Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டால் நேட்டோ எங்களுடன் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கருதுவோம் - புட்டின்

13 SEP, 2024 | 02:12 PM
image
 

ரஸ்யா மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேற்குலக அமெரிக்க இராஜதந்திரிகள் தயாராக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புட்டின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நீண்ட தூர ஏவுகணையை பயன்படுத்துவதற்கான தடையை தளர்த்தினால் அதன் அர்த்தம் நேட்டோவும் ஐரோப்பிய நாடுகளும் ரஸ்யாவிற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்பதே என விளாடிமிர் புட்டின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அப்படியானால் மோதலின் சாராம்சத்தில் ஏற்படும் மாற்றத்தை மனதில் கொண்டு எங்களிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் தகுந்த முடிவுகளை எடுப்போம் என புட்டின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தான் வழங்கியுள்ள ஆயுதங்களை பயன்படுத்தி எல்லையை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உக்ரைனிற்கு அனுமதிவழங்கியுள்ள போதிலும், நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு பைடன் நிர்வாகம் இன்னமும் அனுமதிவழங்கவில்லை.

https://www.virakesari.lk/article/193585

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இவ்வளவு நாளும் நேட்டோ தான் போரை இயக்குகிறது என்று சொன்னதெல்லாம் பகிடிக்கா கோபாலு???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அப்படியானால் இவ்வளவு நாளும் நேட்டோ தான் போரை இயக்குகிறது என்று சொன்னதெல்லாம் பகிடிக்கா கோபாலு???

அமெரிக்காவும், நேட்டோவும் வழங்கும் வளங்களை வைத்து தான் உக்ரேனால் இவ்வளவு காலமும் தாக்குப் பிடிக்க முடிகின்றது, விசுகு ஐயா. ஆனால் ரஷ்ய ஆதரவு/எதிர்ப்பு, அமெரிக்க ஆதரவு/எதிர்ப்பு என்ற நிலையில் இருந்து கொண்டு, அதன் வழியே கருத்துகள் சொல்லும் ஊடகங்களும், தனிமனிதர்களும் அவர்களுக்கேற்றவாறு நிலைமையை திரித்து விடுகின்றார்கள்.

ரஷ்யா ஏன் இன்னமும் உக்ரேனை அடித்து முடிக்கவில்லை என்பது ஒரு பக்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைமை. அதை நியாயப்படுத்த காரணங்களை, பலது இல்லவே இல்லாத காரணங்கள், கண்டுபிடிக்கின்றார்கள். ஆனால், காலனியாதிக்கம் முடிந்த பின், உலகில் எத்தனை நாடுகள் எத்தனை நாடுகளை அடித்து முடித்திருக்கின்றது....... அப்படியே ஒரு போரில் வென்றாலும், அவர்களால் அந்த நாட்டையோ அல்லது பிரதேசத்தையோ நீண்ட காலத்திற்கு தக்க வைக்கக் கூடியதாக இருந்ததா.......... இல்லைத் தானே. இது தான் இன்றைய ரஷ்யாவின் நிலை. அமெரிக்காவும் சில நாடுகளுக்குள் போய் இறங்கி விட்டு, பின்னர் போதுமடா என்று சில நாடுகளில் இருந்து திரும்பி வந்திருக்கின்றது தானே.    

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அப்படியானால் இவ்வளவு நாளும் நேட்டோ தான் போரை இயக்குகிறது என்று சொன்னதெல்லாம் பகிடிக்கா கோபாலு???

"நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது"  என்பதற்கும் நேட்டோ வழிநடாத்துகிறது என்பதற்கும் வேறுபாடி தெரியாத அளவில் விசுகர் இருக்கிறார் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது  🤣

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனையே சமாளிகேலாமல் கிடக்கு இதுக்க வேற நேட்டோவுக்கு சவால் விடுறாராம்!😂 

ரஸ்யா ஒரு செத்தகிளி இனிச் சீவியென்ன சிங்காரித்தென்ன!😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

"நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது"  என்பதற்கும் நேட்டோ வழிநடாத்துகிறது என்பதற்கும் வேறுபாடி தெரியாத அளவில் விசுகர் இருக்கிறார் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது  🤣

குலைக்கிற நாய் கடிக்காது. உண்மையில் போரில் வெல்லும் சாத்தியம் இருந்தால் அடிக்கட்டும் என்று சந்தோசப்பட்டபடி மௌனமாக இருப்பார்கள் வீரர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

அப்படியானால் இவ்வளவு நாளும் நேட்டோ தான் போரை இயக்குகிறது என்று சொன்னதெல்லாம் பகிடிக்கா கோபாலு???

இதுதான் நல்லவனா இருந்தா பிரச்சினை, இரஸ்சியாவே பயமுறுத்துகின்ற நிலைக்கு நேட்டோவை கீழிற்க்கிய செலன்ஸ்கி, இரஸ்சியாவிற்குள்ளேயே நேட்டோ இராணுவ தளபாடங்களை கொண்டு போய் விட அதனை வைத்து அவர்கள் நேட்டோ ஏதோ ஏப்பை சாப்பை போல படம் காட்டுகிறார்கள்.

ஆனாலும் நேட்டோவிலும் தவறுள்ளது எந்த ஆயுதங்கொடுத்தாலும் பெரிதாக பில்லடப் கொடுத்து கொடுக்க அந்த தளவாடங்களை சோவியத் கால ஆயுதங்களால் அழித்து அதனை படம் பிடித்து இணையத்தில் போட்டு அவர்களது தொல்லைக்கு இப்ப அளவே இல்லாமல் போகிறது.

எனக்கு இப்ப உண்மையிலேயே நேட்டோ  பீதியில் உள்ளதா என சந்தேகமாக இருக்கிறது.

3 hours ago, விசுகு said:

குலைக்கிற நாய் கடிக்காது. உண்மையில் போரில் வெல்லும் சாத்தியம் இருந்தால் அடிக்கட்டும் என்று சந்தோசப்பட்டபடி மௌனமாக இருப்பார்கள் வீரர்கள். 

இந்த அழிவினை வெளியில் இருந்து பார்ப்பதால் அதன் தீவிரம் தெரியவில்லை எங்களுக்கு, கேர்ஸ்க் ஊடுருவலுக்கெதிராக இரஸ்ஸிய படையினர் அண்மையில் ஆரம்பித்த பதில் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட இடங்களில் சில உக்கிரேனிய துருப்புக்களின் இறந்த உடல்கள் 2 அல்லது 3 வாரத்திற்கு மேலான உருக்குலைந்த நிலையில் இருக்கின்றன, அப்பகுதியில் இருந்த உக்கிரேன் சக துருப்பினருக்கு அதனை அடக்கம் செய்ய முடியாத அளவு நெருக்கடி இருந்திருக்க வேண்டும்.

போரில் ஈடுபடுபவர்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும்தான் இழப்பு, நெருக்கடி, வலிகள் ஆனால் அதனை வைத்து பனம் பார்க்கும் இந்த அரசியல்வாதிகளை பாருங்கள் எந்த வித குற்ற உணர்ச்சியுமில்லாமல் இலாப நட்டக்கணக்கு பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இதுதான் நல்லவனா இருந்தா பிரச்சினை, இரஸ்சியாவே பயமுறுத்துகின்ற நிலைக்கு நேட்டோவை கீழிற்க்கிய செலன்ஸ்கி, இரஸ்சியாவிற்குள்ளேயே நேட்டோ இராணுவ தளபாடங்களை கொண்டு போய் விட அதனை வைத்து அவர்கள் நேட்டோ ஏதோ ஏப்பை சாப்பை போல படம் காட்டுகிறார்கள்.

ஆனாலும் நேட்டோவிலும் தவறுள்ளது எந்த ஆயுதங்கொடுத்தாலும் பெரிதாக பில்லடப் கொடுத்து கொடுக்க அந்த தளவாடங்களை சோவியத் கால ஆயுதங்களால் அழித்து அதனை படம் பிடித்து இணையத்தில் போட்டு அவர்களது தொல்லைக்கு இப்ப அளவே இல்லாமல் போகிறது.

எனக்கு இப்ப உண்மையிலேயே நேட்டோ  பீதியில் உள்ளதா என சந்தேகமாக இருக்கிறது.

இந்த அழிவினை வெளியில் இருந்து பார்ப்பதால் அதன் தீவிரம் தெரியவில்லை எங்களுக்கு, கேர்ஸ்க் ஊடுருவலுக்கெதிராக இரஸ்ஸிய படையினர் அண்மையில் ஆரம்பித்த பதில் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட இடங்களில் சில உக்கிரேனிய துருப்புக்களின் இறந்த உடல்கள் 2 அல்லது 3 வாரத்திற்கு மேலான உருக்குலைந்த நிலையில் இருக்கின்றன, அப்பகுதியில் இருந்த உக்கிரேன் சக துருப்பினருக்கு அதனை அடக்கம் செய்ய முடியாத அளவு நெருக்கடி இருந்திருக்க வேண்டும்.

போரில் ஈடுபடுபவர்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும்தான் இழப்பு, நெருக்கடி, வலிகள் ஆனால் அதனை வைத்து பனம் பார்க்கும் இந்த அரசியல்வாதிகளை பாருங்கள் எந்த வித குற்ற உணர்ச்சியுமில்லாமல் இலாப நட்டக்கணக்கு பார்க்கிறார்கள்.

உதையெல்லாம் விசுகர் எங்க பார்க்கப்போகிறார்.  அவருக்கு உசுப்பேத்துறது கைவந்த கலை. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைக்குத்  தயார்; ஆனால் ஒரு நிபந்தனை

நேட்டோவை எச்சரிக்கும் புடின்!

ஷ்யா மீது உக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரேன் – ரஷ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

நேட்டோ, அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷ்யாவுக்கு கடும் சவாலை உக்ரேன் தொடர்ந்தும் அளித்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இந்தப் போர் தொடர்ந்து நீடித்து வருகிம் நிலையில், இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அண்மையில் அறிவித்தார்.
எனினும், ரஷ்ய பிராந்தியங்கள் மீது ஆளில்லா ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் திறன் உக்ரேன் இராணுவத்திற்கு கிடையாது என்றும் செயற்கைகோள் மூலமான உளவுத் தகவல்களை பெறாமல் இவற்றை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா அல்லது நேட்டோ செயற்கைகோள்களை தான் உக்ரேன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஏவுகணைகளுக்கு தேவையான சில அதிநவீன கருவிகள் நேட்டோ அமைப்பிடம் தான் உள்ளதாகவும் எனவே, இந்த போரில் நேட்டோ படைகள் நேரடியாக ஈடுபடுகிறதா அல்லது இல்லையா என்பதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்த அனுமதித்தால், அது போரின் தன்மையை மாற்றும் எனத் தெரிவித்துள்ள புடின், அது நேட்டோ படைகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் தகுந்த முடிவுகளை ரஷ்யா எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2024/1399377

  • கருத்துக்கள உறவுகள்

 

அடிப்படை சூத்திரம் 👆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kapithan said:

உதையெல்லாம் விசுகர் எங்க பார்க்கப்போகிறார்.  அவருக்கு உசுப்பேத்துறது கைவந்த கலை. 

☹️

மேற்குலக ஜில்மா ஊடக செய்திகளில் மட்டும் தலையை புதைத்து வைக்காமல் மூன்றாம் உலக நாடுகளில் வரும் உக்ரேன் - ரஷ்ய செய்திகளையும் அவ்வப்போது வாசிக்க சொல்லுங்கள். போற வழிக்கு புண்ணியமாய் போகும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மொஸ்கோவிற்கு வடமேற்கே அமைந்துள்ள இரு இரஸ்சிய ஆயுத கிடங்கின்  மேல் உக்கிரேன் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது, இந்த தாக்குதல் பற்றிய அறிவிப்பினை இரஸ்சியா இது வரை அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது (எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது என) அண்மையில் பின்லாந்திலிருந்து வந்த உக்கிரேன் டரோனை இரஸ்சியா சுட்டு வீழ்த்தியிருந்தது , இந்த தாக்குதல் நீண்ட தூர ஏவுகனை அல்லது பால்டிக் நேட்டோ நாடொன்றிலிருந்து உக்கிரேன் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது, ஆயுத கிடங்கு தீப்பற்றி எரியும் காணொளிகள் இணையதில் வலம் வருகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.