில் தனது மக்களை இவ்வளவு தூரம் முட்டாளாக்கி அரசியல் செய்யும் தமிழ்க்; கட்சிகளை (தமிழரசுக் கட்சி உட்பட) எவரும் பார்த்திருக்க முடியாது.

large.IMG_6994.jpeg.b7f21cb05f84d7ba2c46

Edited by Kavi arunasalam
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தலைமைத்துவ ஒழுக்கம் இல்லாதவரை ஒரு ஜனாதிபதி வேட்பாளராக

 

3 hours ago, கிருபன் said:

 மக்களை ஒன்று திரட்ட முற்பட்ட ‘தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு’ தமிழரசுக்கட்சியையே சின்னாபின்னமாக்கியுள்ளது.

தலைமைத்துவ ஒழுக்கத்தை முதலிற் 'தலைமைகள்' கடைப்பிடித்தனவா அல்லது கடைப்பிடிக்கின்றனவா என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தால் ஒரு நடுநிலமையாக இருந்திருக்கும். இது தமிழரசுக்கட்சிக்கு வக்காளத்து வாங்கியெழுதியிருக்கும் காப்புரைபோலல்லவா உள்ளது. 2009 இல் சீவனாகிவிட்ட தலையுட்பட எல்லோரும் இந்தியாவின் கட்டளைக்குக் கீழ்பணிந்து இந்தியாவில் பதுங்கியோரே. அதன் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பைச் சிதைத்தழித்துப் புலிநீக்கம் செய்து தலைமையைக் கைப்பற்ற சம் - சும் கோஸ்டி ஆடிய தகிடுதித்தங்கள் உலகறிந்தது. ஆடிய தகிடுதித்தங்கள் இன்று தமிழரசுக்கட்சியென்று ஒன்று உண்டா என்று தமிழர்கள் கேட்குமளவில் உள்ள வேளையில் பா.அரியனேந்திரன் ஏதோ கட்சியை அழித்ததுபோல் பொய்மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ள இந்த பத்தி எழுத்தாளரை என்ன சொல்வது. ஒருவேளை புனைபெயரில் சும்மோ என்று யோசிக்க வைக்கிறது. உண்மையோடும் இதய சுத்தியோடும் சுயவிமர்சனத்தை முன்வைத்து இந்த அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். இல்லையேல் இன்னுமினும் பிளப்புகள் தொடரும் தமிழின இழப்புகளும் தொடரும் என்பதே விதியா அல்லது இன்னும் சிலர் சீவனடைந்தால் தமிழினத்துக்கு விமோசனமீட்சி வரலாம் என்பது விதியா? யாரறிவார். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nochchi said:

 

தலைமைத்துவ ஒழுக்கத்தை முதலிற் 'தலைமைகள்' கடைப்பிடித்தனவா அல்லது கடைப்பிடிக்கின்றனவா என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தால் ஒரு நடுநிலமையாக இருந்திருக்கும். இது தமிழரசுக்கட்சிக்கு வக்காளத்து வாங்கியெழுதியிருக்கும் காப்புரைபோலல்லவா உள்ளது. 2009 இல் சீவனாகிவிட்ட தலையுட்பட எல்லோரும் இந்தியாவின் கட்டளைக்குக் கீழ்பணிந்து இந்தியாவில் பதுங்கியோரே. அதன் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பைச் சிதைத்தழித்துப் புலிநீக்கம் செய்து தலைமையைக் கைப்பற்ற சம் - சும் கோஸ்டி ஆடிய தகிடுதித்தங்கள் உலகறிந்தது. ஆடிய தகிடுதித்தங்கள் இன்று தமிழரசுக்கட்சியென்று ஒன்று உண்டா என்று தமிழர்கள் கேட்குமளவில் உள்ள வேளையில் பா. அரியனேந்திரன் ஏதோ கட்சியை அழித்ததுபோல் பொய்மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ள இந்த பத்தி எழுத்தாளரை என்ன சொல்வது. ஒருவேளை புனைபெயரில் சும்மோ என்று யோசிக்க வைக்கிறது. உண்மையோடும் இதய சுத்தியோடும் சுயவிமர்சனத்தை முன்வைத்து இந்த அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். இல்லையேல் இன்னுமினும் பிளப்புகள் தொடரும் தமிழின இழப்புகளும் தொடரும் என்பதே விதியா அல்லது இன்னும் சிலர் சீவனடைந்தால் தமிழினத்துக்கு விமோசனமீட்சி வரலாம் என்பது விதியா? யாரறிவார். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

நடை பெற இருந்ததாக அறிவிக்கப் பட்ட ... உள்ளூராட்சி தேர்தல் நேரமே,
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சுமந்திரன் அறிவித்த  போது... அதிலிருந்த ஏனைய கட்சிகள் வெளியேறி, அவர்கள்  ஒரு அமைப்பாக போட்டியிட ஆயத்தமானார்கள். பின் உள்ளூராட்சி தேர்தல் தள்ளிப் போட்டமை வேறு விடயம். 
ஆனால்... பிரிந்த போன கட்சிகள் மீண்டும் ஒன்று சேரவே இல்லை.
அப்போதே... தமிழ் தேசிய கூட்டடமைப்பையும், தமிழரசு கட்சியையும் பிளவு படுத்திய பெருமை 
சுமந்திரனையே சாரும். 
இது தெரியாத மாதிரி பலர் இன்னும்...  மல்லாக்கப் படுத்து  இருந்து கொண்டு  துப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாரை தமிழரசு கட்சியில் இடைநிறுத்தி வைத்துள்ளார்கள் என்று சொன்னார்கள்
சிறிதரன் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கபட வேண்டும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

ஆனால் துரதிஸ்ட்டவசமாக தமிழர்களின் பாராளுமன்ற அரசியல் தடம் 47ம் ஆண்டிலிருந்து எவ்வித மாற்றமும் இன்றி அதே பாதையில் செல்வதை வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

தேர்தல் என்று வந்து விட்டால், தமிழருக்கு எதிராக  வீராவேசமாக கத்தி கூட்டம் நடத்துவார்கள், அப்போதும் அவர்களுக்கே வாக்களித்தோம். இப்போ நயவஞ்சகமாக ஏதும் தராமலேயே வாக்கு போடும்படி வற்புறுத்துகிறார்கள், அப்பவும் அடிமைகள் சிங்களத்துக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்து என்ன கண்டோம்? கூண்டோடு அழித்துவிட்டு வெட்கமேயில்லாமல் வாக்கு கேட்கிறார்கள். தமிழரின் வாக்குகளை வீணாக, எந்த நிபந்தனையுமில்லாமல், இனாமாக வாங்கிக்கொடுத்து அவர்களின் உணர்வுகளையும் நிலங்களையும் பறிகொடுத்து பலவீனமாக்கியதே தமிழரசுக்கட்சிதான். தமிழரசு, தமிழ்த்தேசியம் என்பதை இல்லாதொழிக்கவே சுமந்திரன் புகுத்தப்பட்டார். இந்ததேர்தலோடு அவரும் அவரது அரசியலும் இல்லாமல் போகவேண்டும். பொது வேட்ப்பாளர் தோற்றாலென்ன வென்றாலென்ன எதுவும் நமக்கு குறையப்போவதில்லை, ஆனால் இனிமேல் எங்களை வைத்து தேர்தலில் வெற்றியடையும் ஏமாற்றும் தந்திரம் நிறுத்தப்படும். அதோடு சிங்கள மக்கள் எதிர் காலத்தில் நமக்கு வாக்களிக்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. நாங்கள் சிங்களத்துக்கு தொடர்ந்து வாக்களிக்க முடியுமென்றால், அவர்கள் ஏன் நமக்கு அளிக்கக் கூடாது? குட்டக் குட்ட குனிகிறவனும் மடையன், குனியக் குனிய குட்டுகிறவனும் மடையன் எனும் நிலை மாறவேண்டும்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

. பொது வேட்ப்பாளர் தோற்றாலென்ன வென்றாலென்ன எதுவும் நமக்கு குறையப்போவதில்லை, ஆனால் இனிமேல் எங்களை வைத்து தேர்தலில் வெற்றியடையும் ஏமாற்றும் தந்திரம் நிறுத்தப்படும். அதோடு சிங்கள மக்கள் எதிர் காலத்தில் நமக்கு வாக்களிக்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. நாங்கள் சிங்களத்துக்கு தொடர்ந்து வாக்களிக்க முடியுமென்றால், அவர்கள் ஏன் நமக்கு அளிக்கக் கூடாது? குட்டக் குட்ட குனிகிறவனும் மடையன், குனியக் குனிய குட்டுகிறவனும் மடையன் எனும் நிலை மாறவேண்டும்.

நன்றி. இதுவே எனது நிலைப்பாடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

நடை பெற இருந்ததாக அறிவிக்கப் பட்ட ... உள்ளூராட்சி தேர்தல் நேரமே,
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சுமந்திரன் அறிவித்த  போது... அதிலிருந்த ஏனைய கட்சிகள் வெளியேறி, அவர்கள்  ஒரு அமைப்பாக போட்டியிட ஆயத்தமானார்கள். பின் உள்ளூராட்சி தேர்தல் தள்ளிப் போட்டமை வேறு விடயம். 
ஆனால்... பிரிந்த போன கட்சிகள் மீண்டும் ஒன்று சேரவே இல்லை.
அப்போதே... தமிழ் தேசிய கூட்டடமைப்பையும், தமிழரசு கட்சியையும் பிளவு படுத்திய பெருமை 
சுமந்திரனையே சாரும். 
இது தெரியாத மாதிரி பலர் இன்னும்...  மல்லாக்கப் படுத்து  இருந்து கொண்டு  துப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். 


நன்றி, தமிழினத்தின் மறதிநோயை எல்லோரும் பயன்படுத்தகிறார்கள், தமிழின அழிவில் தமது நலன்தேடும் நாடுகளை விட நாசகாரிகளாக நம்மிடையே வலம்வரும் தமிழின அழிப்புக்குத் துணைபோகும், இந்தியத்துக்குக் கழுவித்திரியும் தமிழ்த்தலைமைகள் என்று கூறும் கயவர் கூட்டத்தைத் தமிழினம் களையெடுத்துத் துரத்தும்ரை தமிழின அழிவு தொடர்வதைத் தடுக்கவும் முடியாது. காணாமற்போனோர் போராட்டத்தையே நீர்த்துபோகச் செய்த கூட்டமிருக்கும்வரை  உரிமைகளுக்காகப் போராடும் களத்தைத் திறக்கவும் முடியாது.  
 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணா அண்ணாவினதும் குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.. அன்னாரின் ஆன்னா சாந்தி அடையட்டும்..
    • எல்லோருக்கும் நன்றிகள்  
    • "பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]"     இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தை என்ற குட்டி யாழ்ப்பாணத்தில், இனியா மற்றும் ஓவியா என்ற இரண்டு நெருங்கிய நண்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே பிரிக்க முடியாதவர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தனர், சிறு குழந்தை பருவத்தில் ஒன்றாக விளையாடியும், பின் ஆரம்ப பாடசாலையிலும் உயர் பாடசாலையிலும் ஒன்றாக கற்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள ஒவ்வொரு ரகசியத்தையும், கனவுகளையும், சாகசங்களையும் ஒன்றாக ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களின் பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்கள் வெள்ளவத்தையின் இரட்டையர் என்று கூறும் அளவுக்கு அங்கு பிரபலமாக இருந்தனர்.   பறவைக்கு கூடு, மாட்டுக்குத் தொழுவம், சிலந்திக்கு வலை, மனிதனுக்கு நட்பு. அது இதயங்கள் இரண்டும் கலந்த ஆழமான உறவு! இயற்கைக் காற்று எந்த தடையும் இன்று சுவாசிக்கலாம். தாய் பிள்ளை, கணவன் மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாக கருதப்படும் மற்றும் ஒரு உறவு தான் நட்பு அல்லது நண்பர்கள். அதற்கு இந்த இனியாவும் ஓவியாவும் நல்லதொரு சான்றாகும். "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு" என்கிறார் வள்ளுவர். சங்ககாலம் முதல் இன்று வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள் ஆகும். நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். அந்த பாக்கியம் கொண்டவர்கள் தான் இந்த இனியா ஓவியா என்றால் மிகையாகாது!   இனியா ஒரு கலகலப்பான மற்றும் உற்சாகமான பெண்ணாக, மற்றவர்களையும் சிரிக்க வைக்கும் புன்னகையையும் கொண்டு இருந்தார், அதே நேரத்தில் ஓவியா கனிவான இதயத்துடன் அமைதியான இருப்பைக் கொண்டிருந்தார். அவர்கள் எப்போதும் துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர், தங்கள் தங்கள் முயற்சிகளில், படிப்புகளில் ஒருவரையொருவர் ஆதரித்ததுடன் தேவைப்படும் போதெல்லாம் ஒருவருக்கு ஒருவர் உதவியும் செய்தனர்.   “கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாகும் நட்பாரும் இல்” (நாலடியார் 215)   கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும்” என்று நட்பின் பெருமையின் படி இனியா ஓவியா வெள்ளவத்தையை கலக்கிய இரு அழகிய மலர்கள் என்று கூட கூறலாம். இந்த அவர்களின் நட்பு, இனம், மதம், சமயம், மொழி, நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி உள்ளப்புணர்ச்சி கொண்டு பழகும் உறவாகும்.   ஒரு வெயில் நாளில், அவர்கள் தங்களுக்குப் பிடித்த வெள்ளவத்தை கடற்கரை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் அமர்ந்திருந்தபோது, ஓவியாவின் கண்களில் ஒரு மின்னல் ஏற்பட்டது போல, இனியா சடுதியாக எதோ ஒன்றை தன் கைப்பையில் இருந்து எடுத்து திரும்பினார். அழகாகச் சுற்றப்பட்ட அந்த பொட்டலத்தை தன் இரு கைகளாலும் பிடித்து "அன்புள்ள பிரியமான தோழிக்கு, ஓவியாவுக்கு," என்று ஒரு ஒளிரும் புன்னகையுடன், ஓவியாவிடம் கொடுத்தாள்.   கவனமாகப் பொட்டலத்தைப் பிரித்த ஓவியாவின் கண்களில் ஆர்வம் மிளிர்ந்தது. ஆனால் உள்ளே, அவள் ஒரு குறிப்பு புத்தகத்தை மட்டுமே கண்டாள், அதன் பக்கங்கள் காலியாகவும், ஒன்றும் எழுதாமலும் இருந்தன. அது அவளை ஆச்சிரியத்திலும் அதே நேரம் வெறும் தாள்களைக் கொண்ட பரிசைக் கண்டு ஓவியாவின் மனம் வெதும்பியது.   இனியா ஓவியா வெதும்பியது கண்டதும், தன் பரிசுவின் நோக்கம் என்ன என்று உடனடியாக விளக்கினார், "இந்தப் குறிப்பு புத்தகம் சாதாரணப் தாள்கள் அல்ல, என் பிரியமான தோழியே. இது நமது கனவுகள், அபிலாஷைகள் மற்றும் சாகசங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு புத்தகம். நமது ஆழ்ந்த எண்ணங்கள் மற்றும் நேசத்துக்குரிய நினைவுகளைப் படம்பிடித்து ஒருவருக்கொருவர் எழுதுவோம். அது எங்கள் நட்பின் பொக்கிஷம் என்றும் இருக்கும்" என்று கூறி முடித்தாள்.   "இந்த நட்பை நாங்கள் முறிக்க மாட்டோம் என் வலிமையே உடைந்தாலும் உன் நட்பை உடையவிட மாட்டேன் என்னுடைய வெற்றி உன்னுடைய வெற்றி உன் தோல்வி என்னுடைய தோல்வி கேள் இதை என் நண்பனே உன் துக்கம் என் துக்கம் என் உயிர் உன் உயிர் (போன்றது) அப்படிப்பட்டது நம்முடைய நட்பு உயிருடன்கூட விளையாடுவேன் உனக்காக எதிர்கொள்வேன் உலகத்தின் அனைத்து எதிர்ப்பையும் மற்றவர்களுக்கு நாம் இருவராகத் தோன்றலாம் ஆனால் நாம் இருவர் அல்ல நமக்குள் பிரிவோ சினமோ இல்லை" [படம் தளபதி. பாடல் வரிகள் வாலி.]   அதை கேட்டு மகிழ்ச்சியில் மூழ்கிய ஓவியா, இனியாவை இறுகத் தழுவினாள். அவர்கள் இருவரும் தம் நேரத்தை வீணடிக்கவில்லை, உடனடியாக குறிப்பு புத்தகத்தின் வெற்று பக்கங்களில் தங்கள் இதயங்களை பிழிந்து எடுத்து ஊற்றத் தொடங்கினர். உலகத்தை ஆராய்வது, நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவது மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துவது போன்ற அவர்களின் கனவுகளைப் பற்றி அவர்கள் இருவரும் மாறி மாறி எழுதினார்கள்.   காலப்போக்கில், இருவரும் தம் தம் பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் செய்து, ஓவியா தன் கணவருடன் லண்டன் நிரந்தரமாக போய்விட்டார். ஆனால் இனியா வெள்ளவத்தையிலேயே தங்கி, அங்கேயே வேறு ஒரு வீட்டில் தன் கணவருடன் தனிக்குடித்தனம் போய்விட்டார். என்றாலும் ஓவியா லண்டனுக்கு போகமுன்பு, முன்னையது போலவே, ஒரு குறிப்பு புத்தகம் வாங்கி, இனியாவுக்கு கொடுத்து விட்டுத்தான் போனார். அதில் இனியா தொடரவேண்டும் என்ற வேண்டுகோளுடன்.   இப்ப ஓவியா லண்டனில் இருந்தாலும் , அந்த குறிப்பு புத்தகம் அவளின் நிலையான இன்னும் ஒரு துணையாக மாறியது. இனியாவும் ஓவியாவும் தம் தம் குறிப்பு புத்தகங்களில் வெற்றிகள், சவால்கள் மற்றும் இடையில் அனுபவித்த, கண்ட அனைத்தையும் சிரிப்பு மற்றும் கண்ணீரின் மூலம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் உடல் ரீதியாக இப்ப பிரிந்திருந்தாலும் அவர்களை இணைக்கும் எழுத்து வார்த்தைகளில் ஆறுதல் கண்டனர்.   ஆண்டுகள் பறந்தன, இரண்டு நண்பர்களும் வயதாகினர். அவர்களின் கனவுகள் மற்றும் பொறுப்புகளைத் தொடர வாழ்க்கை அவர்களை தனி பாதையில் அழைத்துச் சென்றது. ஆயினும்கூட, அவர்கள் உருவாக்கிய பிணைப்பு பிரிக்க முடியாததாக இருந்தது, நேசத்துக்குரிய குறிப்பு புத்தக தாள்களால் அது தொடர்ந்து தொகுக்கப் பட்டுக் கொண்டே இருந்தது.   ஒரு நாள், ஓவியா பழைய சாமான்களுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்த குறிப்பு புத்தகத்தின் தாள்களில் தடுமாறினாள். அவளுக்கு நினைவுகள் வெள்ளமாகத் திரும்பியது, அவள் இனியாவை எவ்வளவு தவறவிட்டாள் என்பதை உணர்ந்தாள். தன் அன்பான தோழியுடன் மீண்டும் ஒரு முறையாவது இணைய வேண்டும் என்று முடிவு செய்தாள்.   நடுங்கும் கைகளுடன் ஓவியா, இனியாவுக்கு ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை வரைந்தார். அவளுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பழக்கமான அந்த தாள்களில் கொட்டினாள். தனது வெற்றிகள் மற்றும் சவால்கள், தான் சந்தித்த மனிதர்கள் மற்றும் அவள் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கதைகளைப் பக்கம் பக்கமாக வடித்தாள். அதை பிரதியெடுத்து "பிரியமான தோழிக்கு" என்ற தலைப்புடன் இ மெயில் இல் அணுப்பினாள்.   நாட்கள் வாரங்களாக மாறியது, ஓவியா பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். பின்னர், ஒரு அழகிய மாலை பொழுது , மின்னஞ்சலில் இனியா விடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தன் அருமை தோழி எழுதிய வார்த்தைகளை படித்த சாராவின் கண்களில் கண்ணீர் பெருகியது. இனியா புற்றுநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டு, எந்தநேரமும் தன் உலக வாழ்வை முடிக்கும் நிலையில் இருப்பதாய் அறிந்தாள்.   ஏக்கத்தால் துக்கத்தால் நிரப்பப்பட்ட ஓவியா மூன்று மாத லீவில், இனியாவுடன் மீண்டும் இணைய முடிவு செய்தாள். அவர்கள் இருவரும் அந்த பழைய வெள்ளவத்தையின் பெரிய மரத்தின் கீழ் அவர்களுக்கு பிடித்த இடத்தில் தொடர்ந்து சந்தித்தனர், அவர்கள் தாம் தாம் பகிர்ந்துகொண்ட , தம் பயணக் குறிப்புகளை ஆளுக்கு ஆள் நினைவுகூர்ந்தபோது அவர்களின் சிரிப்பு காற்றில் எதிரொலித்தது. கடலின் அலைகளின் ஓசையையும் அது வென்றது.   அந்த நாளிலிருந்து, இனியாவும் ஓவியாவும் தங்கள் நட்பை ஒரு முன்னுரிமையாக மாற்ற சபதம் செய்தனர், தூரம் அல்லது கடந்து செல்லும் ஆண்டுகள் எதுவாக இருந்தாலும் சரி. அவர்களின் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத நட்பின் அடையாளமாக இந்த குறிப்பு புத்தகம் என்றும் இருக்க வேண்டும் என்று இருவரும் நினைத்தனர்.   ஆனால், ஓவியா லண்டன் திரும்பி, ஒரு சில கிழமையில் "பிரியமான தோழிக்கு" என்ற குறிப்புடன் இனியாவின் குறிப்பு புத்தகம் தபால் மூலம் அவளுக்கு வந்தது. அதனுடன் இருந்த செய்தி அவளை அப்படியே அதிர செய்து விட்டது. இன்னும் சில ஆண்டுகள் ஆவது இனியா இருப்பாள் என்று நினைத்தவளுக்கு இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓ .. அப்படியே கதறிவிட்டாள்.   பிரியமான, அன்பான தோழி, இந்த மண்ணை விட்டு போனாலும் அவர்களின் கதை மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • கவி அருணாசலம், நீங்கள்.. சுமந்திரனுக்கு வெள்ளை அடிப்பது எமக்கும் தெரிகின்றது. அது உங்களது தனிப்பட்ட விடயம். அதைப்பற்றி நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால்... தமிழரசுகட்சியின் முன்னணி அரசியல்வாதி எனப்படுபவர், தனது முதல் பத்திரிகையை சிங்களவராகிய சஜித்துக்கு கொடுத்து அறிமுகம் செய்தது பற்றியதுதான் இங்கு பேசு பொருள். முதல் பத்திரிகையை, முதலில் கொடுக்க ஒரு தமிழறிஞர் கூட கிடைக்கவில்லையா...? என்பதுதான் எமது ஆதங்கம். புரிந்தால் சரி.
    • நல்ல வரிகள். இதை வாசித்ததன் பின்னர் பாவை விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவியமா இல்லை ஓவியமா..’ பாடலை ஒருதரம் கேட்டுப் பார்த்தேன் என்னாளும் அழியாத நிலையிலே காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவதுண்மை காதலே காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.