Jump to content

தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

1313461.jpg ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம்
 

ராமேசுவரம்: இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மீனவர்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது.

இலங்கையின் வட மாகாண கடற்பகுதிகிளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள், இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தி விட்டுச் செல்கிறார்கள், மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிவிட்டுச் செல்கிறார்கள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கையின் மீன்வளங்களையும் கடலின் சூழலியலையும் அழிக்கிறார்கள் என்றெல்லாம் குற்றஞ்சாட்டி மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு தொடர்ப் போராட்டங்களை நடத்தினர்.

 

இலங்கை மீனவர்களுக்கும் அபராதம், சிறை தண்டனை: இந்தத் தொடர் போராட்டங்களின் விளைவாக, இலங்கை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் அந்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகள் மற்றும் மீனவர்களுக்கும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டம் கடந்த ஜனவரி 24, 2018 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ், எல்லை மீறும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும், 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை ரூ.50 லட்சம், 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.2 கோடி, 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.10 கோடி, 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.15 கோடி, 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகுக்கு இலங்கை ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம் விதிக்க முடியும். இதன் அடிப்படையில் இலங்கை எல்லைக்குள் சிறைப்பிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பபடுகிறது.

இலங்கை அரசு, வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்தாமல், முதல் முறையாக சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்கள். படகினை விடுவிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடினால் படகுகளும் விடுவிக்கப்பட்டன.
தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு சிறை தண்டனையும் படகின் ஓட்டுநர்களுக்கு முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலே சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலும் மீனவர்களுக்கு அபராதம் விதித்தல், அபராதத்தை கட்டத் தவறினால் சிறை தண்டனை விதிப்பது, அல்லது அபராதத்தையும் சிறை தண்டனையும் ஒரு சேர விதிப்பது என தற்போது முழுமையாக வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டங்களை இலங்கை நீதிமன்றங்கள் அமல்படுத்த துவங்கி உள்ளன.
 

17267442283061.jpg

இது குறித்து தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறியது: “கடந்த 2010-ல் துவங்கி பல கட்டங்களாக சென்னை, டெல்லி, கொழும்பு ஆகிய நகரங்களில் இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளைக் கொண்டு பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் இன்று வரையிலும் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே போகிறது.

 

இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தினை இலங்கை அரசு படிப்படியாக அமல்படுத்தி தற்போது மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்க துவங்கி உள்ளது. தினக்கூலிகளாக கடலுக்குச் செல்லும் மீனவர்களால் எவ்வாறு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அபராதங்களை செலுத்த முடியும்? எனவே, இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச்சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதுடன், நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி தீர்வு காண வேண்டும்” என்றார்.

 

தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? | Sri Lanka will impose crores of fines on TN fishermen: What is the central govt going to do? - hindutamil.in

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தினை இலங்கை அரசு படிப்படியாக அமல்படுத்தி தற்போது மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்க துவங்கி உள்ளது. தினக்கூலிகளாக கடலுக்குச் செல்லும் மீனவர்களால் எவ்வாறு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அபராதங்களை செலுத்த முடியும்? எனவே, இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச்சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதுடன், நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி தீர்வு காண வேண்டும்” என்றார்.

அப்ப இந்தக் கடற்கொள்ளையர்கள் திருந்த வாய்ப்பே இல்லை!

அடுத்தவன் வீட்டில் போய்த் திருடுறதுக்கு பேச்சுவார்த்தை நடத்தட்டாம். கேவலம் கெட்ட பிறவிகள்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளை அடிப்பதற்கு எதிரான தண்டனைகளை நீக்கி தமிழ்நாடு கடற்கொள்ளையர்களை சுதந்திரமாக இலங்கை தமிழர்கள் கடற்பரப்பில்கொள்ளையடிக்க விடவேண்டும் என்று  ஆசைபடுகின்றார்கள். தண்டணைகள் மேலும் கடுமையாக்கபட வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொள்ளை அடிப்பதற்கு எதிரான தண்டனைகளை நீக்கி தமிழ்நாடு கடற்கொள்ளையர்களை சுதந்திரமாக இலங்கை தமிழர்கள் கடற்பரப்பில்கொள்ளையடிக்க விடவேண்டும் என்று  ஆசைபடுகின்றார்கள். தண்டணைகள் மேலும் கடுமையாக்கபட வேண்டும்

இந்த உலகளவில் தடை செய்யப்பட்ட  bottom trawling.மீன் பிடி முறையை இலங்கை அரசுகூட தடை செய்ய முடியாது காரணம் பல சிங்கள முதலாளிகள் இந்த முறையாம் அதோடு இங்கிருந்து சண்டை முடிந்த பின் ஊரை அபிவிருத்தி செய்கிறம் போன ஓசி விசுகோத்து கூட்டமும் இதே முறை தானாம் கடைசியில் கள்ளன் பக்கத்து வீட்டுக்குள் அல்ல நம்ம வீட்டுக்குள் தான் .

Link to comment
Share on other sites

6 minutes ago, பெருமாள் said:

இந்த உலகளவில் தடை செய்யப்பட்ட  bottom trawling.மீன் பிடி முறையை இலங்கை அரசுகூட தடை செய்ய முடியாது காரணம் பல சிங்கள முதலாளிகள் இந்த முறையாம் அதோடு இங்கிருந்து சண்டை முடிந்த பின் ஊரை அபிவிருத்தி செய்கிறம் போன ஓசி விசுகோத்து கூட்டமும் இதே முறை தானாம் கடைசியில் கள்ளன் பக்கத்து வீட்டுக்குள் அல்ல நம்ம வீட்டுக்குள் தான் .

எங்கிருந்து இந்த தகவல்களை பெற்றீர்கள்?

இலங்கை யில் bottom trawling முறையில் மீன் பிடிப்பது மிக குறைவு. அரிது என்று கூட சொல்ல முடியும்.  அங்கொன்று இங்கொன்றாக வேண்டுமானால் களவாக நடக்கலாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அழிவுகரமான  சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் மூலம் தமிழ்நாட்டு மீனவாகள் தங்கள்கடல் வளங்களையும் அழித்துமுடித்ததோடு தற்போது இலங்கை கடற்பரப்பில்  சட்டவிரோதமா சென்று  இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரத்தையும் அழிக்கின்றார்கள் என்பது பலரும் அறிந்ததே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

எங்கிருந்து இந்த தகவல்களை பெற்றீர்கள்?

இலங்கையில்  தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள்.....................இப்படி தேடி பாருங்கள் அத்துடன் இலங்கையில் bottom trawling என்று கூற மாட்டார்கள் அவ்வாறான மீன் பிடியை ரோலர் என்பார்கள் இயக்கம் இருக்கையில் இதே பிரச்சனை  வந்தது அப்போது சில கட்டு பாடுகளை சூசை கொண்டு வந்தார் அதற்கும் சூசையின் வீட்டுக்கு மண்ணள்ளி எறிந்து சாபம் போட்டார்கள் அந்த சாபம் போட்டதுகள் இப்ப வெளிநாட்டில் நன்றாக இருக்கிரார்ர்கள் நாடு நல்லதாக இருக்கணும் என்று நினைத்தவர் குடும்பம் ?...............

சிலர் இங்கிருந்து சொல்வார்கள் நாங்க ஊருக்கு போறோம் எங்கடை பழைய மயிலிட்டியை புனரமைக்கிறோம் என்றார்கள் உண்மையில் அந்த தீவில் ஒரு காலத்தில் மயிலிட்டி துறைமுகமே மீன்பிடியில் முதலாவதாய் இருந்த துறைமுகம் உங்களுக்கு தான் தெரியுமே என்  சொந்த பெயர் தெரியாமல் அந்த தீவு முழுக்க எனக்கு நண்பர்கள் உண்டென .

40 minutes ago, நிழலி said:

எங்கிருந்து இந்த தகவல்களை பெற்றீர்கள்?

https://www.google.com/search?q=இலங்கையில்++தடை+செய்யப்பட்ட+மீன்பிடி+முறைகள்&sca_esv=301b91059aa118e3&sca_upv=1&rlz=1C1CHBF_en-GBGB878GB878&biw=1920&bih=919&sxsrf=ADLYWILC-eM2SYH0zgGlUf1Ojh7mSKO91g%3A1726780461009&ei=LZTsZsAKk_3v9Q_P2Ir4Cg&ved=0ahUKEwiA1e6_9s-IAxWT_rsIHU-sAq8Q4dUDCA8&uact=5&oq=இலங்கையில்++தடை+செய்யப்பட்ட+மீன்பிடி+முறைகள்&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAieuCuh-CusuCumeCvjeCuleCviOCur-Cuv-CusuCvjSAg4K6k4K6f4K-IIOCumuCvhuCur-CvjeCur-CuquCvjeCuquCun-CvjeCunyDgrq7gr4Dgrqngr43grqrgrr_grp_grr8g4K6u4K-B4K6x4K-I4K6V4K6z4K-NSN9tUKcyWNNRcAJ4AJABAZgBb6ABsASqAQMyLjS4AQPIAQD4AQGYAgCgAgCYAwCIBgGSBwCgB_wM&sclient=gws-wiz-serp

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்னுடைய புரிதல் வேறு விதமாக இருக்கின்றது. அத்துடன் பல பார்வைகள், கோணங்கள் இதில் இருக்கும் என்பதனையும் ஏற்றுக்கொள்கின்றேன். 'எந்த மாற்றம் வேண்டும் என்று விரும்புகின்றாயோ, அந்த மாற்றமாக நீயே இரு..........' என்பது போல காந்தியடிகள் சொல்லி இருக்கின்றார். அவர் வாழ்ந்ததும் அப்படியே. அவரைப் பார்த்து, அவரைப் பின்பற்றியே காந்தியம் உருவாகியது. காந்தியமும், அஹிம்சாவாதமும் பாராபட்சமானவை. தீண்டாமை போன்ற கொடூரமான அடிப்படைப் பிரச்சனையைக் கூட அது தீர்க்கவில்லை என்று சொல்லி அம்பேத்கர் அவர்கள் வேறொரு வழியில் போனார். அவருக்கு புத்த பெருமானே சமூக நீதி, தத்துவ மற்றும் ஆன்மீக வழிகாட்டி. இன்றும் அம்பேத்கரை பின் தொடர்பவர்கள் பலர் புத்த பெருமானையும் தொடருகின்றனர், உதாரணம்: ரஞ்சித். இலங்கையில் இருக்கும் மதத்தையும், அதன் நெறிமுறைகளையும்  வெறும் அதிகார அரசியலாகவே பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றேன். பெருமான் சொன்ன தம்மம் அங்கில்லை. சில தனி ஒருவர்கள் நன்மை பயக்கும் வழிகாட்டியாக மாறுவார்கள் என்பதே என் புரிதல். இலக்கியத்தில் கூட பாரதியும், புதுமைப்பித்தனும் அடைந்த தெளிவே நவீன தமிழை எல்லோருக்கும் கொண்டு வந்தது.....🙏.    
    • இனி இவர் அமைதியாக இருப்பார் ....அடுத்த பொது தேர்தலில் சிறிலங்கா தேசிய கட்சியில் வேட்பாளராக நிற்க கூடும்
    • ஏதாவது விசப்பரிட்சையில் இறங்க போகின்றார் போல ...இனிமேல் இப்படியான் கதைகள் போடும்பொழுது  எச்சரிக்கை :இது நகைச்சுவைக்கு மட்டுமே உங்கள் வீடுகளில் முயற்சி செய்யவேண்டாம் என வொர்னிக் கொடுக்க வேண்டும்🤣
    • தமிழர் தலைவராக வருவார் என்று நம்பபட்ட (நானும் தான் ) டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவை யாழ்கள உறவுகள் மறந்தேவிட்டார்கள் போலிருக்கின்றது 😄 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியுடன் டீல் பேசி பின்பு சஜீத்தின் கட்சியில் சேர்ந்து மேடை ஏறி இறங்கி தமிழன் தமிழனுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று  தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை ஆதரிந்து தற்போது ஜேவிபியை ஆதரிக்கின்றாராம் 🤣 இவர் ஜனாதிபதி தேர்தலுக்காகவே களம் இறக்கபட்டவர் என்று சில நண்பர்கள் சொல்கின்றார்கள்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.