Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   26 SEP, 2024 | 08:35 PM

image

(நா.தனுஜா)

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து, எதிர்வரும் இரு தினங்களுக்குள் தமது தீர்மானத்தை அறிவிப்பதாக தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகத்தினர் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியிடம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனையடுத்து புதன்கிழமை (25) பி.ப 3.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் கூடிய ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு, எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றி விரிவாக ஆராய்ந்தது. அதன் முடிவில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அக்கூட்டணியின் சார்பிலேயே களமிறங்குவதென உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டது.

அதுமாத்திரமன்றி நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளை உள்ளடக்கிய பொதுச்சபையினருடன் நேற்றை தினம் (26) கலந்துரையாடுவதற்கும், அவர்களுடைய நிலைப்பாடுகளைக் கேட்டறிவதற்கும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கமைய வியாழக்கிழமை (26) பி.ப 4.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் கூடிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளும் சுமார் 6.30 மணி வரை இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். 

அதனையடுத்து தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா?, அவ்வாறு போட்டியிடுவதாயின் எந்தத் தரப்பின் சார்பில் போட்டியிடுவது?, போட்டியிடவில்லை எனின் தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வதா, இல்லையா? என்பன உள்ளடங்கலாக இதனுடன் தொடர்புடைய சகல விடயங்கள் குறித்தும் ஆராய்ந்து அறிவிப்பதற்கு 2 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளனர்.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளர் 'சங்கு' சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், அதே சின்னத்திலேயே பொதுத்தேர்தலிலும் போட்டியிடவேண்டும் என்ற யோசனை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பலரால் முன்வைக்கப்பட்டது. அதனையடுத்து அச்சின்னத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான அடுத்தகட்ட சட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. 

https://www.virakesari.lk/article/194873

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்,......என்ன செய்ய வேண்டும் என்று இந்தியா இன்னும் சொல்லவில்லையா? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

தமிழ் தேசியம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

ஏன்,......என்ன செய்ய வேண்டும் என்று இந்தியா இன்னும் சொல்லவில்லையா? 

🤣

இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாத ஒரு அரசியல் கட்சியை சொல்லுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

ஏன்,......என்ன செய்ய வேண்டும் என்று இந்தியா இன்னும் சொல்லவில்லையா? 

🤣

உங்களுக்கும் சம்பந்தனுக்கும். எந்தவித வித்தியாசமுமில்லை   

நீங்கள் தான்   புலம்பெயர் சம்பந்தன்.   🙏🤣😂🤪

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாத ஒரு அரசியல் கட்சியை சொல்லுங்கள் 

இந்தியா என்பது பலாக்காய்ப் பிசின். 

6 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கும் சம்பந்தனுக்கும். எந்தவித வித்தியாசமுமில்லை   

நீங்கள் தான்   புலம்பெயர் சம்பந்தன்.   🙏🤣😂🤪

பம்மல் K சம்பந்தம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

இந்தியா என்பது பலாக்காய்ப் பிசின். 

😁

பதில் தெரியாது என்றால் அதை சொல்லும் திராணியாவது வேண்டும் காண் 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாத ஒரு அரசியல் கட்சியை சொல்லுங்கள் 

சிறிலங்கா தேசிய கட்சிகளே அவையளின்ட சொல்ல கேட்கும் நிலை ...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

பதில் தெரியாது என்றால் அதை சொல்லும் திராணியாவது வேண்டும் காண் 

சாரி விசுகர்,.

)திராணியைப் பற்றி என்னோடு கதைப்பதற்கு உங்களுக்கு எந்த  அருகதையும் இல்லை என்று சொல்ல மாட்டேன் .....🤣)

ஒரு சொல்வழக்கை புரிந்து கொள்ள முடியாவிட்டால் அதற்கு ஞாண் என் செயும்...😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கும் சம்பந்தனுக்கும். எந்தவித வித்தியாசமுமில்லை   

நீங்கள் தான்   புலம்பெயர் சம்பந்தன்.   🙏🤣😂🤪

பாவம் சம்பந்தன் ஐயா...உலகத்தை விட்டு விலகினாலும் அவரை உசுப்பி விட்டுங்கொண்டே இருக்கிறீயல்😅

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

ஏன்,......என்ன செய்ய வேண்டும் என்று இந்தியா இன்னும் சொல்லவில்லையா? 

🤣

இந்தியா சொல்வதற்குமுன் அதன் உளவு அமைப்பு றோ இன்னும் தடுமாறுது போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

இந்தியா சொல்வதற்குமுன் அதன் உளவு அமைப்பு றோ இன்னும் தடுமாறுது போலுள்ளது. 

இலங்கை சனாதிபதித் தேர்தல் தொடர்பான RAW வின் எதிர்வு கூறல் பிழைத்துவிட்டதே,..🤣

தேர்தல் நாள் இரவு கொழும்பில் அதிகமாக ஓடித் திரிந்தது இந்திய தூதரக வாகனங்கள்தானாம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

உங்களுக்கும் சம்பந்தனுக்கும். எந்தவித வித்தியாசமுமில்லை   

நீங்கள் தான்   புலம்பெயர் சம்பந்தன்.   🙏🤣😂🤪

வயது வித்தியாசமெல்லோ.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

வயது வித்தியாசமெல்லோ.

உண்மை தான்    ஆனால் வயோதிபர்போலத் தான்  🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

ஏன்,......என்ன செய்ய வேண்டும் என்று இந்தியா இன்னும் சொல்லவில்லையா? 

🤣

ஆமை புகுந்த வீடும்

இந்தியா புகுந்த நாடும்

உருப்படவே மாட்டுது.

4 hours ago, Kapithan said:
10 hours ago, satan said:

இந்தியா சொல்வதற்குமுன் அதன் உளவு அமைப்பு றோ இன்னும் தடுமாறுது போலுள்ளது. 

இலங்கை சனாதிபதித் தேர்தல் தொடர்பான RAW வின் எதிர்வு கூறல் பிழைத்துவிட்டதே,..🤣

தேர்தல் நாள் இரவு கொழும்பில் அதிகமாக ஓடித் திரிந்தது இந்திய தூதரக வாகனங்கள்தானாம்.

முடிவு இப்படி வரும் என்று தெரிந்தே

ரணிலையும் சயித்தையும் ஓரணியில் கொண்டுவர

எவ்வளவோ முயற்சித்தார்கள்.தோற்றுவிட்டார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.